Sunday, November 30, 2008

பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி மணச்செம்பு கையேந்தி


ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா

ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா

ஓ ஓ....பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி
மணச்செம்பு கையேந்தி
நாம் அங்கே போவோமா
பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி
மணச்செம்பு கையேந்தி
நாம் அங்கே போவோமா
மீனாவின் குங்குமத்தை
மீனாவின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மா
மானோடு நீராட மஞ்சள் கொண்டு செல்வோமா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா

பால்வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம்
மணப்பெண்ணின் தாய் தந்த சீராக காண்போமா
பால்வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம்
மணப்பெண்ணின் தாய் தந்த சீராக காண்போமா
ஊராரின் சன்னதியில் ஒன்றாக வேண்டுமம்மா
தாயென்றும் சேயென்றும் தந்தையென்றும் ஆவோமா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா

கண்ணென்றும் வளை கொண்ட கை என்றும்
இவள் கொண்ட அங்கங்கள் நீ காணும் சின்னங்கள்
பொன்மாலை அந்தியிலே என் மானை தேடி வரும்
அம்மா உன் பெண்ணுள்ளம் நாணம் சொல்லி ஆடி வரும்
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா

ஒரே ஒரு வரம் கொடு உன்னோடு நான் வாழவே



மனசே மனசே
மனசே மனசே குழப்பம் என்ன
இது தான் வயசே காதலிக்க
பூக்கள் மீது பனி துடைத்து கவிதைகள் எழுதிவிடு
காதல் கடிதம் நீ கொடுத்து நிலவினை தூது விடு
மனசே ... மனசே
நீ தினம் தினம் சுவாசிக்க தானே
காற்றில் தென்றலாய் நானும் ஆகவா ?
நீ என்னை தான் வாசிக்க தானே
உந்தன் கையில் நான் வீணை ஆகவா ?
மழை இல்லை நனைகிறேன் நம் காதலின் சாரலா ?
உன்னை கண்டு உறைகிறேன் உன் பார்வை மின்சாரமா ?
என்னை தந்தேன் உன்னை கொடு
மனசே மனசே

உன் கனவிலே நான் வர தானே
தினமும் இரவிலே விழிதிருப்பேனே
உன் மனதிலே குடிவர தானே
உனது விழியிலே நீந்திடு வேனே
ஒரே முறை நிழல் தொடு என் பிம்பம் நீயாகுமே
ஒரே ஒரு வரம் கொடு உன்னோடு நான் வாழவே
சுகம் தரும் கடல் இதோ
மனசே மனசே

உன் தேகம் தேக்கிலா தேன் உந்தன் வாக்கிலா , உன் பார்வை தூண்டிலா நான் கைதிக் கூண்டிலா?


கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா என்னோடு வா நிலா

கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
தென்பாண்டிக் கூடலா தேவாரப் பாடலா
தீராத ஊடலா தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா என்னாளும் கூடலா
பேரின்பம் நெய்யிலா நீ தீண்டும் கையிலா
பார்ப்போமே ஆவலாய் வா வா நிலா

கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா என்னோடு வா நிலா

உன் தேகம் தேக்கிலா தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா நான் கைதிக் கூண்டிலா

சங்கீதம் பாட்டிலா -நீ பேசும் பேச்சிலா.
என் ஜீவன் என்னிலா உன் பார்வை தன்னிலா
தேனூறும் வேர் பலா உன் சொல்லிலா

கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா

Saturday, November 29, 2008

தாயும் ஆனவனே...என் நேற்றின் பாதையில் ஊற்றை திறந்த காதல்...காதல்... தீண்டவே



உதயா உதயா உளறுகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல்...

காதல்... தீண்டவே
காதல் தாகம் தீண்டுதே
உன்னாலே தண்ணாலெ எந்நாகும்
உயிரே உயிரே உளறுகிறேன்
உலறியும் கவிதைகள் எழுதுகிறேன்
காதல்...காதல்...காதல்...

உன் பாதி வாழ்கிறேன்
என் பாதி தேய்கிறேன்
உன்னாலே தண்ணாலெ
எந்நாளும்...
உயிரே உயிரே உளறுகிறேன்
உலறியும் கவிதைகள் எழுதுகிறேன்
காதல்...காதல்...காதல்...

என்னை தொலைத்துவிட்டேன்
என் உன்னை அடைந்துவிட்டேன்
உன்னை அடைந்ததனால்
என் என்னை தொலைத்துவிட்டேன்
ஏனோ ஏன் ஏனோ தொலைந்தேன் மீண்டேனோ
ஏனோ ஏன் ஏனோ மீண்டும் தொலைவேனோ
ஆயுள் ஆனவரை
உன் கூந்தல் இருட்டில் என் கிழக்கு தொலைந்து
காதல்... தீண்டவே

மூச்சின் குலிர்கையிலெ ... உயிர் ஊற்றி அணைத்துவைத்தேன்
கூச்சம் வருகையிலே... உடல் மாற்றி நுழைந்துவிட்டேன்
ஏனோ ஏன் ஏனோ ஏதோ ஆனேனோ
ஏனோ ஏன் ஏனோ நீயாய் ஆனேனோ
தாயும் ஆனவனே
என் நேற்றின் பாதையில் ஊற்றை திறந்த காதல்...

காதல்... தீண்டவே
காதல் தாகம் தீண்டுதே
உன்னாலே தண்ணாலெ எந்நாகும்
உயிரே உயிரே உளறுகிறேன்
உலறியும் கவிதைகள் எழுதுகிறேன்
காதல்...காதல்...காதல்...
காதல்...காதல்...காதல்...

Friday, November 28, 2008

சிறுகச் சிறுக உன்னில் என்னை தொலைத்த மொழி சொல்லவா?



உனக்குள் நானே உருகும் இரவில்,
உள்ளத்தை நான் சொல்லவா?
மருகும் மனதின் ரகசிய அறையில்,
ஒத்திக்கைப் பார்த்திடவா?

சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்த மொழி சொல்லவா?
சொல்லா சொல்லும் என்னை வாட்டும்
ரணமும் தேன் அல்லவா?

உனக்குள் நானே உருகும் இரவில்,
உள்ளத்தை நான் சொல்லவா?

ஏனோ நம் பொய் வார்த்தை தான்,
ஏன் அதில் உன் என் மௌனமே தான்,
உதட்டில் சிரிப்பைத் தந்தாய்!
மனதில் கனத்தைத் தந்தாய்!

ஒரு முறை உன்னை எனக்கென்று சுவாசிக்கவா?
மறுமுறை உன்னை புதிதாக சாசிக்கவா?

உனக்குள் நானே உருகும் இரவில்,
உள்ளத்தை நான் சொல்லவா?
மருகும் மனதின் ரகசிய அறையில்,
ஒத்திக்கைப் பார்த்திடவா?

தீப் போல், தேன் போல் சலனமே தான்,
மதி என் நிம்மதி சிதையவே தான்,
நிழலை விட்டுச் சென்றாயே!
நினைவை வெட்டிச் சென்றாயே!

இனி ஒரு பிறவி உன்னோடு வாழ்ந்திடவா?
அதுவரை என்னை காற்றோடு சேர்த்திடவா?

உனக்குள் நானே உருகும் இரவில்,
உள்ளத்தை நான் சொல்லவா?
மருகும் மனதின் ரகசிய அறையில்,
ஒத்திக்கைப் பார்த்திடவா?
சிறுகச் சிறுக உன்னில் என்னை
தொலைத்த மொழி சொல்லவா?
சொல்லா சொல்லும் என்னை வாட்டும்
ரணமும் தேன் அல்லவா?
ரணமும் தேன் அல்லவா?
ரணமும் தேன் அல்லவா?

காதலே காதலே பேச வைக்கிறாய்
நான் பேசினால் காற்றிலே வீசி போகிறாய்


காதலே காதலே எங்கு போகிறாய்
என் கண்ணையும் நெஞ்சையும் திருடி போகிறாய்

காதலே காதலே பேச வைக்கிறாய்
நான் பேசினால் காற்றிலே வீசி போகிறாய்

அந்த விதியேனும் ஒரு மாய வலையிலே
இரு பறவைகள் இன்று மாட்டிக்கொண்டதே
வலி தாங்குமா........
உயிரின் ஒரு துளி ,மிச்சம் உள்ளதே
உன் பேரை சொல்லியே , சிந்தி விட்டதே

எங்கே நீயும் என்றே
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி



லை லை லை லை லாய் லாய் லாய்
லாஹி லாஹி லாஹிலே
மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே
சுடும் வெயில் கோடைக்காலம்
கடும் பனி வாடைக்காலம்
இரண்டுக்கும் நடுவே ஏதும் காலம் உள்ளதா?
இலையுதிர் காலம் தீர்ந்து
எழுந்திடும் மண்ணின் வாசம்
முதல் மழைக்காலம் என்றே நெஞ்சம் சொல்லுதே
ஓ மின்னலும் மின்னலும்
நேற்று வரை பிரிந்தது ஏனோ?
பின்னலாய்ப் பின்னலாய்
இன்றுடன் பிணைந்திடத் தானோ?
லை லை லை லை லாய் லாய் லாய்
லாயே லாயே லாய் லாய் லாய்
(மேற்கே மேற்கே தான்)

ஓ கோபம் கொள்ளும் நேரம் வானம் எல்லாம் மேகம்
காணாமலே போகும் ஒரே நிலா
ஓ கோபம் தீரும் நேரம் மேகம் இல்லா வானம்
பெளர்ணமியாய்த் தோன்றும் அதே நிலா
இனி எதிரிகள் என்றே எவருமில்லை
பூக்களை விரும்பா வேர்களில்லை
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே
இது நீரின் தோளில் கைபோடும்
ஒரு சின்னத் தீயின் கதையாகும்
திரைகள் இனிமேல் தேவையில்லையே
மேற்கே மேற்கே தான்...

வாசல் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டால்
நீதான் என்று பார்த்தேனடி சகி
பெண்கள் கூட்டம் வந்தால் எங்கே நீயும் என்றே
இப்போதெல்லாம் தேடும் எந்தன் விழி
இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ
காற்றே சிறகாய் விரிந்திடுமோ
நிலவின் முதுகைத் தீண்டும் வேகமோ
அட தேவைகள் இல்லை என்றாலும்
வாய் உதவிகள் கேட்டு மன்றாடும்
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ
மேற்கே மேற்கே தான் சூரியன்கள்.....

நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்


புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல் புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்
புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல் புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்
இந்தக் காதலில் யாரும் விழுந்துவிட்டால எழுந்திட மனசு இருக்குமா
எழுந்தாலும் மனசு இருக்குமா
நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்


காதல் ஒரு கண்ணாடி ஆனால் இந்த கண்ணாடி
தோன்றுவதை எல்லாம் காட்டுவது இல்லை
உள்ளத்தைப் பூட்டி வைத்தாலும்
இரு கண்களில் காட்டிக் கொடுக்கிறதே
உனக்கும் எனக்கும் முன்னாலே
நம் நிழல்கள் ஒன்றாய் நடக்கிறதே
ஓ கண்கள் பார்க்கும் போதிலே களவாடிப் போகுமே
காதலைக் கட்டிடக் கயிறுகள் ஏதுமில்லை

நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்
புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல் புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்

நீ தந்த மயிலிறகை நெடுங்காலம் வைத்திருந்தேன்
மீண்டும் அந்தக் காலம் மனதினில் ஓடும்
ஓ உன்னைக் காணும் முன்னாலே
அடி என்னை நானே வெறுத்து வந்தேன்
உன்னைக் கண்ட பின்னாலே நான்
புல்லையும் பூண்டையும் நேசிக்கிறேன்
ஓ தாய் தந்த சுவாசமும் தந்தை போல நெருக்கமும்
உன்னிரு தோள்களில் சாய்கையில் உணருகிறேன்

நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்

புலியைக் கிளி ஜெயிச்சா காதல் காதல் புயலைப் பூ ஜெயிச்சா காதல் காதல்
இந்தக் காதலில் யாரும் விழுந்துவிட்டால எழுந்திட மனசு இருக்குமா
எழுந்தாலும் மனசு இருக்குமா

நீ என்னைப் பார்க்கையில் நான் எங்கோ பார்க்கிறேன்
நீ எங்கோ பார்க்கையில் நான் உன்னைப் பார்க்கிறேன்

பழைய குரல் கேட்கிறதா யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ


பழைய குரல் கேட்கிறதா யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ
எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ
இரண்டோடும் சேராமல் உயிர் மாய்க்குமோ
யாரோ யாரோ

பகலில் நிலவு இரவில் சூரியன்
இரண்டும் பிழையா இரண்டும் சரியா
இயற்கை தீர்ப்பு சொல்லுமா

எந்தக் கண்ணால் உலகம் பார்ப்பேன் நொந்து இளைத்தேன் நூலாக‌
ரெட்டைப் பிள்ளையில் எதன்மேல் நேசம் என்று மயங்கும் தாயாக‌
துடிக்கும் துடிக்கும் மனது தடுக்கும் தடுக்கும் மரபு
எனது வானத்தில் என்னவோ ஏதோ இரண்டு திங்களா இரவு

கடலில் ஒருவன் கரையில் ஒருவன்
அவனோ உயிரில் இவனோ மனதில்
இரண்டில் எதுதான் வெல்லுமோ
சொல்லி முடிக்கும் துயரம் என்றால் சொல்லி இருப்பேன் நானாக‌
உள்ளுக்குள்ளே மூடி மறைத்தேன் ஊமை கண்ட கனவாக‌
துடிக்கும் துடிக்கும் மனது தடுக்கும் தடுக்கும் மரபு
எனது வானத்தில் என்னவோ என்னவோ இரண்டு திங்களா இரவு

Wednesday, November 26, 2008

வெத்தலயில் பாக்கு வச்சி பத்து பேர பாக்க வச்சி கட்டிக்கிட ஆசை பட்டேன் நானே




கூண்டை விட்டு ஒரு பறவை கோடு தாண்டி போச்சு
வழி கோணல் மானால் ஆச்சு
காதலிச்ச காலமெல்லாம் கனவு போல ஆச்சு
அதில் கரையுதெந்தன் மூச்சு

பூந்தோரணம் அது ஏன் வாடனும்
போராட்டம நாம் சீர் சீதனம்
தண்ணீயிலே மான போல நானிருக்கேன் ஓ
கரையிலே மீன போல நீயிருக்க

(கூண்டை)
வெத்தலயில் பாக்கு வச்சி பத்து பேர பாக்க வச்சி
கட்டிக்கிட ஆசை பட்டேன் நானே
பெத்தவங்க துணையுமில்ல அத்த மாமன் உறவுமில்ல
துக்கப்பட்டு துடிக்குததொரு மானே
தீராத கோபம் அது யார் போட்ட சாபம்
இதில் நான் செய்த பாவம் என்ன என்ன தான் பாடுறேன் சொந்தம் ஒண்ணு தேடு றேன்..
(கூண்டை)
நம்பி வந்த காதல் ஒண்ணு அன்பு உள்ள பாசம் ஒண்ணு
ரெண்டு பக்கம் தவிக்கிறேன்டி மானே
அண்ணனுக்கு பயந்த தம்பி அன்ணியாறு மனச நம்பி
உன்னை இங்கு அழைத்து வந்தேன் நானே
தாய் தந்தை கோபம் அதில் வாழ்கின்ற பாசம்
ஒரு தவறாகி போகாதடி
மெல்ல மெல்ல மாறும் நல்ல வழி கூறும்

கூண்டை விட்டு ஒரு பறவை கொடு தாண்டி போச்சு
வழி கோணல் மானால் ஆச்சு
தாலி கட்டி முடிந்ததுமே தாரமென்று ஆச்சு
இனி வேறு என்ன பேச்சு
பூந்தோரணம் அது வாடாதம்மா
போராடியே அதை காப்பேனம்மா
தண்ணீயிலே மான போல நானிருக்கேன் ஓ
கரையிலே மீன போல நீயிருக்க

(கூண்டை)

யார் மனதில் யார் இருப்பார் யார் அறிவார் உலகிலே


ஓடம் நதியிணிலே
ஒருத்தி மட்டும் கரையினிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து
பறக்குதம்மா வெளியிலே

ஆசை எனும் மேடையிலே
ஆடி வரும் வாழ்விலே
யார் மனதில் யார் இருப்பார்
யார் அறிவார் உலகிலே

கூட்டுக்குள்ளே குயில் இருக்கும்
பாட்டு வரும் வெளியிலே
குரலை மட்டும் இழந்த பின்னே
குயில் இருந்தும் பயனில்லை

ஓடம் நதியிணிலே
ஒருத்தி மட்டும் கரையினிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து
பறக்குதம்மா வெளியிலே

இனம் என்ன குலம் என்ன குணம் என்ன அறியேன் குணம் என்ன அறியேன் , ஈடோன்றும் கேளாமல் எனை அங்கு கொடுத்தேன்


கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
கண்டே போதே சென்றன அங்கே
கால்கள் இங்கே மேனியும் இங்கே
காவல் இன்றி வந்தன இங்கே

மணி கொண்ட கரம் ஒன்று
அணல் கொண்டு வெடிக்கும் ,அணல் கொண்டு வெடிக்கும்
மலர் போன்ற இதழ் இங்கு பனி கண்டு துடிக்கும்
துணை கொள்ள அவன் இன்றி தனியாக நடிக்கும்
துயிலாத பெண்மைக்கு ஏன் இந்த மயக்கம்

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டே போதே செந்டிரன அங்கே
கண்கள் எங்கே...

இனம் என்ன குலம் என்ன குணம் என்ன அறியேன் குணம் என்ன அறியேன்
ஈடோன்றும் கேளாமல் எனை அங்கு கொடுத்தேன்
கொடை கொண்ட மாத யானை உயிர் கொண்டு நடந்தான்
குறை கொண்ட உடலோடு நான் இங்கு மெலிந்தேன்

https://www.smule.com/p/1572685009_3447954351

Monday, November 24, 2008

உத்தம ராசா உன்ன நினைக்கும் பத்தினி உள்ளம் அய்யா ,வேண்ட ஒரு சாமி இல்ல விரும்பி வந்தேன் உங்கள ,உன்னை விட யாரும் இங்கே உருப்படியா தோனல


என்னை மானமுள்ளே பொண்ணுன்னு மதுரையிலே கேட்டாக
மன்னார்குடியில் கேட்டகாக மாயவரத்தில கேட்டாக
சீர் செனத்தி ஓட வந்து சீமையிலே கேட்டாக
அந்த சிங்கபூரிலும் கேட்டாக நம்ம சின்னமனூரிலும் கேட்டாக
அதை எல்லாம் உன்னாலே வேணாமுன்னு சொன்னேன் தன்னால
என் மச்சான் உன் மேல ஆச பட்டு வந்தேன் முன்னால

கொண்ட முடி அழக பார்த்து கொயம்புதூரிலே கேட்டாக
நெத்தியிலே பொட்டை பார்த்து நெல்லூரிலெ கேட்டாக
ரெண்டு புருவ அழகை பார்த்தாக புது கோட்டையில் இவள கேட்டாக
கன்னழக பார்த்து பார்த்து கண்டமநூரில கேட்டாக
மூக்க்ழகை பார்த்து என்னை மூக்கையாகொட்டையிலே கேட்டாக
கோபமுள்ள பொண்ணுன்னு கொம்பையிலே கேட்டாக
பாசமுள்ள பொண்ணுன்னு பன்னபுரதுல கேட்டாக
இத்தன பேரு சுத்தி வலைச்சும்
உத்தம ராசா உன்ன நினைக்கும் பத்தினி உள்ளம் அய்யா

வேண்ட ஒரு சாமி இல்ல விரும்பி வந்தேன் உங்கள
உன்னை விட யாரும் இங்கே உருப்படியா தோனல
நல்ல வாட்டம் உள்ள ஆம்பள உன்னை மறக்க இவளுக்கு ஆகல
வாரி கட்ட தோலில் அணைச்சு வச்சிக்கோங்க வேற கேட்கல
மாறி நீங்க போநீங்கன்ன மனசு இப்போ ஆரள
ஒத்துழைக்க கூடாதா என்னை சூடி கொண்டா ஆகாதா
பட்டு துணி மேலாக்கு அத தொட்டு இழுக்க கூடாதா
உள்ளதெல்லாம் சொல்லி முடிச்சேன்
நல்ல முடிவா சொல்லுங்க மச்சான்
இன்னமும் சொல்லனுமா

Sunday, November 23, 2008

கல்லூரி பாடம் சொல்லும் நெஞ்சில் தான் நீயும் நீயும் , நான் கேட்கும் பாடம் என்ன உன் நெஞ்சம் அறியும் அறியும்


Hey baby baby மூன்றே மூன்று வார்த்தை ஒரு வாட்டி சொல்வாயா
முழு முழூசாக சொல்ல கூட வேண்டாம் ஒரு பாதி சொல்
Hey lovely lovely ஒரு பார்வை ஒரு தடவை பார்ப்பாயா
ரொம்ப பெருசாக பார்க்க கூட வேண்டாம் சின்ன சின்னதாய் பார்…

கல்லூரி பாடம் சொல்லும் நெஞ்சில் தான் நீயும் நீயும்
நான் கேட்கும் பாடம் என்ன உன் நெஞ்சம் அறியும் அறியும்

மல்லிகா ஐ லவ் யூ ஏய்…மல்லிகா ஐ லவ் யூ
மல்லிகா ஓ மல்லிகா நெஞ்சொடு சொல் சொல் ஐ லவ் யூ

ஏகாந்த மேகம் என்னை கேட்டதே அசைகின்ற மின்னல் அவள் எங்கே என்றுதான்
நடைபாதை பூக்கள் என்னை கேட்டதே மலர்வாச தேசம் அவள் எங்கே என்றுதான்
மலையோரும் நானும் சென்றால் அவள் எங்கே என்று கேட்கும்
இவை யாவும் கேட்கும் போது நான் கேட்க கூடாதா !!!

மல்லிகா ஐ லவ் யூ ஏய்…மல்லிகா ஐ லவ் யூ
மல்லிகா ஓ மல்லிகா நெஞ்சொடு சொல் சொல் ஐ லவ் யூ

உன்னை தொட்டு பார்த்த அந்த நேரமே பட்டாம்பூச்சி கூட்டம் பூக்களாக மாறுதே
உன்னை கண்ட காற்று அந்த மோகத்தில் வெயில் கால நதியாய் வெப்பமாக மாருதே
உனக்கான சாலை எல்லாம் பனி தேசம் போலே மாறும்
அவை யாவும் மாறும் போது நான் மாற கூடாதா

கல்லூரி பாடம் சொல்லும் நெஞ்சில் தான் நீயும் நீயும்
நான் கேட்கும் பாடம் என்ன உன் நெஞ்சம் அறியும் அறியும்

மல்லிகா ஐ லவ் யூ ஏய்…மல்லிகா ஐ லவ் யூ
மல்லிகா ஓ மல்லிகா நெஞ்சொடு சொல் சொல் ஐ லவ் யூ

Hey baby baby மூன்றே மூன்று வார்த்தை ஒரு வாட்டி சொல்வாயாமுழு முழூசாக சொல்ல கூட வேண்டாம் ஒரு பாதி சொல்Hey lovely lovely ஒரு பார்வை ஒரு தடவை பார்ப்பாயாரொம்ப பெருசாக பார்க்க கூட வேண்டாம் சின்ன சின்னதாய் பார்…

உன்னை ரசித்து உன்னை ரசித்து கலைத்து போனடதா விழியும்


உயிரை குடைந்து எத்தனை காலம் காதல் சிற்பம் நீ செய்தாய்
உணர வைக்க எத்தனை காலம் எனக்குள் மழையாய் பேய்தாய்
முதல் முதல் நாள் என்னையே பார்த்து வெட்கப்பட்டு சிரிக்கிறேன்
முதல் முதல் உன் கைகளை கோர்த்து நீண்ட தூரம் பறக்கிறேன்
இந்த நிமிடம் ..இந்த நிமிடம் நகர கூடாது…
இனிமேலும் உன்னை பிரிந்தால் எந்தன் உயிர் வாழாது

ஃப்ரீடம் ஃப்ரீடம் இது என்றும் நமக்கு தான்
ஃப்ரீடம் ஃப்ரீடம் இந்த பூமி நமக்கு தான்

உன்னை நினைத்து உன்னை நினைத்து இழைத்து போனதடி இதயம் ஓ ஓ
உன்னை ரசித்து உன்னை ரசித்து கலைத்து போனடதா விழியும் ஹே ஹே
காதல் சொல்ல காலம் நேரம் பார்த்து கிடந்தாய்
காற்றில் கூட சிற்பம் செய்யும் வித்தை அறிந்தாய்
வானம் உருளுது பூமி மிதக்குது ஏனோ தன்னாலே
ஞானம் பிறந்தது காதல் மலர்ந்தது எல்லாம் உன்னாலே

ஓடும் வரையில் வெற்றி நமக்கு ஒடுதல் நிறுத்தாதே
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு தேடுதல் நிறுத்தாதே
வாழும் வரையில் பூமி நமக்கு வாழ்வதை நிறுத்தாதே
தடை தாண்டி பாரு தடை சொல்வதாரு
விடை தேடி பாரு உனை வெல்வது யாரு யாரு

ஃப்ரீடம் ஃப்ரீடம் இது என்றும் நமக்கு தான்
ஃப்ரீடம் ஃப்ரீடம் இந்த பூமி நமக்கு தான்

Thursday, November 20, 2008

சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தரப் போதிறாய்



என் காதலே என் காதலே.....என்னை என்ன செய்யப் போகிறாய்?.....
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ......
ஏன் கண்ணிரண்டைகேட்கிறாய்?........
சிலுவைகள் சிறகுகள்....
ரெண்டில் என்ன தரப் போதிறாய் ?.....
கிள்ளுவதைக் கிள்ளிவிட்டு ,
ஏன் தள்ளி நின்று பார்கிறாய் ?.....

காதலே நீ பூ எறிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்,
காதலே நீ கல் எறிந்தால்
எந்த கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீள்வதா....... இல்லை வீழ்வதா
உயிர் வாழ்வதா....... இல்லை போவதா
அமுதென்பதா..... விஷம் என்பதா.........
உன்னை அமுத-விஷமென்பதா? ........

காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து அழுதேன்
கண்களை நீ மூடிக்கொண்டாய்
நான் குலுங்கி குலுங்கி அழுதேன்
இது மாற்றமா..... தடுமாற்றமா ?.......
என் நெஞ்சிலே...... பனி மூட்டமா ? ......
நீ தோழியா? இல்லை எதிரியா ?
என்று தினமும் போராட்டமா?......
என் காதலே.. என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய் ?.......

கம்பன் ஏமாந்தான் .............



கம்பன் ஏமாந்தான் -
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே
கம்பன் ஏமாந்தான்

அம்பு விழி என்று ஏன் சொன்னான்
அது பாய்வதினால் தானோ - அவள்
அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான்
அது கொதிப்பதனால் தானோ

தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமையன்றோ - அந்த
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவமன்றோ

வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் - அந்த
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
நானும் ஏமாந்தேன்

ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
அடுப்படி வரைதானே - ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே

நீயா எனை இழுப்பதை அழைப்பதை மனசுக்குள் மனசுக்குள் ரசித்தேன் , வெளியே அது பிடிக்கலை பிடிக்கலை என ஒரு நாடகம் நடித்தேன்



வல்லவா எனை வெல்லவா.. கொஞ்சம் கொள்ளவா நெஞ்சை அள்ளவா..
வல்லவா எனை வெல்லவா.. உனை கண்டதே வரம் அல்லவா..
பாதி கண்கள் முடியும் பார்வை உன்னை தேடுதே ..
உன்னை எண்ணி எண்ணியே உள்ளம் தான் வாடுதே ..
சந்தோஷத்தில் தள்ளாடுரேன் வெந்பனிகளில் திண்டாடுறேன்
காதலை நானும் கொண்டாடுரேன் கொண்டாடுரேன் கொண்டாடுரேன்

என் நெற்றி மீது உன் வேர்வை சிந்தி ஈரத்திலே எனை ஆட்டி விடும்..
உன் மூச்சு காற்று வெப்பத்தை சேர்த்து.. மூழ்கும் முன்னே எனை மீட்டு விடும்..
வெளி தோற்றம் தரும் காதல் யாவும்.. சில நாளில் வெறும் மாயம் ஆகும்..
பனி நெஞ்சில் சென்று குடி ஏறும்.. குணம் தானே பல யுகம் வாழும்..

நீயா எனை இழுப்பதை அழைப்பதை மனசுக்குள் மனசுக்குள் ரசித்தேன்..
வெளியே அது பிடிக்கலை பிடிக்கலை என ஒரு நாடகம் நடித்தேன்

வல்லவா ... வல்லவா..

ஏமாந்து போனேன் ஏமாந்து போனேன் ..
தென்றல் என்றே உனை எண்ணி விட்டேன் ..
நீ என்னை சூழ்ந்து ஆழ் கொண்ட போது ..
புயல் என்று உனை கண்டு கொண்டேன்..

என்னோடு நீ இருக்கும் பொது..பொருல் இல்லா பல சண்டை தோன்றும் ..
எனது அறையில் உள்ள சுவர் நான்கும் வித விதமா உன் படம் தாங்கும்..
காலம் பல கடந்தது கடந்தது உறவு இது உறவு இது கண்ணா..
யாரும் இதை பிரித்திட நினைத்திட உடல் மட்டும் உலவிடும் தன்னால் ..

வல்லவா என்னை வெல்லவா.. கொஞ்சம் கொள்ளவா நெஞ்சை அள்ளவா..
வல்லவா என்னை வெல்லவா.. உனை கண்டதே வரம் அல்லவா..
பாதி கண்கள் முடியும் பார்வை உன்னை தேடுதே ..
உன்னை எண்ணி எண்ணியே உள்ளம் தான் வாடுதே ..
சந்தோஷத்தில் தள்ளாடுரேன் வெந்பனிகளில் திண்டாடுறேன்
காதலை நானும் கொண்டாடுரேன் கொண்டாடுரேன் கொண்டாடுரேன்

வல்லவா ... வல்லவா..

Wednesday, November 19, 2008

கனிந்திடும் எந்நாளுமே கண்ணான என் ராஜா



அழைக்காதே நினைக்காதே
அவை தனிலே எனையே ராஜா
ஆருயிரே மறவேன்
அழைக்காதே நினைக்காதே
அவை தனிலே எனையே ராஜா
ஆருயிரே மறவேன்
அழைக்காதே ........

எழில் தரும் ஜோதியே மறந்திடுவென
ஏதும் அறியாதே இருந்திடுவேனா
எனை மறந்தடிட சமயமே தானா
கனிந்திடும் எந்நாளுமே கண்ணான என் ராஜா
கனிந்திடும் எந்நாளுமே கண்ணான என் ராஜா
அழைக்காதே ........

காதலினாலே காலத்தினாலே
காவலனே என்னை சபையின் முன்னாலே
சோதனையாகவே நீ அழைக்காதே
சோதனையாகவே நீ அழைக்காதே
கனிந்திடும் எந்நாளுமே கண்ணான என் ராஜா
கனிந்திடும் எந்நாளுமே கண்ணான என் ராஜா
அழைக்காதே ........

Tuesday, November 18, 2008

மறுபடி வருவாய் என்று துடித்தேன் நடந்ததை எண்ணி உறங்க மறுத்தேன் , பிரிய மனமில்லை இன்னும் ஒருமுறை வா


தூது வருமா?...தூது வருமா?
காற்றில் வருமா கரைந்து விடுமா
தூது வருமா?...தூது வருமா?
கனவில் வருமா?...கலைந்து விடுமா?
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா?
நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா?
பாதி சொன்னதும் ஓடி விடுமா

நல்லதே நடக்கும் என்றே சீனத்தின் வாஸ்து அன்றே பார்த்தெனே வீட்டின் உள்ளே
சிவப்பிலே ட்ராகன் படமும் சிரித்திடும் புத்தர் சிலையும் வைத்தேனே தெற்கு மூலையிலே
பல பல தடை தாண்டி வந்தாய் வாஸ்துகள் எல்லாம் பொய்யே என்றாய்
கொடிய சாத்தானே என்னை தூக்கி செல்லவா

(தூது வருமா)

கருப்பிலே உடைகள் அணிந்தேன் இருட்டிலே காத்து கிடந்தேன் யட்சான் போல் நீயும் வந்தாய்
சரசங்கள் செய்த படியே சவுக்கடி கொடுக்கும் யுவனே வலித்தாலும் சுகம் தந்து சென்றாய்
மறுபடி வருவாய் என்று துடித்தேன் நடந்ததை எண்ணி உறங்க மறுத்தேன்
பிரிய மனமில்லை இன்னும் ஒருமுறை வா

நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா?
பாதி சொன்னதும் ஓடி விடுமா

Monday, November 17, 2008

மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதெ , மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ


கரு கரு விழிகளால் ஒரு கண் மை என்னை கடத்துதே
ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னை குடிக்குதே
இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில் ஒரு மின்னல் வந்து சாய்க்க
நீ..ஒரு மல்லி சரமே நீ..இலை சிந்தும் மரமே
என்.. புது வெள்ளி குடமே உன்னை தேடும் கண்கள்
ஏ நீ தங்க சிலையா வெண் .. நுரை பொங்கும் மலையா
மன்மதன் பின்னும் வலையா உன்னை தேடும் கண்கள்

புது புது வரிகளால் என் கவிதை தாளும் நிறையுதே
கனவுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே
மறந்திட மறந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதெ
மறுபடி மறுபடி உன் முகமே என்னை சூழ
தாமரை இலை நீர் நீ தானா தனி ஒரு அன்றில் நீ தானா
புயல் தரும் தென்றல் நீ தானா புதையல் நீ தானா
நீ..ஒரு மல்லி சரமே மண்ணில் ..இலை சிந்தும் மரமே
மின்னும் ..புது வெள்ளி குடமே உன்னை தேடும் கண்கள்
ஏ நீ தங்க சிலையா வெண் நுரை பொங்கும் மலையா
அம்பால் ..மதன் பின்னும் வலையா உன்னை தேடும் கண்கள்

ஒரு நாள் ஒரு நாள் என்றே தினமும் போகும்
மறு நாள் வருமா என்றே இரவில் இதயம் சாகும்
பேசும் போதே இன்னும் ஏதோ தேடும்
கையின் ரேகை போலே கள்ளதநம் ஓடும்
நீரே இல்ல பாலையிலே நின்று பெய்யும் மழை மழை
உள்ளுக்குள்ளே உச்சு கொட்டி தொடர்ந்திடும் பிழை பிழை

கரு கரு விழிகளால் ஒரு கண்மை என்னை கடத்துதே
ததும்பிட ததும்பிட சிறு அமுதம் என்னை குடிக்குதே
இரவினில் உறங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே
எழுந்திட நினைக்கையில் ஒரு மின்னல் வந்து சாய்க்க
தாமரை இலை நீர் நீ தானா தனி ஒரு அன்றில் நீ தானா
புயல் தரும் தென்றல் நீ தானா புதையல் நீ தானா
தாமரை இலை நீர் நீ தானா (ஒரு மல்லி சரமே )
தனி ஒரு அன்றில் நீ தானா (இழை சிந்தும் மரமே )
புயல் தரும் தென்றல் நீ தானா (நீ தங்க சிலையா)
புதையல் நீ தானா (மதன் பின்னும் வளையா)
ஒரு மல்லி சரமே

Thursday, November 13, 2008

முகம் கொஞ்சம் நினைவிருக்கு அவன் முகவரி தெரியவில்லை - உன்னுடன்




கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி
கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி

கண்கள் மயங்க வைத்து இளம் கன்னம் வருடியவன்
விண் மீன் விழித்திருக்க அவன் நிலவை திருடியவன்

மணக்கும் கூந்தலினால் என் மார்பை வருடியவள்
தடையம் ஏதும் இன்றி என் இதயம் திருடியவள்

முகம் கொஞ்சம் நினைவிருக்கு அவன் முகவரி தெரியவில்லை
முதல் முதல் திருடியதால் என்னை முழுசாய் திருடவில்லை

யோசனை செய்வதர்க்கும் அந்த பூ முகம் நினைவில்லை
வாசலில் மறைந்து விட்டாள் அவள் வாசனை மறையவில்லை

திருடி சென்றதை திருப்பி தந்தால்
அந்த இதயத்தை அவனுக்கே பரிசளிப்பேன்
திருடி சென்றவள் திரும்பி வந்தால்
மிச்சம் இருப்பதை மீண்டும் திருட சொல்வேன்
உறவே உறவே வருக உயிரால் உயிரை தொடுக

கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி
கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி

நீ என்னை தழுவிகொண்டாள் என் நெற்றிக்கும் இனிக்கும் அடி
பெண்ணே உன் ஸ்பரிசத்திலே தங்கம் தண்ணீரில் விளையும் அடி
மாறாப்பை சரியாவிட்டு உந்தன் மார்போடு படரும் கோடி
பேரின்ப கவி எழுத கம்பன் பிறக்காட்டும் பழய படி
நேரம் தூரம் மறந்து விட்டு
ஒரு நிமிஷத்தை யுகமாய் நாம் வளர்ப்போம்
நீள இரவை நீள செய்து பொன் நிலவு தேய்வதை நிறுத்தி வைப்போம்
உறவே உறவே வருக உயிரால் உயிரை தொடுக

கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி
கண்டுபிடி அவனை கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி

நீ நெருப்பாய் முறைத்தால் தவிர்த்தால் என் நெஞ்சுக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்



நான் சொல்வது எல்லாம் உண்மை
உண்மை தவிர வேறு எதுவும் இல்லை

பூமிக்கு வெளிச்சம் எல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனி துளிகள் நீ முகம் கழுவுவதால்

கடலுக்கு நுரைகள் எல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்த மழை நீ என்னை தழுவீயதால்

நீ விழியால் விழியை பறிதாய் உன் உயிரினை எனக்குள்ளே விதைதாய்
உன் அழகால் எனை நீ அடிததாய் ஒரு அதிஸைய உலகத்தில் அடைத்தாய்

நீ இதமாய் இதயம் கடித்தாய் என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய்
நீ மதுவாய் என்னையே குதித்தாய் இந்த உலகை உடைத்திட துடித்தாய்

காதல் வந்த பிறகு ஒட்டி கொள்ளும் சிறகு
வாழ ஒரு பூமி இனி தேவை இல்லை
ஒப்பு கொண்ட உயிர்கள் கட்டி கொண்ட பறந்தால்
எட்டி நிற்கும் வானம் ஒன்றும் தூரம் இல்லை

பூமிக்கு வெளிச்சம் எல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனி துளிகள் நீ முகம் கழுவுவதால்

கடலுக்கு நுரைகள் எல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்த மழை நீ என்னை தழுவீயதால்

நீ மெதுவா நடந்தால் கடந்தால் என் உணர்ச்சிகள் தீ பிடித்து எரியும்
நீ துளியாய் எனக்குள் விழுந்தால் என் உயிர் பனிக்கட்டியாக உறையும்
நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தாய் என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவழும்
நீ நெருப்பாய் முறைத்தால் தவிர்த்தால் என் நெஞ்சுக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்
கண்களில் மின்மினி புன்னகை சிம்போனி மின்னலின் தங்கை நீ புரிகிறதே
தொட்ட உடன் உருகும் கட்டி கொண்டு பழகும் புத்தம் புது மிருகமும் தெரிகிறதே

கடலுக்கு நுரைகள் எல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்த மழை நீ என்னை தழுவீயதால்

உன் பேரை சொன்னாலே நான் திரும்பி பார்க்கிறேன் , உன் பேரை மட்டும் நான் நான் விரும்பி கேட்கிறேன் - பூவெல்லாம் கேட்டுப்பார்


சுடிதார் அணிந்து வந்த சொற்க்கமே
என் மீது காதல் வந்தது
எப்போது எங்கு கொஞ்சம் நீ சொல்வாயா
நீ சொல்வாயா நீ சொல்வாயா

விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது
விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது
முழு காதல் என்று வந்தது தெரியாதே
அது தெரியாதே அது தெரியாதே

உன் மேல் நான் கொண்ட காதல்
என்மேல் நீ கொண்ட காதல்
எதை நீ உயர்வாக சொல்வாயோ

போட பொல்லாத பையா
நம்மேல் நான் கொண்ட காதல்
அதை நீ ரெண்டாக பார்பாயா

உன் பேரை சொன்னாலே நான் திரும்பி பார்க்கிறேன்
உன் பேரை மட்டும் நான் நான் விரும்பி கேட்கிறேன்

இருவர் ஒன்றாக இணைந்து விட்டோம் இரண்டு பெயர் ஏனடி
உனக்குள் நான் என்னை தொலைத்து விட்டேன் உன்னையே கேளு நீ
அட உன்னை நான் மறந்த வேளையில் உன் காதல் மாறுமா
விடி காலை தாமரை பூவிது விண்மீனை பார்க்குமா

உன் மேல் நான் கொண்ட காதல்
என்மேல் நீ கொண்ட காதல்
எதை நீ உயர்வாக சொல்வாயோ

போட பொல்லாத பையா
நம்மேல் நான் கொண்ட காதல்
அதை நீ ரெண்டாக பார்பாயா

பலகோடி பெண்களிலே எதற்கு என்னை தேடினாய்
நான் தேடும் பெண்ணாக நீ தானே தோன்றினாய்
நரை கூடும் நாட்களிலே என்னை க் தோன்றுமா
அடி போ டீ காதலிலே நரை கூட தோன்றுமா

உன் கண்ணில் உண்டான காதல் இது
முடிவிலும் நிற்குமோ
என் நெஞ்சில் உண்டான காதல் இது
நெஞ்சை விட்டு போகுமா ?

உன் மேல் நான் கொண்ட காதல்
என்மேல் நீ கொண்ட காதல்
எதை நீ உயர்வாக சொல்வாயோ

போட பொல்லாத பையா
நம்மேல் நான் கொண்ட காதல்
அதை நீ ரெண்டாக பார்பாயா

சுடிதார் அணிந்து வந்த சொற்க்கமே
என் மீது காதல் வந்தது
எப்போது எங்கு கொஞ்சம் நீ சொல்வாயா
நீ சொல்வாயா நீ சொல்வாயா

விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது
விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது
முழு காதல் என்று வந்தது தெரியாதே
அது தெரியாதே அது தெரியாதே

Tuesday, November 11, 2008

உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே



மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேசமா

கண்ணிலே மின்னும் காதலே
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே

நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே

பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேசமா
கண்ணிலே மின்னும் காதலே
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
இனிய சொல்லினால் எந்தன் உள்ளம் மகிழுமே
உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
இனிய சொல்லினால் எந்தன் உள்ளம் மகிழுமே

அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இன்று நாம் இன்ப வாழ்வின் எல்லை காண்போம்

மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே

Friday, November 7, 2008

எல்லாம் நெஞ்சோட மூடி மூடி வச்சா தண்னாள ,ஒரு பாசம் அன்போட பாட்டெடுத்து தந்தா தண்னாள




இங்கே மானமுள்ள பொண்ணு ஒன்ன மனம் துடிக்க விட்டாக
மறுதளிக்க வச்சாக மதி மயங்க வச்சாக
பாசமுள்ள பொண்ணு ஒன்ன பரித்தவிக்க விட்டாக
துடி துடிக்க விட்டாக துயரப்பட விட்டாக
அட எல்லாம் நெஞ்சோட மூடி மூடி வச்சா தண்னாள
ஒரு பாசம் அன்போட பாட்டெடுத்து தந்தா தண்னாள

அம்மையில்ல அப்பணுமில்ல ஆறுதல் சொல்ல ஆளில்லா
ஆச பட்ட வாழ்வும் ஒண்ணு அவளுக்கிங்கே சேரலை
ஆளான நாள் முதலா ஆசையும் வச்சா மாறலை
அந்த கதை பாதியில் முடிந்து போனதையா தேறலை
பச்ச மண்ணு உன்னால பல பழி சுமந்தா தந்நால
பாவம் பழி முன்னால வந்து படருதைய்யா தந்நால
கஷ்டத்தை மட்டும் தூக்கி சுமக்கும் கண்ணி இவதான்
சின்ன மக தான் உத்தமி ரத்தினம் தான்

இங்கே மானமுள்ள பொண்ணு ஒன்ன மனம் துடிக்க விட்டாக
மறுதளிக்க வச்சாக மதி மயங்க வச்சாக

வண்டு விழி ரெண்டிலும் இப்போ வழியுத்தம்மா காவிரி
நெஞ்சிலுள்ள நிம்மதி விட்டு கலங்கி நின்னா காதலி
கூட வந்த ராஸனை எங்கே கோடி வரையிலும் காணல
பாட வந்த பாட்டுல உள்ள சங்கதி என்ன தோணலை
தாலி ஒண்ணு கையோட அதை தாங்க இவளுக்கு கூடலை
வாலிபத்து நாளுல அந்த வாட்டம் இவளுக்கு ஆரலை
உச்சம் தலையில் வச்சி எழுதி கச்சி பிரிச்சான்
அன்பை மரச்சான் யாராந்த சாமியப்பா

இங்கே மானமுள்ள பொண்ணு ஒன்ன மனம் துடிக்க விட்டாக
மறுதளிக்க வச்சாக மதி மயங்க வச்சாக
அட எல்லாம் நெஞ்சோட மூடி மூடி வச்சா தண்னாள
ஒரு பாசம் அன்போட பாட்டெடுத்து தந்தா தண்னாள

இமைகள் ரெண்டும் மூடும் போதும் உன்னை யோசிக்க - பொய் சொல்ல போறோம்


ஒரு வார்தை பேசாமல் ஒரு பார்வை பார்க்காமல்
உன் மௌனம் எதோ செய்யுதடா
புயல் காற்று வீசாமல் பூகம்பம் இல்லாமல்
என் நெஞ்சம் உன்னிடம் சாயுதடா
நான் நில் நில் நில் என்றாலும் என் மனம் கேட்கவில்லை
தினம் சொல் சொல் என்றாலும் என் உதடுகள் பேசவில்லை
ஆனால் கூட ஐயோ இந்த அவஸ்தைகள் புடிக்குதடா
ஐயோ ஐயோ ஐயோ எனக்கு காதல் வந்திருச்சு
பையா பையா பையா எனக்கு பைத்தியம் புடிச்சிருச்சு

போ போ போ எந்தன் இரவே நீயும் அவனிடம் சென்று
தூக்கம் இல்லை நெடுநாள் என்று சொல்வாயோ
போ போ போ எந்தன் இரவே நீயும் அவனிடம் சென்று
தூக்கம் இல்லை நெடுநாள் என்று சொல்வாயோ
இமைகள் ரெண்டும் மூடும் போதும் உன்னை யோசிக்க
என் இதயம் என்னும் புத்தகம் தருவேன் வாடா வாசிக்க
சொல்லாமல் போனாலும் என் காதல் தெரியாதா
கண்கள் பேசும் பாஷைகள் என் கண்ணா புரியாதா

போ போ போ எந்தன் பகலே நீயும் அவனிடம் சென்று
வெளிச்சம் இல்லை வெகுநாள் என்று சொல்வாயோ
போ போ போ எந்தன் பகலே நீயும் அவனிடம் சென்று
வெளிச்சம் இல்லை வெகுநாள் என்று சொல்வாயோ
காற்றை கேட்டு பூக்கள் எல்லாம் வாசம் தருகிறதா
கடிதம போட்டு கடலை தேடி நதிகள் வருகிறதோ
சொல்லாமல் போனாலும் என் காதல் தெரியாதா
கண்கள் பேசும் பாஷைகள் என் கண்ணா புரியாதா
ஐயோ ஐயோ ஐயோ எனக்கு காதல் வந்திருச்சு
பையா பையா பையா எனக்கு பைத்தியம் புடிச்சிருச்சு

ஒரு வார்தை பேசாமல் ஒரு பார்வை பார்க்காமல்
உன் மௌனம் எதோ செய்யுதடா
புயல் காற்று வீசாமல் பூகம்பம் இல்லாமல்
என் நெஞ்சம் உன்னிடம் சாயுதடா
நான் நில் நில் நில் என்றாலும் என் மனம் கேட்கவில்லை
தினம் சொல் சொல் என்றாலும் என் உதடுகள் பேசவில்லை
ஆனால் கூட ஐயோ இந்த அவஸ்தைகள் புடிக்குதடா
ஐயோ ஐயோ ஐயோ எனக்கு காதல் வந்திருச்சு
பையா பையா பையா எனக்கு பைத்தியம் புடிச்சிருச்சு

Tuesday, November 4, 2008

நீ எங்கோ பிறந்தாய் நான் எங்கோ பிறந்தேன் ,ஒரே ஒரு பார்வையால் உயிரை குடித்தாய்



வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதல் காதல்
கண்ணிலே கண்ணிலே மது சாரல் கண்டதும் முதல் பாடல்
தூண்டிலில் மீனா தூயவா நானா காரணம் நானா நீயே நீயே சொல்
வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதல் காதல்

என்னவா என்னவா எதை கண்டு மையல் ஆனாய்
எதனால் எதனால் இமை கடந்து கண்ணை போனாய்
நீ எங்கோ பிறந்தாய் நான் எங்கோ பிறந்தேன்
ஒரே ஒரு பார்வையால் உயிரை குடித்தாய்

வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதல் காதல்
கண்ணிலே கண்ணிலே மது சாரல் கண்டதும் முதல் பாடல்
தூண்டிலில் மீனா தூயவா நானா காரணம் நானா நீயே நீயே சொல்
வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவேவந்ததே முதல் காதல்


கண்களை மூடினால் கண் வந்து உள்ளம் கிள்ளும்
கட்டிலை நாடினால் இரவன்று நீளம் கொள்ளும்
வேரோடு துடிக்க யாரோடு உரைக்க
கனா கண்ட காட்சிகள் கண்ணில் வருமா

வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதல் காதல்
கண்ணிலே கண்ணிலே மது சாரல் கண்டதும் முதல் பாடல்
தூண்டிலில் மீனா தூயவா நானா காரணம் நானா நீயே நீயே சொல்
வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவேவந்ததே முதல் காதல்

உன் மேல பாசம் வச்ச பொண்ணு தானய்யா


மலை ஓரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
மலை ஓரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா

கண்மூடி தூங்கிடாம
என் பாட்டை கேட்க வேணும்
என் பாட்டு ராசா உந்தன்
நோயை தான் தீர்க்க வேணும்
உன் மேல பாசம் வச்ச பொண்ணு தானய்யா

மலை ஓரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா

காதலா காதலா உனைநான் விடமாட்டென் , கைத்தலம் பற்றுவேன் பிரிய விடமாட்டேன் , கண்கள் மீது ஆணை அழகு மீது ஆணை விடவே விடமாட்டென்


ஹெலோ மிஸ்‌டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலு என்னாச்சு
காத்து காத்து நாளாச்சு பதினெட்டு வயசாச்சு
ஹெலோ மிஸ்‌டர் எதிர்க்கட்சி கேள்விக்கு பதிலு என்னாச்சு
காத்து காத்து நாளாச்சு பதினெட்டு வயசாச்சு
காதலா காதலா உனைநான் விடமாட்டென்
கைத்தலம் பற்றுவேன் பிரிய விடமாட்டேன்
கண்கள் மீது ஆணை அழகு மீது ஆணை விடவே விடமாட்டென்
(ஹெலோ)
கண்ணை நான் பிரிந்தால் காதல் பூ உதிர்ந்தால்
உள்ளத்தில் உலகப் போர் மூளுமே
நீயென்னை மறந்தால் நில்லாமல் மறைந்தால்
என் கண்கள் பாலைவனமாகுமே
பருவாங்கள் சந்திததால் பிரிவொன்று உண்டாகும்
துருவங்கள் சந்திததால் பிரியாது எந்நாளும்
கம்பன் பார்த்தால் காவியம் உருவாகும்
(ஹெலோ)
மண்ணை வேர்கள் பிரிந்தாலும் விண்ணை நீலம் பிரிந்தாலும்
கண்ணை மணிகள் பிரிந்தாலும் உனை நான் பிரியேன்
சங்கம் தமிழைப் பிரிந்தாலும் ஸத்தம் இசையைப் பிரிந்தாலும்
தாளம் சுருதியைப் பிரிந்தாலும் உனை நான் பிரியேன்
உன்னோடு வாழத்தான் என் அன்னை பெற்றாலோ
உன்னோடு சேரத்தான் விதி மன்னன் இட்டானோ
உன்னைப் பார்த்த நாள்தான் பொன்னாலோ

(ஹெலோ)

Monday, November 3, 2008

உண்மையில் உண்மையில் புரியாமல் போகிறாய்




காதலா காதலா காதலை சொல்லடா
மௌனமாய் சொல்லுவது நல்லது அல்ல
உயிரிலே உயிரிலே சடுகுடு ஆடினாய்
உண்மையில் உண்மையில் புரியாமல் போகிறாய்

கண்ணிரெண்டில் நான் தான் காதலெனும் கோட்டை கட்டிவைத்து பார்த்தேன் அத்தனையும் ஓட்டை


உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்னை நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
அந்த வானம் அழுதா தான் இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சில பேர் சொந்த வாழ்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்
உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்னை நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே

ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்
மற்றவரை நான் ஏன் குற்றம் சொல்ல வேண்டும்
கொட்டும் மழை காலம் உப்பு விக்க போனேன்
காத்தடிக்கும் நேரம் மாவு விக்க போனேன்
தப்பு கணக்கை போட்டு தவித்தேன் தங்கமே ஞான தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன் தங்கமே ஞான தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்
உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்னை நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே

கண்ணிரெண்டில் நான் தான் காதலெனும் கோட்டை
கட்டிவைத்து பார்த்தேன் அத்தனையும் ஓட்டை
உள்ளபடி யோகம் உள்ளவர்க்கு நாளும்
நட்ட விதை எல்லாம் நல்ல மரமாகும்
ஆடும் வரைக்கும் ஆடி இருப்போம் தங்கமே ஞான தங்கமே
ஆட்டம் முடிந்தால் ஓட்டம் எடுப்போம் தங்கமே ஞான தங்கமே

நலம் புரிந்தாய் எனக்கு நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்
உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்தங்கமே ஞான
என்னை நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே
அந்த வானம் அழுதா தான் இந்த பூமியே சிரிக்கும்
வானம் போல் சில பேர் சொந்த வாழ்கையும் இருக்கும்
உணர்ந்தேன் நான்

உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்தங்கமே ஞான தங்கமே
என்னை நெனச்சேன் நானும் சிரிச்சேன் தங்கமே ஞான தங்கமே

நெஞ்சம் எனும் ஊரினிலே காதல் எனும் தெருவினிலே , கனவு எனும் வாசலிலே ,என்னை விட்டு விட்டு போனாயே


நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை விட்டு விட்டு போனாயே

வாழ்க்கை எனும் வீதியிலே
மனசு எனும் தேறினிலே
ஆசை எனும் போதையிலே
என்னை விட்டு விட்டு போனாயே

நான் தனியாய் தனியாய் நடந்தேனே
சிறு பனியாய் பனியாய் கரைந்தேனே
ஒரு நுறையாய் நுறையாய் உடைந்தேனே
காதலாலே

நெஞ்சம் எனும் ஊரினிலே
காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே
என்னை விட்டு விட்டு போனாயே

Saturday, November 1, 2008

ஒப்புக்கொண்டேன் ஒப்புக்கொண்டேன் என்னில் இங்கு நானும் இல்லை ஒப்புக்கொண்டேன் , ஒற்றிகொண்டேன் ஒற்றிகொண்டேன் உந்தன் உள்ளம் அள்ளி கண்ணில் ஒற்றிகொண்டேன்


அர்ஜுனா அர்ஜுனா அம்பு விடும் அர்ஜுனா
அம்பினால் அம்பினால் உள்ளம் தைத்த அர்ஜுனா
கனவிலே கடவுளை கண்டால் தூங்கிடும் குழந்தை சிரிக்கும்
நேரிலே உன்னை கண்டால் என் மனம் துள்ளி குதிக்கும்
நிலா நிலா நீ வா வா வா நில்லாமல் நீ ஓடி வா

செல்லமாய் சண்டை போட்டு கோபமாய் முறைத்து பார்த்து
கொஞ்சலாய் என்னை திட்ட வா வா வா
மென்மையாய் என்னை அணைத்து பெண்மையின் ஆசை புரிந்து
என்னையே சீண்டி பார்க்க வா வா வா
தூங்குகின்ற உன் அழகை கண்டு கண்டு எந்தன் உள்ளம் பூத்திடுமே
தூக்கத்திலே தூக்கத்திலே உன்னை எண்ணி உன்னை எண்ணி புன்னகைப்பேன்
வெயிலிலே இருக்கின்ற உன் நிழலை பார்த்தாலே
வியர்வை அதை துடைக்கும் கை குட்டை என இதயம் மாறிடுமே
நிலா நிலா நீ வா வா வா நில்லாமல் நீ ஓடி வா
அர்ஜுனா அர்ஜுனா அம்பு விடும் அர்ஜுனா
அம்பினால் அம்பினால் உள்ளம் தைத்த அர்ஜுனா

விழிகளே கானா தூரம் தொலைவில் நீ இருக்கும் போதும்
அருகிலே உன்னை பார்த்தேன் ஹே ஹே ஹே ஹே
இருவரின் இமைகள் சேரும் அருகில் நீ இருக்கும் போதும்
தெரிந்து தான் என்னை தொலைப்பேனே ஹே ஹே ஹே ஹே
ஒப்புக்கொண்டேன் ஒப்புக்கொண்டேன்
என்னில் இங்கு நானும் இல்லை ஒப்புக்கொண்டேன்
ஒற்றிகொண்டேன் ஒற்றிகொண்டேன்
உந்தன் உள்ளம் அள்ளி கண்ணில் ஒற்றிகொண்டேன்
நிஜத்தில் அது ஆக பொய்கள் அது நிஜமாக
காதல் அதில் உண்டு பல குழப்பம்
அதை நானும் அறிந்தேனே

அர்ஜுனா அர்ஜுனா அம்பு விடும் அர்ஜுனா
அம்பினால் அம்பினால் உள்ளம் தைத்த அர்ஜுனா
கனவிலே கடவுளை கண்டால் தூங்கிடும் குழந்தை சிரிக்கும்
நேரிலே உன்னை கண்டால் என் மனம் துள்ளி குதிக்கும்
நிலா நிலா நீ வா வா வா நில்லாமல் நீ ஓடி வா

என்னை கொல்வதா ? இளைய மன்மதா!இதற்கு பேர் காதல் என்பதா ?


சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை
ஆசை பேசவே போதவில்லை பாஷை
இன்பமோ துன்பம் செய்யுதே
துன்பமோ இன்பம் செய்யுதே
ஆளில்லாமலே பேச தோணுதே
ஆட்கள் கண்டதும் பேச்சு நின்றதே
இதற்கு பேர் காதல் என்பதா ?
சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை
ஆசை பேசவே போதவில்லை பாஷை

ஒற்றை சிறகு கொண்டு சுற்றி பார்க்கும் கிளி போல்
தத்தை நெஞ்சு தத்தலிக்குதெ
தூங்கும் பொது விழித்து நான் விழித்த பின்னும் கனவு
வயசு என்னை வம்பு செய்யுதே
மாலை நேரம் வந்தால் என் மனதில் நாணம் இல்லையே
மார்பில் உள்ள ஆடை என் பேச்சை கேட்கவில்லை
இதய கூடையில் பூக்கள் நிறையுமா ?
இதற்கு பேர் காதல் என்பதா ?

மனசின் பள்ளம் தேடி புயல் மையம் கொண்டதென்ன
எந்த நேரம் கரையை கடக்குமோ?
கடலில் அலைகள் போல என் உடலில் அலைகள் தோன்றி
பூமி சுற்றி கொந்தளிக்குமோ ?
என்ன நேரும் என்று என் அறிவு அறியவில்லை
ரகசியங்கள் அறிந்தால் அதில் ரசனை ஏதும் இல்லையே
என்னை கொல்வதா ? இளைய மன்மதா!
இதற்கு பேர் காதல் என்பதா ?

சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை
ஆசை பேசவே போதவில்லை பாஷை
இன்பமோ துன்பம் செய்யுதே
துன்பமோ இன்பம் செய்யுதே
ஆளில்லாமலே பேச தோணுதே
ஆட்கள் கண்டதும் பேச்சு நின்றதே
இதற்கு பேர் காதல் என்பதா ?
சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை
ஆசை பேசவே போதவில்லை பாஷை

உனை நினைத்து உயிர் துடித்து தினம் தினம் நான் இசைபடித்தேன்



வரச்சொல்லி இந்நேரம் வனக்குயில் அழைத்தது வந்தேன்
குறை சொல்லி இப்போது இப்போது விரட்டிட தெருவினில் நின்றேன்

அழுகையை கண்ணோடு அடக்கிட நினைக்கையில் நானும்
எனக்கென்ன கண்ணீரை வடிக்கிது வடிக்கிது வானம்

உனை நினைத்து உயிர் துடித்து தினம் தினம் நான் இசைபடித்தேன்
உனதழகை விழி இரண்டால் அழகழகாய் சிலைவடித்தேன்

களங்கம் இல்லாத காதல் பிழைகள் இல்லாத பாடல்
இடையில் உண்டான ஊடல் நிஜங்கள் ஆகாது காதல்
வார்த்தை பொய்யாகும் வாழ்கை பொய்யாகும்
காதல் போய்யாவதேது

நெஞ்சுக்குள் காதல் வந்தாள் பெண் நிலவரம் இதுதானோ


நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும் அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுக்குழி அடைக்கும் அது ஏனோ
குளிரில் எனகொரு புழுக்கம் அது ஏனோ
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ

காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ

நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும் அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுக்குழி அடைக்கும் அது ஏனோ
பூக்கள் கை கொட்டி சிரிக்கும் அது ஏனோ
புடவை அடிக்கடி நழுவும் அது ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ

பால் மடியில் வான் நிலவில் தீ வடிவதேனோ
ராவேழுதும் என் கனவில் தேன் வடிவதேனோ
மொழியை கண்கள் வெறுக்கும் இது ஏனோ
வார்த்தைகள் நாவில உடையுதே ஏனோ
மண்ணில் நான் வாழ்வதே மறந்ததே ஏனோ
அஞ்சுக்கும் ஆருக்குமே இடைவெளி ஏனோ ஏனோ
நெஞ்சுக்கும் உதடுக்குமே தூரங்கள் ஏனோ ஏனோ

நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும் அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுக்குழி அடைக்கும் அது ஏனோ
குளிரில் எனகொரு புழுக்கம் அது ஏனோ
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ
நான் என்பதில் இன் மறைந்து இம் வந்ததும் ஏனோ
போ என்பதில் போ ஒழிந்து வா வந்ததும் ஏனோ
வெட்க்கம் என்னை நனைக்கும் இது ஏனோ
கால் விரல் ஓவியம் எழுதுதே ஏனோ
கண்களும் கண்களும் பொய் சொல்லும் ஏனோ
இமைக்கையில் இடி சத்தம் கேட்டதும் ஏனோ ஏனோ
நெஞ்சுக்குள் காதல் வந்தாள் பெண் நிலவரம் இதுதானோ

நினைத்தால் நெஞ்சுக்குழி இனிக்கும் அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுக்குழி அடைக்கும் அது ஏனோ
குளிரில் எனகொரு புழுக்கம் அது ஏனோ
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ

உன்னைஎனக்குபிடிக்கும் அதைசொல்வதில்தானே தயக்கம் நீயேசொல்லும்வரைக்கும்என்காதலும் காத்துகிடக்கும்தினம்தினம் கனவில்வந்துவிடு நம்திருமணஅழைப்பிதழ் தந்துவிடு



மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே அதற்கும் பெருமை கிட்டுமா
எனக்குள் இதயம் தனித்திருக்கே அதை உன்னுடன் சேர்க்கட்டுமா

நீர் துளிகள் நிலம் விழுந்தால் பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தாய் மௌனம் கூட இசை அமைக்கும்
பூங்குயில்கள் மறைந்திருந்தால் கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நான் , நான் இருந்தும் தாகம் இன்னும் அடங்கவில்லை
வானும் இணைந்து நடக்கும் இந்த பயணத்தில் என்ன நடக்கும்
வானம் இருக்கும் வரைக்கும் இந்த வானவில் உன்னுடன் இருக்கும்
மழை துளி பணி துளி கலைந்த பின்னே அது மறுபடி இரண்டென பிரிந்திடுமோ

மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்
கண்ணிமைகள் கை தட்டி யே உன்னை மெல்ல அழைக்கிறதே
உன் செவியில் விழவில்லையா உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே
உன்னறுகே நான் இருந்தும் உண்மை சொல்ல துணிவு இல்லை
கைகளிலே விரல் இரண்டும் கைகள் கோர்க முடியவில்லை
உன்னை எனக்கு பிடிக்கும் அதை சொல்வதில் தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்து கிடக்கும்
தினம் தினம் கனவில் வந்து விடு நம் திருமண அழைப்பிதழ் தந்துவிடு

மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல்
எனக்கும் காதல் பிறந்திருக்கே அதற்கும் பெருமை கிட்டுமா
எனக்குள் இதயம் தனித்திருக்கே அதை உன்னுடன் சேர்க்கட்டுமா