Saturday, March 28, 2009

தானே வந்து காதல் கொள்ளும் உள்ளம் ஜாதகம் பார்காது


தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே
வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனைக் கண்டதும் விலகியதே
ரத்தத்தாமரை முத்தம் கேட்குது வா... என் வாழ்வே வா

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

சின்னக் கலைவாணி நீ வண்ணச் சிலை மேனி
அது மஞ்சம்தனில் மாறன் தலை வைக்கும் இன்பத் தலகாணி
ஆசைத் தலைவன் நீ நான் அடிமை மஹராணி
மங்கை இவள் அங்கம் எங்கும் பூச நீதான் மருதாணி
திறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும்
தென்பாண்டித் தென்றல் திறந்தாக வேண்டும்
என்ன சம்மதமா............இன்னும் தாமதமா

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

தூக்கம் வந்தாலே மனம் தலயணைத் தேடாது
தானே வந்து காதல் கொள்ளும் உள்ளம் ஜாதகம் பார்காது
மேகம் மழை தந்தால் துளி மேலே போகாது
பெண்ணின் மனம் ஆணில் விழ வேண்டும் விதிதான் மாறாது
என் பேரின் பின்னே நீ சேர வேண்டும்
கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும்
என்னை மாற்றி விடு.............இதழ் ஊற்றிக்கொடு

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை உன் காதலன் கண்டதும் நழுவியதோ
வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனைக் கண்டதும் விலகியதோ
முத்தம் என்பதன் அர்த்தம் பழகிட வா என் வாழ்வே வா

ஊரெங்கும் போகும் என் ராகங்களே உன் வீடு சேரும் என் மேகங்களே


பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்

நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமலே போகுமோ
கைதான பொதும் கை சேரவேண்டும்
உன்னொடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறுமே

பாடு நிலவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன்

ஊரெங்கும் போகும் என் ராகங்களே
உன் வீடு சேரும் என் மேகங்களே
பூ மீது தேன் தூவும் காதல் வரம்
என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்
காவேரி வெள்ளம் கை சேர வேண்டும்
ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே

பாடு நிலவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன்

கண்டபோதே இந்த மூஞ்சி நெறஞ்சுபோச்சு நெஞ்சுக்குள்ள



தாமரப்பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமனே அள்ளி நீ தாவணி போட்டுக்க மச்சினி யாருமில்ல

கம்பங்கூழில் போட்ட உப்பு கஞ்சியெல்லாம் சேர்தல் போல
கண்டபோதே இந்த மூஞ்சி நெறஞ்சுபோச்சு நெஞ்சுக்குள்ள

நாக்குல மூக்கையே ஏ ஹே தொட்டவன் நானடி
பார்வையால் உசுரையே ஓ ஹோ தொட்டவ நீயடி

தாமரப்பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமனை எண்ணி நீ தாவணி போட்டுட்டேன் மாலையும் சூடவில்லை


ஐயாரெட்டு நெல்லப்போல அவசரமா சமைஞ்ச
ஐத்த மகன் மஞ்சத்துக்கு ஆதாரமா அமஞ்ச
குட்டிப்போட்ட பூனை போல காலச் சுத்தி கொழஞ்ச
பாவமின்னு நீவி விட்டா பல்லு போட துணிஞ்ச
சொந்தக்காரன் நாந்தானே தொட்டுப்பாக்க கூடதா
கன்னம் தொடும் கை ரெண்டும் கீழே கொஞ்சம் நீளாதா
இந்த நாட்டில் தீண்டாமைதான் இன்னும் உள்ளதா

வயசுக்கு வந்த பூ ஓ ஹோ ஆசையே பேசுமா
வண்டுக்கும் பூவுக்கும் ஒஹோ சண்டையா சத்தமா

தாமரப்பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமனை எண்ணி நீ தாவணி போட்டுட்டேன் மாலையும் சூடவில்லை

கம்மாக்குள்ள ஒத்தமரம் அங்கே போவோம் மாமா
கம்மாத்தண்ணி வத்தும்போது திரும்பிடுவோம் மாமா
நீச்சல் எல்லாம் சொல்லித்தாரேன் நீயும் கொஞ்சம் வா மா
அங்கே இங்கே கை படும் சொல்லிப்புட்டேன் ஆமா
நிலா கறையை அழிஞ்சாலும் உன்ன திருத்த முடியது
பொரட்டிப்போட்டு அடிக்காம ஆமை ஓடு ஒடயாது
போகப்போக மாமனுக்கு புத்தி மாறுது
அள்ளவா கிள்ளவா ஓ ஹோ சொல்லடி செய்யலாம்
வேட்டியா சேலையா ஒஹ் ஹோ பட்டிமன்றம் வைக்கலாம்

தாமரப்பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமனை அள்ளி நீ தாவணி போட்டுக்க மச்சினி யாருமில்ல

கம்பங்கூழில் போட்ட உப்பு கஞ்சியெல்லாம் சேர்தல் போல
கண்டபோதே இந்த மூஞ்சி நெறஞ்சுபோச்சு நெஞ்சுக்குள்ள
மாமனே மாமனே ஹே ஹே உங்கிட்ட யுத்தமா
பூமிக்கும் நீருக்கும் ஹோ ஹோ சண்டையா சத்தமா

தாமரப்பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல
மாமன எண்ணி நீ தாவணி போட்டுக்க மச்சினி யாருமில்ல

அவள் எழுதும் கவிதைகளை விதி புகுந்தே திருத்துதம்மா


அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்தப் பக்கம்
ஞாயிறுண்டு திங்களுண்டு எந்த நாள் உந்தன் நாளோ

கல்லைக் கண்டாள் கனியைக் கண்டாள்
கல்லும் இன்று மெல்ல மெல்லக் கனியும் மென்மை கண்டாள்
கதையெழுதிப் பழகிவிட்டாள் முடிக்கமட்டும் தெரியவில்லை

அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்தப் பக்கம்
ஞாயிறுண்டு திங்களுண்டு எந்த நாள் உந்தன் நாளோ


கண்ணா என்றாள் முருகன் வந்தான்
முருகா என்றாள் கண்ணன் வந்தான்
எந்தத் தெய்வம் சொந்தம் என்று கூறிப் பூஜை செய்வாள்
அவள் எழுதும் கவிதைகளை விதி புகுந்தே திருத்துதம்மா

அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்தப் பக்கம்
ஞாயிறுண்டு திங்களுண்டு எந்த நாள் உந்தன் நாளோ

சொந்தம் ஒன்று பந்தம் ஒன்று
வெள்ளையுள்ளக் கிள்ளை ஒன்று நடுவில் ஊஞ்சல் ஒன்று
தொடர்கதையோ பழங்கதையோ விடுகதையோ எது இன்று


அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்தப் பக்கம்
ஞாயிறுண்டு திங்களுண்டு எந்த நாள் உந்தன் நாளோ

கல்லைக் கண்டாள் கனியைக் கண்டாள்
கல்லும் இன்று மெல்ல மெல்லக் கனியும் மென்மை கண்டாள்
கதையெழுதிப் பழகிவிட்டாள் முடிக்கமட்டும் தெரியவில்லை

Friday, March 27, 2009

வசிய மருந்தை வசிய மருந்தை விழியில் வைத்து விரட்டி பிடித்தாயே


ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

தித்திதிடவே தித்திதிடவே ஓரு முறை முத்தம்
கொடுப்பாயா கொடுப்பாயா
பத்திக்கிடவே பத்திக்கிடவே
பல முறை இன்பம் எடுப்பாயா
பார்க்கும் பொழுதே பரிப்பாயா
நீ வார்த்தை பேசிட இனிப்பாயா
கேட்கும் பொழுதே பரிப்பாயா
நீ போர்வை கூசிட அணைப்பாயா
அணைப்பாயா..அணைப்பாயா..



தலை கோதி உன் தலை கோதி
நான் முழுதாக களைகிறேன்
இமை மோதி உன் இமை மோதி
நான் படு காயம் அடைகிறேன்
ஹே வசிய மருந்தை வசிய மருந்தை
விழியில் வைத்து விரட்டி பிடித்தாயே

இதழில் இதழால் இலை போடு
நீ இரவு முழுதும் இறை தேடு
மனதை மனத்தால் அணை போடு
என் புடவை நெருப்பில் விளையாடு
விளையாடு.. விளையாடு ..

சொல்லடா... மன்மதா ....
சொல்லடா... மன்மதா ....


ஓரு பாதி உன் உடலாலே
நான் குடை சாய நேர்ந்தது
மறு பாதி உன் உயிராலே
நான் குளிர் காய சேர்ந்தது
ஹே நடக்கும் தீயே நடக்கும் தீயே
முத்தம் தீவிரவாதி நீயே
இரும்பு மார்பில் வசிப்பேனே
உன் கரும்பு வேர்வை ருசிப்பேனே
ஆசை வெட்கம் காத்தேனே
என் ஆயுள் நொடி வரை புப்பெனே பூத்தேனே

தித்திதிடவே தித்திதிடவே ஓரு முறை முத்தம்
கொடுப்பாயா கொடுப்பாயா
பத்திக்கிடவே பத்திக்கிடவே
பல முறை இன்பம் எடுப்பாயா
பார்க்கும் பொழுதே பரிப்பாயா
நீ வார்த்தை பேசிட இனிப்பாயா
கேட்கும் பொழுதே பரிப்பாயா
நீ போர்வை கூசிட அணைப்பாயா
அணைப்பாயா...அணைப்பாயா..

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

Thursday, March 26, 2009

அதோ அதோ அந்த நடையழகை உடல் தொடும் உந்தன் உடையழகை



I I like you...

I I like you....
உன் லேசர் பாயும் கண்ணை
பிரவுன் சீசர் போன்ற தோள்கள்
என் நெஞ்சை உரசும் நெஞ்சை

I I like you...

I I like you....
உன் லேசர் பாயும் கண்ணை
பிரவுன் சீசர் போன்ற தோள்களை
என் நெஞ்சை உரசும் நெஞ்சை

தினம் தினம் எந்தன் நெஞ்சில்
கடம் கடம் வந்து வாசிக்கிறாய்
இடம் வளம் தொட்டு என்னை இம்சிக்கிறாய்
அதோ அதோ அந்த புன்னகையால்
சதா சதா என்னை சாகடித்தாய்
அயோ அயோ எந்தன் பெண்மை சோதிக்கிறாய்


பார்த்தவுடன் உயிர் உடைத்துவிட்டாய்
I like you I like you
பார்வைகளால் எனை துகிளுரிந்தாய்
I like you I like you
புத்தம் புத்தம் புது உதடுகளை
குத்தும் குத்தும் உன் மீசையினை
ஹையோ ஹையோ
like you I like you
ஆண் புயலே உன்னை துரத்தி வந்தேன்
I like you I like you
அலட்சியமாய் எனை கலக்கிவிட்டாய்
I like you I like you
எனக்கான உயரம் நீ like you I like you
எனக்காக பிறந்தே நீ like you I like you
எண்டா யோசிக்கிறாய் ?
உனக்கான பெண்ணே நான் தானடா
உயிரோடு என்னை தின்னடா


தினம் தினம் எந்தன் நெஞ்சில்
கடம் கடம் வந்து வாசிக்கிறாய்
இடம் வளம் தொட்டு என்னை இம்சிக்கிறாய்


கண்களிலே ஓரு சிறு மலர்ந்தாய்
I like you I like you
என்னை கனவுகளில் வந்து அனுபவித்தாய்
I like you I like you
அதோ அதோ அந்த நடையழகை
உடல் தொடும் உந்தன் உடையழகை
ஹையோ ஹையோ
like you I like you

விரும்பி வந்தால் மெல்ல விலகி செல்வாய்
like you I like you
திரும்பி கொண்டு மெல்ல சிரித்து கொள்வாய்
like you I like you
மனம் போன்று வர மாட்டாய்
like you I like you
பசிக்காமல் தொட மாட்டாய்
like you I like you
பெங்களூர் தக்காளி நான்
ருசி பார்க்கும் நண்பா வாயில்லையா
தக்காளி மறுநாள் தாங்காதையா


தினம் தினம் எந்தன் நெஞ்சில்
கடம் கடம் வந்து வாசிக்கிறாய்
இடம் வளம் தொட்டு என்னை இம்சிக்கிறாய்

I I like you...

I I like you....
உன் லேசர் பாயும் கண்ணை
பிரவுன் சீசர் போன்ற தோள்கள்
என் நெஞ்சை உரசும் நெஞ்சை

தினம் தினம் எந்தன் நெஞ்சில்
கடம் கடம் வந்து வாசிக்கிறாய்
இடம் வளம் தொட்டு என்னை இம்சிக்கிறாய்
அதோ அதோ அந்த புன்னகையால்
சதா சதா என்னை சாகடித்தாய்
அயோ அயோ எந்தன் பெண்மை சோதிக்கிறாய்

பக்கம் இருக்கையிலே மொத்தம் நொறுக்குறியே அங்கும் இங்கும் அழகா தொட்டு கிருக்குறியே


பையா பையா சின்ன பையா
உள்ளுக்குள்ளே கியா கியா
பொய்யா பொய்யா கத்தாதே
நீ சிக்கிகிட்ட மெய்யா மெய்யா

என்னை யாரும் இல்லா மொட்டை மாடி கூட்டிகிட்டு போடா
அந்த குட்டி நிலா தூங்கட்டுமே கூட்டிகிட்டு போறேன்
அந்த மேகம் என்னும் மெத்தைக்குதான் தூக்கிகிட்டு போடா
அந்த வானத்துக்கு ரெட்டை தாப்பா போட்டுபுட்டு வாரேன்
என்னை கூட்டிகிட்டு போடா .... ஏ கூட்டிகிட்டு போறேன்

பையா பையா சின்ன பையா
உள்ளுக்குள்ளே கியா கியா
பொய்யா பொய்யா கத்தாதே
நீ சிக்கிகிட்ட மெய்யா மெய்யா


பக்கம் இருக்கையிலே மொத்தம் நொறுக்குறியே
அங்கும் இங்கும் அழகா தொட்டு கிருக்குறியே
நெட்டி முறிக்கையிலே கொட்டி கவுக்குறியே
கிட்ட நெருங்கையிலே அள்ளி குவிக்கிறியே
விடாதே மீறி மீறி போடா
தொடாத பாகம் ஊறுதேடா
கனாவா தூங்க வச்சு வாரேன்
மூச்சாலே நீவிவிட்டு போறேன்
பத்து விரல் தொடுதே
அட வெப்பத்தையும் சுடுதே
இதழ் அங்கும் இங்கும் சென்று
முத்த செடி நடுதே

என்னை கூட்டிகிட்டு போடா .... ஏ கூட்டிகிட்டு போறேன்

பையா பையா சின்ன பையா
உள்ளுக்குள்ளே கியா கியா
பொய்யா பொய்யா கத்தாதே
நீ சிக்கிகிட்ட மெய்யா மெய்யா

வெட்கம் விட்ட திமிரே , வேட்டுதடி குளிரே
கட்டிபுடிசிக்கவா ? கட்டில் முரிச்சிகவா ?
கட்டழகு பயலே , திக்குதடா உடலே
முத்தம் கொடுதுக்கடா மொத்தம் எடுத்துக்கடா
பலாவை கீறி கீறி பார்த்தேன்
கொஞ்சூண்டு தேனை பூசி வேர்த்தேன்
சுடாத தீயில் மூழ்கி பார்த்தேன்
கண்மூடி மூச்சை மூச்சில் கோர்த்தேன்
மின்னல் அடிக்குதடி இரு ஜன்னல் துட்க்குதடி
இதழ் தொட்டு தொட்டு உயிர் மொட்டு வெடிக்குதடி


என்னை கூட்டிகிட்டு போடா .... ஏ கூட்டிகிட்டு போறேன்
என்னை கூட்டிகிட்டு போடா .... ஏ கூட்டிகிட்டு போறேன்

பையா பையா சின்ன பையா
உள்ளுக்குள்ளே கியா கியா
பொய்யா பொய்யா கத்தாதே
நீ சிக்கிகிட்ட மெய்யா மெய்யா

என்னை யாரும் இல்லா மொட்டை மாடி கூட்டிகிட்டு போடா
அந்த குட்டி நிலா தூங்கட்டுமே கூட்டிகிட்டு போறேன்
அந்த மேகம் என்னும் மெத்தைக்குதான் தூக்கிகிட்டு போடா
அந்த வானத்துக்கு ரெட்டை தாப்பா போட்டுபுட்டு வாரேன்
என்னை கூட்டிகிட்டு போடா .... ஏ கூட்டிகிட்டு போறேன்

Wednesday, March 25, 2009

நீல வானம் கோபம் கொண்டா நிலவு தேய்ந்து கண்ணா நேரம் பார்த்து மறுபடியும் ஏன் வளர்ந்தது


இப்படி ஓர் தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என் கதையை கூறவா
அதில் அப்படியே என் கதையை கூறவா

இப்படி ஓர் தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என் கதையை கூறவா
கைப்பிடித்த நாயகனும் காவியது நாயகனும்
எப்படியோ வேறுபட்டார் என் மடியில் நீ விழுந்தாய்
இப்படி ஓர் தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என் கதையை கூறவா
அதில் அப்படியே என் கதையை கூறவா


நீல வானம் கோபம் கொண்டா நிலவு தேய்ந்து
கண்ணா நேரம் பார்த்து மறுபடியும் ஏன் வளர்ந்தது
நீல வானம் கோபம் கொண்டா நிலவு தேய்ந்து
கண்ணா நேரம் பார்த்து மறுபடியும் என் வளர்ந்தது
இடையினிலே இந்நிளவு எங்கிருந்தது
அது இருண்டிருந்த வீட்டிலே தங்கி வந்தது

இப்படி ஓர் தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என் கதையை கூறவா
அதில் அப்படியே என் கதையை கூறவா


அன்றொருநாள் மீராவும்
கண்ணனை நினைந்தாள்
ஆனால் அவளுடைய தலையெழுத்து
மன்னனை மணந்தாள்.
அதுவரைதான் தன் கதையை
என்னிடம் சொன்னாள்
நான் அதிலிருந்த என்கதையை
உன்னிடம் சொன்னேன்.

இப்படி ஓர் தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என் கதையை கூறவா
கைப்பிடித்த நாயகனும் காவியது நாயகனும்
எப்படியோ வேறுபட்டார் என் மடியில் நீ விழுந்தாய்
இப்படி ஓர் தாலாட்டு பாடவா
அதில் அப்படியே என் கதையை கூறவா
அதில் அப்படியே என் கதையை கூறவா

கண்ணன் அவன் கையினிலே குழல் இருந்தது
அந்த கானம் தானே மீராவை கவர்ந்து வந்தது
கண்ணன் அவன் கையினிலே குழல் இருந்தது
அந்த கானம் தானே மீராவை கவர்ந்து வந்தது
இன்று வரை அந்த குழல் பாடுகின்றது
அந்த இன்னிசையில் என் குழந்தை தூங்குகின்றது

வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன் இவன் தலைவி நாயகன்


முதா கராத்த மோதகம்
சதாவி முக்த்தி சாதகம்
கலாதரா வதம் சகம்
விலாசி லோக ரக்சகம்
அனாயகைக்கனாயகம்
வினா சிதேப்ரதைத்தியகம்
நடஷுபாசு நாசகம்
நமாமிதம் வினாயகம்
முதா கராத்த மோதகம்
சதாவி முக்த்தி சாதகம்

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்

தொடாமலும் படாமலும்
உலாவும் காதல் வாகனம்
வராமலும் தராமலும்
விடாது இந்த வாலிபம்
உன்னோடு தான் பின்னோடு தான்
வந்தாடும் இந்த மோகனம்
கையோடு தான் மெய்யோடு தான்
கொஞ்சாமல் என்ன தாமதம்
உன் பார்வை யாவும் நூதனம்
பெண் பாவை நீ என் சீதனம்
உன் வார்த்தை அன்பின் வாசகம்
பெண்ணுள்ளம் உந்தன் ஆசனம்
அள்ளாமலும் கிள்ளாமலும்
தள்ளாட வந்த பூவனம்

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்

ல ல ல ல ல ல
லா லா
ல ல ல ல ல ல
லா லா

கல்யாணமும் வைபோகமும்
கொண்டாடும் நல்ல நாள் வரும்
அன்னாளிலே பொன்னாளிலே
என் மாலை உந்தன் தோள் வரும்
சல்லாபமும் உல்லாசமும்
கண் காணும் நேரம் சோபனம்
சொல்லாமலும் கொள்ளாம்லும்
திண்டாடும் பாவம் பெண் மனம்
இந்நேரம் அந்த ஞாபகம் உண்டாக நீயும் காரணம்
கண்ணார நாமும் காணலாம்
செவ்வாழை பந்தல் தோரணம்
என் ஆசையும் உன் ஆசையும்
அந்நாளில் தானே பூரணம்

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர்வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்

நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்கை யாருக்கும் அமைவதில்லை


ஓரு தடவை சொல்வாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஓரு பார்வை பார்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஓரு புகையை போல
மறைத்து வைத்தால் தெரிந்துவிடும்
காதலில் தான் பூக்கள் மோதி
மலைகள் கூட உடைந்துவிடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே

நதியில் தெரியும் நிலவின் உருவம்
நதிக்கு சொந்தமில்லை
நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்கை
யாருக்கும் அமைவதில்லை
உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு
தானாய் விழுந்ததில்லை
உலக உருண்டை உடையும் போதும்
காதல் உடைவதில்லை
மின்மினி தேசத்து சொந்தக்காரன்
விண்மீன் கேட்பது தவறாகும்
வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம்
வலியோடு போராடும் காதல் தானே

ஓரு தடவை சொல்வாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஓரு பார்வை பார்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று


நெருங்க நினைக்கும் நினைவை மறக்க
நெஞ்சம் நினைக்கிறது
கனவில் பூக்கும் பூக்கள் பறிக்க
பெண்மை அழைக்கிறது
கிளையை முறித்து போட்டு விடலாம்
வேறை என்ன செய்வாய் ?
தரையை உடைத்து முளைக்கும் பொது
அன்பே என்ன செய்வாய் ?
மல்லிகை பூக்கள் உதிர்வதெல்லாம்
மரத்தடி நிழலுக்கு சொந்தமில்லை
உன்னோடு நான் வாழ போராடுவேன்
நீ இன்றி போனாலும் தள்ளாடுவேன்

ஓரு தடவை சொல்வாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
ஓரு பார்வை பார்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஓரு புகையை போல
மறைத்து வைத்தால் தெரிந்துவிடும்
காதலில் தான் பூக்கள் மோதி
மலைகள் கூட உடைந்துவிடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே

Tuesday, March 24, 2009

நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும் என் துணையாக வருகின்றது



உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாய் இது காதல் சாபமா?
நீ கரையை கடந்த பின்னாலும்
நான் மூழ்கும் ஓடமா?
(உயிரிலே..)

கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
கண்களிலே தூவிவிட்டாய் மண்துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள் என் வாழ்க்கை பாடமா?
இனி தீயை வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா?
(உயிரிலே..)

கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே
இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா?
நான் விழுந்தாலும் மீண்டும் எழ
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல?
ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும்
பழுதான தேரடி
(உயிரிலே..)

நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன் அன்பே ஒரு அகராதி நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன் தினம் உன் தலை கோதி


அக்கம் பக்கம் யாரும் இல்லா
பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன்னருகே
நான் வாழ வேண்டும்
என் ஆசையெல்லாம் உன் நெருக்கத்திலே
என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்

அக்கம் பக்கம் யாரும் இல்லா
பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன்னருகே
நான் வாழ வேண்டும்


நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஒரு அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
பார்ப்பேன் தினம் உன் தலை கோதி
காதோரத்தில் எப்போதுமே உன்
மூச்சு காற்றின் வெப்பம் சுமப்பேன்
கையோடு தான் கை கோர்த்து நான்
உன் மார்பு சூட்டில் முகம் புதைப்பேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்

அக்கம் பக்கம் யாரும் இல்லா
பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன்னருகே
நான் வாழ வேண்டும்

நீயும் நானும் சேரும் முன்னே
நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல்
நெஞ்சம் இன்று விண்ணில் மிதக்கிறதே
உன்னால் இன்று பெண்ணாகவே நான்
பிறந்ததின் அர்த்தங்கள் அறிந்து கொண்டேன்
உன் சீண்டலில் என் தேகத்தை புது
ஜன்னல்கள் திறப்பதை தெரிந்து கொண்டேன்
வேறென்ன வேண்டும் உலகத்திலே
இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்து விட்டேன்

Monday, March 23, 2009

You belong to me Oh my loved one You are in my heart all day long


All the time
when I think of you
my thoughts are always
warm and true
Every time
when you pass my way
I feel that
you are here to stay
If I must say dont go
that you stay for more

For day by day
my love will
grow and grow and grow

You belong to me
Oh my loved one
You are in my heart
all day long

You belong to me
Oh my loved one
You are in my heart
all day long

where are where are you
while i sing this
why cant i see you
while i sing this
take me now take me now
காதலா என் காதலா

காதலா என் காதலா
ஒன்று சேர்ந்து பறந்து மேல பறந்து
பறந்து பறந்து பறந்து பறந்து

I want u all the way thru
what can i do without you
I want u my love

காதல் பாட்டு தான் பாடிக்கோ பாடிக்கோ
தாளம் போட்டு தான் ஆடிக்கோ ஹோய்

காதல் பாட்டு தான் பாடிக்கோ பாடிக்கோ
தாளம் போட்டு தான் ஆடிக்கோ ஹோய்


This will be my song
Now and always
I will sing the song
Just for you

This will be my song
Now and always
I will sing the song
Just for you

come and be with me
dont say no to me
think of me as I
Always think of you
Come to me Come to me

பக்கம் வா என் பக்கம் வா
ஹ்ம்ம்
ஒன்று சேர்ந்து பறந்து பறந்து
மேல பறந்து பறந்து பறந்து பறந்து

Flying high in the blue sky
Flying high just you and I
Let us fly with love

காதல் பாட்டு தான் பாடிக்கோ பாடிக்கோ
தாளம் போட்டு தான் பாடிக்கோ ஹோய்

காதல் பாட்டு தான் பாடிக்கோ பாடிக்கோ
தாளம் போட்டு தான் பாடிக்கோ ஹோய்


you are in my dreams
All day all Night
In my heart I feel only you

you are in my dreams
All day all Night
In my heart I feel only you

Love in all the way
Love in all the way
Loving all the way
Singing everyday
Tell me know what is love?
காதலா என் காதலா

காதலா காதலா
ஒன்று சேர்ந்து பறந்து மேல பறந்து
பறந்து பறந்து பறந்து பறந்து

Let us sing just you and me
sing sing sing
sing this melody
Love is meant to be

you are in my dreams
All day all Night
In my heart I feel only you

you are in my dreams
All day all Night
In my heart I feel only you

முதல் முறை உந்தன் முகம் கண்ட போதே முழுசாய் தொலைந்துவிட்டேன் வேர்களை மறைக்கும் தாவரம் போல மனதை மறைத்து விட்டேன்


பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஓரு பூவில் தொட்டில் கட்டு உறங்கு

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஓரு பூவில் தொட்டில் கட்டு உறங்கு

அங்கும் இங்கும் அலைந்த தென்றலே
முள்ளில் மோதி கிழிந்த தென்றலே
கண்ணில் தூக்கம் தொலைந்த தென்றலே
தாலாட்டும் என் பாட்டில் துயில் கொள்ள வா

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஓரு பூவில் தொட்டில் கட்டு உறங்கு


விழித்து கொண்டே தான் முதலைகள் உறங்கும்
அது போல் உறங்காதே
ஒவ்வொரு விழிப்பும் ஒவ்வொரு பிறப்பு
அதை நீ மறவாதே
உறங்கும் வரை நான் இசைத்திருப்பேன்
நீ விழிக்கும் வரை நான் விழித்திருப்பேன்
உனது கனவில் நான் வீணை வாசிப்பேன்

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
ஓரு பூவில் தொட்டில் கட்டு உறங்கு


முதல் முறை உந்தன் முகம் கண்ட போதே
முழுசாய் தொலைந்துவிட்டேன்
வேர்களை மறைக்கும் தாவரம் போல
மனதை மறைத்து விட்டேன்
தென்றலின் வாசல் அடைத்து வைத்தேன்
புயல் வரும் வாசல் திறந்து வைத்தேன்
சரியா தவறா
அட யாரை நான் கேட்பேன்

பிஞ்சு தென்றலே என் பிஞ்சு தென்றலே
என் நெஞ்சில் அடங்கு
எந்தன் கானம் உண்டு கண்கள் உறங்கு
காதல் தேடி அலைந்த தென்றலே
கல்லில் மோதி உடைந்த தென்றலே
கண்ணீர் காட்டில் நனைந்த தென்றலே
தாலாட்டும் என் பாட்டு கேட்கிறதா

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்

Sunday, March 22, 2009

உன் பார்வை படும் தூரம் என் வாழ்வின் உயிர் நீளம்


அஹா ஹ்ம்ம்ம்ம்ம்....
அஹா ஹா....
ஹ்ம்ம்ம்ம்ம ஹ்ம்ம்ம்ம்ம் ..
ஹ்ம்ம்ம்ம்ம் ஹ்ம்ம்ம்ம்ம் ..

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேகம் எங்கே என் ஜீவன் எங்கே
என் நதியே என் கண்முன்னே வற்றிபோனாய்
பால் மழையாக எனை தேடி மண்ணில் வந்தாய்
என் தாகங்கள் தீர்க்காமல் கடலில் ஏன் சேர்கிறாய்
ஹ்ம்ம்ம்ம்ம்
நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே


கண்ணே என் கண்ணே நான் உன்னை காணாமல்
வானம் என் மண்ணும் பொய்யாக கண்டேனே
அன்பே என் அன்பே நான் உன்னை சேராமல்
ஆவி என் ஆவி நான் இற்று போனேனே
வெயில் காலம் வந்தால் தான் நீரும் தேனாகும்
பிரிவொன்று கண்டால் தான் காதல் ருசியாகும்
உன் பார்வை படும் தூரம் என் வாழ்வின் உயிர் நீளம்
உன் மூச்சு படும் நேரம் என் தேகம் அணலாகும்

நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேகம் எங்கே என் ஜீவன் எங்கே

கள்வா ஹே கள்வா நீ காதல் செய்யாமல்
கண்ணும் என் நெஞ்சும் என் பேச்சை கேட்காதே
காதல் மெய் காதல் அது பட்டு போகாதே
காற்று நம் பூமிதனை விட்டு போகாதே
ஆகாயம் நிறம் மாறி போனால் போகட்டும்
ஆனால் நீ மனம் மாறி போக கூடாதே
ஏ மஞ்ச தாமரையே என் உச்சதாரகையே
கடல் மண்ணாய் போனாலும் நம் காதல் மாறேதே


நெஞ்சே நெஞ்சே நீ எங்கே
நானும் அங்கே என் வாழ்வும் அங்கே
அன்பே அன்பே நான் இங்கே
தேகம் எங்கே என் ஜீவன் எங்கே
என் நதியே என் கண்முன்னே வற்றிபோனாய்
பால் மழையாக எனை தேடி மண்ணில் வந்தாய்
உன் தாகங்கள் தீராமல் மழையை ஏன் பழிக்கிறாய்

அஹா ஹ்ம்ம்ம்ம்ம்....
அஹா ஹா....
ஹ்ம்ம்ம்ம்ம ஹ்ம்ம்ம்ம்ம் ..
ஹ்ம்ம்ம்ம்ம் ஹ்ம்ம்ம்ம்ம் ..

Saturday, March 21, 2009

என்னுடய பார்வை கழுகு பார்வை தெரிஞ்சிக்கோ



முகத்தை எப்போதும் மூடி வைக்காதே..
எனது நெஞ்சத்தில் முள்ளைதைக்காதே..
என் கண்மணி காதோடு சொல் உன் முகவரி
என்னாளுமே என் பாட்டுக்கு நீ முதல்வரி...
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே..
எனது நெஞ்சத்தில் முள்ளில்தைக்காதே..
அரபுநாடே அசந்து நிற்க்கும் அழகியா நீ..
உருது கவிஞன் உமர் கய்யாமின் கவிதயா நீ..


ஏய்.. உன்னுடய நெற்றி உன்னை பற்றி கூருதே....
உள்ளிருக்கும் குட்டு உன்தன் பொட்டு சொல்லுதே...
என்னுடய பார்வை கழுகு பார்வை தெரிஞ்சிக்கோ...
என்க்கு இருக்கும் சக்தி பறவசக்தி புரிஞ்சிக்கோ...
கால் கொலுசுதான் கல கலக்குது.....
கையின் வளயல் காதுக்குள்ளே கானம் பாட........
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே..
எனது நெஞ்சத்தில் முள்ளைதைக்காதே..

போட்டிருக்கும் ரோச வேசம் பேச பொருந்துதே...
பெண்ணழகு மொத்தம் காண சித்தம் விரும்புதே....
வெண்ணிலவில் வேகம் ஓடும் மேகம் விலகுமா
வண்ண உடல்யாவும் காணும் யேகம் வாய்க்குமா
கொஞ்ஜம் பொய்கள் கொஞ்ஜம் திமிரு
எனக்கும் இருக்கு உனக்கு மேலே அன்பு தோழி...

முகத்தை எப்போதும் மூடி வைக்காதே..
எனது நெஞ்சத்தில் முள்ளைதைக்காதே..

Thursday, March 19, 2009

அடடா இன்னும் என் நெஞ்சம் புரியலையா? காதல் மடையா?


காதல் சொல்வது உதடுகள் அல்ல
கண்கள் தான் தலைவா
ஹே ஹே ஹே ...
கண்கள் சொல்வது வார்த்தைகள் அல்ல
கவிதைகள் தலைவா
ந ந ந நா .....

கவிதை என்பது புத்தகம் அல்ல
பெண்கள்தான் சகியே
ந ந ந நா .....
பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல
நீ மட்டும் சகியே
ந ந ந நா .....

அடடா இன்னும் என் நெஞ்சம்
புரியலையா? காதல் மடையா?
இது என்னடி இதயம் வெளியேறி
அலைகின்றதே காதல் இதுவா..?
எப்படி சொல்வேன் புரியும் படி ஆளை விடுடா
மன்னிச்சுக்கடி காதல் செய்வேன் கட்டளைப்படி

படபடக்கும் எனது விழி பார்த்து நடந்துக்கணும்
சொல்வது சரியா?
தவறு செய்தால்.. முத்தம் தந்தென்னை
திருத்திக்கனும் தண்டனை சரியா?

எப்பொழுதெல்லாம் தவறு செய்வாய்
சொல்லிவிடுடா

சொல்லுகிறேன் இப்போதொரு
முத்தம் கொடுடி

Wednesday, March 18, 2009

அச்சம் விடு பெண்ணே அணைத்துக்கொண்டு பாட்டு பாடு இது என்ன ஸ்பீடு போக போக இன்னும் பாரு


மேகங்களோ என்னை வா என்றது
சாலைகளோ பறந்து போ என்றது
அன்பே உள்ளம் சிறகினை விரிக்கிறது
beat in my heart என் இதயம் துடிக்குது
deep in my heart என்னையே துறத்துது
oh my god எனக்குள் என்ன புதுமை இது

beat in my heart என் இதயம் துடிக்குது
deep in my heart என்னையே துறத்துது
oh my god எனக்குள் என்ன புதுமை இது


கன்னி பெண்ணின் கைகள் தோளை சேர்த்து கட்டி கொள்ளும்
அங்கம் அங்கே மோதும் ஆனந்தங்கள் என்ன சொல்ல
சாலையில் மழையும் ஈரங்கள்
மனதில் ஜில் ஜில் ஜில்லிடுதே
ஆகாயம் தான் எல்லை
பால் வடியும் பாப்பாவுக்கு
அச்சம் அச்சம் இல்லை
வேலி இல்லை கேள்வி இல்லை
பூமியின் விளிம்பு தொடும் வரை
பறந்து செல் செல் செல் என்றதே
ஓம் நமக சிறகு ரெண்டு முளைக்கட்டும்
ஓம் நமக சிறு கிளிகள் பறக்கட்டும்
ஓம் நமக வானம் கையில் வசப்படுமே
வானம் கையில் வசப்படுமே

ரத்தம் சத்தம் போடும் போதுமய்யா இந்த ஸ்பீடு
ஆடை என்னை விட்டு பறந்து விடும் வெட்க கேடு
என் பிடி இன்னும் இறுகினால் உன் எலும்புகள் இருக்காது
அச்சம் விடு பெண்ணே
அணைத்துக்கொண்டு பாட்டு பாடு
இது என்ன ஸ்பீடு போக போக இன்னும் பாரு
பைக்கிலே நிலவை அடையலாம்
எதையும் விளையாட்டாய் பாரு
உன் வயசு எல்லை மீறி தவிக்கிது
பெண் மனசு விட்டு விட்டு துடிக்க
சாலைகளும் நம்மை கண்டு பயப்படுது

beat in my heart என் இதயம் துடிக்குது
deep in my heart என்னையே துறத்துது
oh my god எனக்குள் என்ன புதுமை இது

beat in my heart ..........
deep in my heart ..........
oh my god ..............


ல ல ல லலலா
ல ல ல லலலா
ல ல ல லலலா
ல ல ல லலலா லா .......

உன் கண்ணுக்குள்ளே காதலனே விழுந்து எழுகிறேன்


ச.. ச..
ம ப ச ம ப நீ
ம ப ச நீ ப ம ரீ ச ரீ

என்னை காதலிக்க பிறந்தவனே நீ தான் என்று
கை கோர்த்து தோள் சாயும் தோழன் என்று
எனக்கு தோன்றியதாலே எல்லாம் மாறியதாலே
உன் கண்ணுக்குள்ளே காதலனே விழுந்து எழுகிறேன்

விழாமலே இருக்க முடியுமா ?
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வரமாலே போக முடியுமா ?
விரைந்து விட்டேன் காதல் வழியிலே

நிஜம் தான் நிஜம் தான்
இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல

விழாமலே இருக்க முடியுமா ?
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வரமாலே போக முடியுமா ?
விரைந்து விட்டேன் காதல் வழியிலே

இவள் கண்ணுக்குள்ளே உள்ளதென்ன என்ன சக்தி
இவள் பக்கமாக என்னை இழுக்கும் காந்த சக்தியோ
ஹோ ஹோ ஹோ
ஹொஹொ ஹோ ஹோ
இவன் கைகளிலே உள்ளதென்ன மந்திரகொளோ
இவன் தொட்டவுடன் உயிர்தெழுந்தது மங்கையின் உடலோ
ஹோ ஹோ ஹோ
ஹொஹொ ஹோ ஹோ
காதல் ஓரு பரமபதம்
கண்ணிரண்டில் தாயம் விழும்
ஏணி மேல ஏறும் போது
காதல் பாம்பு தீண்டினாள்

விழாமலே இருக்க முடியுமா ?
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வரமாலே போக முடியுமா ?
விரைந்து விட்டேன் காதல் வழியிலே

நிஜம் தான் நிஜம் தான்
இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல

விழாமலே இருக்க முடியுமா ?
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வரமாலே போக முடியுமா ?
விரைந்து விட்டேன் காதல் வழியிலே


இவள் மூச்சு காற்றை கேட்கும் எந்தன் வாயு மண்டலம்
இவள் பத்து விரலை பற்றும் போது உஷ்ண மண்டலம்
ஹோ ஹோ ஹோ
ஹொஹொ ஹோ ஹோ
இவன் உதடு எந்தன் உதட்டை தொட்டால் ஈர மண்டலம்
இவன் இழுத்து அணைக்கும் நேரத்திலே கோடி சங்கமம்
ஹோ ஹோ ஹோ
ஹொஹொ ஹோ ஹோ

சேர்ந்திருந்தால் ஏகாதேசி
சேலைக்கு தான் ஒரே குஷி
வயது வந்து வலையை விரிக்க
மாட்டி கொண்டேன் நீ ரசி

விழாமலே இருக்க முடியுமா ?
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வரமாலே போக முடியுமா ?
விரைந்து விட்டேன் காதல் வழியிலே

நிஜம் தான் நிஜம் தான்
இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல

விழாமலே இருக்க முடியுமா ?
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே
வரமாலே போக முடியுமா ?
விரைந்து விட்டேன் காதல் வழியிலே

Tuesday, March 17, 2009

ஏழை என் வாசலுக்கு வந்தது பூங்குருவி கோழையென்று இருந்தேன் போனது கை நழுவி இதை யாரொடு சொல்ல


குயிலை புடிச்சி கூண்டில் அடைச்சி
கூவ சொல்லுகிற உலகம்
மயிலை புடிச்சி காலை ஒடைச்சி
ஆட சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடும் அய்யா
அடி எப்படி ஆடும் அய்யா
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
(குயிலை)

ஆண்பிள்ளை முடி போடும் பொன் தாலி கயிறு
என்னான்னு தெரியாது எனக்கு
ஆத்தாள நான் கேட்டு அரிஞ்செனே பிறகு
ஆனாலும் பயனேன்ன அதுக்கு
வேறென்ன எல்லாமே நான் செஞ்ச பாவம்
யார் மேல எனக்கென்ன கோபம்?

ஓலை குடிசையிலே இந்த ஏழை பிறந்ததற்கு
வந்தது தண்டனையா? இது தெய்வத்தின் நிந்தனையா?
இதை யாரொடு சொல்ல

(குயிலை)

எல்லார்க்கும் தலைமேல எழுதொண்ணு உண்டு
என்னான்னு யார் சொல்லக்கூடும்
கண்ணீரை குடம் கொண்டு வடிச்சாலும் கூட
எந்நாளும் அழியாமல் வாழும்
யாராற்க்கு எதுவென்று விதி போடும் பாதை
போனாலும் வந்தாலும் அதுதான்

ஏழை என் வாசலுக்கு வந்தது பூங்குருவி
கோழையென்று இருந்தேன் போனது கை நழுவி
இதை யாரொடு சொல்ல
(குயிலை)

Sunday, March 15, 2009

காதல் பார்வை ஒன்றே போதும் போதும் எந்தன் ஆயுள் கூடும்



All the best

All the best.. All the best

All the best.. All the best


காதல் காதல் என்றே பூக்கள் பூக்கும்
ஓசை காதில் கேட்கும்
எங்கெங்கும் உன் ஞாபகம்
காதல் பார்வை ஒன்றே போதும் போதும்
எந்தன் ஆயுள் கூடும்
ஒ ஹோ ஒ

காதல் காதல் என்றே பூக்கள் பூக்கும்
ஓசை காதில் கேட்கும்
எங்கெங்கும் உன் ஞாபகம்
காதல் பார்வை ஒன்றே போதும் போதும்
எந்தன் ஆயுள் கூடும்

All the best.. All the best

All the best.. All the best


All the best.. All the best

All the best.. All the best


உந்தன் இமையில் கண்மூடி
தூங்கி பார்க்கவா
இன்னும் நூறு நூற்றாண்டு
வாழ்ந்து பார்க்கவா
மண்ணில் ஓடும் வேர்களை
நெஞ்சில் ஓடவா
எல்லை எங்கும் காணாமல்
உன்னை தேடவா
நெஞ்சுக்குள் நெஞ்சை வைத்து
யார் இங்கே கட்டியது
துடிக்கின்ற சப்தம் இங்கே
உன் பேரை சொல்லியது
அன்பே நீ சந்தித்தாலே
என் பூமி சுற்றியது
இது தானே காலம் வாழ்த்தும் காதல்

காதல் காதல் என்றே பூக்கள் பூக்கும்
ஓசை காதில் கேட்கும்
எங்கெங்கும் உன் ஞாபகம்
காதல் பார்வை ஒன்றே போதும் போதும்
எந்தன் ஆயுள் கூடும்
ஒ ஹோ ஒ

All the best.. All the best

All the best.. All the best

சேலை பூவில் எப்போதும் உந்தன் வாசமே
ஆசை நெஞ்சம் கொண்டாடும் காதல் பாரமே
உன்னை கண்டால் நிலாவும் கைகள் நீட்டுமே
காதல் தேசம் எந்நாளும் நம்மை பேசுமே
காதலின் தேசிய கொடியா தாவணி மாறியது
ஆசையின் தேசிய கீதம் காதிலே பாடியது
அன்பே உன் கைகளின் ரேகை முகவரி ஆகியது
இது தானே காலம் வாழ்த்தும் காதல்

காதல் காதல் என்றே பூக்கள் பூக்கும்
ஓசை காதில் கேட்கும்
எங்கெங்கும் உன் ஞாபகம்
காதல் பார்வை ஒன்றே போதும் போதும்
எந்தன் ஆயுள் கூடும்
ஒ ஹோ ஒ

காதல் காதல் என்றே பூக்கள் பூக்கும்
ஓசை காதில் கேட்கும்
எங்கெங்கும் உன் ஞாபகம்
காதல் பார்வை ஒன்றே போதும் போதும்
எந்தன் ஆயுள் கூடும்
ஒ ஹோ ஒ


All the best.. All the best

All the best.. All the best

நிலவெங்கே சென்றாலும் நிழல் பின்னால் வராதா நீ வேண்டாம் என்றாலும் அது வட்டம் இடாதா



ஹொய்யா ஹோயாரா ஹொய்யா ஹொய்யா
ஹொய்யா ஹோயாரா ஹொய்யா ஹொய்யா
ஹொய்யா....
ஹொய்யா ஹோயாரா ஹொய்யா ஹொய்யா
ஹோய் ஹொய்யா
ஹொய்யா...
ஹொய்யா ஹோயாரா ஹொய்யா ஹொய்யா
ஹோய் ஹொய்யா
ஹொய்யா ஹோயாரா ஹொய்யா ஹொய்யா
ஒ ஒ ஒ
ஹொய்யா ஹோயாரா ஹொய்யா ஹொய்யா
ஒ ஒ ஒ

ஹொய்யா....
புது ரூட்டுல தான்
ஹொய்யா....
நல்ல ரோட்டுல தான்
நின்றாடும் வெள்ளி நிலவு
ஹொய்யா...ஹொய்யா...ஹொய்யா...
இந்த ராத்திரியில்
ஹொய்யா....
ஓரு யாத்திரையில்
பூவோடு காற்றும் வருது
ஹொய்யா...ஹொய்யா...
நிலவெங்கே சென்றாலும் நிழல் பின்னால் வராதா
நீ வேண்டாம் என்றாலும் அது வட்டம் இடாதா
ஹோய் ...

ஹொய்யா....
புது ரூட்டுல தான்
ஹொய்யா....
நல்ல ரோட்டுல தான்
நின்றாடும் வெள்ளி நிலவு
ஹொய்யா...ஹொய்யா...ஹொய்யா...
இந்த ராத்திரியில்
ஹொய்யா....
ஓரு யாத்திரையில்
பூவோடு காற்றும் வருது
ஹொய்யா...ஹொய்யா...

பூத்திருக்கும் வைரமணி தாரகைகள் தான்
ஹொய்யா....
ராத்திரியில் பார்த்ததுண்டோ
ஹொய்யா...ஹொய்யா...
காத்திருக்கும் ராக்குருவி கண்ணுறங்காமல்
ஹொய்யா....
பாட்டிசைக்க கேட்டதுண்டோ
ஹொய்யா...ஹொய்யா...
நீ வாழ்ந்து வளர்ந்த இடம் வேறு
நேரங்கள் உனக்கு இதற்கேது
நீ இன்று நடக்கும் தடம் வேறு
நான் அன்றி உனக்கு துணை யாரு
நீ தடுத்தாலும்
ஹொய்யா....
கால் கடுத்தாலும்
ஹொய்யா....
நாள் முழுக்க நான் வருவேன் மானே
ஹோய் ...

ஹொய்யா....
புது ரூட்டுல தான்
ஹொய்யா....
நல்ல ரோட்டுல தான்
நின்றாடும் வெள்ளி நிலவு
ஹொய்யா...ஹொய்யா...


ஒ மண் குடிசை வாசலிலே
சந்திரன் தான் விடி விளக்கு
என் மடி தான் பஞ்சு மேதை
கண்மணியே நீ உறங்கு

வானம் வரும் மேகம் வரும் கூட உன்னோடு
ஹொய்யா....
நானும் வந்தால் என்னடியம்மா
ஹொய்யா...ஹொய்யா...
தென் மதுரை சேரும் வரை ஆண் துணையாக
ஹொய்யா....
ஏழை எனை ஏற்று கொள்ளம்மா
ஹொய்யா...ஹொய்யா...
ஓடாதே கிளியே தனியாக
ஏதேனும் நடக்கும் தவறாக
ஊர் கெட்டு கிடக்கு பொதுவாக
ஒன்றாக நடப்போம் மெதுவாக
காலாடி நோக
ஹொய்யா....
நாலடி போக
ஹொய்யா....
பாதையில் பூவிரிப்பேன் நானே
ஹோய் ...



ஹொய்யா....
புது ரூட்டுல தான்
ஹொய்யா....
நல்ல ரோட்டுல தான்
நின்றாடும் வெள்ளி நிலவு
ஹொய்யா...ஹொய்யா...ஹொய்யா...
இந்த ராத்திரியில்
ஹொய்யா....
ஓரு யாத்திரையில் பூவோடு காற்றும் வருது
ஹொய்யா...ஹொய்யா...
நிலவெங்கே சென்றாலும் நிழல் பின்னால் வராதா
நீ வேண்டாம் என்றாலும் அது வட்டம் இடாதா
ஹோய் ...

ஹொய்யா....
புது ரூட்டுல தான்
ஹொய்யா....
நல்ல ரோட்டுல தான்
நின்றாடும் வெள்ளி நிலவு
ஹொய்யா...ஹொய்யா...ஹொய்யா...
இந்த ராத்திரியில்
ஹொய்யா....
ஓரு யாத்திரையில் பூவோடு காற்றும் வருது
ஹொய்யா...ஹொய்யா...

சத்தியக் காதல் என்னமும் செய்யும் சந்திர ஒளியை ஆடையாய் நெய்யும்


அ அ ஆ அ அ ஆஆஆ
அ அ ஆ அ அ ஆ
சுடும் நிலவு சுடாத சூரியன்
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்
எல்லாம் எல்லாம் எல்லாம் வேண்டுமா (எல்லாம்)
காதலித்துப் பார்... காதலித்துப் பார்..


இமையடித்தாலும் இதயம் வலிக்கும்
வலிகளில் கூட வாசனை இருக்கும்
காதலித்துப் பார்.. காதலித்துப் பார்..
நரம்புக்கு நடுவே நதிகள் நகரும்
நதியிருந்தாலும் நாவே உலரும்
தப்பு எல்லாம் கணிதமாகும்
தவறு எல்லாம் புனிதமாகும்
பச்சைத் தண்ணீர் வெப்பமாகும்
எச்சில் பண்டம் அமிர்தமாகும்
நான்கு உதடு பேசும் வார்த்தை முத்தமாகும்

சுடும் நிலவு சுடாத சூரியன்.

மழைத்துளி நமக்கு சமுத்திரமாகும்
சமுத்திரம் எல்லாம் துளியாய்ப் போகும்
காதலித்துப் பார்.. காதலித்துப் பார்..
சத்தியக் காதல் என்னமும் செய்யும்
சந்திர ஒளியை ஆடையாய் நெய்யும்
தொட்ட பாகம் மோட்சமாகும்
மற்ற பாகம் காய்ச்சலாகும்
தெய்வம் தூங்கி மிருகமாகும்
மிருகம் தூங்கி தெய்வமாகும்
தேடல் ஒன்றே வாழ்க்கை என்று தெரிந்து போகும்

உள்ளுக்குள்ளே மூடி மறைத்தேன் ஊமை கண்ட கனவாக‌


பழைய குரல் கேட்கிறதா யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ
எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ
இரண்டோடும் சேராமல் உயிர் மாய்க்குமோ
யாரோ யாரோ

பழைய குரல் கேட்கிறதா யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ
எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ
இரண்டோடும் சேராமல் உயிர் மாய்க்குமோ
யாரோ யாரோ


பகலில் நிலவு இரவில் சூரியன்
இரண்டும் பிழையா இரண்டும் சரியா
இயற்கை தீர்ப்பு சொல்லுமா
எந்தக் கண்ணால் உலகம் பார்ப்பேன் நொந்து இளைத்தேன் நூலாக‌
ரெட்டைப் பிள்ளையில் எதன்மேல் நேசம் என்று மயங்கும் தாயாக‌
துடிக்கும் துடிக்கும் மனது தடுக்கும் தடுக்கும் மரபு
எனது வானத்தில் என்னவோ ஏதோ இரண்டு திங்களா இரவு


பழைய குரல் கேட்கிறதா யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ
எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ
இரண்டோடும் சேராமல் உயிர் மாய்க்குமோ
யாரோ யாரோ

கடலில் ஒருவன் கரையில் ஒருவன்
அவனோ உயிரில் இவனோ மனதில்
இரண்டில் எதுதான் வெல்லுமோ
சொல்லி முடிக்கும் துயரம் என்றால் சொல்லி இருப்பேன் நானாக‌
உள்ளுக்குள்ளே மூடி மறைத்தேன் ஊமை கண்ட கனவாக‌
துடிக்கும் துடிக்கும் மனது தடுக்கும் தடுக்கும் மரபு
எனது வானத்தில் என்னவோ என்னவோ இரண்டு திங்களா இரவு

பழைய குரல் கேட்கிறதா யாரோ யாரோ
புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ
எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ
இரண்டோடும் சேராமல் உயிர் மாய்க்குமோ
யாரோ யாரோ

Saturday, March 14, 2009

ஒ காதல் கண்ணாளா இன்று என்ன பொன்னாளா


தனனா.... அஹா அஹா அஹா
தனனா.... அஹா அஹா அஹா
தனனா... தனனா... தனனா...
அஹா அஹா அஹா

தனனா...
என் கண்ணனுக்கு காதல் வந்தனம்
தனனா...
என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்
தனனா...
என் பெண்மை எல்லாம் உந்தன் சீதனம்
தனனா...
உன் சீதனங்கள் என்ன நூதனம்
முடியவில்லை காதல் கண்ணா மோக நர்த்தனம்
விடிய விடிய கேட்குதையா உனது கீர்த்தனம்
சொர்க்கம் தாண்டி செல்லுமம்மா எனது சொப்பனம்
போக போக காண வேண்டும் புதிய தரிசனம்
என் கண்ணனுக்கு காதல் வந்தனம்
தனனா...
என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்
தனனா...


தானன தன்னானன ..
தஜும் தஜும் ..
தானன தன்னானன..
தஜும் தஜும் ..

ஒ காதல் கண்ணாளா இன்று என்ன பொன்னாளா
மெய்மறந்து கையோடு கை சேர்க்கும் காதல் விழா

ஒ கன்னி புறாவே கால் முளைத்த நிலாவே
மெல்ல மெல்ல உன் பேரைச் சொன்னாலும் வாய் ஊறுதே
மல்லிகை மொட்டை மன்னவன் கிள்ளி முடித்தானே
மன்மதன் என்னை வந்திடச் சொல்லித் தந்தி அடிதானே
வல்லவனே
தந்தனனா..
நல்லவனே
கட்டிலில் ஆயிரம் கட்டளை இட்டவனே

தனனா..
என் கண்ணனுக்கு காதல் வந்தனம்
தனனா...
என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்
முடியவில்லை காதல் கண்ணா மோக நர்த்தனம்
போகப் போகக் காண வேண்டும் புதிய தரிசனம்

ஓ ராஜகுமாரி ரகசிய சிருங்காரி
மெல்ல எந்தன் காதோடு நீ பாடு காதல் வரி
ஓ தேவ குமாரா கண்மயங்கும் சிங்காரா
உன்னிரண்டு தோளோடு உறவாடும் காதல் புறா
கட்டில் அறையில் கண்ணு முழிச்சா சொர்க்கம் கிட்டுமடி
அத்தானுக்கு அந்த விஷயம் எல்லாம் அத்துப்படி
கட்டிப்புடி
தந்தனனா..
தொட்டுப் படி
மூன்றாம் பாலில் முன்னோர் சொன்னபடி

என் கண்ணனுக்குக் காதல் வந்தனம்
என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்
என் பெண்மை எல்லாம் உந்தன் சீதனம்
உன் சீதனங்கள் என்ன நூதனம்
முடியவில்லை காதல் கண்ணா மோக நர்த்தனம்
விடிய விடியக் கேட்குதையா உனது கீர்த்தனம்
சொர்க்கம் தாண்டிச் செல்லுமம்மா எனது சொப்பனம்
போகப் போகக் காண வேண்டும் புதிய தரிசனம்

லல லால‌லா லால்லா லால்லா லா
லா லலல்ல‌லா லால‌ல்லா லால்லா லாலா

பெண்மை என்றும் உன்னோடு தஞ்சம்


மொட்டு மொட்டு மலராத மொட்டு
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு
ஒட்டு ஒட்டு இதழோடு ஒட்டு
சிட்டு சிட்டு சிங்கார சிட்டு

ஆணழகா உன் அடிமை இங்கே
நீ தேன் அள்ளி தூவிட வா
தோளிரண்டில் உன் இளங்கிளி நான்
நீ தினம் தினம் கூடிட வா

மொட்டு மொட்டு மலராத மொட்டு
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு
ஹோய்...

தமிழ் தரும் சுவை என உன் வாய் மொழி கேட்டேன்
மதன் தரும் சுகம் என உன் பார்வையை பார்த்தேன்
உந்தன் கையில் பெண்ணாக வேண்டும்
முன்னும் பின்னும் பண்பாட வேண்டும்
ஒன்றும் ஒன்றும் மூன்றாக வேண்டும்
என்றும் நீயாய் நான் ஆக வேண்டும்
இலக்கணம் எனதுடலே வா நீ வா
இலக்கியம் உனதுருவே தா நீ தா
தேவா.......

ஆணழகா உன் அடிமை இங்கே
நீ தேன் அள்ளி தூவிட வா
தோளிரண்டில் உன் இளங்கிளி நான்
நீ தினம் தினம் கூடிட வா

எனை தொடு வரம் கொடு உயிர் வாழ்ந்திட கேட்டேன்
மலர் உடல் மணம் பெற தினம் தேவனை பார்த்தேன்
பெண்மை என்றும் உன்னோடு தஞ்சம்
பெண்ணில் இன்பம் கொண்டாடும் மன்றம்
முத்தம் என்னும் வித்தாடு நித்தம்
நித்தம் நித்தம் பித்தான சித்தம்
இளமையின் ரகசியமே வா நீ வா
இது தினம் அவசியமே தா நீ தா
தேவா..

ஆணழகா உன் அடிமை இங்கே
நீ தேன் அள்ளி தூவிட வா
தோளிரண்டில் உன் இளங்கிளி நான்
நீ தினம் தினம் கூடிட வா

மொட்டு மொட்டு மலராத மொட்டு
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு
ஒட்டு ஒட்டு இதழோடு ஒட்டு
சிட்டு சிட்டு சிங்கார சிட்டு

Thursday, March 12, 2009

காதல் தர வந்தாயா ? காதல் பெற வந்தாயா?


ஒ சந்தியா...
ஒ ஜானி ..

ஒ சந்தியா...
ஒ ஜானி ..
அன்பே நீ மயிலா குயிலா கடலா புயலா
பூந்தேன்றலா
அன்பே நீ சிலையா மலையா அலையா வலையா
பூன்சோலையா
இயற்கையின் நாட்டியம் நீ தானா
இமைத்திடும் ஓவியம் நீ தானா
இயற்கையின் நாட்டியம் நீ தானா
இமைத்திடும் ஓவியம் நீ தானா
ஒ ஒ ஒ ஒ சந்தியா

அன்பே நான் மயிலா குயிலா கடலா புயலா
பூந்தேன்றலா
அன்பே நான் சிலையா மலையா அலையா வலையா
பூன்சோலையா

சஹாரா குளிகிறதே டார்ஜிலிங் சுடுகிறதே
எறிகின்றேன் குளிர்கின்றேன் ஒன்றும் புரியவில்லை
தேவதையா ராட்சசியா நீ யாரு தெரியவில்லை
அழகிலே தேவதை நான் அன்பிலே ராட்சசி நான்
பெண் செய்யும் காதலிலே இம்சைகள் அதிகம்தான்
ஒ ஒ ஒ என் காதலா

அன்பே நீ மயிலா குயிலா கடலா புயலா
பூந்தேன்றலா
அன்பே நீ சிலையா மலையா அலையா வலையா
பூன்சோலையா


காதல் தர வந்தாயா ? காதல் பெற வந்தாயா?
காதல் தர வந்தாயா ? காதல் பெற வந்தாயா?
காதலை நீ பெறுவதென்றால்
கண்ணை மூடி நில்லு
காதலை நீ தருவதென்றால்
கட்டி பிடித்து கொள்ளு
தருகையில் பெற வேண்டும்
பெறுகையில் தர வேண்டும்
காதலில் மட்டும் தான் இரண்டுமே ஒன்றாகும்
ஒ ஒ ஒ ஒ சந்தியா

அன்பே நான் மயிலா குயிலா கடலா புயலா
பூந்தேன்றலா
அன்பே நீ சிலையா மலையா அலையா வலையா
பூன்சோலையா
இயற்கையின் நாட்டியம் நீ தானா
இமைத்திடும் ஓவியம் நீ தானா
இயற்கையின் நாட்டியம் நீ தானா
இமைத்திடும் ஓவியம் நீ தானா
ஒ ஒ ஒ என் காதலா

வச்ச கண்ணு வாங்கலியே எம்மாமன் கண்ணு தூங்கலியே


கொஞ்ச நாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக் கொடி
இங்க வருவா கண்ணிரெண்டில் போர் தொடுப்பா
அந்த வெண்ணிலவைத் தோற்கடிப்பா ஹே.... ஹே....

காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்
தென்னாடோ எந்நாடோ எந்த ஊரோ நானறியேன்

ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி

ஓ.. நேத்து கூடத் தூக்கத்தில பாத்தேன் அந்த பூங்குயில
தூத்துக்குடி முத்தெடுத்துக் கோர்த்து வச்ச மால போல்
வேர்த்துக் கொட்டி கண் முழுச்சுப் பார்த்தா
அவ ஓடிப் போனா உச்சி மலை காத்தா
சொப்பனத்தில் இப்படித்தான் எப்பவுமே வந்து நிற்பா
சொல்லப் போனாப் பேரழகில் சொக்கத்தங்கம் போலிருப்பா
வத்திக்குச்சி இல்லாமலே காதல் தீயப் பத்த வெப்பா
தேனாறு பாலாறு போல வந்தா கண்ணுக்குள்ள
தேசியக் கொடி போல குத்தி வெச்சேன் நெஞ்சுக்குள்ள
ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி
ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி

ம்...மா பச்சை தாவணி பறக்க அங்கு தன்னையே அவன் மறக்க
வச்ச கண்ணு வாங்கலியே எம்மாமன் கண்ணு தூங்கலியே

என்னொடு தான் கண்ணாமூச்சி என்றும் ஆடும் பட்டாம்பூச்சி
கட்டாயம் என் காதல் ஆட்சி கைக்கூடும் பார் தென்றல் சாட்சி
சிந்தனையில் வந்து வந்து போறா அவ சந்தனத்தில்
செஞ்சுவச்ச தேரா என்னுடைய காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா
எண்ணம் எங்கும் ஒட்டி வச்சேன் வண்ண வண்ண சித்திரமா
வேறொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா
ஆத்தாடி அம்மாடி என்ன சொல்ல கட்டழக
ஆவாரம் பூவாக வாய் வெடிச்ச மொட்டழக

ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி

காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள் மனம் மறப்பதில்லை


கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை

கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை

காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம் மறப்பதில்லை -
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை


காட்டிலே காயும் நிலவை
கண்டுகொள்ள யாருமில்லை
கண்களின் அனுமதி வாங்கி
காதலும் இங்கே வருவதில்லை
தூரத்தில் தெரியும் வெளிச்சம்
பாதைக்கு சொந்தமில்லை
மின்னலின் ஒலியை பிடிக்க
மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை
விழி உனக்கு சொந்தமடி
வேதனைகள் எனக்கு சொந்தமடி
அலை கடலை கடந்த பின்னே
நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி

கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை

உலகத்தில் எத்தனை பெண் உள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது
இது உயிர்வரை பாய்ந்து பந்தாடுது
பனி துளி வந்து மோதியதால்
இந்த முள்ளும் இங்கே துண்டானது
பூமியில் உள்ள பொய்களெல்லாம்
ஆட புடவை கட்டி பெண்ணானது
புயல் அடித்தால் மழை இருக்கும்
மரங்களில் பூக்களும் மறைந்து விடும்
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்

ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை

யே கண் பேசும் வார்த்தை .......
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை

காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம் மறப்பதில்லை

உண்மை காதல் உண்டு அதை உள்ளே வைத்துக் கொண்டு ஒரு மன்மத சபையில் சாபம் வாங்காதே


கனவே கலையாதே காதல் கனவே கலையாதே
கையேந்தியே நான் கேட்பது ஓர் யாசகம்
கண்ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம்
மரகத வார்த்தை சொல்வாயா
மௌனத்தினாலே கொல்வாயா
சின்ன திருவாய் மலர்வாயா
கையேந்தியே நான் கேட்பது ஓர் யாசகம்
கண்ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம்
கனவே கலையாதே காதல் கனவே கலையாதே

நீ மௌனம் காக்கும் போதும்
உன் சார்பில் எந்தன் பேரை
உன் தோட்டப்பூக்கள் சொல்லும் இல்லையா
ஒரு மின்னல் தட்டும் போதும்
கடும் புயலே முட்டும் போதும்
அட பூக்கள் பொய்கள் சொல்வதில்லையா
உன் இதழைக் கேட்டால், அது பொய்கள் சொல்லும்
உன் இதயம் கேட்டால் அது மெய்கள் சொல்லும்
ம்ம்.. இதயத்தை கேட்க்க நேரமில்லை
இதுவரை இதயத்தில் யாருமில்லை
சந்து கிடைத்தால் நுழைவாயா

கையேந்தியே நான் கேட்பது ஓர் யாசகம்
கண்ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம்

உண்மை காதல் உண்டு அதை உள்ளே வைத்துக் கொண்டு
ஒரு மன்மத சபையில் சாபம் வாங்காதே
மெல்லிய மழையின் துளிகள் ஒரு மேகத்துக்குள் உண்டு
அதுதானே பொய்யும் பொழிய பாக்காதே
நீ மழையின் முகிலா இல்லை இடி தரும் முகிலா
என்னை வேதனைப்பாயா இல்லை விலகிடுவாயா
ஆவணி மாதம் கழியட்டுமே
கார்த்திகை வந்தால் மழை வருமே
இன்னும் சில நாள் பொறு மனமே

கையேந்தியே நான் கேட்பது ஓர் யாசகம்
கண்ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம்

கனவே கலையாதே காதல் கனவே கலையாதே
கையேந்தியே நான் கேட்பது ஓர் யாசகம்
கண்ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம்
மரகத வார்த்தை சொல்வாயா
மௌனத்தினாலே கொல்வாயா
சின்ன திருவாய் மலர்வாயா

Tuesday, March 10, 2009

சிரிச்சி பாத்தேன் சிக்கவில்லை முறைச்சி பாத்தேன் சிக்கிடுச்சு


படிச்சு பார்த்தேன் ஏறவில்ல குடிச்சு பார்த்தேன் ஏறிடுச்சு
சிரிச்சி பாத்தேன் சிக்கவில்லை முறைச்சி  பாத்தேன் சிக்கிடுச்சு
நாங்க அப்பா காசில் பீர் அடிப்போம்
எஸ் எம் எஸில் சைட் அடிப்போம்
வெட்டி பயன்னு பேர் எடுப்போம்
சிட்டி பஸ்ஸில் விசில் அடிப்போம்
இந்த வயசு போனா வேற வயசு இல்லை
அழகை ரசிக்கலைனா அவன் தான் மனுஷன் இல்லை


கல்யாணத்தை செய்யும் பொது பஞ்சாங்கத்தை பார்த்தவனே
காதலிக்க பஞ்சாங்கத்தை பார்ப்பதில்லையே
நல்ல நேரம் பார்த்து பார்த்து முதலிரவு போறவனே
புள்ளை பிறக்கும் நேரத்தை நீ சொல்ல முடியுமா

ரெண்டு விரலில் சிகரெட்டு வச்சி இழுக்கும் பொது தீ பந்தம்
பழைய சோறை பொதைச்சு வச்சி பருகும் பொது ஆனந்தம்
கனவு இல்லை கவலை இல்லை
இவன போல எவனும் இல்லை

இந்த வயசு போனா வேற வயசு இல்லை
அழகை ரசிக்கலைனா அவன் தான் மனுஷன் இல்லை

படிச்சு பார்த்தேன் ஏறவில்ல குடிச்சு பார்த்தேன் ஏறிடுச்சு
சிரிச்சி பாத்தேன் சிக்கவில்லை முறைச்சி சிக்கிடுச்சு
நாங்க அப்பா காசில் பீர் அடிப்போம்
எஸ் எம் எஸில் சைட் அடிப்போம்
வெட்டி பயன்னு பேர் எடுப்போம்
சிட்டி பஸ்ஸில் விசில் அடிப்போம்

என்னடி என்னடி முனியம்மா ஹே
கண்ணுல மையி முனியம்மா ஹே
யார் வச்ச மையி முனியம்மா ஹே
நான் வச்ச மையி முனியம்மா ஹே

பட்டு சேலை கூட்டத்திலே பட்டாம் பூச்சி போல வந்து
பம்பரமா ஆடபோறேன் உங்க முன்னாலே
ஏ மாடி வீட்டு மாளவிக்கா வாளமீனு போல வந்து
பல்லைக்காட்டி கூப்பிடுது பாதி கண்ணாலே
நரம்பு எல்லாம் முறுக்கு ஏற
நடனமாட போறேண்டா
மல்லுவேட்டி மாப்பிளை பையா
மச்சான் கூட ஆடேன்டா
புடுச்சு ஆடு முடிச்சு ஆடு
விடிஞ்ச பின்னால் முடிச்சு போடு

இந்த வயசு போனா வேற வயசு இல்லை
அழகை ரசிக்கலைனா அவன் தான் மனுஷன் இல்லை


படிச்சு பார்த்தேன் ஏறவில்ல குடிச்சு பார்த்தேன் ஏறிடுச்சு
சிரிச்சி பாத்தேன் சிக்கவில்லை முறைச்சி சிக்கிடுச்சு
நாங்க அப்பா காசில் பீர் அடிப்போம்
எஸ் எம் எஸில் சைட் அடிப்போம்
வெட்டி பயன்னு பேர் எடுப்போம்
சிட்டி பஸ்ஸில் விசில் அடிப்போம்
இந்த வயசு போனா வேற வயசு இல்லை
அழகை ரசிக்கலைனா அவன் தான் மனுஷன் இல்லை

Monday, March 9, 2009

கண்ணில் நான் ரெக்க பச்ச கண்ணா உன் நெஞ்சம் பச்ச காட்டிட்டேன் காதல் பச்ச நான் தானே


ஹே மச்சான் என்னை பாரு
Give Me That Groovy பார்வை
tell me are you ready ?
ஜாலி தான்
Classical சீனு

குட்கா குட்க்கா குட்கா குட்காலக்காடி
நீயோ நானோ சேர்ந்தா சேர்ந்தா Bacardi
குட்கா குட்க்கா குட்கா குட்காலக்காடி
நீயோ நானோ சேர்ந்தா சேர்ந்தா Bacardi

ஹாலிவுட் கூட்டம் பாரு டாலிவூட் ஆட்டம் பாரு
க்யூவில் வந்து நிக்கும் ஊரு
பாலிவுட் பதறும் பாரு ஹாலிவுட் அதிரும் பாரு
நீதான் லிட்டில் சூப்பர் ஸ்டாரு
குடிக்க Heineken நீயோ மேக்ஸ்யகான்
நான் தான் தமிழ் நாட்டு அமெரிக்கன்

குட்கா குட்க்கா குட்கா குட்காலக்காடி
நீயோ நானோ சேர்ந்தா சேர்ந்தா Bacardi

குட்கா குட்க்கா குட்கா குட்காலக்காடி
நீயோ நானோ சேர்ந்தா சேர்ந்தா Bacardi


மியாமி சுனாமி நீ
வேணுமே தினமும் நீ
ஸ்ரீலங்கா சுரங்காணி நீ தான்
கண்ணில் நான் ரெக்க பச்ச
கண்ணா உன் நெஞ்சம் பச்ச
காட்டிட்டேன் காதல் பச்ச நான் தானே
ஹே..
விட்டுது முட்டுது விக்குது சொக்குது
அச்சா அச்சாச்சோ
கத்துது விக்குது சிக்குது நிக்குது
எங்கே என்னாச்சோ

நான் ப்ளே பாய் தான்
பாய்ஞ்சா கௌ பாய் தான
நாட்டி பாய்...
நான் தான் ..

ஹே மச்சான் என்னை பாரு
Give Me That Groovy பார்வை

குட்கா..
குட்கா குட்க்கா குட்கா குட்காலக்காடி
நீயோ நானோ சேர்ந்தா சேர்ந்தா Bacardi
ஹுக்கா ஹுக்கா ஹுக்கா தம் அடி
நீ தான் வந்து உட்கார் உட்கார் என் மடி

Texas-இன் Apache நீ
Toronto Bullfighter நீ
Bed Room-இல் Good Fighter நீ தானே
Picaso Painting நீ தான்
Bethoven Music நீ தான்
Bernard Shaw ட்ராமா நீ தான்
நீ தான்..ஆஅந்

வெச்சது பச்சுனு நச்சுன்னு இச்சுனு
ஓட்டும் Fevicol
தொட்டதும் பட்டதும் சட்டுன்னு பட்டுன்னு
பத்தும் பெட்ரோல்
ஆடும் Mat போடு ஸ்வீட்டி என் மேல
ஒரு பால் நீ தான்

tell me Are You Ready
ஜாலி தான்
Classical சீனு

குட்கா குட்க்கா குட்கா குட்காலக்காடி
நீயோ நானோ சேர்ந்தா சேர்ந்தா Bacardi

ஹுக்கா ஹுக்கா ஹுக்கால மாடி
நீ தான் வந்து உட்கார் உட்கார் என் மடி

ஹாலிவுட் கூட்டம் பாரு டாலி வூட் ஆட்டம் பாரு
க்யூவில் வந்து இவன் முன்னே நிக்கும் ஊரு
பாலிவுட் பதறும் பாரு ஹாலிவுட் அதிரும் பாரு
நீதான் லிட்டில் சூப்பர் ஸ்டாரு
குடிக்க Heineken நீயோ மேக்ஸ்யகான்
நான் தான் தமிழ் நாட்டு அமெரிக்கன்

ஹுக்கா ஹுக்கா ஹுக்கா தம் அடி
நீ தான் வந்து உக்கார உக்கார என் மடி

குட்கா குட்க்கா குட்கா குட்காலக்காடி
நீயோ நானோ நானோ நீயோ சேர்ந்தா Bacardi

நெஞ்சிக்கடலிலே வந்தபுயல் சின்னம் உன்னை இடிச்சதும் பொங்கிடுச்சே


ஹேய் ஹா ஹேய் ஹா

ஏய் கிட்டே நெருங்கி வாடி கர்லா கட்டை உடம்புக்காரி
பட்டா எழுதி தாடி பஞ்சாமிர்த உதட்டுக்காரி
தொட்டபெட்டா வேணுமுன்னா தூக்கிப்போறேன் கூட வாடி
கீற்றுகொட்டா போதுமுன்னா கூத்து கட்ட நானும் ரெடி
ஸ்லேட்டு முதுகுக்காரி சாக்லேட்டு கலரு காரி
உன் cake உடம்பை தாக்க என் மீசை துடிக்குதேடி
கிட்ட நெருங்கி வாடா கர்லா கட்டை உடம்புக்காரா
பட்டா எழுதி தாடா பஞ்சாமிர்த உதட்டுக்காரா
தொட்டபெட்டா நானும் வாரேன் உப்பு மூட்டை தூக்கிப்போடா
கீற்றுகொட்டா போதுமடா கூத்துகட்ட கூட வாடா
தேக்கு முதுக்காரா சாக்லேட்டு கலரு காரா
உன் தேக்கு உடம்பை தாக்க என் ஆசை துடிக்குதேடா

பொத்தி வச்ச புயலா நீ தங்கம் கொட்டி வச்ச வயலா நீ
ஆக்கி வச்ச பிரியாணி உன்னை திங்கப்போறேன் வர்ரியா நீ
சாத்தி வச்ச கதவா நீ உள்ள ஊத்திவச்ச மதுவா நீ
சேத்து வச்ச பணமா நீ உன்னை எண்ணப்போறேன் கொடுடா நீ
தெப்பக்குளத்துல முங்கி குளிக்கையில் உன்னை தொட்ட மீனு வெந்துடுச்சே
கட்டை எறும்புகள் உன்னை கடிச்சதும் சக்கர நோயில செத்துடுச்சே

தேக்கு முதுகுக்காரா………..
ஸ்லேட்டு முதுகுக்காரி சாக்லேட்டு கலரு காரி
உன் cake உடம்பை தாக்க அண்ணன் மீசை துடிக்குதேடி
ஆஆ… அண்னா ஒருத்தி போறா லேக்காங்கொம்மா.. லேக்காங்கொய்யா
என்னடா ?
அண்னா ஒருத்திபோடா லேக்காங்கொம்மா.. லேக்காங்கொய்யா

தொட்டபெட்டா வேணுமுன்னா தூக்கிப்போறேன் கூட வாடி
கீற்றுகொட்டா போதுமுன்னா கூத்து கட்ட நானும் ரெடி
ஸ்லேட்டு முதுகுக்காரி சாக்லேட்டு கலரு காரி
உன் cake உடம்பை தாக்க என் மீசை துடிக்குதேடி

சேலை கட்டும் மயிலா நீ என்னை முட்ட வந்த முயலா நீ
உன் விரல்லுல மருதானி இப்போ வைக்க போறேன் ரெடியா நீ
டேய் சுட்டெரிக்கும் பகலா நீ என்னை சொக்கவைக்கும் இரவா நீ
ஏணி வச்சி மெதுவா நீ எல்லை தாண்டி வரும் களவாணி
வங்கக்கடலிலே வங்கபுயல் சின்னம் பட்டுன்னு கரையை தாண்டிடுச்சே
நெஞ்சிக்கடலிலே வந்தபுயல் சின்னம் உன்னை இடிச்சதும் பொங்கிடுச்சே

ஸ்லேட்டு முதுகுக்காரி…………………………………

ஸ்லேட்டு முதுகுக்காரி சாக்லேட்டு கலரு காரி
உன் cake உடம்பை தாக்க என் மீசை துடிக்குதேடி
டேய் கிட்ட நெருங்கி வாடா கர்லா கட்டை உடம்புக்காரா
வர்றேன்..
பட்டா எழுதி தாடா பஞ்சாமிர்த உதட்டதாடா
தர்றேன் ..
தொட்டபெட்டா நானும் வாரேன் உப்பு மூட்டை தூக்கிப்போடா
வர்றேன்..
கீற்றுகொட்டா போதுமடா கூத்துகட்ட கூட வாடா
வர்றேன...
ஸ்லேட்டு முதுக்காரா சாக்லேட்டு கலரு காரா
உன் தேக்கு உடம்பை தாக்க என் ஆசை துடிக்குதேடா

தினம் உந்தன் முகம் பார்க்கும் ஓரு வாழ்க்கை கூடாதா ? தினம் என்னுள் உன்னோடு நான் பேசி பார்கிறேன் ஏனடா நான் மாறினேன் ? என்னோவோ தடுமாறினேன்


சொல்வதற்கு ஓரு சொல் இல்லையா
சொல்லவந்தால் சொல் வரவில்லையா

சொல்வதற்கு ஓரு சொல் இல்லையா
சொல்லவந்தால் சொல் வரவில்லையா

மெய்யென சொல் இல்லை பொய் என சொல்
உள்ளம் தெளிவில்லையா
ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் யு

சொல்வதற்கு ஓரு சொல் இல்லையா
சொல்லவந்தால் சொல் வரவில்லையா

பெண்ணே..
உன் கூந்தலில் அது என்னை மூடாதா ?
பூவே..
என் மூச்சில் உன் வாசம் ஓடாதா ?
தினம் உந்தன் முகம் பார்க்கும்
ஓரு வாழ்க்கை கூடாதா ?
மௌனமாய் உன்னை பார்கிறேன்
தனிமையில் உன்னை கேட்கிறேன்
எப்படி உன்னை கேட்பது என்று சொல்லிவிடு

சொல்வதற்கு ஓரு சொல் இல்லையா
சொல்லவந்தால் சொல் வரவில்லையா

மெய்யென சொல் இல்லை பொய் என சொல்
உள்ளம் தெளிவில்லையா
ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் யு

தூங்கும் கண் மீதும் நீ பார்வை தந்தாயே
தேயும் என் நெஞ்சில் ஓரு போதை தந்தாயே
தினம் என்னுள் உன்னோடு நான் பேசி பார்கிறேன்
ஏனடா நான் மாறினேன் ? என்னோவோ தடுமாறினேன்
எப்படி உன்னை கேட்பது என்று சொல்லிவிடு

சொல்வதற்கு ஓரு சொல் இல்லையா
சொல்லவந்தால் சொல் வரவில்லையா

மெய்யென சொல் இல்லை பொய் என சொல்
உள்ளம் தெளிவில்லையா
ஐ லவ் யு ஐ லவ் யு
ஐ லவ் யு ஐ லவ் யு

சொல்வதற்கு ஓரு சொல் இல்லையா
சொல்லவந்தால் சொல் வரவில்லையா

Sunday, March 8, 2009

நீ வாழ புடிக்கும் மல்லிகை பூவோ வண்ண புறாவோ நான் கை தொட்டதும் தொட்டு சம்மதபட்டேன் வா


காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்து கொடுப்பேன் முன்னுக்கு வாடி

காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்து கொடுப்பேன் முன்னுக்கு வாடி
நான் வாழ புடிக்கும் மல்லிகை பூவே
வண்ண புறாவே வா
கை தொட்டதும் தொட்டு சம்மத பட்டு வா


எங்கேயும் ஐஸ் ஆச்சு சீலு சிலுப்பாச்சு
இங்க தான் சூடச்சு எறியுது மூச்சு
ல லாலா ல லாலா ல லாலா
எந்நவோ ஆயாச்சு இனி என்ன பேச்சு
பழம் தான் பழுத்தாச்சு பசி எடுதாச்சு
என்ன வேணும் ராசா நீ கேட்ட தாரேன்
ஒண்ணு ஒண்ணா நான் தானே எடுத்துக்க போறேன்
நீ கன்னத்தை கிள்ள எண்ணத்தை சொல்ல நான்

காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்து கொடுப்பேன் முன்னுக்கு வாடி
நீ வாழ புடிக்கும் மல்லிகை பூவோ
வண்ண புறாவோ நான்
கை தொட்டதும் தொட்டு சம்மதபட்டேன் வா

பெட்டியில் பாலொடு புட்டி களும் இருக்கு'
வெண்ணயெ தடவாத ரொட்டிகளும் இருக்கு
ம்ம் ஆ ஆஹ் ம்ம்ம் ம்ம்ம்ம்
ஒண்ணுமே வேனாமே உன்னை விட எனக்கு
உள்ளது எல்லாமே உன்னிடத்தில் இருக்கு
மத்தவங்க பாக்காட்டி கொடுப்பேன் நானே
இப்போ இங்க ஆள் ஏது ரகசியம் தாநெ
நான் வெள்ளரி பிஞ்சு மெல்லவே கொஞ்சு வா

காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்து தரனும் முன்னுக்கு வந்தேன்


உள்ளதான் பாரேன் மா ஊட்டி மலை சாரல்
உள்ளத்தில் பாயாதோ ஊசி மழை தூறல்
ஆஹா ஹஹா ஹா ம்ம் ம்ம்ம்
என்னவோ எதெ ஏதோ இன்பம் பொறாந்தாச்சு
சொல்லவே தெரியாம என்னை மறாந்தாச்சு
இன்னும் இன்னும் ஆனந்தம் தன்னால் புரியும்'
சின்ன பொண்ணு நான் தானே எனக்கென்ன தெரியும்
நான் உள்ளத சொல்வேன் சொன்னத செய்வேன் வா

காத்திருந்தேன் கதவ திறந்து உள்ளுக்கு வந்தேன்
காதல் செய்ய கத்து தரனும் முன்னுக்கு வந்தேன்
நான் வாழ புடிக்கும் மல்லிகை பூவே
வண்ண புறாவே வா
கை தொட்டதும் தொட்டு சம்மத பட்டு வா

காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி
காதல் செய்ய கத்து கொடுப்பேன் முன்னுக்கு வாடி

நீ போதும் நீ போதும் உன் விழிகள் என் மேல் பட்டால் அது போதும் எப்போதும்


கட்டான பொண்ணு ரொமாண்டிக்கா
கண்ணாலே சிக்னல் காட்டிட்டா
என்னோடு லவ்வில் ஸெட் ஆகிட்டா
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிப்பா
பக்கம் என்ன கூப்பிட்டா
மச்சம் ஒண்ணை காட்திட்தா
தொட்டு தொட்டு மனசில்
லைட்ட ஏறிய வச்சிட்டா


சூரியனும் தேவை இல்லை
நீ போதும் நீ போதும்
குட் மார்னிங் நீயே சொன்னால்
அது போதும் எப்போதும்

வெண்ணிலவு தேவை இல்லை
நீ போதும் நீ போதும்
உன் விழிகள் என் மேல் பட்டால்
அது போதும் எப்போதும்

தீவில் நம்மை வைக்கா விட்டால்
ஓ ஓ
தேகம் ரெண்டும் ஒட்டி விட்டால்
உயிரே உறவே போதும் ம்ம்ம்... ம்ம்ம்...
ம்ம்ம்... ம்ம்ம்...

கட்டான பொண்ணு ரொமாண்டிக்கா
கண்ணாலே சிக்னல் காட்டிட்டா
என்னோடு லவ்வில் ஸெட் ஆகிட்டா
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிப்பா
பக்கம் என்ன கூப்பிட்டா
மச்சம் ஒண்ணை காட்திட்தா
தொட்டு தொட்டு மனசில்
லைட்ட ஏறிய வச்சிட்டா


பூவாசம் தேவை இல்லை
நீ போதும் நீ போதும்
உன் வாசல் நித்தம் வந்தால்
அது போதும் எப்போதும்

மேலாடை தேவை இல்லை
நீ போதும் நீ போதும்
நீ என்னை அணைந்துக்கொண்டாள்
அது போதும் எப்போதும்
கண்ணை மெல்ல மூடிக்கொண்டால் ஓ ஓ..
கண்ணுக்குள்ளும் நீயே நின்றாய்
உயிர் உறவே போதும் ம்ம்ம்... ம்ம்ம்...
ம்ம்ம்... ம்ம்ம்...

கட்டான பொண்ணு ரொமாண்டிக்கா
கண்ணாலே சிக்னல் காட்டிட்டா
என்னோடு லவ்வில் ஸெட் ஆகிட்டா
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிப்பா
பக்கம் என்ன கூப்பிட்டா
மச்சம் ஒண்ணை காட்திட்தா
தொட்டு தொட்டு மனசில்
லைட்ட ஏறிய வச்சிட்டா

பார்வைக்கு ஓர் பார்வை எதிர் பார்க்கிறேன் வாராத தூக்கத்தை வழி பார்க்கிறேன்


ஆஹ்....ஆஹ்....
இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்
உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்

லா லா... லா லா... லா லா... லா லா...

இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்
உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்

லா லா... லா லா... லா லா... லா லா...

ஆஹ்...ஆஹ்....
காலை மஞ்சள் வெயில் பார்த்தேன்
பூவே உந்தன் நிறம் பார்த்தேன்
பார்க்கும் உந்தன் விழி பார்த்தேன்
காதல் எந்தன் நிறம் பார்த்தேன்
பார்வைக்கு ஓர் பார்வை எதிர் பார்க்கிறேன்
ஒ...வாராத தூக்கத்தை வழி பார்க்கிறேன்
கசங்கிய தலையணை பார்த்து
இளமையின் பசியை பார்த்தேன்
அணிகிற உடைகளும் என்றென்றும் சுமைகள் ஆகுமோ
..ஓ ..ஹோ
நிலவே என்னை கொண்டாடு ஓ.. ஓ..

லா...லா... லா...லா... லா...லா...

இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
அந்தியினில் கொஞ்சம்தான் பார்த்தேன்


மழையில் வானவில்லை பார்த்தேன்
உந்தன் வெட்கம் அதில் பார்த்தேன்
சாரல் சிந்துவதை பார்த்தேன்
உந்தன் முத்தம் அதில் பார்த்தேன்
தேன் ஊறும் பூ பார்த்து இதழ் பார்க்கிறேன்
ஓ... கண்ணாடி பார்த்தால் உன்னை பார்க்கிறேன்
புல்வெளி மீதினில் தூங்கும்
பனியினை தினமும் பார்த்தேன்
மொழியினில் சொல்லிட வார்தைகள் இல்லாமல் போனதே
அன்பே பார்த்தேன் காதல்-தான்
ஏ ...ஏ
ஆனந்தம்

இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்
உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்

லா லா... லா லா... லா லா... லா லா...

Saturday, March 7, 2009

ஜாக்கி சான் பாதி டோம் க்ரூஸ் பாதி நீதான்னு நான் நெனச்சேன்



குட்டி பிசாசே குட்டி பிசாசே உன் தொல்லை தாங்கலையே
சுட்டி பிசாசே சுட்டி பிசாசே உன்னால தூங்கலையே

ட்வின் டவர் மேல aircraftடை - போல
என் மேல மோதினா என்னாவது ?
ஹ்ம்ம் உன்மேல மோதி உற்சாகம் கோடி
உண்டாக தானே நான் மேமாசம் பெண்ணானது

ஹே டண்டனக்க ஹே டனக்குனக்க
ஹே டண்டனக்க மச்சான் நக்கனக்கனக்கனக்க
டண்டனக்க ஹே டனக்குனக்க
ஹே டண்டனக்க நக்கனக்கனக்கனக்க டோய் ..

குட்டி பிசாசே குட்டி பிசாசே உன் தொல்லை தாங்கலையே
சுட்டி பிசாசே சுட்டி பிசாசே உன்னால தூங்கலையே


கண்ணா உன் கால்சட்டையை நீ போடு மேல்சட்டையை
என்னை நீ ஹே அணைச்சிக்கோ வா வா
அன்பே உன் ஆசைப்படி நீதான் என் ஆடையடி
ராவிலே ஹே..இருட்டிலே வா வா வா
ஒவ்வொரு நாளும் என்னை திருடு திருடு
ஒவ்வொரு இரவை மெல்ல வருடு வருடு
நகக்குறி உடம்பில் அது தெரியும் தெரியும்
விடிஞ்ச பின்னாலும் அது எரியும் எரியும்

எல்லைகள் எப்போதும் தாண்டாதே ஹே ஹே
நீ என்னை அவ்வாறு கூறாத டீ


ஹே டண்டனக்க ஹே டனக்குனக்க
ஹே டண்டனக்க மச்சான் நக்கனக்கனக்கனக்க
டண்டனக்க ஹே டனக்குனக்க
ஹே டண்டனக்க நக்கனக்கனக்கனக்க டோய் ..

குட்டி பிசாசே குட்டி பிசாசே
என்னை நீ ஏன் பிடிச்ச ?
ஜாக்கி சான் பாதி டோம் க்ரூஸ் பாதி
நீதான்னு நான் நெனச்சேன்
அப்படியா ?
உன் பேர உச்சரிசேன் என் நாக்க எச்சரிச்சேன்
வேறொரு வேறொரு பேர் சொல்ல கூடாது
அயல்நாட்டை கத்தி கத்தி அழைக்காதே
ஷில்பா ஷெட்டி உனக்கு நான் ..
ஹா ..எனக்கு நீ வா வா

தினசரி கேட்டா இது தருமா தருமா தருமா
படுக்கைய போட்டா பக்கம் வருமா வருமா வருமா

முடித்திடு மெல்ல இது இடைதான் இடைதான்
உனக்கென திறந்த நான் டாஸ்மாக் கடை தான்

முத்தாட முத்தாட பத்தாது ஹோய்
பத்தாமல் போனாலும் கத்தாதே ..ஹே..ஹே..ஹே

காதல் இல்லாமல் தூக்கம் இல்லை என்றேனே..காதல் இருந்தாலும் தூக்கம் இல்லை என்றானே.. ஹே


ஓ இந்த காதல் என்னும் பூதம் வந்து ஏன்
என்னை கொல்லுகின்றதோ..
ஒ ஓ.. இந்த இன்பமான இம்சையிலே ஏன்
நெஞ்சம் துள்ளுகின்றதோ...
காதலே காதலே நிம்மதி கொடுக்கின்றதோ....
காதலே காதலே நிம்மதி கெடுக்கின்றதோ....

உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதைக்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...

உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதைக்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...

ஓ இந்த காதல் என்னும் பூதம் வந்து ஏன்
என்னை கொல்லுகின்றதோ..
ஒ ஓ.. இந்த இன்பமான இம்சையிலே ஏன்
நெஞ்சம் துள்ளுகின்றதோ...


காதல் காத்திருந்தால் எதிரில் செல்லும் பேருந்தா
பட்டம் பறந்த பின்னே கையில் மிஞ்சும் நூல்கண்டா ..
காதல் காய்சலுக்கு காதல் மட்டும் தான் மருந்தா...
எட்டி உதைக்க எண்ணும் உள்ளம் என்ன கால் பந்தா...
கண்ணாடி என் நெஞ்சம் தானடி தானடி.....
உன் கையில் கல் இன்று ஏனடீ ஏனடீ
உதடுவரை ஓர் வார்த்தை உள்ளதடீ
உனைக்கண்டு ஹே அது தொண்டையில் விக்குதடி

உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதைக்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...

பிரம்மா என் காதல் என்ன ஆகும்மென்றேனே...
வாசல் கோலமது பார்த்து நடக்க சொன்னானே ...
காதல் இல்லாமல் தூக்கம் இல்லை என்றேனே..
காதல் இருந்தாலும் தூக்கம் இல்லை என்றானே..
சொல்லாத ஆசைகள் ஏதுடீ ஏதுடீ .....
நெஞ்சோடு ஏக்கங்கள் ஏதுடீ ஏதுடீ .....
நஞ்சென்றால் ஹே ஒரு முறை கொல்லுமடி..
நினைவுகளோ ஹே பல முறை கொல்லுதடீ.....

உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதைக்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...

ஓ இந்த காதல் என்னும் பூதம் வந்து ஏன்
என்னை கொல்லுகின்றதோ..
ஒ ஓ.. இந்த இன்பமான இம்சையிலே ஏன்
நெஞ்சம் துள்ளுகின்றதோ...
காதலே காதலே நிம்மதி கொடுக்கின்றதோ....
காதலே காதலே நிம்மதி கெடுக்கின்றதோ....

உணவுகள் பிடிக்கல கனவுகள் பிடிக்குது..
காதலின் போதைக்கு அளவுயில்லை...
நண்பர்கள் பிடிக்கல நாய்குட்டி பிடிக்குது
காதலின் கிறுக்குக்கு அளவுயில்லை...

மழை காலம் வெயில் கண்டு சிலையாக நான் நிற்பதே அற்புதம்


ராமனின் மோகனம் ..
ஜானகி மந்திரம்...
ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்

ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு....
ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்

இடமும் வலமும் இரண்டு உடலும் மனமும்
ஒ ஒ...
இணைந்தோங்கி நிற்கும்போது
இதையன்றி எண்ணம் ஏது
இளவேனிர் காலம் வசந்தம்

ஒரு கோவில் மணியின் ராகம்....
லல லல லல லல லா...
ஒரு கோவில் மணியின் ராகம்
ஒரு வானில் தவழும் மேகம்
பறந்தோடும் நாள் இன்றுதான் கண்களே

ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு.... ஹோ ஹோ...

ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்

இடையும் கொடியும் குலுங்கும் நடையும் மொழியும்
ஹ ஆ ஆ....
எடை போட கம்பன் இல்லை
எனக்கந்த திறனும் இல்லை
இலை மூடும் வாழை பருவம்
லல லல லல லல லா...
மடி மீது கோவில் கொண்டு
மழை காலம் வெயில் கண்டு
சிலையாக நான் நிற்பதே அற்புதம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம்
தெய்வீகமே உறவு....

ராமனின் மோகனம்
ஜானகி மந்திரம்

லா லல லா லல
லா லல லா லல

கண்ணால் காதலினை மெதுவாய் சொல் இல்லை காதுக்குள்ளே இதமாய் சொல் உள்ளம் தாங்கவில்லை உடனே சொல்


நி சா நி சா க ரி
நி சா நி சா க ரி
நி சா நி சா க ரி
நி சா நி சா

நி சா நி சா க ரி
நி சா நி சா க ரி
நி சா நி சா க ரி
க ம ப க ம ப தா நீ

தொடுவேன் தொடுவேன் தொடுவேன் நான் தொடுவேன்
உனது அருகே இருந்தால் வான் தொடுவேன்
விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்
கவலை மறந்து திரியும் கற்பனைகள்

அன்பே நீ என் ஆயுள்தானே
ஒ ஒ ஒ ஒ
அள்ளிக் கொள்ள வேண்டும் நானே
ஹே ஹே ஒ ஒ
இரு விழி பார்வை ஊடகம்
இது ஒரு காதல் நாடகம்
என் வானில் என் வானில்
விண்ணிலெல்லாம் மழைத் துளியே

நி சா நி சா க ரி
நி சா நி சா க ரி
நி சா நி சா க ரி
நி சா நி சா

நி சா நி சா க ரி
நி சா நி சா க ரி
நி சா நி சா க ரி
க ம ப க ம ப தா நீ

தொடுவேன் தொடுவேன் தொடுவேன் நான் தொடுவேன்
உனது அருகே இருந்தால் வான் தொடுவேன்
விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்
கவலை மறந்து திரியும் கற்பனைகள்

ஏழு வண்ணங்களின் நிறமா நீ
விண்ணின் தாவரத்தின் விதையா நீ
கண்ணில் தேங்கி நிற்கும் கனவா நீ
என்ன நீ என்ன நீ
பூவில் பூத்திருக்கும் பனியா நீ
மௌனக் கூச்சலிடும் இசையா நீ
முத்தம் சேகரிக்கும் முகமா நீ
தூண்டில் பார்வையால் தொலைந்து விட்டேன்

ஆசை அலைகள் மனசுக்குள்
மெல்ல மெல்ல வீசுதடா
ஆனால் இதழ்கள் பயத்தினில்
உண்மை சொல்ல கூசுதடா

நி சா நி சா க ரி
நி சா நி சா க ரி
நி சா நி சா க ரி
நி சா நி சா

நி சா நி சா க ரி
நி சா நி சா க ரி
நி சா நி சா க ரி
க ம ப க ம ப தா நீ

தொடுவேன் தொடுவேன் தொடுவேன் நான் தொடுவேன்
உனது அருகே இருந்தால் வான் தொடுவேன்
விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்
கவலை மறந்து திரியும் கற்பனைகள்


கண்ணால் காதலினை மெதுவாய் சொல்
இல்லை காதுக்குள்ளே இதமாய் சொல்
உள்ளம் தாங்கவில்லை உடனே சொல்
சொல்லடி சொல்லடி

பாதி ராத்திரியில் விழித்தேனே
ஜன்னல் வெண்ணிலவை ரசித்தேனே
உந்தன் பேரைச் சொல்லி அழைத்தேனே
ஊஞ்சல் மேகமாய் பறந்து விட்டேன்

உன் போல் இவளின் விழிக்குள்ளே
தூக்கம் தூக்கம் இல்லையடா
ஏனோ இதயம் அடிக்கடி
ஏக்கம் ஏக்கம் தொல்லையடா

நி சா நி சா க ரி
நி சா நி சா க ரி
நி சா நி சா க ரி
நி சா நி சா

நி சா நி சா க ரி
நி சா நி சா க ரி
நி சா நி சா க ரி
க ம ப க ம ப தா நீ

தொடுவேன் தொடுவேன் தொடுவேன் நான் தொடுவேன்
உனது அருகே இருந்தால் வான் தொடுவேன்
விழிகள் முழுதும் உனது சொப்பனங்கள்
கவலை மறந்து திரியும் கற்பனைகள்
ஹே
அன்பே நீ என் ஆயுள்தானே
ஒ ஒ ஒ ஒ
அள்ளிக் கொள்ள வேண்டும் நானே
ஹே ஹே ஒ ஒ
இரு விழி பார்வை ஊடகம்
இது ஒரு காதல் நாடகம்
என் வானில் என் வானில்
விண்ணிலெல்லாம் மழைத் துளியே

மௌனங்கள் அழகு தான் ஆனாலும் சொல்லிவிடு சொல்லிவிடு


ஹரி கோரி போன்சாய் சம்பா நெல்லாலே
பரிதவிச்சு பரிதவிச்சு நின்னால் பெண்ணாலே
ஹரி கோரி போன்சாய் சம்பா நெல்லாலே
பரி தவிச்சு பரி தவிச்சு நின்னால் பெண்ணாலே

தேசம் வந்தால் கொஞ்சம்
குறு குறுக்கும் நெஞ்சம்
சொல்லி விட்டால் போதும்
முடிந்து விட்டது ஆகும்
உய்யாலா உய்யாலா
உள்ளுக்குள்ளே வைக்காதே கண்ணாளா

ஹரி கோரி போன்சாய் சம்பா நெல்லாலே
பரி தவிச்சு பரி தவிச்சு நின்னால் பெண்ணாலே

தேசம் வந்தால் கொஞ்சம்
குறு குறுக்கும் நெஞ்சம்
சொல்லி விட்டால் போதும்
முடிந்து விட்டது ஆகும்
உய்யாலா உய்யாலா
உள்ளுக்குள்ளே வைக்காதே கண்ணாளா

உனக்காக ஒருத்தி வந்தாள் அழகாக எதிரில் நின்றாள்
இந்த நேரம் பின்பு வாராதே
சொல்லும் வரையில் பாரம் தீராதே தீராதே
மௌனங்கள் அழகு தான்
ஒ ஒ ஒ
ஆனாலும் சொல்லிவிடு சொல்லிவிடு

ஹரி கோரி போன்சாய் சம்பா நெல்லாலே
சம்பா நெல்லாலே..
பரிதவிச்சு பரிதவிச்சு நின்னால் பெண்ணாலே
நின்னால் பெண்ணாலே..

தேசம் வந்தால் கொஞ்சம்
கொஞ்சம் ..
குறு குறுக்கும் நெஞ்சம்
நெஞ்சம்..
சொல்லி விட்டால் போதும்
முடிந்து விட்டது ஆகும்
உய்யாலா உய்யாலா
உள்ளுக்குள்ளே வைக்காதே கண்ணாளா

நான் தாலி கட்டும் பொது அவ தலை குனிஞ்சா போதும் நான் நாலு புள்ளை கேட்டா அவ நகம் கடிச்சா போதும்


யோ பேபி நீ தேவாமிர்தம்
பேபி நீ பஞ்சாமிர்தம்
பேபி நீ புஷ்பகாவரம்

யோ பேபி நீ தீபாவளி
பேபி நீ சூறாவளி
பேபி நீ வாச மார்கழி

அம்மாடி அவ பாதம் பட்டா பாராய் பூவாகும்
அம்மாடி அவ கை பட்டா நீரும் சாராயம்
அய்யோடி அவ என்னை என்னை தொட்டா என்னாகும்
யோ பேபி...
நீ தேவாமிர்தம்
பேபி..
நீ பஞ்சாமிர்தம்
பேபி...
நீ புஷ்பகாவரம்


ஹே ஆலமர காக்கா அவ சோறு வைக்க ஏங்கும்
டேய் ஓடை கரை மீனு அவ காளை கொத்த ஏங்கும்
ஹே காஞ்சி பட்டு சேலை அவ கட்டி கொள்ள ஏங்கும்
ஹே நாகலிங்க பூவு அவ வாசத்துக்கு ஏங்கும்

சேலை காத்தாடியா செவத்த புள்ள வந்தாளாம்
செட்டு கடை எல்லாருமே திரும்பி வந்தாண்டா

காதல் பூசாரியா கனவு பூஜை செய்ஞ்சாடா
கல் விழுந்த குளத்தை போல குழம்ப வச்சாடா

அம்மாடி அவ பாதம் பட்டா பாராய் பூவாகும்
அம்மாடி அவ கை பட்டா நீரும் சாராயம்
அய்யோடி அவ என்னை என்னை தொட்டா என்னாகும்


நான் காலமெல்லாம் வாழ அவ கண்ணழகு போதும்
என் ஆசை எல்லாம் பேச அவ காதழகு போதும்
நான் தாலி கட்டும் பொது அவ தலை குனிஞ்சா போதும்
நான் நாலு புள்ளை கேட்டா அவ நகம் கடிச்சா போதும்

ஊத்து தண்ணீரா உள்ளுக்குள்ளே பூத்தாடா
உலகெல்லாம் அவ தான்னு உணர வச்சாடா
காதல் கருப்பாட்டம் கண்ணோட செர்ந்தாடா
கனவுக்குள்ளே ஸ்ரீதேவியா கத படிச்சாடா

அம்மாடி அவ பாதம் பட்டா பாராய் பூவாகும்
அம்மாடி அவ கை பட்டா நீரும் சாராயம்
அய்யோடி அவ என்னை என்னை தொட்டா என்னாகும்

ரேஞ்சு இறங்க வச்சிட்டே என் சிந்தனைய தேங்கி தழும்ப வச்சிட்டே


காத்தாடி போல ஏண்டி என்னை சுத்துற
ஜூ மந்திரகாளி போட்டு சுத்த வைக்கிற

காத்தாடி போல ஏண்டி என்னை சுத்துற
ஜூ மந்திரகாளி போட்டு சுத்த வைக்கிற
என்னாடி விட்டுப்புட்டா ரொம்ப பேசுற
கண்ணாடி நெஞ்சு மேலே கல்ல வீசுற
திண்டாடி திண்டாடி திண்டாடி சொக்கி நிக்குற
அடி என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி
என் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சுடி
ஏய் எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி
கெட்டி மேளம் கொட்டும்முன்னே தொட்டா எப்படி?
(காத்தாடி..)

ஏய் கிறுக்கி நான் திக்கி திக்கி
கத்தி மேலே நடக்குறேண்டி
கை வழுக்கி உன் கையை தொட்டு புடிக்கிறேண்டி
ஏய் கிறுக்கா உன் கண்ணு ரெண்டும்
பத்திக்கிற வத்திக்குச்சிடா
நீ பார்த்தால் உள்ளே தப்பு தண்டா நடக்குதடா
சோக்கா சிரிக்க வச்சுட்ட
சுருக்கு பையில் நேக்கா முடிஞ்சு வச்சுட்ட யப்பா
ரேஞ்சு இறங்க வச்சிட்டே
என் சிந்தனைய தேங்கி தழும்ப வச்சிட்டே

அடி என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி
என் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சுடி
ஏய் எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி
கெட்டி மேளம் கொட்டும்முன்னே தொட்டா எப்படி?
(காத்தாடி..)

உன் இடுப்பு ஒரு ரயிலு பெட்டி போலத்தான் குலுங்குதடி
என் இளமை தண்டவாளம் விட்டு குதிக்குதடி
அட என் மனசு ஒரு நகைப்பெட்டி போலத்தான் இருக்குதடா
உன் வயசு அதை தொட்டு தொட்டு திருடுதடா
ஹே மச்சி புரிஞ்சு போச்சுடி
என் நெஞ்சு இப்போ சுத்தி சரிஞ்சி போச்சுடி

வெட்கம் உடைஞ்சுபோச்சுடா
என் மூளைக்குள்ள பச்சி பறந்து போச்சுடா ஐ ஐ

அடி என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி
என் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சுடி
ஏய் எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி
கெட்டி மேளம் கொட்டும்முன்னே தொட்டா எப்படி?

காத்தாடி போல ஏண்டி என்னை சுத்துற
ஜூ மந்திரகாளி போட்டு சுத்த வைக்கிற

என்னாடி விட்டுப்புட்டா ரொம்ப பேசுற
கண்ணாடி நெஞ்சு மேலே கல்ல வீசுற
திண்டாடி திண்டாடி திண்டாடி சொக்கி நிக்குற
அடி என்னடி என்னடி கண்ணடிக்கும் பூங்கொடி
என் மனசு உன் இடுப்பில் மாட்டிக்கிச்சுடி
ஏய் எட்டடி பத்தடி எட்டி நின்னு கண்ணடி
கெட்டி மேளம் கொட்டும்முன்னே தொட்டா எப்படி?

Friday, March 6, 2009

மனத்துக்குள் உள்ள ரகசியத்தை நீ தேடு தடை போட வழி இல்லையே


கண்ணுக்குள் உன் உருவமே
நெஞ்சுக்குள் உன் தியாணமே
என் ஆசை உன் ஸ்நேகமே
உன் சுவாசம் என் சுவாசமே
இந்த சேதியை நான் சொல்லிட
என் பாஷைகள் மௌனமே

மனத்துக்குள் உள்ள ரகசியத்தை நீ தேடு
தடை போட வழி இல்லையே
கரு நீல கண்ணுக்குள் மூழ்கி தவிக்கின்ற
என் மனசு வசம் இல்லையே
உனை என்னும் நேரத்தில் உடலெங்கும் சிலிர்க்கின்ற
உணர்வுக்குள் நான் துடிக்கிறேன்

துடிக்கின்றே இதழே நீ சொல் என்றே நான் கேட்டேன்
மனத்துக்குள் ஆசைகளை
நிலம் பார்த்து நான் நின்று எதிர்பார்த்தேன் நீ பேச
துணிவுக்கு இடம் இல்லையே
எதிர்பார்த்த நேரத்தில் இரவொடு பகல் போக
நாள் ஒன்று வீணானதே

கண்ணுக்குள் உன் உருவமே
நெஞ்சுக்குள் உன் தியாணமே
என் ஆசை உன் ஸ்நேகமே
உன் சுவாசம் என் சுவாசமே
இந்த சேதியை நான் சொல்லிட
என் பாஷைகள் மௌனமே

உன் பாதி பார்வையில் பழகிய நெருக்கம் வருவது வருவது எப்படி


உயிரே உயிரே உறைந்தேனே
நான் உன்னை கண்ட அந்த நொடி
உயிரே உயிரே உறைந்தேனே
நான் உன்னை கண்ட அந்த நொடி
உறவை உறவை துறந்தேனே
நீ என்னை கண்ட இந்த நொடி

உந்தன் கண்ணோரம் வாழ
கற்பூரம் போல அன்பே நான் கரைந்தேனே
உந்தன் கண்ணோரம் வாழ
கற்பூரம் போல அன்பே நான் கரைந்தேனே
எப்போதும் கேட்கும் என் பாடல் நீயென தெரியாதா
எப்போதும் பூக்கும் என் பூவும் நீயென புரியாதா
எப்போதும் வீசும் உன் தென்றல் நான் என அறிவாயா
எப்போதும் பேசும் உன் மௌனம் நானே தொடுவாயா

உயிரே உயிரே உறைந்தேனே
நான் உன்னை கண்ட அந்த நொடி

உன் பட்டு கன்னம் புத்தகம்
அதில் உதடுகள் எழுதுவதெப்படி
உன் நெற்றிப் பொட்டு வெண்ணிலா
அது பகலிலும் ஒளிர்வது எப்படி
உன் வீதி சேர்ந்ததும் வருகிற
பதட்டம் குறைப்பது குறைப்பது எப்படி
உன் பாதி பார்வையில் பழகிய நெருக்கம்
வருவது வருவது எப்படி
என் வாழ்க்கையா ...என் வேட்கையா ..
ரெண்டாகவும் தெரிந்தாயே ..

எப்போதும் கேட்கும் என் பாடல் நீயென தெரியாதா
எப்போதும் பூக்கும் என் பூவும் நீயே புரியாதா
எப்போதும் வீசும் உன் தென்றல் நான் என அறிவாயா
எப்போதும் பேசும் உன் மௌனம் நானே தொடுவாயா

உயிரே உயிரே உறைந்தேனே
நான் உன்னை கண்ட அந்த நொடி
உறவை உறவை துறந்தேனே
நீ என்னை கண்ட இந்த நொடி

உன் எச்சில் முத்தம் சம்மதம்
அது தினசரி தொடர சம்மதம்
உன் உச்சுகொட்டல் சம்மதம்
அது உயிர் குழி பறிக்க சம்மதம்
உன் காதின் ஓரமாய் புரளும் முடியை
காலைக் கோடி சம்மதம்
உன் ஈர சேலையில் வழியும் துளி போலே
உருள நானும் சம்மதம்
இனி என் ஞாபகம் ...உன் பூ முகம் ..
கண்ணாடி போலே எனை காட்டும் ..

எப்போதும் கேட்கும் என் பாடல் நீயென தெரியாதா
எப்போதும் பூக்கும் என் பூவும் நீயே புரியாதா
எப்போதும் வீசும் உன் தென்றல் நான் என அறிவாயா
எப்போதும் பேசும் உன் மௌனம் நானே தொடுவாயா

புது ஸ்நெகமொ வேண்டும் என இது நாள் வரை தெரியவலை



திசை மாறி போயாச்சு மனசு
தனியாக தவிக்கின்ற வயசு
ஒ தென்றல் காற்றே
உன்னிடம் கேட்டேன்
என் மனம் எங்கே நீ சொல்வாயோ
திசை மாறி போயாச்சு மனசு
இடம் தேடி தவிக்கின்ற இளசு
ஒ தென்றல் காற்றே
உன்னிடம் கேட்டேன்
என் மனம் எங்கே நீ சொல்வாயோ
நீ சொல்வாயோ....
நீ சொல்வாயோ....

புது ஸ்நெகமொ வேண்டும் என
இது நாள் வரை தெரியவலை
கொடுப்பதற்கோ மனம் உண்டு என
யார் என்றுமே சொல்லவில்லை
நேசம் விலாசம் அறிந்ததோ நெஞ்சம்
சிறகு முளைத்தோ என்னவோ

திசை மாறி போயாச்சு மனசு
தனியாக தவிக்கின்ற வயசு
ஒ தென்றல் காற்றே
உன்னிடம் கேட்டேன்
என் மனம் எங்கே நீ சொல்வாயோ
நீ சொல்வாயோ....
நீ சொல்வாயோ....

கனவென்பது கொலு வைத்ததும்
கண்ணிருந்தும் உண்டு லாபம் இல்லை
சிலையாகவே அசையாமலே
வாழ்வதில் அர்த்தம் இல்லை
துணை ஒன்று வந்தால் வாழ்க்கையில் இணை தான்
இனிமையும் சுகமே அழகே...

திசை மாறி போயாச்சு மனசு
தனியாக தவிக்கின்ற வயசு
ஒ தென்றல் காற்றே ...
உன்னிடம் கேட்டேன்
என் மனம் எங்கே நீ சொல்வாயோ
அஹா ஹா ஹா ..மனசு
தனியாக தவிக்கின்ற வயசு
ஒ தென்றல் காற்றே ...
உன்னிடம் கேட்டேன்
என் மனம் எங்கே நீ சொல்வாயோ
நீ சொல்வாயோ....
அஹா ஹா ஹா ..
அஹா ஹா ஹா ..
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

புத்தகத்தில் இருக்கும் உத்திகளை படித்தா காதலிக்க பழகி கொண்டாய்


தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது
பள்ளி கொள்ள வாடி அழகே
சாமத்தில் தருவேன் வாய்யா
சுல்தானே சுல்தானே சுல்தானே
சுல்தானே ..
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

இந்த இளம் கிளி போல்
சந்தையிலே எனக்கு
இன்றுவரை சிக்கவில்லையே

என் அழகை ருசிக்க என் நெருப்பை அணைக்க
இளைஞனும் கிட்டவில்லையே

டில்லி எல்லாம் தேடி தேடி உனை கண்டேனே
பாலில் விழும் சீனி போல எனை தந்தேனே
ஆடை மூடும் ஜாதி பூவின் அங்கம் பார்த்தேனே
அங்கே சொர்க்கம் இல்லை இல்லை இங்கே பார்த்தேனே

சுல்தானே சுல்தானே சுல்தானே
சுல்தானே ..
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

கொஞ்சி கொஞ்சி எடுத்து
நெஞ்சில் மெல்ல அணைத்து
என் மனதை திருடிக்கொண்டாய்
புத்தகத்தில் இருக்கும் உத்திகளை படித்தா
காதலிக்க பழகி கொண்டாய்
புத்தகத்தில் இல்லா இன்பம் கற்று வைப்போமா
முத்தம் தரா இடத்தை கண்டு முத்தம் வைப்போமா

ஆசை என்னும் அமுத ஊற்றிலே ஆடிப்பார்ப்போமா
ஆணில் பெண்ணை பெண்ணில் ஆணை
தேடி தீர்ப்போமா

சுல்தானே சுல்தானே சுல்தானே
சுல்தானே ..
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா

பள்ளி கொள்ள வாடி அழகே
சாமத்தில் தருவேன் வாய்யா
சுல்தானே சுல்தானே சுல்தானே
சுல்தானே ..