Sunday, December 19, 2010

நிறையை மட்டுமே காதல் பார்க்கும் குறையை மட்டுமே கல்யாணம் பார்க்கும் ஏன் கண்ணா?



செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்
செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்;
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்

துன்பம் தொலைந்தது எப்போ? காதல் பிறந்ததே அப்போ!
இன்பம் தொலைந்தது எப்போ? கல்யாணம் முடிந்ததே அப்போ!

செப்டம்பர் மாதம் செப்டம்பர்; மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்;
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்
துன்பம் தொலைந்தது எப்போ? காதல் பிறந்ததே அப்போ!
இன்பம் தொலைந்தது எப்போ? கல்யாணம் முடிந்ததே அப்போ!


ஏ பெண்ணே! காதல் என்பது இனிக்கும் விருந்து
கல்யாணம் என்பது வேப்பங் கொழுந்து ஏன் கண்ணே?
நிறையை மட்டுமே காதல் பார்க்கும்
குறையை மட்டுமே கல்யாணம் பார்க்கும் ஏன் கண்ணா?
காதல் பார்ப்பது இருண்டு கண்ணில்
கல்யாணம் பார்ப்பது நாலு கண்ணிலடி பெண்ணே
கிளிமூக்கின் நுனிமூக்கில் கோபங்கள் அழகென்று
ரசிக்கும் ரசிக்கும் காதல்
கல்யாணம் ஆனாலே துரும்பெல்லாம் தூணாக
ஏன் ஏன் ஏன் மோதல்?

பெண்கள் இல்லாமல் ஆண்களுக் காறுதல் கிடைக்காது
பெண்களே உலகில் இல்லையென்றால்
ஆறுதலே தேவை இருக்காது

செப்டம்பர் மாதம் செப்டம்பர்; மாதம்;
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்


நான் கண்டேன் காதல் என்பது கழுத்துச் சங்கிலி
கல்யாணம் என்பது காலில் சங்கிலி என் செய்வேன்;?
கல்யாணம் என்பதைத் தள்ளிப் போடு
தொண்ணூறு வரைக்கும் டூயட் பாடு வா அன்பே!
காதல் பொழுதில் விரும்பும் குறும்பு
கல்யாணக் கட்டிலில் கிடைப்பதில்லையே நண்பா!
பிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை
காதல் காதல் அதுதான்
உறவோடு சிலகாலம் பரிவோடு சிலகாலம்
நாம் வாழ்வோம் வா! வா!
ஆண்கள் இல்லாமல் பெண்களுக்காறுதல் கிடைக்காது
ஆண்களே உலகில் இல்லையென்றால்
ஆறுதலே தேவை இருக்காது

செப்டம்பர் மாதம் செப்டம்பர்; மாதம்
வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்;
அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்
வாழ்வின் இன்பத்தைத் தொலைத்து விட்டோம்

துன்பம் தொலைந்தது எப்போ?
காதல் பிறந்ததே அப்போ!
இன்பம் தொலைந்தது எப்போ?
கல்யாணம் முடிந்ததே அப்போ!

Wednesday, December 15, 2010

கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ என்னைவிட்டு பிரிவதில்லை


ப பனி பனிபம பனிபம கமப
சகசனி பனிபம கமகச கமப
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ
என்னைவிட்டு பிரிவதில்லை

தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்

சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ
தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
இரவும் பகலும் வந்தாலும் நாள் என்பது ஒன்றல்லோ
கால்கள் இரண்டு கொண்டாலும் பயணம் என்பது ஒன்றல்லோ
இதயம் இரண்டு என்றாலும் காதல் என்பது ஒன்றல்லோ

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ
என்னைவிட்டு பிரிவதில்லை

தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்

அன்றில் பறவை இரட்டைப் பிறவி
ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி
பிரியாதே விட்டுப் பிரியாதே
கண்ணும் கண்ணும் இரட்டைப் பிறவி
ஒரு விழி அழுதால் மறுவிழி அருவி
பொழியாதோ அன்பே வழியாதோ
தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
ஒருவர் தூங்கும் தூக்கத்தில் இருவர் கனவுகள் காணுகிறோம்
ஒருவர் வாங்கும் சுவாசத்தில் இருவர் இருதயம் வாழுகிறோம்
தாங்கி கொள்ள மட்டும்தான் தனித் தனியே தேடுகின்றோம்

Tuesday, December 14, 2010

மரபு வேலிக்குள் நீ இருக்க மறக்க நினைக்கிறேன் முடியவில்லை


உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்....
இவளே, இவளே, என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்....
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே....

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே

ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்
உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்
என் உயிரில் நீ பாதி என்று
உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன்
எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக் கொண்டு
உறங்கச் சொல்வதில் நியாயமில்லை
நீ வருவாய இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!
தன்னைத் தருவாயோ? இல்லை கரைவாயோ

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே

நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி
மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும்
உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி
மரபு வேலிக்குள் நீ இருக்க
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை
இமயமலை என்று தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை
நீ வருவயோ? இல்லை மறைவாயோ? ஏ ஏ ஏ ஏ ஏ!
தன்னைத் தருவாயோ இல்லை கரைவாயோ


உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்....
இவளே, இவளே, என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்....
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே....

Monday, December 13, 2010

கண்ணால் கண்ணில் கற்பித்தோம் காதல் பாடம் ஒப்பித்தோம்


தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்

கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல் பாடம் ஒப்பித்தோம்
கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல் பாடம் ஒப்பித்தோம்
தீண்டித் தீண்டித் தூண்டும் விரலை
திட்டிக்கொண்டே தித்தித்தோம்

தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்

ஆணில் உள்ள பெண்ணைக் கொஞ்சம்
பெண்ணில் உள்ள ஆணைக் கொஞ்சம்
கொஞ்சச் சொல்லி கொஞ்சச் சொல்லி
கொஞ்சச் சொல்லி யாசித்தோம்
ஆணில் உள்ள பெண்ணைக் கொஞ்சம்
பெண்ணில் உள்ள ஆணைக் கொஞ்சம்
கொஞ்சச் சொல்லி கொஞ்சச் சொல்லி
கொஞ்சச் சொல்லி யாசித்தோம்
கொத்திக் கொத்தி பேசும் கண்ணை
திக்கி திக்கி வாசித்தோம்
சுற்றிச் சுற்றி வீசும் காற்றை
நிற்கச் சொல்லி ஸ்வாசித்தோம்
உன்னை என்னை துண்டித்தோம்
உயிரினில் ஒன்றாய் சந்தித்தோம்
மீண்டும் மீண்டும் சீண்டும் இதழை
முத்தம் செய்து தித்தித்தோம்

தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்


தீயில் உள்ள நீரைக் கொஞ்சம்
நீரிலுள்ள தீயைக் கொஞ்சம்
சேரச் சொல்லி சேரச் சொல்லி
சேரச் சொல்லி யாசித்தோம்
தீயில் உள்ள நீரைக் கொஞ்சம்
நீரிலுள்ள தீயைக் கொஞ்சம்
சேரச் சொல்லி சேரச் சொல்லி
சேரச் சொல்லி யாசித்தோம்

ஒற்றைச் சொல்லை சொல்லத்தானே
கோடி சொல்லை வாதித்தோம்
மெல்லப் பேசி மெல்ல தொட்டு
மெதுவாய் வயதை சோதித்தோம்
நிழலையும் தேடி நேசித்தோம்
கனவிலும் ஒன்றாய் யோசித்தோம்
இன்னும் இன்னும் என்றே நம்மை
தின்னச்சொல்லி தித்தித்தோம்

தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்

கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல் பாடம் ஒப்பித்தோம்
கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல் பாடம் ஒப்பித்தோம்
தீண்டித் தீண்டித் தூண்டும் விரலை
திட்டிக்கொண்டே தித்தித்தோம்

தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்

Sunday, December 12, 2010

பொறுத்தம் உடலிலும் வேண்டும் புரிந்தவன் துணையாக வேண்டும்


மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கியென்ன உனக்கும் வாழ்வு வரும்
மனது மயங்கியென்ன உனக்கும் வாழ்வு வரும்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

இரவில் நிலவொன்று உண்டு உறவினில் சுகமொன்று உண்டு
இரவில் நிலவொன்று உண்டு உறவினில் சுகமொன்று உண்டு
மனைவியின் கனவொன்று உண்டு எனக்கது புரிந்தது இன்று
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கியென்ன உனக்கும் வாழ்வு வரும்

பொறுத்தம் உடலிலும் வேண்டும் புரிந்தவன் துணையாக வேண்டும்
பொறுத்தம் உடலிலும் வேண்டும் புரிந்தவன் துணையாக வேண்டும்
கணவனின் துணையோடு தானே காமனை வென்றாக வேண்டும்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல்
கவிஞன் கண்டாலே கவிதை காண்பவன் கண்டாலே காதல்
அழகினை புரியாத பாவம் அருகினில் இருந்தென்ன லாபம்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கியென்ன உனக்கும் வாழ்வு வரும்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

என் காதல் என்னாகுமோ சொல்லாமலே நாள் போகுமோ ?


யாரோ இவள் இவள் யாரோ
எனக்கென மண்ணில் பிறந்தவள் தானோ
யாரோ இவன் இவன் யாரோ
எனக்கென மண்ணில் பிறந்தவன் தானோ
ஊரோ பேரோ சொல்வாளோ
கண்ணால் தினம் என்னை இனி கொல்வானோ

யாரோ இவள் இவள் யாரோ
எனக்கென மண்ணில் பிறந்தவள் தானோ


என் காதல் என்னாகுமோ சொல்லாமலே நாள் போகுமோ
உன் காதல் நீ சொல்லடா ஏன் இந்தக் கூச்சம்
தன் காதில் நான் சொன்னதை பூங்காற்றுமே போய் சொல்லுமோ
வேண்டாம் உன் தூண்டாடுதே ஓர்ப்பார்வை போதும்
உன் பார்வை கல்லாகுதே என் கால்கள் தள்ளாடுதே
கொண்டாடு கொண்டாடு அன்பே
தேணுண்ட வண்டாகிறேன்
நீ தூண்ட தேன் ஆகிறேன்
கொண்டாடு திண்டாடு அன்பே ஹே ஹே ஹே

யாரோ இவள் இவள் யாரோ
எனக்கென மண்ணில் பிறந்தவள் தானோ
யாரோ இவன் இவன் யாரோ
எனக்கென மண்ணில் பிறந்தவன் தானோ
ஊரோ பேரோ சொல்வாளோ
கண்ணால் தினம் என்னை இனி கொல்வானோ

காற்றோடு நான் கேட்கிறேன் உன் வாசனை மூச்சாகுமோ
உன் சுவாசக்காற்றோடுதான் என் வாசம் விடும்
கனவோடு நான் கேட்கிறேன் உன் காலடி தினம் கேட்குமோ
கனவென்னை நிஜமாகவே என் கைகள் தீண்டும்
ஹே ஹே உன் பாதி நானாகவே என் பாதி நீயாகவே
கொண்டாடு கொண்டாடு அன்பே
ஒருப்பிள்ளை அணைப்போடுதே மறுப்பிள்ளை எனைக்கூறுதே
கொண்டாடி திண்டாடு அன்பே ஹே ஹே ஹே


யாரோ இவள் இவள் யாரோ
எனக்கென மண்ணில் பிறந்தவள் தானோ
யாரோ இவன் இவன் யாரோ
எனக்கென மண்ணில் பிறந்தவன் தானோ
ஊரோ பேரோ சொல்வாளோ
கண்ணால் தினம் என்னை இனி கொல்வானோ

நீ தந்த ஒற்றை கடிதம் ஆயிரம் முறை நான் படிப்பேனே , உனக்காக ஆயிரம் கடிதம் ஒற்றை நொடியில் எழுதிடுவேனே


சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்
உன் மதியால் என் மனதை நீதான் வசியம் செய்தாய்
அடம் பிடித்தேன் நீ எந்தன் நெஞ்சில் இடம் பிடித்தாய் ஐ லவ் யூ டா
காதலுக்காக உந்தன் நெஞ்சை கடன் கொடுத்தாய் ஐ லவ் யூ டா
தீராத உன் அன்பினால் போராடி எனை வென்றதால்
என் அழகெல்லாம் உனக்காக சமர்ப்பிக்கிறேன்
சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்
உன் மதியால் என் மனதை நீதான் வசியம் செய்தாய்

உன்னை நானும் நினைப்பதை யாரும் தடுக்கின்ற வேளை
துடிக்கும் இதயம் வேலை நிறுத்தம் செய்கின்றதே உயிர் வலிக்கின்றதே
நீ தந்த ஒற்றை கடிதம் ஆயிரம் முறை நான் படிப்பேனே
உனக்காக ஆயிரம் கடிதம் ஒற்றை நொடியில் எழுதிடுவேனே
தினம் காலையில் எந்தன் நாள் காட்டியில்
உன் பிம்பம் நான் கண்டு கண் விழிக்கின்றேன்

சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்
உன் மதியால் என் மனதை நீதான் வசியம் செய்தாய்

ஜன்னலின் வழியே வெண்ணிலவொளியே கசிகின்ற நேரம்
கட்டிலின் மேலே கவிதைகள் போலே நாம் வாழலாம் இனி நாம் வாழலாம்
என் மீது காலை போட்டு தூங்கும் உன்னை ரசிப்பேனே
நான் உந்தன் காதை கடித்து தூக்கம் கலைத்து சிரித்திடுவேனே
இது போலவே பல ஆசைகளே
உள் நெஞ்சில் ஓயாமல் உருண்டோடுதே

சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்
உன் மதியால் என் மனதை நீதான் வசியம் செய்தாய்
அடம் பிடித்தேன் நீ எந்தன் நெஞ்சில் இடம் பிடித்தாய் ஐ லவ் யூ டா
காதலுக்காக உந்தன் நெஞ்சை கடன் கொடுத்தாய் ஐ லவ் யூ டா
தீராத உன் அன்பினால் போராடி எனை வென்றதால்
என் அழகெல்லாம் உனக்காக சமர்ப்பிக்கிறேன்

சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய்
உன் மதியால் என் மனதை நீதான் வசியம் செய்தாய்

Wednesday, December 1, 2010

நினைவுகளோடு வாழ்வது எந்தன் காதல் சொல்லுமடி


முழுமதி முழுமதி நிலவை கேளடி
முழுவதும் முழுவதும் உண்மை தானடி
காதலில் கரைந்தவன் என் போல் யாரடியோ ....

எத்தனை எத்தனை காதல் பார்த்தது
எத்தனை எத்தனை கனவை கேட்டது
என் போல் யாருமே இல்லை என்றது இங்கே

நிலவுக்கு நிலவுக்கு நன்றே தெரிந்தது
உயிருக்கு உயிருக்கு இன்றே புரிந்தது
கனவுக்கு கனவுக்கு சிறகுகள் முளைத்தது
நிலவினை உரசிட நினைவுகள் பறக்குது

முழுமதி முழுமதி நிலவை கேளடி
முழுவதும் முழுவதும் உண்மை தானடி
காதலில் கரைந்தவன் என் போல் யாரடியோ ....


காவிய காதல் ஆயிரம் கதைகள் பூமிக்கு சொன்னதடி
நினைவுகளோடு வாழ்வது எந்தன் காதல் சொல்லுமடி
உலகத்தில் சிறந்த இடம் அதை தேடி
உந்தன் இதயம் வந்தேனே வந்தேனே
உன் விரல் கோர்க்கும் நிமிடத்தில்
எந்தன் தனிமைக்கு தனிமை தந்தேனே தந்தேனே

முழுமதி முழுமதி நிலவை கேளடி
முழுவதும் முழுவதும் உண்மை தானடி
காதலில் கரைந்தவன் என் போல் யாரடியோ ....


நதியின் காதலை கரையிடம் வந்து அலைகள் சொன்னதடி
மறுபடி மறுபடி அதனை கரைகள் கேட்குதடி
நதியினில் நீந்தும் நிலவிதை பார்த்து
வெளிச்சத்தை அள்ளி சிந்தாதோ சிந்தாதோ
காலையில் நமது காதலை ஏந்தி
வானத்தை பிரிந்து செல்லாதோ செல்லாதோ

முழுமதி முழுமதி நிலவை கேளடி
முழுவதும் முழுவதும் உண்மை தானடி
காதலில் கரைந்தவன் என் போல் யாரடியோ ....

நிலவுக்கு நிலவுக்கு நன்றே தெரிந்தது
உயிருக்கு உயிருக்கு இன்றே புரிந்தது
கனவுக்கு கனவுக்கு சிறகுகள் முளைத்தது
நிலவினை உரசிட நினைவுகள் பறக்குது

முழுமதி முழுமதி நிலவும் சொன்னது
முழுவதும் முழுவதும் உண்மை தானது
உன் போல் யாரும் இல்லை என்றது

Saturday, November 20, 2010

உந்தன் முகம் பார்த்த பின்னே எதுவும் பிடிக்கலையே


கண்ணிரண்டில் நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
என் உயிரின் உயிரே
என் இரவின் நிலவே
என் அருகில் வரவே
நீ தருவாய் வரமே ஒ ஒ ஒ


ஊருக்குள்ள கோடிபொண்னே யாரையும் நெனைக்கலையே
உந்தன் முகம் பார்த்த பின்னே எதுவும் பிடிக்கலையே
உன்னோடைய பார்வையில என் உடம்பு வேகுதடி
பக்கத்தில நீ இருந்தா என் வயசு நோகுதடி


கண்ணிரண்டில் நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே




ஒ ஒ ஏதோ ஒன்னு சொல்ல
என் நெஞ்சுக்குழி தள்ள
நீ பொத்தி வைச்ச ஆசையெல்லாம்
கண்முன்னே தள்ளாட
கண்ணாமுச்சி ஆட்டம்
என் கண்ணுக்குள்ள ஆட
நீ சொல்லும் சொல்லும் சொல்லை கேட்காமலே
உந்தன் உள்ளம் திண்டாட
உள்ளுக்குள்ள பட படக்க
நெஞ்சிக்குள்ள சிறகடிக்க
கண்ணுரெண்டும் ரெக்கைக்கட்டி மேலே கீழே படபடக்க
பட்டுபூச்சி பட்டாம்பூச்சி ஆனேனே


ஒம்முத்து முத்து பேச்சு
என் சங்கீதமா ஆச்சு
நின்னுபோச்சு எம்மூச்சு
பஞ்சுமெத்தை மேகம்
அது செஞ்சிவச்ச தேகம்
நீ தூரத்துல நின்னாக்கூட
பொங்கிடுதே என் மொகம்
முத்தக்கட்டு மொழி அழகில்
குத்திக்குத்தி கொன்ன வலே
எ சிக்கிக்கிட்ட என் மனசில்
ஊறவச்சி தொவைச்சவலே
ஆத்துக்குள்ள அம்மிக்கல்லா போனேனே


ஊருக்குள்ள கோடிபொண்னே யாரையும் நெனைக்கலையே
உந்தன் முகம் பார்த்த பின்னே எதுவும் பிடிக்கலையே
உன்னோடைய பார்வையில என் உடம்பு வேகுதடி
பக்கத்தில நீ இருந்தா என் வயசு நோகுதடி
கண்ணிரண்டில் நான் விழுந்தேனே
காரணம் இன்றியே நான் சிரித்தேனே
என் மனதும் ஏனோ என்னிடம் இல்லை
வேண்டியே உன்னிடம் நான் தொலைத்தேனே
என் உயிரின் உயிரே
என் இரவின் நிலவே
என் அருகில் வரவே
நீ தருவாய் வரமே ஒ ஒ ஒ

Sunday, November 14, 2010

கருப்பும் ஓர் அழகு என்று கண்டு கொண்டேன் உன்னாலே


Style Style தான்
இது super Style தான்
இந்த‌ ஸ்டைலுக்கேத்த
மையிலு நானு தான்!
Figure Figure தான்
நீ super figure தான்
இந்த‌ ஃபிக‌ருக்கேத்த
மைன‌ர் நானு தான்!
touch touch touch touch
என்ன‌ touch me!
இச்சு இச்சு இச்சு இச்சு
என்னை kiss me !
ஏழு மணிக்கு மேல நானும் இன்பலட்சுமி

Style Style தான்
இது super Style தான்
இந்த‌ ஸ்டைலுக்கேத்த
மையிலு நானு தான்!
Figure Figure தான்
நீ super figure தான்
இந்த‌ ஃபிக‌ருக்கேத்த
மைன‌ர் நானு தான்!
touch touch touch touch
என்ன‌ touch me!
இச்சு இச்சு இச்சு இச்சு
என்னை kiss me !
ஏழு மணிக்கு மேல நீயும் இன்பலட்சுமி!

காதலிச்சா கவிதை வரும் கண்டு கொண்டேன் பெண்ணாலே
கருப்பும் ஓர் அழகு என்று கண்டு கொண்டேன் உன்னாலே
எங்கெங்கே shock அடிக்கும் அறிந்துக்கொண்டேன் பெண்ணாலே
எங்கெங்கே தேள் கடிக்கும் தெரிந்து கொண்டேன் உன்னாலே
காஷ்மீர் ரோஜாவே கைக்கு வந்தாயே
மோந்து பார்க்கும் முன்னே முள்ளெடுத்து குத்தாதே
அழகு ராஜாவே அவசரம் ஆகாதே
மொட்டு மலரும் முன்னே முட்டி முட்டி சுத்தாதே
அடி ராத்திரி வரவே என் ரகசிய செலவே
ஒரு காத்தடிக்குது சேத்தணைக்கணும் காத்திரு நிலவே

Style Style தான்
இது super Style தான்
இந்த‌ ஸ்டைலுக்கேத்த
மையிலு நானு தான்!
Figure Figure தான்
நீ super figure தான்
இந்த‌ ஃபிக‌ருக்கேத்த
மைன‌ர் நானு தான்!
touch touch touch touch
என்ன‌ touch me!
இச்சு இச்சு இச்சு இச்சு
என்னை kiss me !
ஏழு மணிக்கு மேல நானும் இன்பலட்சுமி


பச்சரிசி பல்லழகா பால் சிரிப்பில் கொல்லாதே
அழகு மணி தேரழகி அசைய விட்டு கொல்லாதே
நெத்தி தொடும் முடியழகா ஒத்தை முடி தாராயோ
கற்றை மலர் குழலழகி ஒத்தை மலர் தாராயோ
அங்கே தீண்டாதே ஆசை தூண்டாதே
சும்மா கிடந்த சங்க ஊதி விட்டு போகாதே
ஊடல் கொள்ளாதே உள்ளம் தாங்காதே தலைவி
காய்ச்சல் கொண்டால் தலையணையும் தூங்காதே
அட கெட்டது மனசு வந்து முட்டுது வயசு
உன்ன பார்த்த பொழுது வேர்த்த
பெண்களில் நானொரு தினுசு

Saturday, November 13, 2010

தென்னங்கீற்றும் பூங்காத்தும் என்ன பண்ணுதோ உன்னப்போல தோளைக்கட்டி பின்னிக்கொள்ளுதோ


நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
தூக்கம் வரல மாமா காக்க வைக்கலாமா
ஆக்கிவச்ச சோத்த ஆறப்போடலாமா

நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்

தென்னங்கீற்றும் பூங்காத்தும் என்ன பண்ணுதோ
உன்னப்போல தோளைக்கட்டி பின்னிக்கொள்ளுதோ
தென்னங்கீற்றும் பூங்காத்தும் என்ன பண்ணுதோ
உன்னப்போல தோளைக்கட்டி பின்னிக்கொள்ளுதோ
வெட்கம் பிடிக்குது பொறுத்துக்கையா
அது விலகி போனதும் எடுத்துக்கையா
கட்டில் போட்டதும் தெரிஞ்சிக்கணும்
கொல்லை பக்கம் ஒதுங்கிட புரிஞ்சக்கணும்
அம்மாடி அதுக்கென்ன அவசரமோ
நிலாக்காயுது…..
நேரம் நல்ல நேரம்……
நெஞ்ச்ஜில் பாயுது…..
காமன் விடும் பானம்
தண்ணீர் கேட்கும் ஏ கண்ணே தாகம் தனிஞ்சதா
அத்தான் தேவை நான் தந்தேன் ஆசை குறஞ்சுதா
கொட்டிக்கிடக்குது ஊரளவு
இதில் வெட்டி எடுத்தது ஓரளவு
இன்று படுத்தது இதுவரைக்கும்
இனி நாளை இருப்பது இருவருக்கும்
அன்பே நீ…. அதிசய சுரங்கமடி…..

நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
தூக்கம் வரல மாமா காக்க வைக்கலாமா
ஆக்கிவச்ச சோத்த ஆறப்போடலாமா

நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்

Wednesday, October 20, 2010

அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு , காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே ,தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணால


கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறான் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளக் கூச்சம்


மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்

மாடு ரெண்டு பாத ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்லே இன்ப துன்பம் யாரால

கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறான் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளக் கூச்சம்

பறக்கும் திசைஏது இந்தப்பறவ அறியாது
உறவும் தெரியாது அது உனக்கும் புரியாது

பாறையிலே பூமொளச்சு பார்த்தவுக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு

காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணால

கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறான் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளக் கூச்சம்

உன்னைவிட நான் காதல் செய்து உன்னை வெல்வேன் எவர் கண்டார்


துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்
இதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்
எப்பவும் திறக்கும் எவர் கண்டார்
மனமே திகைக்காதே
உனைப் பார்த்த நிமிஷத்தில் இருவிழி நிலைத்ததை
இமைகளைத் தொலைத்ததை எவர் கண்டார்
உனைப் பார்த்த நிமிஷத்தில் உடல் மெல்லக் குளிர்ந்ததை
உயிர் கொஞ்சம் உறைந்ததை எவர் கண்டார்
மனமே திகைக்காதே

துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்

இனி முத்தங்களாலே தினம் குளிக்கலாம்
எவர் கண்டார் எவர் கண்டார்
என் முந்தானைக்குள் நீ வசிக்கலாம்
எவர் கண்டார் அதை எவர் கண்டார்
மாலை வந்து சேருமுன்னே
பிள்ளை வரலாம் எவர் கண்டார்
அத்து மீற நினைக்காதே
குத்தி விடுவேன் எவர் கண்டார்

துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்

என் தூக்கத்தையும் நீ திருடலாம்
எவர் கண்டார் எவர் கண்டார்
நீ கண்களைக் கைதும் செய்யலாம்
எவர் கண்டார் அதை எவர் கண்டார்
மோகம் வந்தாள் உன் நெஞ்சில்
முட்டி விடுவேன் எவர் கண்டார்
உன்னைவிட நான் காதல் செய்து
உன்னை வெல்வேன் எவர் கண்டார்

துடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது
எப்பவும் வரலாம் எவர் கண்டார்

ஒழுக்கத்திலே ராமனா இருங்க சீதைங்களை தேடி தான் புடிங்க


ஹே ஊர விட்டு உறவை விட்டு, சாதி விட்டு,
சாமி விட்டு எல்லை விட்டு,
கொல்லை விட்டு, மானம் விட்டு, ஈரம் விட்டு
மனச மட்டும் பார்க்குமட காதல்
நல்ல மனசை மட்டும் பார்க்குமட காதல்


காதல் பண்ண திமிரு இருக்கா?
கைய புடிக்க தெம்பு இருக்கா?
உனக்கு ஏத்த பொண்ணு இருந்தால்
அவளுக்கு உன்னை புடிச்சு இருந்தால்
கள்ளத்தனமா காதல் பண்ணு
ஊர் அறிய கல்யாணம் பண்ணு

காதல் பண்ண திமிரு இருக்கா?
கைய புடிக்க தெம்பு இருக்கா?
உனக்கு ஏத்த பொண்ணு இருந்தால்
அவளுக்கு உன்னை புடிச்சு இருந்தால்
கள்ளத்தனமா காதல் பண்ணு
ஊர் அறிய கல்யாணம் பண்ணு

பேரா பேரா செல்ல பேரா
ஜோரா ஜோரா லவ் பண்ணு பேரா

பொண்ணுங்கள நம்புறது தப்பு
கவுந்துபுட்ட ஊரெல்லாம் கப்பு
காதல் ஒரு வாலிப மப்பு
இறங்கிபுட்டா ஒண்ணுமில்லை சப்பு
நெஞ்சுக்குள்ள வேணுமடா உப்பு
இல்லைன்னாக என் கதி தான் அப்பு

ஆத்தா ஆத்தா சொல்லு ஆத்தா
காதல் எல்லாம் என்ன பண்ணும் ஆத்தா

ஒழுக்கத்திலே ராமனா இருங்க
சீதைங்களை தேடி தான் புடிங்க
தேவதாஸ மறங்கட மொதல்ல
மன்மதன நெனைங்கட அதிலே
கெட்டியான காதலை ஒடைக்க
கொம்பனாலும் முடியாது இங்கே

பேரா பேரா – என்ன கிளவி
செல்ல பேரா – சொல்லு சொல்லு
ஜோர ஜோரா லவ் பண்ணு பேரா

என்ன புடிச்ச பொண்ண நான் பார்த்தேன்
என் மனசை அவக்கிட்ட கொடுத்தேன்
என்ன புடிச்ச பொண்ண நான் பார்த்தேன்
என் மனசை அவக்கிட்ட கொடுத்தேன்
அவ அப்பன் கோவக்காரன்,
அண்ணன் கூட அவசர காரன்
எப்படி நான் சரிகட்ட போறேன்
எப்ப நானும் ஜோடி சேர போறேன்

ஆத்தா ஆத்தா சொல்லு ஆத்தா
என் காதலுக்கு வழி என்ன ஆத்தா

சந்தையில அப்பனோட பார்த்தால்
வேட்டியதான் இறக்கி நீ விடு டா
கோயிலுல ஆத்தாவோட பார்த்த
பட்டுனு தான் காலுல விழுடா
பஸ்க்குள்ள பாட்டியோட பார்த்தால்
இடம் கொடுத்து டிக்கெடையும் எடு டா

பேரா பேரா செல்ல பேரா
அவ அண்ணன் கிட்ட எடு நல்ல பேரா

காதல் பண்ண திமிரு இருக்கா?
கைய புடிக்க தெம்பு இருக்கா?
உனக்கு ஏத்த பொண்ணு இருந்தால்
அவளுக்கு உன்னை புடிச்சு இருந்தால்
கள்ளத்தனமா காதல் பண்ணு
ஊர் அறிய கல்யாணம் பண்ணு

ஊர் அறிய கல்யாணம் பண்ணு

Saturday, October 16, 2010

கற்பனை கொஞ்சிடும் காலடிச் சத்தங்களே அடடா இந்தக் காவியக் கோவிலைப் பார்த்து எழுதியதோ - தலைவா


பட்டுக் கன்னம் தொட்டுக் கொள்ள ஒட்டிக் கொள்ளும்
ஒட்டிக் கொண்டு கட்டிக் கொள்ள உள்ளம் துள்ளும்
தென்றல் வந்து உன்னைக் கண்டு
மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா
பட்டுக் கன்னம் தொட்டுக் கொள்ள ஒட்டிக் கொள்ளும்
ஒட்டிக் கொண்டு கட்டிக் கொள்ள உள்ளம் துள்ளும்
தென்றல் வந்து உன்னைக் கண்டு
மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா


நீலநதிக்கரை ஒரத்தில் நின்றிருந்தேன் ஒருநாள்
உந்தன் பூவிதழ் ஈரத்தில் என்னை மறந்திருந்தேன்
வானத்து மீன்களை மேகம் மறைத்தது போல்
தினமும் எந்தன் மோகத்தை நாணத்தில்
மூடி மறைந்திருந்தேன் மனதில்
நாணம் யாவும் நூலாடை நானே உந்தன் புது மேலாடை
மங்கை இவள் அங்கங்களில்
உங்கள் கரம் தொடங்கலாம் நாடகமே

பட்டுக் கன்னம் தொட்டுக் கொள்ள ஒட்டிக் கொள்ளும்
ஒட்டிக் கொண்டு கட்டிக் கொள்ள உள்ளம் துள்ளும்
தென்றல் வந்து உன்னைக் கண்டு
மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா


கற்பனை கொஞ்சிடும் காலடிச் சத்தங்களே
அடடா இந்தக் காவியக் கோவிலைப் பார்த்து
எழுதியதோ - தலைவா
புன்னகை சிந்திடும் பூந்தமிழ் ஓவியமே -கிளியே
உந்தன் - பூவுடல் பார்த்த ப பின் சிற்பம் வடித்தனரோ -கிளியே
ஆசைத் தீயை தூண்டாமே போதைப் பூவைத் தினம் தூவாதே
அந்தியிலே வெள்ளி நிலா அள்ளித் தரும் சுகங்களே ஆயிரம்

பட்டுக் கன்னம் தொட்டுக் கொள்ள ஒட்டிக் கொள்ளும்
ஒட்டிக் கொண்டு கட்டிக் கொள்ள உள்ளம் துள்ளும்
தென்றல் வந்து உன்னைக் கண்டு
மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா

பட்டுக் கன்னம் தொட்டுக் கொள்ள ஒட்டிக் கொள்ளும்
ஒட்டிக் கொண்டு கட்டிக் கொள்ள உள்ளம் துள்ளும்
தென்றல் வந்து உன்னைக் கண்டு
மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா

யாதுமாகி என் உள் நின்றாய்


என் செல்லம்; என் சினுக்கு
என் அம்முக்குட்டி; என் பொம்முக்குட்டி
என் புஜ்ஜுக்குட்டி; என் பூனைக்குட்டி

செல்லமாய் செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாதுமாகி என் உள் நின்றாயடியே

உன் கையில் நான் குழந்தையடி
என் கையில் நீ குழந்தையடி
ஒரு வார்த்தை சொன்னாலடி
நாம் தாலி கட்டிக்கொள்வோம்

Tell me now tell me love
Tell me Tell me tell me now

சந்திரத்தட்டில் சோறூட்டி
சுந்தரி உன்னை தூங்கவைப்பேன்
உதட்டால் உதட்டை துடைத்திடுவேன்
நட்சத்திரங்கள் எல்லாமே அட்சதை தூவி வாழ்த்திடுமே
அதற்காய் அன்பே காத்திருப்பேன்
நீ என்பதும் அடி நான் என்பதும்
இன்று நாம் ஆகி போகின்ற நேரம்...

காலை சூரியன் குடைப்பிடிக்க
கோலங்கள் எல்லாம் வடம் பிடிக்க
கிளியே உன்னை கைப்பிடிப்பேன்
நட்சத்திரங்கள் வழியாக
உன்னுடன் நானும் பேசிடுவேன்
உயிரால் உயிரை அனைத்திடுவேன்
வானாகினாய் காற்றின் வெளியாகினாய்
எந்தன் ஊணாகி உயிரானாய் பெண்ணே...

என் இமையை திறந்தால் நீ இருப்பாய்


என் மேல் விழுந்த மழை துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்

என் மேல் விழுந்த மழை துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

மண்ணை திறந்தால் நீர் இருக்கும்
என் மனதை திறந்தால் நீ இருப்பாய்
ஒளியை திறந்தால் இசை இருக்கும்
என் உயிரை திறந்தால் நீ இருப்பாய்
வானம் திறந்தால் மழை இருக்கும்
என் வயதை திறந்தால் நீ இருப்பாய்
இரவை திறந்தால் பகல் இருக்கும்
என் இமையை திறந்தால் நீ இருப்பாய்

என் மேல் விழுந்த மழை துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

இலையும் மலரும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கரையும் உரசுகையில்
பேசும் பாஷை பேசிடுமோ
மண்ணும் விண்ணும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிகொண்டால்
பாஷை ஊமை ஆகிவிடுமோ

என் மேல் விழுந்த மழை துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய் ?
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?

ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே


ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசை ஊஞ்சலிலாடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
உந்தன் ஞாபகம் பூமழை தூவும்
காற்றிலே சாரல் போலே பாடுவேன்
காதலை வாழ்கவென்று வாழ்த்துவேன்
நீ வரும் பாதையில் பூக்களாய் பூத்திருப்பேன்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசை ஊஞ்சலிலாடும்

மனதில் நின்றே காதலியே
மனைவியாக வரும் போது
சோகம் கூட சுகமாகும்
வாழ்க்கை இன்ப வரமாகும்
உன் வாழ்வில் செல்வங்களெல்லாம்
ஒன்றாக சேர்ந்திடவேண்டும்
பூவே உன் புன்னகை என்றும்
சந்தோஷம் தந்திடவேண்டும்
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால்
வாழ்வே சொர்க்கம் ஆகுமே
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால்
வாழ்வே சொர்க்கம் ஆகுமே

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசை ஊஞ்சலிலாடும்


இன்னும் நூறு ஜென்மங்கள்
சேரவேண்டும் சொந்தங்கள்
காதலோடு வேதங்கள்
ஐந்து என்று சொல்லுங்கள்
தென்பொதிகை சந்தன காற்றும்
உன் வாசல் வந்திட வேண்டும்
ஆகிய கங்கை உந்தன் நெஞ்சோடு
பொங்கிட வேண்டும்
கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்
நிஜமாய் இன்று ஆகுமே
கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்
நிஜமாய் இன்று ஆகுமே

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசை ஊஞ்சலிலாடும்

Thursday, October 14, 2010

ஒரு பார்வை சிறு பார்வை உதிர்த்தால் உதிர்த்தால் பிழைப்பேன் பிழைப்பேன் ...


ஆஹா… அடடா…

பெண்ணே உன் அழகில்
நான் கண்ணை சிமிட்டவும்
மறந்தேன்(ஹே)
ஆனால் (ஹே)
கண்டெஏன் (ஹே)
ஓர் ஆயிரம் கனவு (ஹே)
கரையும்
என் ஆயிரம் இரவு
நீ தான் வந்தாய் சென்றாய்
என் விழிகள் இரண்டை திருடிக்கொண்டாய்
ஓ ஹோ

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணேஓமன பெண்ணே ஓமன
ஓ ஹோ..
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

நீ போகும் வழியில் நிழலாவேன் ஓ…

காற்றில் அசைகிறது உன் சேலை
விடிகிறது என் காலை
உன் பேச்சு உன் பார்வை
நகர்ந்திடும் பகலை இரவை



பிரிந்தாலும் இணைந்தாலும்
உயிர்கூட்டின் சரி பாதி உனதே
உன் இன்பம் உன் துன்பம் எனதே
என் முதலோடு முடிவானாய்

ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓ ஹோ..
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

மரகத தொட்டிலில் மலையாளிகள் தாராட்டும்
பெண்ணழகே மாதங்கத் தோப்புகளில்
பூங்குயில்கள் இனச் சேரான்னு
புல்லான்குழல் பூதுகையான
நின் அழகே நின் அழகே

தள்ளிப்போனால் தேய் பிறை ஆகாய வெந்நிலாவே
அங்கேயே நின்றிடாதே நீ வேண்டும் அருகே
ஒரு பார்வை சிறு பார்வை
உதிர்த்தால் உதிர்த்தால்
பிழைப்பேன் பிழைப்பேன் பொடியன்

ஓ ஹோ..
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓ ஹோ..
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

ஓ ஹோ..
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமன
ஓ ஹோ..
ஓமன பெண்ணே ஓமன பெண்ணே ஓமனே
ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

ஓமன பெண்ணே உனை மறந்திட முடியாதே
ஓமன பெண்ணே உயிர் தருவது சரிதானே

உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிர் நான்


வெள்ளி மலரே வெள்ளி மலரே…
வெள்ளி மலரே வெள்ளி மலரே
நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ

இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூங்தல் சேர்வதற்கு
இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூங்தல் சேர்வதற்கு

ஓ… வெள்ளி மலரே வெள்ளி மலரே

ஏ…
மின்னொளியில் மலர்வன தாழம்பூக்கள்
கண்ணொளியில் மலர்வன காதல் பூக்கள்
நெஞ்சுடைந்த பூவே நில்
ஏ வெட்கங்கெட்ட தென்றலுக்கு வேலையில்லை
தென்றலுக்கும் உங்களுக்கும் பேதமில்லை
ஆடைகொள்ளப் பார்ப்பீர் ஐயோ தள்ளி நில் நில்
வான்விட்டு வாராய் சிறகுள்ள நிலவே
தேன்விட்டுப் பேசாய் உயிருள்ள மலரே
உன்னைக்கண்டு உயிர்த்தேன் சொட்டுதே சொட்டுதே

வெள்ளி மலரே வெள்ளி மலரே…
வெள்ளி மலரே வெள்ளி மலரே
நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ

இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூங்தல் சேர்வதற்கு

ஏ…
வனங்களில் பூந்தளிர் தேடும்போதும்
நதிகளில் நீர்க்குடைந்தாடும்போதும்
உந்தன் திசை தேடும் விழிகள்
தொலைவினில் தரைதொட்டு ஆடும் மேகம்
அருகினில் செல்லச்செல்ல ஓடிப்போகும்
நீயும் மேகம்தானா நெஞ்சைத் தொட்டுச்சொல் சொல்
மழையிலும் கூவும் மரகதக் குயில் நான்
இரவிலும் அடிக்கும் புன்னகை வெயில் நான்
உன் நெஞ்சில் வசிக்கும் இன்னொரு உயிர் நான்

வெள்ளி மலரே வெள்ளி மலரே…

நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ

இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூங்தல் சேர்வதற்கு

ஆசை பார்வை பார்த்து கொண்டது அக்டோபர் மாதம் 7ஆம் நாள்


Go Rey Go Go Rey
Go Rey Go Go Rey
Go Rey Go Go Rey Go

பூட்டு போட்ட பூவே உன் கண்ணில் மழையை வைத்தாய்
ஏப்ரல் மாத வெயிலை உன் சொல்லில் ஏன் வைத்தாய்
பூட்டு போட்ட பூவே உன் கண்ணில் மழையை வைத்தாய்
ஏப்ரல் மாத வெயிலை உன் சொல்லில் ஏன் வைத்தாய்

உள்ளே தண்ணீர் வெளியே வெப்பம் ரெண்டும் சேர்ந்தது பெண்ணியமே
நீ தீயை எரிந்தால் தண்ணீர் ஆவேன் தள்ளி இருப்பது கன்னியமே
மதனா மதனா
நான் மஞ்சம் வந்த தங்க தேரா

Go Rey Go Go Rey
Go Rey Go Go Rey
Go Rey Go Go Rey Go

முதல் முத்தம் கொடுத்தது எவ்விடம்
முதல் மொட்டு உடைந்தது எவ்விதம்
சரியாக சொல்லி விட்டால் அன்பு
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு
முதல் முத்தம் கொடுத்தது எவ்விடம்
முதல் மொட்டு உடைந்தது எவ்விதம்
சரியாக சொல்லி விட்டால் அன்பு
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு

இதழில் மேலே பாய்ந்த என் முத்தம்
இடறி விழுந்தது கன்னத்தில்
ரெண்டோ மூன்றோ தோல்வி அடைந்து
மொட்டு உடைந்தது வேகத்தில்
ரதியே ரதியே
நான் சொல்லிய உண்மைகள் நூற்றுக்கு நூறே
Go Rey Go Go Rey
Go Rey Go Go Rey
Go Rey Go Go Rey Go

oh girl my love is true
just turn and leave me alone you

Go Rey Go Go Rey
if you want to be mine
Go Rey Go Go Rey
if you want to be mine

முதல் முறை பார்த்தது எந்த நாள்
உன்னில் முதல் விரல் பதித்தது எவ்விடம்
சரியாக சொல்லி விட்டால் அன்பு
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு
முதல் முறை பார்த்தது எந்த நாள்
உன்னில் முதல் விரல் பதித்தது எவ்விடம்
சரியாக சொல்லி விட்டால் அன்பு
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு

ஆசை பார்வை பார்த்து கொண்டது அக்டோபர் மாதம் 7ஆம் நாள்
முதல் விரல் பதிந்தது எவ்விடம் என்பதை
என் ஆடைகள் அறியும் நானறியேன்
மதனா மதனா
நான் சொல்லிய உண்மைகள் நூற்றுக்கு நூறே

Go Rey Go Go Rey
if you want to be mine
Go Rey Go Go Rey
if you want to be mine

ஜாமத்தில் தூங்காத விழியின் சந்திப்பில் என்னென்ன லயம்


சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையோடு
என்முன்னே யார் வந்தது தமிழ்
சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது

கை என்றே சென்காந்தமலரை
நீ சொன்னால் நான் நம்பவோ
கால் என்றே செவ்வாழை இணைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ
மை கொஞ்சம் பொய் கொஞ்சம்
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையோடு
என்முன்னே யார் வந்தது தமிழ்
சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது


அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்திதேன் செந்தூர இதழ்களில்
சிந்தி தேன் பாய்கின்ற உறவை
சிந்தி தேன் பாய்கின்ற உறவை
அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்திதேன் செந்தூர இதழ்களில்
சிந்தி தேன் பாய்கின்ற உறவை
சிந்தி தேன் பாய்கின்ற உறவை

கொஞ்சம்தா ....
கொஞ்சத்தா .....
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையோடு
என்முன்னே யார் வந்தது தமிழ்
சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது

ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டும்
விழி தொட்டும்
ஜாமத்தில் தூங்காத விழியின்
சந்திப்பில் என்னென்ன லயம் தமிழ்
சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது
சந்தத்தில் மாறாத நடையோடு
என்முன்னே யார் வந்தது தமிழ்
சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது

பார்க்காமல் மெல்லப் பார்த்தாலே அதுதானா காதல் கலை


மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான் வாழும் மானிடர் காதல் என்பதா
மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான் வாழும் மானிடர் காதல் என்பதா

இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா
சரசம் பயிலும் விழியில் வருமே
இது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுமே
பார்க்காமல் மெல்லப் பார்த்தாலே அதுதானா காதல் கலை
தோளோடு அள்ளிச் சேர்த்தாலே அதுதானா மோக நிலை
இதுதான் சொர்க்கமா
இது காமதவேனின் யாக சாலையா

மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான் வாழும் மானிடர் காதல் என்பதா

கலையெல்லாம் கற்றுக் கொள்ளும் பருவம் பருவம்
கடல்நீர் அலைபோல் மனமும் அலையும்
கரு நீலக் கண்கள் ரெண்டும் பவளம் பவளம்
எரியும் விரகம் அதிலே தெரியும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம் இதன் எல்லை யாரறிவார்
ஏதேதோ சுகம் போதாதோ அதன் ஏக்கம் யாரறிவார்
முதலாய் முடிவாய் இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்
மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான் வாழும் மானிடர் காதல் என்பதா

Tuesday, October 12, 2010

என் காதல் என்னாகுமோ உன் பாதத்தில் மண்ணாகுமோ


வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
எந்நேரம் என்னை பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம் என் முன்னே
வந்தாடுதே உள் நெஞ்சம் திண்டாடுதே
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன ?
உன்னாலே பல ஞாபகம் என் முன்னே
வந்தாடுதே உள் நெஞ்சம் திண்டாடுதே

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
எந்நேரம் என்னை பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம் என் முன்னே வந்தாடுதே

மஜ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ
உன்னை கண்டவரை கண்கலங்க நிக்க வைக்கும் தீ நீ
பெண்ணே ஏனடி உண்மை சொல்லடி
ஒரு புன்னகயில் பெண்ணினமே கோபபட்டதேனடி
தேவதை வாழ்வது வீடிலை கோவில்
கடவுளின் கால்தடம் பார்க்கிறேன்
ஒன்ற இரண்டா உளரலை பாட
கண்முடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்

உன்னாலே பல ஞாபகம் என் முன்னே
வந்தாடுதே உள் நெஞ்சம் திண்டாடுதே

எந்தன் மனதை கொள்ளையடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லகினில் தூக்கிசெல்ல
கட்டளைகள் விதிதாய்
உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று
கிடைக்க உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதல் என்னாகுமோ உன் பாதத்தில் மண்ணாகுமோ

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
எந்நேரம் என்னை பார்த்து விளையாடுதோ

Monday, October 11, 2010

கனவுகளில் வாழ்ந்த நாளை கண் எதிரே பார்க்கிறேன்



எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாய்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
இன்னும் கண்கள் திறக்காத செல்வம்
ஒரு கோடி பூ பூக்கும் வெக்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்...
அறிவை மயக்கும் மாய தாகம்
இவளைப் பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்துப் பார்க்க நெஞ்சம் ஏங்கும்

கனவுகளில் வாழ்ந்த நாளை
கண் எதிரே பார்க்கிறேன்
கதைகளிலே கேட்டப் பெண்ணா
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
அங்கும் இங்கும் ஓடும் கால்கள்
அசைய மறுத்து வேண்டுதே
இந்த இடத்தில் இன்னும் நிற்க
இதயம் கூட ஏங்குதே..
என்னானதோ... ஏதானதோ...
கண்ணாடி போல் உடைந்திடும் மனது
கவிதை ஒன்று பார்த்து போக
கண்கள் கலங்கி நானும் ஏங்க
மழையின் சாரல் என்னைத் தாக்க
விழிகள் எல்லாம் கேள்வி கேட்க

எங்கேயோ பார்த்த...

ஆதி அந்தமும் மறந்து
உன் அருகில் கரைந்து நான் போனேன்
ஆண்கள் வெக்கபடும் தருணம்
உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
இடி விழுந்த வீட்டில் இன்று
பூச்செடிகள் பூக்கிறதே
இவள் தானே உந்தன் பாதி
கடவுள் பதில் கேக்கிறதே
வியந்து வியந்து உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து
உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து...

என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே...


இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே...
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே...
கைகள் தானாய் கோர்த்தாய் கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்
இன்பம் இன்பம் சிங்கார லீலா...

பாடி வரும் வான் மதியே பார்வைகளின் பூம்பனியே
தேவ சுக தேன் கனியே மோக பரி பூரணியே
பூவோடு தான் சேர இளங்காற்று போராடும் போது
சேராமல் தீராது இடம் பார்த்து தீர்மானம் போடு...
புதுப்புது விடுகதை தொடத் தொட தொடர்கிறதே....

இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே... அன்பே...
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே... முன்பே...
உன்னை சேர்த்தாள் பாவை இன்னும் இங்கு ஏதோ தேவை
சொல்லு சொல்லு சிங்கார வேலா....

தேன் கவிதை தூதுவிடும் நாயகனே மாயவனே
நூலிடையை ஏங்க விடும் வானமுத சாதகனே
நீ தானே நான் பாடும் சுகமான ஆகாச வாணி
பாடாமல் கூடாமல் உறங்காது ரீங்காரத் தேனி
தடைகளை கடந்து நீ மடைகளை திறந்திடவா

இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே... அன்பே...
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே... முன்பே...
கைகள் தானாய் கோர்த்தாய் கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்
இன்பம் இன்பம் சிங்கார லீலா...

உன் பெயரை கூட தெரியாமல் மனம் உன்னை சுற்றுதே


விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயதை திருடிக் கொண்டாய்

யார் என்று
நான் யார் என்று
அடி மறந்தே போனதே
உன் பெயரை கூட தெரியாமல்
மனம் உன்னை சுற்றுதே
ஒரு நாள் வரை தான் எனை நினைத்தேன்
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்

காதல் என் காதில் சொல்வாய்
I just need your love
காதல் என் காதில் சொல்வாய்
just just give me love

விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயதை திருடிக் கொண்டாய்



சாலையில் நீ போகயிலே
மரம் எல்லம் கூடி
முனு முனுக்கும்

காலையில் உன்னை பார்ப்பதற்கு
சூரியன் கிழக்கில் தவம் இருக்கும்
யாரடி நீ யாரடி
அதிருதே என் ஆறடி

ஒரு கார்பன் கார்ட் என
கண்ணை வைத்து
காதலை எழுதி விட்டாய்

அந்த காதலை நானும்
வாசிக்கும் முன்னே
எங்கே ஓடுகிராய்

போகாதே அடி போகாதே
என் சுடிதார் சொர்கமே
நீ போனாலே நீ போனாலே
என் வாழ் நாள் ஸொர்பமே

விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயதை திருடிக் கொண்டாய்

ரஹொ ரஹொ ரஹொ ரஹ
ரஹொ ரஹொ ரஹொ ரஹ
ஹொ ஹொ வ
ஹொ ஹொ வ
ஹொ ஹொ வ
ஹொ ஹொ ஹொ ஹொ ஹொ

பூவிலே செய்த சிலை அல்லவா
பூமியே உனக்கு விலை அல்லவா
தேவதை உந்தன் அருகினிலே
வாழ்வதே எனக்கு வரம் அல்லவா
மேகமாய் அங்கு நீயடி
தாகமாய் இங்கு நானடி

உன் பார்வை தூரலில் விழுந்தேன்
அதனால் காதலும் துளிர்த்ததடி
அந்த காதலை நானும் மறு நொடி பார்த்தேன்
மரமாய் அசையுதடி

இன்றொடு அடி இன்றொடு
என் கவலை முடிந்ததே
ஒரு பெண் கோழி நீ கூவித் தான்
என் பொழுதும் விடிந்ததே

விழிகளில் விழிகளில் விழுந்துவிட்டாய்
எனக்குள் எனையே ஒளித்து வைத்தாய்
சின்ன சின்ன சிரிப்பினில் சிதறடித்தாய்
சிதறிய இதயதை திருடிக் கொண்டாய்

யார் என்று
நான் யார் என்று
அடி மறந்தே போனதே
உன் பெயரை கூட தெரியாமல்
மனம் உன்னை சுற்றுதே
ஒரு நாள் வரை தான் எனை நினைத்தேன்
பல நாள் தொடரும் வலி கொடுத்தாய்

காதல் என் காதில் சொல்வாய்
காதல் என் காதில் சொல்வாய்

Sunday, October 10, 2010

உன் ஆசைக்கு எத்தனை வண்ணம் ஒரு ராத்திரி ஓவியம் தீட்டு


கொஞ்சும் மஞ்சள் பூக்கள்
அழகே உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை
அங்கே இங்கே கிள்ளும்
சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்
தூங்காத நெஞ்சம் இன்று தீவாகும்
நிலாவும் மெல்ல கண் மூடும்

கொஞ்சும் மஞ்சள் பூக்கள்
அழகே! உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை
அங்கே இங்கே கிள்ளும்


தீ மூட்டியதே குளிர்க் காற்று
என் வெட்கத்தின் நிறத்தினை மாற்று
உன் ஆசைக்கு எத்தனை வண்ணம்
ஒரு ராத்திரி ஓவியம் தீட்டு
வியர்வையிலே தினம்
பாற்கடல் ஓடிடும் நாளும்.
படகுகளா இது? பூவுடல்
ஆடிட இவள் மேனியை
என் இதழ் அளந்திடும் பொழுது
ஆனந்த தவம் இது!
உன் விரல் ஸ்பரிசத்தில்
மின்னலும் எழுமே!
அடடா என்ன சுகமே!

கொஞ்சும் மஞ்சள் பூக்கள்
அழகே! உன்னைச் சொல்லும்.
தென்றல் வந்து என்னை
அங்கே இங்கே கிள்ளும்.
சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்.
தூங்காத நெஞ்சம் இன்று தீவாகும்.
நிலாவும் மெல்ல கண் மூடும்.

உன் மேனியில் ஆயிரம் பூக்கள்
நான் வாசனை பார்த்திட வந்தேன்.
புல் நுனியினில் பனித் துளி போலே
உன் உயிருக்குள் நனைந்திட வந்தேன்.
மயங்குகிறேன் அதில்,
உணர்வுகள் ஓய்ந்தது ஏனோ?
வழங்குகிறேன் இவள்
உதடுகள் காய்ந்தது இவள் சேலையில்
பூக்களும் கட்டிலின் கீழே தூங்கிடலானது.
உன் வளையோசையில் நடந்தது இரவே!
நினைத்தால் என்ன சுகமே!

கொஞ்சும் மஞ்சள் பூக்கள்
அழகே! உன்னைச் சொல்லும்.
தென்றல் வந்து என்னை
அங்கே இங்கே கிள்ளும்.
சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்.
தூங்காத நெஞ்சம் இன்று தீவாகும்.
நிலாவும் மெல்ல கண் மூடும்.

கொஞ்சும் மஞ்சள் பூக்கள்
அழகே! உன்னைச் சொல்லும்.
தென்றல் வந்து என்னை
அங்கே இங்கே கிள்ளும்.

நான் உன்னை துரத்தியடிப்பதும் நீ எந்தன் தூக்கம் பறிப்பதும் சரியா சரியா முறையா காதல் பிறந்தால் இதுதான் கதியா


எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடி சொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப்
பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே

நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா


என் தூக்கத்தில் என் உதடுகள்
உன் பேர் சொல்லிப் புலம்பும் புலம்பும் ஊரே எழும்பும்
என் கால்களில் பொன் கொலுசுகள்
உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும்
பூப்போல இருந்த மனம் இன்று
மூங்கில்போல் வெடிக்குதடி சகியே சகியே சகியே
இதயம் துடிக்கும் உடலின் வெளியே

எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே


என் வீதியில் உன் காலடி
என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும்
உன் ஆடையின் பொன்னூலிலே
என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் உயிரே வலிக்கும்
நான் உன்னை துரத்தியடிப்பதும்
நீ எந்தன் தூக்கம் பறிப்பதும் சரியா சரியா முறையா
காதல் பிறந்தால் இதுதான் கதியா

எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடி சொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப்
பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே

நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா

என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்


ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே
பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே
அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே
தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே
அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்
மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

நீ காதல் என்றால் நான் சரியா தவறா


உன் சமையல் அறையில்நான் உப்பா சர்க்கரையா
நீ படிக்கும் அறையில்நான் கண்களா புத்தகமா

நீ விரல்கள் என்றால் நான் நகமா மோதிரமா
நீ இதழ்கள் என்றால் நான் முத்தமா புன்னகையா
நீ அழகு என்றால் நான் கவியா ஓவியனா
நான் வெட்கம் என்றால் நீ சிவப்பா, கன்னங்களா
நான் தீண்டல் என்றால் நீ விரலா, ஸ்பரிசங்களா
நீ குழந்தை என்றால் நான் தொட்டிலா, தாலாட்டா
நீ தூக்கம் என்றால் நான் மடியா, தலையணையா
நான் இத்யம் என்றால் நீ உயிரா, துடிதுடிப்பா

நீ கவிதைகள் என்றால் நான் வேரா விதை நிலமா
நீ விருந்து என்றால் நான் பசியா, ருசியா
நீ கைதி என்றால் நான் சிறையா, தண்டனையா
நீ மொழிகள் என்றால் நான் தமிழா, ஓசைகளா
நீ புதுமை என்றால் நான் பாரதியா, பாரதிதாசனா
நீ தனிமை என்றால் நான் துணையா, தூரத்திலா
நீ துணைதான் என்றால் நான் பேசவா, யோசிக்கவா
நீ திரும்பி நின்றால் நான் நிற்கவா, போய் விடவா
நீ போகிறாய் என்றால் நான் அழைக்கவா அழுதிடவா
நீ காதல் என்றால் நான் சரியா தவறா

உன் வலது கையில் பத்து விரல்
பத்து விரல் ....
என் இடக்கையில் பத்து விரல்
பத்து விரல் ...
தூரத்து மேகம் தூரல்கள் சிந்த தீர்த்த மழையில் தீக்குளிப்போம்

பாடுது பாட்டு ஒன்னு குயில் கேக்குது பாட்ட நின்னு


ஆசையக் காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு குயில்
கேக்குது பாட்ட நின்னு

ஆசையக் காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு குயில்
கேக்குது பாட்ட நின்னு

வாசம் பூவாசம் வாலிபக் காலத்து நேசம்
மாசம் தை மாசம் மல்லிக பூமணம் வீசும்
நேசத்துல, வந்த வாசத்துல,
நெஞ்சம் பாடுது சோடியத் தேடுது
பிஞ்சும் வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடையப் போடுது, பார்வையும்
சொந்தம் தேடுது மேடையில

தேனோ பூந்தேனு, தேன்துளி கேட்டது நானு
மானோ பொன்மானு தேயில தோட்டத்து மானு
ஓடிவர, உன்னத் தேடிவர,
தாழம்பூவுல தாவுற காத்துல
தாகம் ஏறுது ஆசையில
பார்க்கும்போதுல ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசையில

ஆசையக் காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு குயில்
கேக்குது பாட்ட நின்னு

சின்னச்சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு ஸ்னேகிதனே


நேற்று முன்னிரவில் உன்னித்திலவு மடியில் காற்று நுழைவதேனோ
உயிர் கலந்து களித்திருந்தேன்
இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில் கண்டு தவிப்பதேனோ
மனம் கலங்கி புலம்புகிறேன்
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில்
கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி

ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே
சின்னச்சின்னதாய் கோரிக்கைகள்
செவிகொடு ஸ்னேகிதனே
இதே அழுத்தம் அழுத்தம்
இதே அணைப்பு அணைப்பு
வாழ்வின் எல்லைவரை வேண்டும் வேண்டும்
வாழ்வின் எல்லைவரை வேண்டும் வேண்டுமே
ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே

சின்னச்சின்ன அத்துமீறல் புரிவாய்
என் Cell எல்லாம் பூக்கள் பூக்கச்செய்வாய்
மலர்களில் மலர்வாய்
பூப்பரிக்கும் பக்தன்போல மெதுவாய்
நான் தூங்கும்போது விரல்நகம் களைவாய்
சத்தமின்றி துயில்வாய்
ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணை பூசி
சேவைகள் செய்யவேன்டும்
நீயழும்போது நான் அழ நேர்ந்தால்
துடைக்கின்ற விரல் வேண்டும்
ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனே
சின்னச்சின்னதாய் கோரிக்கைகள்
செவிகொடு ஸ்னேகிதனே
நேற்று முன்னிரவில் உன்னித்திலவு மடியில் காற்று நுழைவதேனோ
உயிர் கலந்து களித்திருந்தேன்
இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில் கண்டு தவிப்பதேனோ
மனம் கலங்கி புலம்புகிறேன்
கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில்
கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடி


சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்
சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்
நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்
காதில் கூந்தல் நுழைப்பேன்
உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்
உப்புமூட்டை சுமப்பேன்
உன்னையள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து
கைக்குட்டையில் ஒளித்துக்கொள்வேன்
வேளை வரும்போது விடுதலை செய்து
வேண்டும் வரம் வாங்கிக்கொள்வேன்
(ஸ்னேகிதனே)

உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்


வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்
உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்...

வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்
உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்...

ஜன்னலில் வழி வந்து விழந்தது
மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
அழகு தெவதை அதிசய முகமே
தீப்பொறி என இரு விழிகளும்
தீக்குச்சி என எனை உறசிட
கோடிப்பூக்களாய் மலர்ந்தது மனமே
அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே
அளந்து பார்க்க பல விழி இல்லையெ
என்ன இருந்த போதிலும் அவள் எனதில்லையெ
மறந்து போ என் மனமே

வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்கா மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்
உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேண்டாம்...

அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது
ஆசையின் மழை அதில் நனை ந்தது
நூறு ஜன்மங்கள் நினைவினில் இருக்கும்
ஆறு போல் இந்த நாள் வரை உயிர் உருகிய
அந்த நாள் சுகம் அதை நினைக்கையில்
ரத்த நாளங்கள் ராத்திரி வெடிக்கும்
ஒரு நிமிஷம் கூட என்னைப் பிரியவில்லை
விவரம் ஏதும் அவள் அறியவில்லை
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ மனமே

உன்னை இன்றோடு நான் மறப்பேனே நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல் மேலும் மேலும் துன்பம் துன்பம் வேன்டாம்

காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன ? மௌனமா.. மௌனமா...


இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன ?
மௌனமா.. மௌனமா...

அன்பே எந்தன் காதல் சொல்லநொடி ஒன்று போதுமே
அதை நானும் மெய்ப்பிக்கத்தானே புது ஆயுள் வேண்டுமே
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்
என்ன சொல்லப் போகிறாய்...என்ன சொல்லப் போகிறாய்

இதயம் ஒரு கண்ணாடி உனது பிம்பம் விழுந்ததடி
இதுதான் உன் சொந்தம் இதயம் சொன்னதடி
கண்ணாடி பிம்பம் கட்டகயிர் ஒன்றும் இல்லையடி
கண்ணாடி ஊஞ்சல் பிம்பம் ஆடுதடி
நீ ஒன்று சொல்லடி பெண்ணே
இல்லை நின்று கொல்லடி கண்ணே
எந்தன் வாழ்க்கையே உந்தன் விழிவிளிம்பில்
என்னைத் துரத்தாதே உயிர் கரையேறாதே

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்

என்ன சொல்லப் போகிறாய்..
.
என்ன சொல்லப் போகிறாய்

சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன ?
மௌனமா.. மௌனமா...

விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது
பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி
இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது
கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி
பல உலக அழகிகள் கூடி உன் பாதம் கழுவலாம் வாடி
என் தளிர் மலரே இன்னும் தயக்கமென்ன
என்னைப் புரியாதா இது வாழ்வா சாவா

என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய் நியாயமா
என்ன சொல்லப் போகிறாய்
என்ன சொல்லப் போகிறாய் மௌனமா.. மௌனமா...
என்ன சொல்லப் போகிறாய்

ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே



ஏன் இதயம் உடைத்தாய் நொருங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

ஹோ ஹோசானா ஹோசானா
ஹோ ஹோ ஹொசானா ஹொசானா ஹோ

அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து
கந்தல் ஆகி போன நேரம் ஏதோ ஆச்சே
ஓ வானம் தீண்டி வந்தாச்சு
அப்பாவின் திட்டு எல்லாம்
காற்றோடு போயே போச்சே

ஹோசானா என் வாசல் தாண்டி போனாளே
ஹோசானா வேறு ஒன்றும் செய்யாமலே
நான் ஆடி போகிறேன் சுக்கு நூறு ஆகிறேன்
அவள் போன பின்பு எந்தன்
நெஞ்சை தேடி போகிறேன்
ஹோசானா வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்
ஹோசானா சாவுக்கும் பக்கம் வந்தேன்
ஹோசானா ஏன் என்றால் காதல் என்பேன்
ஹோசானா

everybody wanna know what we like-a feel like-a
I really wanna be here with you
It's not enough to say that we're made for each other
It's love that is hosaana true
hosaana, be there when you callin out my(me) name
hosaana, feeling like my(me) whole life has changed
I never wanna be the same
It's time we rearrange
I take a step, you take a step
I'm here callin out to you


ஹேல்லோ ஹெல்லோ ஹெல்லோ
யோ யோ ஹோசானா ஹோசானா
ஹோ ஹோசானா ஹோ
ஹா மீ & யூ ஓஹோ

வண்ண வண்ண பட்டுப்பூச்சி பூ தேடி பூ தேடி
அங்கும் இங்கும் அழைக்கின்றதே
ஹ சொட்டு சொட்டாய் தொட்டு போக
மேகம் ஒன்று மேகம் ஒன்று
எங்கெங்கோ நகர்கின்றதே
ஹோசானா பட்டுப்பூச்சி வந்தாச்சா
ஹோசானா மேகம் உன்னை தொட்டாச்சா
கிழிஞ்சல்கள் ஆகிறாய்
குழந்தை ஆகிறேன்
நான் உன்னை அள்ளி
கையில் வைத்து பற்றி கொள்கிறேன்
ஹேல்லோ ஹெல்லோ ஹெல்லோ ஓஹோ
ஹோசானா என் மீது அன்பு கொள்ள
ஹோசானா என்னோடு சேர்ந்து செல்ல
ஹோசானா உம் என்று சொல்லு போதும்
ஹோசானா

ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே
ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

Saturday, October 9, 2010

எல்லாம் சேர்ந்து உன் கண்ணில் மின்னும் எல்லாம் சேர்ந்து உன் கண்ணில் மின்னும்


சகியே ஸ்னேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்னேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

பச்சை நிறமே பச்சை நிறமே இச்சை மூட்டும் பச்சை நிறமே
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே
பச்சை நிறமே பச்சை நிறமே இலையின் இளமை பச்சை நிறமே
உந்தன் நரம்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே
எனக்கு சம்மதம் தருமே எனக்கு சம்மதம் தருமே

கிளையில் காணும் கிளியின் மூக்கு விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா பூமி தொடாத பிள்ளையின் பாதம்
எல்லா சிவப்பும் உந்தன் கோவம் எல்லா சிவப்பும் உந்தன் கோவம்
அந்தி வானம் அரைக்கும் மஞ்சள் அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்
தங்கத் தோடு ஜொலித்த மஞ்சள் கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்
மஞ்சள் மஞ்சள் மஞ்சள்
மாலை நிலவின் மரகத மஞ்சள் எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்

சகியே ஸ்னேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்னேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

அலையில்லாத ஆழி வண்ணம் முகிலில்லாத வானின் வண்ணம்
மயிலின் கழுத்தில் வாரும் வண்ணம் குவளைப் பூவில் குழைத்த வண்ணம்
ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்
எல்லாம் சேர்ந்து உன் கண்ணில் மின்னும் எல்லாம் சேர்ந்து உன் கண்ணில் மின்னும்

இரவின் நிறமே இரவின் நிறமே கார்காலத்தின் மொத்த நிறமே
காக்கைச் சிறகில் காணும் நிறமே பெண்மை எழுதும் கண்மை நிறமே
வெயிலில் பாடும் குயிலின் நிறமே
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே

சகியே ஸ்னேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்னேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

வெள்ளை நிறமே வெள்ளை நிறமே…
மழையில் நுரையும் தும்பை நிறமே…
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே விழியில் பாதி உள்ள நிறமே
மழையில் நுரையும் தும்பை நிறமே உனது மனசின் நிறமே
உனது மனசின் நிறமே உனது மனசின் நிறமே

Wednesday, October 6, 2010

பிரியாத வரம் ஒன்றை தர வேண்டும் சம்மதமா


என்னவோ என்னவோ என் வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தை இல்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக உன்னோடு நானாகவா ப்ரியமானவளே

என்னவோ என்னவோ என் வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தை இல்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக உன்னோடு நானாகவா ப்ரியமானவளே

மழை தேடி நான் நனைவேன் சம்மதமா சம்மதமா
குடையாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா
விரல் பிடித்து நகம் கடிப்பேன் சம்மதமா சம்மதமா
நீ கடிக்க நான் வளர்ப்பேன் சம்மதமா சம்மதமா
விடிகாலை வேளை வரை என் வசம் நீ சம்மதமா
இடைவேளை வேண்டுமென்று விடை கேட்கும் சம்மதமா
நீ பாதி நான் பாதி என்றிருக்க சம்மதமா
என்னுயிரில் சரி பாதி நான் தருவேன் சம்மதமா

என்னவோ என்னவோ என் வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தை இல்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக உன்னோடு நானாகவா ப்ரியமானவளே

இமையாக நான் இருப்பேன் சம்மதமா சம்மதமா
இமைக்காமல் பார்த்திருப்பேன் சம்மதமா சம்மதமா
கனவாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா
கண் மூடி தவம் இருப்பேன் சம்மதமா சம்ம்தமா
ஒரு கோடி ராத்திரிகள் மடி தூங்க சம்மதமா
பிரியாத வரம் ஒன்றை தர வேண்டும் சம்மதமா
பிரிந்தாலும் உனை சேரும் உயிர் வேண்டும் சம்மதமா

என்னவோ என்னவோ என் வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தை இல்லை
உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக உன்னோடு நானாகவா ப்ரியமானவளே


ப்ரியமானவளே
ப்ரியமானவளே..

உன் இரு கண் விழி பொல்லாது உள்ளது எப்போதும் சொல்லாது


புத்தகம் இன்றி சொல்லி தாரேன் வா உத்தரவின்றி உள்ளே வா
கட்டணம் இன்றி சொல்லி தாரேன் வா உத்தரவின்றி உள்ளே வா
நித்திரை இன்றி சொல்லி தாரேன் வா வா வா
புத்தகம் இன்றி சொல்லி தாரேன் வா உத்தரவின்றி உள்ளே வா
கட்டணம் இன்றி சொல்லி தாரேன் வா உத்தரவின்றி உள்ளே வா
நித்திரை இன்றி சொல்லி தாரேன் வா வா வா


சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை
சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை
நீ அக்கரை நான் இக்கரை
நீ அக்கரை நான் இக்கரை
கெஞ்சி கேட்கும் படி நீ ஏன் வைக்கிர
சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை

ஹேய் ஹேய் கேள்விக்கு பதில் என்ன தெரியாது
கலங்கி நிக்கிறேன் புரியாது
நீ சொல்லு நீ சொல்லு தெரிஞ்சிக்கிறேன்
நூறு மார்க்கு இந்த பரிட்சையில் வாங்கி காட்டுறேன்
உத்தரவின்றி உள்ளே வா சக்கரை இனிக்கிற சக்கரை
உத்தரவின்றி உள்ளே வா எறும்புக்கு என்ன அக்கறை
உத்தரவின்றி உள்ளே வா சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை
நீ அக்கரை நான் இக்கரை
நீ அக்கரை நான் இக்கரை
என்னை சொக்கும்படி ஏம்மா வைக்கிர

கிட்ட வந்து தட்டு நீ கேட்காதைய்யா தவிலு
அது கேட்டா தட்டும் விரலு
சின்ன நூலை தன்னோடு சேர்த்து கொள்ளும் ஊசி
அந்த சங்கதி என்ன யோசி
என்னது பண்ணுது சிங்காரி
இப்படி நிக்கிற ஹொய்யாரி
உன் இரு கண் விழி பொல்லாது
உள்ளது எப்போதும் சொல்லாது
ராத்திரி நேர பூஜை தினம் புரிந்திட
உத்தரவின்றி உள்ளே வா
பூத்திரி ஏத்தி வைத்து அதை படித்திட
உத்தரவின்றி உள்ளே வா
மன்மத ராகம் ஒன்று மனம் இசைத்திட

வா வா சக்கரை இனிக்கிர சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை
நீ அக்கரை நான் இக்கரை
நீ அக்கரை நான் இக்கரை
கெஞ்சி கேட்கும் படி நீ ஏன் வைக்கிர
சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை


ரொம்ப ரொம்ப பாசாங்கு பண்ணாதேடா கண்ணா
நான் பாவப்பட்ட பெண்ணா
மெத்தை மீது தாவாது
தத்தை ஒன்று வாடும்
என் வித்தை காண தேடும்

தொட்டதும் பட்டதும் பூ மலரும்
முத்திட முத்திட தேன் சிந்தும்
கற்றது உன்னிடம் கையளவு
உள்ளது என்னிடம் கடலளவு
இலக்கிய மாலை நேரம் மனம் மயங்குது
உத்தரவின்றி உள்ளே வா
சுகம் என்னும் வெல்லம் பாய
மடை திறந்தது
உத்தரவின்றி உள்ளே வா
இனி ஒரு கேள்விக்கான விடை கிடைக்குது வா வா

சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை
சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை
நீ அக்கரை நான் இக்கரை
நீ அக்கரை நான் இக்கரை
கெஞ்சி கேட்கும் படி நீ ஏன் வைக்கிர
சக்கரை இனிக்கிற சக்கரை
அதில் எறும்புக்கு என்ன அக்கறை

உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன்


எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி
உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்

எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி
உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்

மேகமது சேராது வான் மழையும் வாராது
தனிமையில் தவித்தேனே உனை எண்ணி இளைத்தேனே
மேல் இமையும் வாராது கீழ் இமையும் சேராது
உனக்கிது புரியாதா இலக்கணம் தெரியாதா
சம்மதங்கள் உள்ள போதும் வார்த்தையொன்று சொல்ல வேண்டும்
வார்த்தைகள் வந்து சேரும் போது நாணம் என்னை கட்டி போடும்
மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசிடுமே

எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி
உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்

கைவளையல் குலுங்காமல் கால் கொலுசு சினுங்காமல்
அணைப்பது சுகமாகும் அது ஒரு தவமாகும்
மோகம் ஒரு பூப்போல தீண்டியதும் தீப்போல
கனவுகள் ஒரு கோடி நீ கொடு என் தோழி
அன்பை தந்து என்னை நீயும் தாங்கிக்கொண்டு நாட்களாச்சு
பூவைத் தொட்ட பின்புதானே முட்கள் கூட பூக்கள் ஆச்சு
விரல்கள் கொண்டு நீயும் பேசினால் விறகும் வீணையாகும்

எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி
உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்

உன்னை கண்ட நாளின்றே நான் செய்யும் பிழை


உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண் இமைகளின்
என் பார்வையில் மீதியும் தேய
ஹ்ம்ம்..இன்று நேற்று
என்று இல்லை என் இந்த நிலை
ஹ்ம்ம்..உன்னை கண்ட
நாளின்றே நான் செய்யும் பிழை
உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண் இமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய

உனக்குள் இருக்கும் மயக்கம்
அந்த உயரத்து நிலவை அழைக்கும்
இதழில் விரிந்து குளிர்க்கும்
என் இரவினை பனியில் நனைக்கும்
எதிரினில் நான் எரிகிற நான்
உதிர்ந்திடும் மழைச்சரம் நீயே
ஒரு முறை அல்ல முதல் முறை அல்ல
தினம் தினம் என்னை சுழும் தீ

உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போக
உன் இமைகளின் கண் இமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய

முதல் நாள் பார்த்த வனப்பு
துளி குறையவும் இல்லை உனக்கு
உறக்கம் விழிப்பில் கனவாய்
உனை காண்பதே வழக்கம் எனக்கு
அருகினிலே வருகையிலே
துடிப்பதை நிறுத்துது நெஞ்சம்
முதல் முதல் இன்று
நிகழ்கிறதென்று நடிப்பதில் கொஞ்சம் வஞ்சமே

உன் சிரிப்பினில் உன் சிரிப்பினில்
என் மனதின் பாதியும் போஸ்
உன் இமைகளின் கண் இமைகளின்
மென்பார்வையில் மீதியும் தேய

ஹ்ம்ம்..இன்று நேற்று
என்று இல்லை என் இந்த நிலை
ஒஹோ..ஹ்ம்ம்..உன்னை கண்ட
நாளின்றே நான் செய்யும் பிழை

நிழல்களின் உள்ளே உள்ள நிஜங்களை தேடினேன் நீயாய் அதை சொல்வாய் என்று நித்தம் உன்னால் வாடினேன்


கரு கரு கரு கரு
கண்ணு பட்டு ...
வாடிவிடும் வாசமல்லி
சந்தனத்தை பூசிவிடுங்க
அடுத்தது அடுத்தது ...
எப்போவென்னு மாமியாரு கேட்கும் முன்னே..?
அரை டஜன் பெத்து கொடுங்க....!!

தக தக தக தக
தங்க சிலை தவிக்குது
வெக்கதில போதும் அதை விட்டுவிடுங்க!!
ஆரிராரோ ஆரிராரோ நாளைக்கின்னு
தேவைப்படும் தாலாட்டுல
ஒன்னு ரெண்டு கத்துகொடுங்க...

உன் பனி துளி பனி துளி பனி துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ..?
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ..?
இது நனவாய் தோன்றும் கனவு
இது காலையில் தோன்றும் நிலவு
இது கண்ணை கண்ணை பரித்து
வெளிச்சம் தரும் இரவு

காதலா காதலா எண்ணவும் கூசுதே
ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே..

உன் பனி துளி பனி துளி பனி துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ..?
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ..?

கரு கரு கரு கரு
கண்ணு பட்டு ...
வாடிவிடும் வாசமல்லி
சந்தனதை பூசிவிடுங்க
அடுத்தது அடுத்தது ...
எப்போவென்னு மாமியாரு கேட்கும் முன்னே..?
அரை டஜன் பெத்து கொடுங்க....!!

தக தக தக தக
தங்க சிலை தவிக்குது
வெக்கதில போதும் அதை விட்டுவிடுங்க!!
ஆரிராரோ ஆரிராரோ நாளைக்கின்னு
தேவைப்படும் தாலாட்டுல
ஒன்னு ரெண்டு கத்துகொடுங்க...

விரல்களும் நகங்களும்
தொட்டு கொண்ட நேரங்கள்
எண்ணி அதை பார்த்ததில்லை
என்ற போதும் நூறுகள்
ஏதோ ஒரு தென்றல் மோதி
மெல்ல மெல்ல மாறினோம்
ஓ... உன்னை நானும் என்னை நீயும் எங்கே என்று தேடினோம்..?
நம்மை சுற்றி கூட்டம் வந்தும் தனியானோம்
தனிமையில் நெஞ்சுக்குளே பேசலானோம்
பேசும் போதே பேசும் போதே
மௌனம் ஆனோம்!!

உன் பனி துளி பனி துளி பனி துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ..?
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ..?

முகத்திரைகுள்ளே நின்று..
கண்ணாம் பூச்சி ஆடினாய்..
பொய்யால் ஒரு மாலை கட்டி ..
பூசை செய்து சூடினாய்

நிழல்களின் உள்ளே உள்ள
நிஜங்களை தேடினேன்
நீயாய் அதை சொல்வாய்
என்று நித்தம் உன்னால் வாடினேன்

சொல்ல நினைத்தேன் ஆனால் வார்த்தை இல்லை
உன்னை விட்டால் யாரும் எந்தன் சொந்தம் இல்லை
சொந்தம் என்று யாரும் இனி தேவை இல்லை...

உன் பனி துளி பனி துளி பனி துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ..?
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ..?
இது நனவாய் தோன்றும் கனவு
இது காலையில் தோன்றும் நிலவு
இது கண்ணை கண்ணை பரித்து
வெளிச்சம் தரும் இரவு

காதலா காதலா எண்ணவும் கூசுதே
ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே..

உன் பனி துளி பனி துளி பனி துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ..?
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ..?

Monday, October 4, 2010

கண்ணே உன் முன்னே வந்தால் என் நெஞ்சம் குழந்தை ஆகும்


கண்ணோடு கண் சேரும் போது வார்த்தைகள் எங்கே போகும்
கண்ணே உன் முன்னே வந்தால் என் நெஞ்சம் குழந்தை ஆகும்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தான் என்று உயிர் சொன்னதே

வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தான் என்று நிழல் சொன்னதே

உன்னோடு வாழ்ந்திடதானே நான் வாழ்கிறேன்
உன் கையில் என்னை தந்து தோள் சாய்கிறேன் ஒ தோள் சாய்கிறேன்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன்
அந்த நொடியில் என் எதிகாலம் நீ தான் என்று உயிர் சொன்னதே

வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் வழித்துணை நீ தான் என்று நிழல் சொன்னதே

இதுவரை என் இருதயம் இந்த உணர்வினில் தடுமாறவில்லை
முதல்முறை இந்த இளமையில் சுகம் உணர்கிறேன் நான் தூங்கவில்லை
குடையோடு நான் போனேன் வழியினில் என்னோ நனைகின்றேன்
கடிகாரம் இருந்தாலும் காலடி சத்தத்தில் மணி பார்த்தேன்
என் தனிமைக்கு தனிமைகள் நீ வந்து குடுத்தாய்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தான் என்று உயிர் சொன்னதே

வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தான் என்று நிழல் சொன்னதே

சிரிப்பினில் உன் சிரிப்பினில் என்னை சிறை எடுக்கிறாய் நான் மீளவில்லை
உறவுகள் ஒன்று சேர்கையில் என்ன ஆகிறேன் என்று தெரியவில்லை
உன்னோடு நான் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இனிக்கிறதே
உரையாடல் தொடர்ந்தாலும் மௌனங்கள் கூட பிடிக்கிறதே

என் கனவுக்கு கனவுகள் நீ வந்து குடுத்தாய்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தன் என்று உயிர் சொன்னதே

வழியில் உன் வழியில் வந்து நடந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தன் என்று நிழல் சொன்னதே

உன்னோடு வாழ்ந்திடதானே நான் வாழ்கிறேன்
உன் கையில் என்னை தந்து தோள் சாய்கிறேன் ஒ தோள் சாய்கிறேன்

விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீ தன் என்று உயிர் சொன்னதே

உன்னைக் காணாது உருகும் நொடி நேரம் பல மாதம் வருடம் என மாறும்


வளையோசை கலகலகலவென
கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது

சில நேரம் சிலுசிலுசிலு என
சிறகுகள் படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

சின்னப் பெண் பெண்ணல்ல
வண்ணப் பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான்
அன்று காதல் தேரோட்டம்

வளையோசை கலகலகலவென
கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது

சில நேரம் சிலுசிலுசிலு என
சிறகுகள் படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னைக் காணும் சபலம் வரக்கூடும்
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்

கண்ணே என் கண் பட்ட காயம்
கை வைக்கத் தானாக ஆறும்
முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
செம்மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்

வளையோசை கலகலகலவென
கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது

சில நேரம் சிலுசிலுசிலு என
சிறகுகள் படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது



உன்னைக் காணாது உருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்
நீங்காத ரீங்காரம் நான்தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே

ராகங்கள் தாளங்கள் நூறு
ராஜா உன் பேர் சொல்லும் பாரு
சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில்தான்


வளையோசை கலகலகலவென
கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது

சில நேரம் சிலுசிலுசிலு என
சிறகுகள் படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

Thursday, September 30, 2010

காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை


காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான் உன்னை காணும் முன்னால்
என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்
என் ஆண்மை எனக்கே விலங்க வைத்தாய்
நான் தொட்டுக்கொள்ள கிட்ட வந்தால் திட்டி திட்டி தித்தித்தாய்

காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான் உன்னை காணும் முன்னால்
என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்
என் ஆண்மை எனக்கே விலங்க வைத்தாய்
நான் தொட்டுக்கொள்ள கிட்ட வந்தால் திட்டி திட்டி தித்தித்தாய்


சந்திர சூரியர் எழுகையிலே
உன் முக ஜாடைகள் தெரிகிறதே
பூமியில் இரவு வருகையிலே அழகிய கூந்தல் சரிகிறதே
சரிகிறதே சரிகிறதே
அடி விண்ணும் மண்ணும் உணக்குள்ளே விளம்பரமோ
நீ வெளிச்சத்தில் செய்து வைத்த ஒளி சிற்பமோ
ஹேய் மன்மத மொட்டோ நான் வருடும் காற்றோ
என் காதலி காதலி காதலி காதலி
என்னை காதலி காதலி காதலி

காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான் உன்னை காணும் முன்னால்
என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்
என் ஆண்மை எனக்கே விலங்க வைத்தாய்
நான் தொட்டுக்கொள்ள கிட்ட வந்தால் திட்டி திட்டி தித்தித்தாய்


உன்முகம் கொண்ட பருவினிலும்
விண்மீன் ஒளிகள் வீசுதடி
கோபம் வழியும் வேளையிலும்
இதயம் கண்ணில் மின்னுதடி
மின்னுதடி என்னை கொல்லுதடி
எங்கே நின்று காணும் போதும் வானம் ஒன்று தான்
அட எந்த பக்கம் பார்க்கும் போதும் பெண்மை நன்றுதான்
மனம் விடும் முன்னே என்னை காதலி பெண்ணே

காதலிக்கும் ஆசையில்லை கடவுள் வந்து சொன்னாலும்
ஏமாந்த பெண்ணை தேடி போயா
உன் சட்டையோடு ஒட்டிக் கொள்ளும் பட்டு ரோஜா நானல்ல
முள்ளோடு தேனும் இல்லை போயா
ஒரு காதல் எனக்குள் பிறக்கவில்லை
உன்னை ஏனோ எனக்கே பிடிக்கவில்லை
நீ கல்லை கண்டு கனியோ
என் காதலி காதலி காதலி காதலி..

Wednesday, September 29, 2010

நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவையில்லை நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை


முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்

முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா?
விழி திறக்கையில் கனவென்னை துறத்துவது நிஜமா நிஜமா?

முதல் கனவு முதல் கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா?
கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா?
கனவல்லவே கனவல்லவே கண்மணி நானும் நிஜம் அல்லவா?
சத்தியத்தில் உடைத்த காதல் சாகாது அல்லவா?

முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்

எங்கே எங்கே நீ எங்கே என்று காடு மேடு தேடி ஓடி
இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன்
இங்கே இங்கே நீ வருவாய் என்று சின்ன கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன்
தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய்
கண்களை கொடுத்து இதயத்தை எடுத்துவிட்டாய்
இதயத்தை தொலைததற்காக என் ஜீவன் எடுக்கிறாய்
முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்

ஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம்
ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு
கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கிவிடு
நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவையில்லை
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை
வண்ண பூக்கள் வேர்க்கும் முன்னே வரச்சொல்லு தென்றலை
வரச்சொல்லு தென்றலை

தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே
தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன்
அதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன்
விண்ணில் நீயும் இருந்துக்கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய்
மரங்கொத்தியே மரங்கொத்தியே மனதை கொத்தி துலையிட்உவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்து உன் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
நீ தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்

நிலவைப்போல் உனை தூரத்தில் பார்க்கின்றபோதெல்லாம் துள்ளுகின்றேன்


ஒரு வார்த்தையில் வாழவைத்தாய்
ஒரு மேகத்தை போல் எந்தன் தேகத்தை மாற்றிவிட்டாய்
சிறகைப் போலொரு வேகத்தில்
வேகத்தில் வானத்தில் வானத்தில் செல்லுகின்றேன்
நிலவைப்போல் உனை தூரத்தில்
நிலவைப்போல் உனை தூரத்தில்
பார்க்கின்றபோதெல்லாம் துள்ளுகின்றேன்
நீ எனது உயிராக
நான் உனது உயிராக
ஓர் இரவு நெஞ்சத்தில் தோன்றிடும் நேரம்
நீ காணும் கனவெல்லாம் நான் காணும் கனவாகி
நாம் சேர்ந்து ஒன்றாக பார்த்திட வேண்டும்

உயிரே நீ பார்த்தாலே
உயிருக்குள் பூகம்பங்கள் தோன்றும்
உன்னால் அடி உன்னாலே
உள்ளுக்குள்ளே என்னென்னவோ ஆகும்

Tuesday, September 28, 2010

கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது சுப சொப்பனங்கள் என்னை வந்து சுற்றிக்கொண்டது


சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை கடுக்கின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதோ

நெஞ்சத்தை தொட்டு தொட்டு காதல் செல்லு பச்சைக்கிளி
முத்தங்கள் என்ன சத்தம் மெல்ல வந்து சொல்லடி

சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை கடுக்கின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதோ

மல்லிகைப்பூ வாசம் என்னை கிள்ளுகின்றது
அடி பஞ்சுமெத்தை முன்னே போல குத்துகின்றது
நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது
கண்கள் சத்தம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது
கண்ணே உன் முந்தானை காதல் வலையா
உன் பார்வை குற்றால சாரல் மழையா
அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா
நீ மட்டும் பொன்வீணை எந்தன் இடையா
இடையில் நழுவுதடி உயிரும் கரையுதடி உன்னோடுதான்
நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப்போல பற்றிக்கொள் கண்மணி

சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை கடுக்கின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதோ

கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது
சுப சொப்பனங்கள் என்னை வந்து சுற்றிக்கொண்டது
என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளிச்சென்றது
நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது
அன்பே நான் எந்நாளும் உன்னை நினைக்க
முள்மீது பூவானேன் தேகம் இழக்க
வில்லோடு அம்பாக என்னை இணைத்து
சொல்லாதம் சந்தோஷ யுத்தம் நடந்தது
உலக அதிசயத்தில் ஒன்று கூடியது நம் காதலா
நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப்போல பற்றிக்கொள் கண்மணி

சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை கடுக்கின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதோ

அன்பே உன் ஒற்றை பார்வை அதை தானே யாசித்தேன்


என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர்கள் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கோதிய அழகு
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே

எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள்
ஒரே சொல்லில் மனசை தைத்தாள்
சுட்டும் விழி பார்வையில் சுகம் வைத்தாள்
நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன்
நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்துவிட்டேன்

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர்கள் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கோதிய அழகு
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே


அன்பே உன் ஒற்றை பார்வை அதை தானே யாசித்தேன்
கிடையாதென்றால் கிளியே என் உயிர் போக யோசித்தேன்
நான்கு ஆண்டு தூக்கம் கெட்டு இன்று உன்னை சந்ந்தித்தேன்
காற்றும் நிலவும் கடலுல்ம் அடி தீ கூட தித்தித்தேன்
மாணிக்க தேரே உன்னை மலர் கொண்டு பூசித்தேன்
என்னை நான் கிள்ளி இது நிஜம் தானா சோதித்தேன்
இது போதுமே இது போதுமே
இனி என் கால்கள் வான் தொடுமே

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர்கள் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கோதிய அழகு
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே


நான் கொண்ட ஆசைகள் எல்லாம் நான்காண்டு ஆசைதான்
உறங்கும் பொழுது ஒலிக்கும் அடி உன் கொலுசு ஓசைதான்
நீ வீசும் பார்வை இல்லை நெருப்பாச்சு நெஞ்சம் தான்
வலியின் கொடுமை ஒலியா அடி தமிழ் வார்த்தை கொஞ்சம் தான்
இன்றே தான் பெண்ணே உன் முழு பார்வை நான் கண்டேன்
கை தொட்ட நேரம் என் முதல் மோட்சம் நான் கொண்டேன்
மஹா ராணியே மலர் வாணியே இனி என் ஆவி உன் ஆவியே

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர்கள் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கோதிய அழகு
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே