Thursday, September 30, 2010

காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை


காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான் உன்னை காணும் முன்னால்
என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்
என் ஆண்மை எனக்கே விலங்க வைத்தாய்
நான் தொட்டுக்கொள்ள கிட்ட வந்தால் திட்டி திட்டி தித்தித்தாய்

காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான் உன்னை காணும் முன்னால்
என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்
என் ஆண்மை எனக்கே விலங்க வைத்தாய்
நான் தொட்டுக்கொள்ள கிட்ட வந்தால் திட்டி திட்டி தித்தித்தாய்


சந்திர சூரியர் எழுகையிலே
உன் முக ஜாடைகள் தெரிகிறதே
பூமியில் இரவு வருகையிலே அழகிய கூந்தல் சரிகிறதே
சரிகிறதே சரிகிறதே
அடி விண்ணும் மண்ணும் உணக்குள்ளே விளம்பரமோ
நீ வெளிச்சத்தில் செய்து வைத்த ஒளி சிற்பமோ
ஹேய் மன்மத மொட்டோ நான் வருடும் காற்றோ
என் காதலி காதலி காதலி காதலி
என்னை காதலி காதலி காதலி

காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான் உன்னை காணும் முன்னால்
என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்
என் ஆண்மை எனக்கே விலங்க வைத்தாய்
நான் தொட்டுக்கொள்ள கிட்ட வந்தால் திட்டி திட்டி தித்தித்தாய்


உன்முகம் கொண்ட பருவினிலும்
விண்மீன் ஒளிகள் வீசுதடி
கோபம் வழியும் வேளையிலும்
இதயம் கண்ணில் மின்னுதடி
மின்னுதடி என்னை கொல்லுதடி
எங்கே நின்று காணும் போதும் வானம் ஒன்று தான்
அட எந்த பக்கம் பார்க்கும் போதும் பெண்மை நன்றுதான்
மனம் விடும் முன்னே என்னை காதலி பெண்ணே

காதலிக்கும் ஆசையில்லை கடவுள் வந்து சொன்னாலும்
ஏமாந்த பெண்ணை தேடி போயா
உன் சட்டையோடு ஒட்டிக் கொள்ளும் பட்டு ரோஜா நானல்ல
முள்ளோடு தேனும் இல்லை போயா
ஒரு காதல் எனக்குள் பிறக்கவில்லை
உன்னை ஏனோ எனக்கே பிடிக்கவில்லை
நீ கல்லை கண்டு கனியோ
என் காதலி காதலி காதலி காதலி..

Wednesday, September 29, 2010

நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவையில்லை நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை


முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்

முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா?
விழி திறக்கையில் கனவென்னை துறத்துவது நிஜமா நிஜமா?

முதல் கனவு முதல் கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா?
கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா?
கனவல்லவே கனவல்லவே கண்மணி நானும் நிஜம் அல்லவா?
சத்தியத்தில் உடைத்த காதல் சாகாது அல்லவா?

முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்

எங்கே எங்கே நீ எங்கே என்று காடு மேடு தேடி ஓடி
இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன்
இங்கே இங்கே நீ வருவாய் என்று சின்ன கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன்
தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய்
கண்களை கொடுத்து இதயத்தை எடுத்துவிட்டாய்
இதயத்தை தொலைததற்காக என் ஜீவன் எடுக்கிறாய்
முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்

ஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம்
ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு
கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கிவிடு
நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவையில்லை
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை
வண்ண பூக்கள் வேர்க்கும் முன்னே வரச்சொல்லு தென்றலை
வரச்சொல்லு தென்றலை

தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே
தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன்
அதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன்
விண்ணில் நீயும் இருந்துக்கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய்
மரங்கொத்தியே மரங்கொத்தியே மனதை கொத்தி துலையிட்உவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்து உன் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
நீ தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்

நிலவைப்போல் உனை தூரத்தில் பார்க்கின்றபோதெல்லாம் துள்ளுகின்றேன்


ஒரு வார்த்தையில் வாழவைத்தாய்
ஒரு மேகத்தை போல் எந்தன் தேகத்தை மாற்றிவிட்டாய்
சிறகைப் போலொரு வேகத்தில்
வேகத்தில் வானத்தில் வானத்தில் செல்லுகின்றேன்
நிலவைப்போல் உனை தூரத்தில்
நிலவைப்போல் உனை தூரத்தில்
பார்க்கின்றபோதெல்லாம் துள்ளுகின்றேன்
நீ எனது உயிராக
நான் உனது உயிராக
ஓர் இரவு நெஞ்சத்தில் தோன்றிடும் நேரம்
நீ காணும் கனவெல்லாம் நான் காணும் கனவாகி
நாம் சேர்ந்து ஒன்றாக பார்த்திட வேண்டும்

உயிரே நீ பார்த்தாலே
உயிருக்குள் பூகம்பங்கள் தோன்றும்
உன்னால் அடி உன்னாலே
உள்ளுக்குள்ளே என்னென்னவோ ஆகும்

Tuesday, September 28, 2010

கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது சுப சொப்பனங்கள் என்னை வந்து சுற்றிக்கொண்டது


சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை கடுக்கின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதோ

நெஞ்சத்தை தொட்டு தொட்டு காதல் செல்லு பச்சைக்கிளி
முத்தங்கள் என்ன சத்தம் மெல்ல வந்து சொல்லடி

சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை கடுக்கின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதோ

மல்லிகைப்பூ வாசம் என்னை கிள்ளுகின்றது
அடி பஞ்சுமெத்தை முன்னே போல குத்துகின்றது
நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது
கண்கள் சத்தம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது
கண்ணே உன் முந்தானை காதல் வலையா
உன் பார்வை குற்றால சாரல் மழையா
அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா
நீ மட்டும் பொன்வீணை எந்தன் இடையா
இடையில் நழுவுதடி உயிரும் கரையுதடி உன்னோடுதான்
நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப்போல பற்றிக்கொள் கண்மணி

சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை கடுக்கின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதோ

கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது
சுப சொப்பனங்கள் என்னை வந்து சுற்றிக்கொண்டது
என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளிச்சென்றது
நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது
அன்பே நான் எந்நாளும் உன்னை நினைக்க
முள்மீது பூவானேன் தேகம் இழக்க
வில்லோடு அம்பாக என்னை இணைத்து
சொல்லாதம் சந்தோஷ யுத்தம் நடந்தது
உலக அதிசயத்தில் ஒன்று கூடியது நம் காதலா
நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப்போல பற்றிக்கொள் கண்மணி

சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை கடுக்கின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதோ

அன்பே உன் ஒற்றை பார்வை அதை தானே யாசித்தேன்


என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர்கள் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கோதிய அழகு
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே

எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள்
ஒரே சொல்லில் மனசை தைத்தாள்
சுட்டும் விழி பார்வையில் சுகம் வைத்தாள்
நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன்
நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்துவிட்டேன்

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர்கள் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கோதிய அழகு
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே


அன்பே உன் ஒற்றை பார்வை அதை தானே யாசித்தேன்
கிடையாதென்றால் கிளியே என் உயிர் போக யோசித்தேன்
நான்கு ஆண்டு தூக்கம் கெட்டு இன்று உன்னை சந்ந்தித்தேன்
காற்றும் நிலவும் கடலுல்ம் அடி தீ கூட தித்தித்தேன்
மாணிக்க தேரே உன்னை மலர் கொண்டு பூசித்தேன்
என்னை நான் கிள்ளி இது நிஜம் தானா சோதித்தேன்
இது போதுமே இது போதுமே
இனி என் கால்கள் வான் தொடுமே

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர்கள் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கோதிய அழகு
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே


நான் கொண்ட ஆசைகள் எல்லாம் நான்காண்டு ஆசைதான்
உறங்கும் பொழுது ஒலிக்கும் அடி உன் கொலுசு ஓசைதான்
நீ வீசும் பார்வை இல்லை நெருப்பாச்சு நெஞ்சம் தான்
வலியின் கொடுமை ஒலியா அடி தமிழ் வார்த்தை கொஞ்சம் தான்
இன்றே தான் பெண்ணே உன் முழு பார்வை நான் கண்டேன்
கை தொட்ட நேரம் என் முதல் மோட்சம் நான் கொண்டேன்
மஹா ராணியே மலர் வாணியே இனி என் ஆவி உன் ஆவியே

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர்கள் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கோதிய அழகு
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே

உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நானாச்சு கேளய்யா


குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா
குக்கூ குக்கூ குக்கூ
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா
குக்கூ குக்கூ குக்கூ


மழைக்காத்து வீசுரபோது மல்லிகைப்பூ பாடாதா
மழை மேகம் கூடுறபோது வண்ன மயில் ஆடாதா
என் மேனி தேனெறும்பு என் பாட்டு பூங்கரும்பு
மச்சான் நான் மெட்டெடுப்பேன்
உன்னை தான் கட்டி வைப்பேன்
சுகமாக தாளம் தட்டி பாடட்டுமா
உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நானாச்சு கேளய்யா

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா
குக்கூ குக்கூ குக்கூ

கண்னா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா
கண்னா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா
வந்தாச்சு சித்திரைதான் போயாச்சு நித்திரைதான்
பூவான பொண்ணுக்குத்தான் மாமா நீ தேடி சொல்லு
மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா
விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சு பாடும் பாடு கேளையா


குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா
குக்கூ குக்கூ குக்கூ

இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா
குக்கூ குக்கூ குக்கூ

யார் யாரோ எழுதி சென்ற புரியாத கவிதை எல்லாம் நான் கேட்டு ரசித்தேன் நின்று


படப்பட படவென அடிக்குது இதயம்
தடத்தட தடவென துடிக்குது இமைகள்
சலசல சலவென சுழழுது விழிகள்

அடுத்தது யாரோ அடுத்தது யாரோ
எடுப்பது யாரோ எடுப்பது யாரோ
எனதா உனதா எனவே எனவே
தவிக்குது தவிக்குது தவிக்குது தவிக்குது

ஏ நெஞ்சே என் நெஞ்சே
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்
ஹேஹேஹே காதல் ஒரு காந்தம்
எனக் கண்டேன் நான்
ம் ம் ம் ஈர்க்கும் அந்த திசைகள்
என்று வீழ்ந்தேன் நான்
மாய கரம் ஒன்று மயிலிறகு கொண்டு
செல்லென்று மலரை தொடுதே

என் நிலவில் மாற்றம்
எதிலும் தடுமாற்றம்
பார்வை பறிமாற்றம்
ஒரு ஆனந்த ஏக்கம்

கண்ணை விட்டு வெளியே
காணும் ஒரு கனவே
வருந்தி அழைத்தாலும்
இனி வாராது தூக்கம்

வெகு நேரம் பேசிய பின்பு
விடை பெற்று போகும் நேரம்
நாலடிகள் நடக்கும் கால்கள்
நடை மறந்து திரும்பும் ஏனோ

பேசாத நேரம்தானே
பெரிதாக தோணும் அன்பே
காலங்கள் தோற்கும் இங்கே

நேற்று வரும் கனவில்
நிலவு வரவில்லை
அடம்பிடிக்கும் நிலவை
இனி நான் என்று பார்ப்பேன்

காதல் வரும்போது
கனவுகளும் மாறும்
நீ விரும்பும் நிலவை
இனி தினந்தோறும் பார்ப்பாய்

யார் யாரோ எழுதி சென்ற
புரியாத கவிதை எல்லாம்
நான் கேட்டு ரசித்தேன் நின்று

நான் பார்த்த மரமும் இலையும்
புது போர்வை போர்த்திக்கொண்டு
புது பார்வை பார்த்திக்கொண்டு
நம்மை பார்த்து சிரிக்கின்றதே

ஏ நெஞ்சே என் நெஞ்சே
என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்
ஹேஹேஹே காதல் ஒரு காந்தம்
எனக் கண்டேன் நான்
ம் ம் ம் ஈர்க்கும் அந்த திசைகள்
என்று வீழ்ந்தேன் நான்
மாய கரம் ஒன்று மயிலிறகு கொண்டு
செல்லென்று மலரை தொடுதே

நீ துணை வர வேண்டும் நீண்ட வழி என் பயணம்


இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ
இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ

மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே
மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே

இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே
இல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொள்ள
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம்

அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்
என் நெஞ்சமோ உன் போல அள்ள
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத தோற்றம்
இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் மன நிலை தான்

மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உணர்வுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே
மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உணர்வுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே


தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே
தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே

Monday, September 27, 2010

அன்பே ஓடோடி வந்து என் கண்ணை பார்த்து காதல் தான் என்று சொல்லி என் காயம் ஆற்று


கண்ணுக்குள் கண்ணை ஒற்றிக்கொண்டே
இல்லை இல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து
பார்வை தந்து சென்றாயே
காதல் கொண்டு நான் பேச
கத்தி தூக்கி நீ வீச
பக்கம் வந்து தொட்டுப் பேசும்
கனவுகள் கண்டேன்
இன்னும் சற்றே அருகே வந்து
முத்தமும் தந்தேன்
இத்தனை நடந்தும் காதல் இல்லை
என்பது சரியா
ஆணாய் நானும் பெண்ணாய் நீயும்
இருப்பது பிழையா
உன் நண்பன் இல்லை
நான் உன் வானின் நிலா
உன் நண்பன் இல்லை
நானும் உன் வானின் நிலா
உன் நண்பன் இல்லை
நீ என் உயிரின் விழா
(கண்ணுக்குள்..)

நீயும் நானும்
ஒரே புள்ளி ஒரே கோடு
நீயும் நானும் வாழப் போகும்
அந்த இடம் ஒரே வீடு
காதல் என்றால் காயம் தான்
அன்பே ஓடோடி
வந்து என் கண்ணை பார்த்து
காதல் தான் என்று
சொல்லி என் காயம் ஆற்று
அன்பே ஓடோடி
வந்து என் கண்ணை பார்த்து
காதல் தான் என்று
சொல்லி என் காயம் ஆற்று



கண்ணுக்குள் கண்ணை ஒற்றிக்கொண்டே
இல்லை இல்லை என்றாயே
கள்ளம் ஒன்றை உள்ளே வைத்து
பார்வை தந்து சென்றாயே
காதல் கொண்டு நான் பேச
கத்தி தூக்கி நீ வீச
பக்கம் வந்து தொட்டுப் பேசும்
கனவுகள் கண்டேன்
இன்னும் சற்றே அருகே வந்து
முத்தமும் தந்தேன்
இத்தனை நடந்தும் காதல் இல்லை
என்பது சரியா
ஆணாய் நானும் பெண்ணாய் நீயும்
இருப்பது பிழையா
உன் நண்பன் இல்லை
நான் உன் வானின் நிலா
உன் நண்பன் இல்லை
நானும் உன் வானின் நிலா
உன் நண்பன் இல்லை
நீ என் உயிரின் விழா

காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்


இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ

இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது தனிமையும்
நெருங்கிட இனிமையும் பிறக்குது

இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ

காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
இனிய பருவமுள்ள இளங்குயிலே
ஏன் இன்னும் தாமதம்
மன்மதக் காவியம் என்னுடன் எழுத

நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்க தனிந்திட ஒரு முறை தழுவடி
காலம் வரும் வரை பொருத்திருந்தால்
கன்னி இவள் மலர்க் கரம் தழுவிடுமே
காலம் என்றைக்குக் கனிந்திருமோ
காலை மனம் அதுவரை பொருத்திடுமோ
மாலை மலர் மாலை இடும் வேளை தனில்
தேகம் இது விருதுகள் படைத்திடும்
(இதழில்..)

தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
அழகாஇச் சுமந்து வரும் அழகரசி
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும்
சுந்தர நிலவோ

நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரடைச் சொன்னது
மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாரன் கணை வந்து மார்பினில் பாயுது
காமன் கனைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணை என வருகிறது
மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு
ஜீவ நதி அருகினில் இருக்குது
(இதழில்..)

ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே


ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே
ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே


குயிலு கருங்குயிலு மாமன் மனக் குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இள மயிலு ஆச இள மயிலு
ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே
நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான் இந்த நேரந்தான்
ஒத்தையிலே அத்த மக உன்ன எண்ணி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலையே காலம் நேரம் கூடலையே

ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே

மாமன் உதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா மாலை தோளில் ஏறாதா
உன்ன எண்ணி நானே உள்ளம் வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே என் மாமனே என் மாமனே
ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன் ஓலப் பாய போட்டு வச்சேன்
இஷ்டப் பட்ட ஆச மச்சான் என்ன மேலும் ஏங்க வச்சேன்

ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே

Saturday, September 25, 2010

காணும் காணும் இருவிழி காதல் பேச இமைகளிலே கவிதைபடி...


கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

பட்டின் சுகம் வெல்லும் விரல்
மெட்டின் சுகம் சொல்லும் குரல்
எட்டித் தொட நிற்கும் அவள்
எதிரே எதிரே..

பிள்ளை மொழி சொல்லை விட
ஒற்றை பனை கள்ளை விட
போதை தரும் காதல் வர
தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

மோதும் மோதும்
கொலுசொலி ஏங்கும் ஏங்கும்
மனசொலியை பேசுதே...

போதும் போதும்
இதுவரை யாரும் கூறா
புகழுரையே கூசுதே...

பேசாத பேச்செல்லாம் பேச பேச நிம்மதி
பேசாது போனாலும் நீ என் சங்கதி

கெஞ்சல் முதல் கொஞ்சல் வரை
விக்கல் முதல் தும்மல் வரை
கட்டில் முதல் தொட்டில் வரை
அவளை அவளை அவளை அவளை

கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

காணும் காணும்
இருவிழி காதல் பேச
இமைகளிலே கவிதைபடி...

ஏதோ ஏதோ
ஒருவித ஆசை தோன்ற
தனிமையிது கொடுமையடி

நீங்காமல் நாம் சேர நீளமாகும் இன்பமே
தூங்காமல் கைசேர காதல் தங்குமே

ரெட்டைகிளி அச்சத்திலே
நெஞ்சுக்குழி வெப்பத்திலே
சுட்டித்தனம் வெட்கத்திலே
அடடா அடடா அடடா அடடா

கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை

பட்டின் சுகம் வெல்லும் விரல்
மெட்டின் சுகம் சொல்லும் குரல்

எட்டித் தொட நிற்கும் அவன்
எதிரே எதிரே..

பிள்ளை மொழி சொல்லை விட
ஒற்றை பனை கள்ளை விட

போதை தரும் காதல் வர
தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே உண்டான காதல் அதிசயம்


பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சிகளின் மேல் ஓவியங்கள் அதிசயம்
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சிகளின் மேல் ஓவியங்கள் அதிசயம்
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்


ஒரு வாசமில்லாக் கிளையின் மேல்
நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில்
துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயமே
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற தீபம்போல்
மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருள்ளதென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயமே

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சிகளின் மேல் ஓவியங்கள் அதிசயம்
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்

பெண்பால் கொண்ட சிறுதீவு
கால்கொண்டு நடமாடும் நீதான் என் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள்
வாய்பேசும் நீதான் எட்டாவததிசயமே
வான் மிதக்கும் உன் கண்கள்
தேன் தெறிக்கும் கன்னங்கள்
பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே
நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே
நகம் என்ற கிரீடமும் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சிகளின் மேல் ஓவியங்கள் அதிசயம்
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருனாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்

கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்

Thursday, September 23, 2010

கள்ள விழிகளில் கண் கொத்தி சென்றாயே


Hey Good Bye நண்பா Hey Good Bye நண்பா
கண்ணிலே கல்மிஷம் போதுமே சில்மிஷம்
ஸ்பரிசமோ துளி விஷம் ஸ்பரிசமோ துளி விஷம்
நானில்லை என் வசம்

நீ யாரோ நான் யாரோ
கண்தோன்றி கண் காணா கண்ணீரோ
கண்தோன்றி கண் காணா கண்ணீரோ
நீ யாரோ நான் யாரோ

கள்ள விழிகளில் கண் கொத்தி சென்றாயே
கன்னக் குழிகளில் உயிர் மூடி வைத்தாயே
பின்பு யாரோ போல் தள்ளி நின்றாய்
நட்பு உறவில்லை என்றாய்
நீ யாரோ நான் யாரோ


Hey Good Bye நண்பா Hey Good Bye நண்பா
கண்ணிலே கல்மிஷம் போதுமே சில்மிஷம்
ஸ்பரிசமோ துளி விஷம் ஸ்பரிசமோ துளி விஷம்
நானில்லை என் வசம்

நீ யாரோ நான் யாரோ
கண்தோன்றி கண் காணா கண்ணீரோ
கண்தோன்றி கண் காணா கண்ணீரோ
நீ யாரோ நான் யாரோ

அந்த சாலையில் நீ வந்து சேராமல்
ஆறு டிகிரியில் என் பார்வை சாயாமல்
விலகிப் போயிருந்தால் தொல்லையே இல்லை
இது வேண்டாத வேலை

நீ யாரோ நான் யாரோ
கண்தோன்றி கண் காணா கண்ணீரோ
கண்தோன்றி கண் காணா கண்ணீரோ
நீ யாரோ நான் யாரோ

Hey Good Bye நண்பா Hey Good Bye நண்பா
கண்ணிலே கல்மிஷம் போதுமே சில்மிஷம்
ஸ்பரிசமோ துளி விஷம் ஸ்பரிசமோ துளி விஷம்
நானில்லை என் வசம்

கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம் கண்ணீரில் முடிந்தால்தான் காதல் காவியம்


ஆறுயிரே ஆறுயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையேல் நான் இல்லையே
நீப்போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்

உயிரே என் உயிரே
எனக்குள் உன் உயிரே
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்
எண்ணி பிரிகிறேன்

ஆறுயிரே ஆறுயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையேல் நான் இல்லையே
நீப்போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்

விழி தாண்டி போனாலும் வருவேன் உன்னிடம்
எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம்
காற்றினில் வருவேனோ
சுவாசத்தில் சேர்வேனோ
நீ சுவாசிக்கும்போது வெளிவரமாட்டேன்
உனக்குள் வசிப்பேனே
உயிரே என்னுயிரே
உனக்குமள் என்னுயிரே
உனை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
என்னில் உறைகிறேன்

ஆறுயிரே ஆறுயிரே அன்பே
உன் அன்பில் தானே நான் வாழ்கிறேன்
நீயில்லையேல் நான் இல்லையே
நீப்போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்

கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்
கண்ணீரில் முடிந்தால்தான் காதல் காவியம்
நேற்றினில் வாழ்வேனோ
உன் தோள்களில் சாய்வேனோ
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து
காலங்கள் மறப்பேனோ
உயிரே என்னுயிரே நாமே ஓருயிரே
நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்
உயிரை துறக்கிறேனே

Wednesday, September 22, 2010

காதல் வந்து வானவில்லை பாலம் போட்டு அழைக்குது


மருதாணி பூவப்போல மருதாணி பூவப்போல
குறு குறு குறு வெட்கப்பார்வை கண்ணுக்குள்ள
சிலு சிலு சிலு சூறக்காத்து நெஞ்சுக்குள்ள
(மருதாணி..)


விட்டு விட்டு வெயிலும் அடிக்குது
விட்டு விட்டு மழையும் அடிக்குது
காதல் வந்து வானவில்லை பாலம் போட்டு அழைக்குது
தொட்டு தொட்டு பிடிக்குது
தூண்டில் போட்டு இழுக்குது
திட்டித் திட்டிக் காலு ரெண்டும் உன்னை தேடி நடக்குது

மருதாணிப் பூவே ஹே ஹே ஹே
மருதாணிப் பூவே ஹே ஹே ஹே
மருதாணிப் பூவே ஹே ஹே ஹே

மருதாணி பூவப்போல மருதாணி பூவப்போல
குறு குறு குறு வெட்கப்பார்வை கண்ணுக்குள்ள
சிலு சிலு சிலு சூறக்காத்து நெஞ்சுக்குள்ள

ம்ம்.. தட்டித்தட்டி நெஞ்சத்தொறக்குற
எட்டி எட்டி உள்ள குதிக்கிற
வெட்டி வெட்டி வேலை வெட்டி
அம்புட்டையும் கெடுக்கிறே
நெத்திப் பொட்டு மத்தியில சுத்தி வச்சி அடிக்கிற
இம்புட்டையும் பண்ணிப்புட்டு நல்லவனா நடிக்கிறே

மருதாணிப் பூவே ஹே ஹே ஹே
மருதாணிப் பூவே ஹே ஹே ஹே
மருதாணிப் பூவே ஹே ஹே ஹே

மருதாணி பூவப்போல மருதாணி பூவப்போல
குறு குறு குறு வெட்கப்பார்வை கண்ணுக்குள்ள
சிலு சிலு சிலு சூறக்காத்து நெஞ்சுக்குள்ள

என் நெஞ்சு என் நெஞ்சு உன்னைத்தேடி ஓடுதே


என் நெஞ்சே என் நெஞ்சே என்னென்னமோ ஆகுதே
என் நெஞ்சு என் நெஞ்சு உன்னைத்தேடி ஓடுதே
ஆமாங்க ஆமாங்க என்னென்னமோ ஆகுதே
அங்குட்டும் இங்குட்டும் ஆச முகம் தேடுதே ஹே

எட்டுக்கண்ணு காளைமேல் நேத்து...
உனக்காக காத்திருந்தேன் பாத்து...
நாலுக்கோட்டை தேவர் என்னைப்பார்த்து
கேள்விக்கேட்க நடுங்கிப்போனேன் நேத்து

வாடா வாடா வாடா வாடா வாடா
வாடா வாடா வாடா வாடா வாடா
வாடா வாடா வாடா வாடா வாடா
வாடா வாடா வாடா வாடா வாடா
(என் நெஞ்சே..)

விழித்து எழுந்தவுடன் தாய்முகம் பார்க்கும்
பழக்கம் மறந்துப்போச்சே
வெயிலத்திறந்தவுடன் உன் முகம் தானே
தெரிஞ்சுப் பழக்கமாச்சே
ஹே யாரோ பார்த்துப்பேசும் போது
நீயே வந்துப் போற
ஹம் மஞ்சப்பூசம் என்னுக்கிட்ட மாட்டிக்கிச்சு மாராப்பு
அட கிறுக்கா..
அடி கிறுக்கி..
அட கண்ணுப்பட்டு ஒன்னா சேர்ந்து
பாதம் போடுதடா
கைகள் போடும் கோலம் இப்போ காலும் போடுதடா
என் நெஞ்சே என் நெஞ்சே ஆ ஆ..
(என் நெஞ்சே..)

ஆத்துக்குள்ள அள்ளிப்பூவுப் பார்க்க
அந்தப்பூவ அத்தை மகன் பார்க்க
அவ பார்க்க அவன் பார்க்க
அவ பார்க்க அவன் பார்க்க
அங்க யாரும் கேட்க யாரும் இல்லையே

கெழக்கு வழக்கு என் திசை தெரியாம
கிறுக்குப்பிடிச்சுப் போச்சு
எடக்கு மடக்கு என பேசறப்பேச்சு
எதுக்கு மௌனமாச்சு
ஏ காலை மாலை மூணு வேளை
மூளை கெட்டுப்போச்சினா
காப்பித்தூளில் கொழம்பு வச்சி கேவலமா ஆச்சு
அடி கிறுக்கி..
அட கிறுக்கா..
ஊருக்குள்ள காதல் எல்லாம் குறையில் நடக்குமடி
நம்ம காதல் மட்டும்தானே மேலே மெதக்குதடி
(என் நெஞ்சே..)

Tuesday, September 21, 2010

பகவான் பேசுவதில்லை அட பக்தியும் குறைவது இல்லை , காதலி பேசவும் இல்லை என் காதல் குறையவும் இல்லை


மெல்லினமே மெல்லினமே நெஞ்சில்
மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...

மெல்லினமே மெல்லினமே நெஞ்சில்
மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...
நான் தூரத் தெரியும் வானம்
நீ துப்பட்டாவில் இழுத்தாய்
என் இருபத்தைந்து வயசை
ஒரு நொடிக்குள் அடைந்தாய்.. ஹோ..ஹோ..

மெல்லினமே மெல்லினமே நெஞ்சில்
மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...

வீசிப்போன புயலில் என் வேர்கள் சாய வில்லை
ஒரு பட்டாம் பூச்சி மோத அது பட்டென்று சாய்ந்ததடி
எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்
நீ தாண்டிப்போன போது அது தரையில் விழுந்ததடி
மண்ணிலே செம்மண்ணிலே என் இதயம் துள்ளுதடி
ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயர் சொல்லுதடி
கனவுப் பூவே வருக உன் கையால் இதயம் தொடுக.
எந்தன் இதயம் கொண்டு நீ உந்தன் இதயம் தருக.
ஹோ..ஹோ...

மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...

மண்ணைச்சேரும் முன்னே அடி மழைக்கு லட்சியம் இல்லை
மண்னைச் சேர்ந்த பின்னே அதன் சேவை தொடங்குமடி
உன்னைக் காணும் முன்னே என் உலகம் தொடங்கவில்லை
உன்னைக் கண்ட பின்னே என் உலகம் இயங்குதடி..
வானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கிறவன்
பூக்களைப் பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்...
பகவான் பேசுவதில்லை அட பக்தியும் குறைவது இல்லை ,
காதலி பேசவும் இல்லை என் காதல் குறையவும் இல்லை ஹோ..ஹோ..
(மெல்லினமே மெல்லினமே)

Monday, September 13, 2010

ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய் , என் இரவையும் பகலையும் மாற்றிபோனாய்


ஏதோ ஒன்று என்னை தாக்க
யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை
கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை
கையில் பிடிக்க ஏங்கினேன்
பெண்ணே உந்தன் நியாபகத்தை
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே

என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன்
எதுவும் இல்லையே என்னிடத்தில்
எங்கே போவது யாரை கேட்பது
எல்லா பாதையும் உன்னிடத்தில்
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்
என் இரவையும் பகலையும் மாற்றிபோனாய்
ஏன் இந்த பிரிவை தந்தாய்
என் இதயத்தில் தனிமையை ஊற்றிபோனாய்
உள்ளே உன் குரல் கேட்குதடி
என்னை என்னுயிர் தாக்குதடி
எங்கே இருக்கிறேன் எங்கே நடக்கிறேன்
மறந்தேன் நான்

பெண்ணே உந்தன் ஞாபகத்தை
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே

ஏதோ ஒன்று என்னை தாக்க
யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை
கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை
கையில் பிடிக்க ஏங்கினேன்
பெண்ணே உந்தன் நியாபகத்தை
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே

Sunday, September 12, 2010

நீ என்னை காண்பதே, வானவில் போன்றதே , தூரத்தில் உன்னை கண்டால் தூறல் நெஞ்சில் சிந்துதே


இறகை போலே, அலைகிறேனே
உந்தன் பேச்சை கேட்கையிலே
குழந்தை போலே, தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டையிலே
தொலையாமல் தொலைந்தேனே
உன் கைகள் என்னை தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சு காற்று பட்டதும்
அநியாய காதல் வந்ததே, அட காதல் ஆசை தந்ததே
எனக்குள்ளே எதோ மின்னல் போலே தொட்டு சென்றதே

கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால், எல்லாமே கையில் சேரும்
வேறுஒன்றும் தேவையில்லை, நீ மட்டும் போதும் போதும்

கூட வந்து நீ நிற்பதும் , கூடுவிட்டு நான் செல்வதும்
தொடருதே, தொடருதே நாடகம்
பாதி மட்டுமே சொல்வதும், மீதி நெஞ்சிலே என்பதும்
புரியுதே, புரியுதே காரணம்
நேரங்கள் தீருதே, வேகங்கள் கூடுதே
பூவே உன் கண்ணுக்குள்ளே பூமி பந்து சுத்துதே


கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால், எல்லாமே கையில் சேரும்
வேறுஒன்றும் தேவையில்லை, நீ மட்டும் போதும் போதும்

ஏய் என்னானதோ, ஏதானதோ இல்லாமல் போச்சே தூக்கமும்
கண்ணே உன்னை காணாமல் நான் இல்லை
என்மீதிலே உன் வாசனை எப்போதும் வீச பார்கிறேன்
அன்பே உன்னை சேராமல் வாழ்வில்லை
நீ என்னை காண்பதே, வானவில் போன்றதே
தூரத்தில் உன்னை கண்டால் தூறல் நெஞ்சில் சிந்துதே

கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறுஒன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால், எல்லாமே கையில் சேரும்
வேறுஒன்றும் தேவையில்லை, நீ மட்டும் போதும் போதும்