Tuesday, November 8, 2011

உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும் ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்


பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்
உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும்
ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்
தோப்புக்குள் குயிலின் சத்தம் தோட்டத்தில் குருவி சத்தம்
கன்னிப்பெண் காதுக்கு எது பிடிக்கும்
வாய்வைத்து வாயை மூட வாய்பேசா பெண்ணுக்காக
வாதாடும் அருவி சத்தம் அது பிடிக்கும்

மார்கழி மாதத்தில் குளிர் அடித்தால்
கம்பளி போர்வையில் எது பிடிக்கும்
மார்போடு நீ எனை மூடிக்கொண்டால்
கக்கத்தில் பாய்கின்ற வெப்பம் பிடிக்கும்
தண்ணீர் ஒரு பக்கம் உண்டு
வெந்நீர் ஒரு பக்கம் உண்டு
பெண்ணே நீராடிக்கொள்ள எது பிடிக்கும்
முத்தம் எனும் தீர்த்தும் கொண்டு
ரத்தம் அது உறையும் வண்ணம்
நித்தம் நீராட வேண்டும் அது பிடிக்கும்

பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்
உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும்
ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்


தாயோடு தங்கையும் துணை இருக்க
யாரோடு தூங்கிட மிக பிடிக்கும்
தாயோடு தங்கையை துரத்தி விட்டு
தலையணை கட்டிக்கொண்டு தூங்க பிடிக்கும்
பூப்போல் ஒரு தீண்டல் உண்டு
புயல் போல் ஒரு சீண்ட உண்டு
ஏண்டி உன் தேகத்துக்கு எது பிடிக்கும்
பூப்போல் ஒரு தீண்டல் தீண்டி
புயல் போல் எனை சீண்டி சீண்டி
புதிதாய் ஒரு வித்தை காட்டு அது பிடிக்கும்
பெண்ணுக்குள் பேரின்பம் பேய் பிடிக்கும்

பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்
உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும்
ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்
தோப்புக்குள் குயிலின் சத்தம் தோட்டத்தில் குருவி சத்தம்
கன்னிப்பெண் காதுக்கு எது பிடிக்கும்
வாய்வைத்து வாயை மூட வாய்பேசா பெண்ணுக்காக
வாதாடும் அருவி சத்தம் அது பிடிக்கும்

சுத்திச்சுத்தி நிதமும் என்ன சுத்தி புடிச்சுப்புட்டே இந்நேரம் வலை வீசி


அடி ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு
அடி ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு
அந்த ஏற்ககாடு ஊட்டி போல
குளிர் ஏராளம் ஆகிப்போச்சு
குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க
குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க
வா மாமா அடி ஆத்தி ஆடு சுதி ஏத்திப் பாடு
அட ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு

தட்டி தட்டி தவுல மெல்ல தட்டி
விடியும் வர கச்சேரி வெக்கலாமா
பக்க மேளம் உன் பக்கம் வரும் நேரம்
நீ வித்தைகள காட்டாம நிக்கலாமா
கட்டி கட்டி இருக உன்ன கட்டி
கனிஞ்சிருக்கும் கொய்யாவ கிள்ளலாமா
என்ன வேணும் என் எண்ணங்கள நானும்
உங்கிட்ட வந்து காதோடு சொல்லலாமா
அடி நீ என்ன கேட்டாலும் தாரேன்
அந்த தோப்போறம் வான்னாலும் வாறேன்
விடிஞ்சாலும் மாமா விடமாட்டேன் ஆம்மா

அட ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு

கொஞ்சி கொஞ்சி மடியில் உன்னக் கொஞ்சி
கலந்திருக்க வந்தாச்சு திருநாளு
கன்னி தோளு கை தொட்டு கொஞ்சும் ஆளு
என் வள்ளிக்குப்பம் கொண்டாடும் வடிவேலு
சுத்திச்சுத்தி நிதமும் என்ன சுத்தி
புடிச்சுப்புட்டே இந்நேரம் வலை வீசி
மெத்தப் போட உன் மந்திரத்திலாட
நான் ஒத்துக்கிட்டேன் வாயேண்டி மஹராசி
நிலா எம்மேல தீயாட்டம் காயும்
இப்போ உம்மேல என்மேனி சாயும்
அடி ஆத்தி ஆடு சுதி ஏத்திப் பாடு

அடி ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு
குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க
குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க
வாம்மா வா அடி ஆத்தி ஆடு சுதி ஏத்திப் பாடு
அட ராக்கோழி கூவும் நேரம்
நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சு

Sunday, November 6, 2011

காதல் காதல் இது காதல் என்றேன்


காதல் என்பதா காமம் என்பதா
இரண்டு மத்தியில் இன்னோர் உணர்ச்சியா
உயிரை உயிரால் உள்ளே குடைந்து
உயிரின் உயிரை உணரும் முயற்சியா
வெண்ணிலாத் தோன்றி விண்ணில் தெரிந்ததில்
பூ விழுந்ததில் பூமி உடைந்ததில்
காதல் காதல் இது காதல் என்றேன்
காதல் காதல் இது காதல் என்றேன்
காற்றில் காற்றில் ஓர் ஓசை கேட்குதே……….

வெண்ணிலாத்தோன்றி விண்ணில் தெரிந்ததில்
பூ விழுந்ததில் பூமி உடைந்ததில்
காதல் காதல் இது காதல் என்றேன்
காதல் காதல் இது காதல் என்றேன்
காற்று காற்றில் ஓர் ஓசை கேட்குதே.. ஏ

காதல் என்பதா காமம் என்பதா
இரண்டு மத்தியில் இன்னோர் உணர்ச்சியா
உயிரை உயிரால் உள்ளே குடைந்து
உயிரின் உயிரை உணரும் முயற்சியா
வெண்ணிலாத்தோன்றி விண்ணில் தெரிந்ததில்
பூ விழுந்ததில் பூமி உடைந்ததில்
காதல் காதல் இது காதல் என்றேன்
காதல் காதல் இது காதல் என்றேன்
காற்று காற்றில் ஓர் ஓசை கேட்குதே