Saturday, April 13, 2013

நான் ஏங்கி ஏங்கி பாக்குறப்போ ராங்கி பண்ணுறியே



சிறுவாணி தண்ணியப்போல் சிலுசிலுன்னு சிரிப்பிருக்கும்
கடையாணிச் சக்கரமபோல் கண்ணிரண்டும் சுத்தி வரும்
மருதாணிச் சிவப்பாட்டம் மணிக்கன்னம் மின்னி வரும்
மகராசி அழகையெல்லாம் மலக்காத்துப் பாடி வரும்



செங்குருவி செங்குருவி காரமடை செங்குருவி
சேலை கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
செங்குருவி செங்குருவி காரமடை செங்குருவி
சேலை கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
ஒத்திகைக்குப் போவமா ஒத்துமையா ஆவமா
முத்திரையைப் போடம்மா முத்தமிட்டு பாடம்மா
வெக்கமெல்லாம் மூட்டகட்டி வச்சா என்ன ஓரமா



செங்குருவி செங்குருவி காரமடை செங்குருவி
சேலை கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி

வெண் பருத்தி நூலெடுத்து வாய் வெடிச்ச பூவெடுத்து
நான் அணிஞ்சிட தொடுத்துவச்ச நளினமான மாலையிது

தன தனனானான தானனனா தனன தனனான தனனனா
சென்னிமல தேனெடுத்து செங்கரும்பின் சாறெடுத்து
நீ பருகிட கலந்து வச்ச நெருக்கமான வேளையிது
தன தனனானான தானனனா தனன தனனான தனனனா
ஹா..ராசாத்தி ஒடம்பிலிருக்கும் ரவிக்க துணி நானாக
அன்னாடம் சூடிக்கொள்ள ஆச வச்ச ஆகாதா
ஆத்தாடி மறைஞ்சிருக்கும் அழகையெல்லாம் நீ பாத்தா
எம்மானம் ரெக்க கட்டி எட்டுத்திக்கும் போகாதா
அடி சீனி சக்கரையே எட்டி நீயும் நிக்கிறியே
நான் ஏங்கி ஏங்கி பாக்குறப்போ ராங்கி பண்ணுறியே

செங்குருவி செங்குருவி காரமடை செங்குருவி
சேலை கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி

கள்ளழகர் வைகையிலே கால் பதிக்கும் வேளையிலே
பால் நிலவில் படுத்திகிட்டு பருவராகம் பாடணுமே
தன தனனானான தானனனா தனன தனனான தனனனா
சொக்கனுக்குப் பக்கத்திலே ஜோடி என்று வந்தவளே
நூல் பொடவையில் ஒளிஞ்சுகிட்டு நெனச்ச தாளம் போடணுமே
தன தனனானான தானனனா தனன தனனான தனனனா
ஆனாலும் உனக்கு ரொம்ப அவசரம்தான் மாமாவே
ஒண்ணாகி கூடும்போது ஊர் முழுக்கப் பாக்காதா
அஹ்..பாத்தாலும் தவறு இல்ல பனி உறங்கும் ரோசாவே
முன்னால சோத்த வச்சா மூக்குலதான் வேக்காதா
என்ன வாட்ட எண்ணுறியே கை கோத்து பின்னுறியே
உன் பாட்டப் பாடி பலவிதமா சேட்ட பண்ணுறியே

செங்குருவி செங்குருவி காரமடை செங்குருவி
சேலை கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
செங்குருவி செங்குருவி காரமடை செங்குருவி
சேலை கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி
ஒத்திகைக்குப் போவமா ஒத்துமையா ஆவமா
முத்திரையைப் போடம்மா முத்தமிட்டு பாடம்மா
வெக்கமெல்லாம் மூட்டகட்டி வச்சா என்ன ஓரமா

செங்குருவி செங்குருவி காரமடை செங்குருவி
சேலை கட்டி மாமனுக்கு மாலையிட்ட செங்குருவி