நிதா நிதா நிதானமாக யோசித்தாலும்
நில்லா நில்லா நில்லாமலோடி யோசித்தாலும்
நீதான் மனம் தேடும் அன்பாழன்
பூவாய் எனை ஏந்தும் பூபாலன்
என் மடியின் மணவாளன் எனத்தோன்றுதே
செந்தூரா
சேர்ந்தே செல்வோம் செந்தூரா
செங்காந்தல் பூ உன் தேரா
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா
செந்தூரா
சேர்ந்தே செல்வோம் செந்தூரா
செங்காந்தல் பூ உன் தேரா
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா
நடக்கையில் அணைத்தவாறு போகவேண்டும்
விரல்களை பிணைத்தவாறு பேசவேண்டும்
காலை எழும்போது நீ வேண்டும்
தூக்கம் வரும்போது தோள் வேண்டும்
நீ பிரியா வரம் தந்தால் அதுவே போதும்
செந்தூரா
சேர்ந்தே செல்வோம் செந்தூரா
செங்காந்தல் பூ உன் தேரா
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா
மழையின் இரவில் ஒரு குடையென நடப்போமா
மரத்தின் அடியில் மணிகணக்கினில் கதைப்போமா
பாடல் கேட்போமா பாடி பார்ப்போமா
மூழ்கத்தான் வேண்டாமா…
யாரும் காணாத இன்பம் எல்லாமே
கையில் வந்தே விழுமா………
நீ இன்றி இனி என்னால் இருந்திட முடிந்திடுமா
செந்தூரா
சேர்ந்தே செல்வோம் செந்தூரா
செங்காந்தல் பூ உன் தேரா
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா
அலைந்து நான் கலைத்துப்போகும் போது
மெலிந்து நான் இளைத்து போவதாக சொல்லி விட்டு
நலபாகம் செய்வாயா
பொய்யாய் சில நேரம் நீ வைவாயா
நான் தொலைந்தால் உனை சேரும் வழி சொல்வாயா
செந்தூரா
சேர்ந்தே செல்வோம் செந்தூரா
செங்காந்தல் பூ உன் தேரா
மாறன் அம்பு ஐந்தும் வைத்து
ஒன்றாய் காற்றில் எய்தாயா
எய்தாயா
கண்கள் சொக்க செய்தாயா
கையில் சாய சொல்வாயா
ஏனோ ஆச்சு வெப்பம் மூச்சு
வெட்கம் போயே போச்சு