
மொட்டு மொட்டு மலராத மொட்டு
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு
ஒட்டு ஒட்டு இதழோடு ஒட்டு
சிட்டு சிட்டு சிங்கார சிட்டு
ஆணழகா உன் அடிமை இங்கே
நீ தேன் அள்ளி தூவிட வா
தோளிரண்டில் உன் இளங்கிளி நான்
நீ தினம் தினம் கூடிட வா
மொட்டு மொட்டு மலராத மொட்டு
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு
ஹோய்...
தமிழ் தரும் சுவை என உன் வாய் மொழி கேட்டேன்
மதன் தரும் சுகம் என உன் பார்வையை பார்த்தேன்
உந்தன் கையில் பெண்ணாக வேண்டும்
முன்னும் பின்னும் பண்பாட வேண்டும்
ஒன்றும் ஒன்றும் மூன்றாக வேண்டும்
என்றும் நீயாய் நான் ஆக வேண்டும்
இலக்கணம் எனதுடலே வா நீ வா
இலக்கியம் உனதுருவே தா நீ தா
தேவா.......
ஆணழகா உன் அடிமை இங்கே
நீ தேன் அள்ளி தூவிட வா
தோளிரண்டில் உன் இளங்கிளி நான்
நீ தினம் தினம் கூடிட வா
எனை தொடு வரம் கொடு உயிர் வாழ்ந்திட கேட்டேன்
மலர் உடல் மணம் பெற தினம் தேவனை பார்த்தேன்
பெண்மை என்றும் உன்னோடு தஞ்சம்
பெண்ணில் இன்பம் கொண்டாடும் மன்றம்
முத்தம் என்னும் வித்தாடு நித்தம்
நித்தம் நித்தம் பித்தான சித்தம்
இளமையின் ரகசியமே வா நீ வா
இது தினம் அவசியமே தா நீ தா
தேவா..
ஆணழகா உன் அடிமை இங்கே
நீ தேன் அள்ளி தூவிட வா
தோளிரண்டில் உன் இளங்கிளி நான்
நீ தினம் தினம் கூடிட வா
மொட்டு மொட்டு மலராத மொட்டு
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு
ஒட்டு ஒட்டு இதழோடு ஒட்டு
சிட்டு சிட்டு சிங்கார சிட்டு
very nice and rare song...
ReplyDeletethanks for posting.
Thanks
ReplyDelete