கோல விழியம்மா ராஜா காளியம்மா
பளையதாயம்மா பங்காரு மாயம்மா
முத்து மாரியம்மா பத்ர காளியம்மா
முண்டக்கன்னியம்மா எங்க கண்ணியம்மா
குங்கும கோதையே அன்னை யசோதையே
செந்தூர தேவானை சிங்கார ரூபினி
அன்னை விசாலாட்சி சொவ்தாம்பா விருப்பாட்சி
சுந்தர நீலியே சௌந்தர வல்லியே
வல்லியம்மா எங்கள் அல்லியம்மா
தங்க செல்லியம்மா செல்ல கொள்ளியம்மா
அடி அங்களாம்மா எங்கள் செங்கலம்மா
அருள் முப்பதம்மா அனல் வெப்பதம்மா
சிங்காரி ஓங்காரி சங்கரி உமையத்தா
மண்மாரி பன்னாரி செல்லாயி சிலம்பாயி
மருவத்தூர் அம்மாவே ஓம் சக்தியே
ஓரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
கண் திறந்து பாரம்மா , வேறு துணை யாரம்மா ?
குதமில்லா ஓரு உத்தம நெஞ்சுக்கு
சோதனைகள் எதுக்கு ? - அவர்
கட்டிய தாலிக்கும் போட்டுக்கும் பூவுக்கும்
காவல் கொடு எனக்கு ..
நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை
நீ வந்து மற்றிடம்மா ...
மடியேந்தி பிச்சை கேட்கிறேன் - அம்மா
மறு வாழ்வு உன்னை கேட்கிறேன்
காணாத பொய் வழக்கு வீணாக வந்திருக்கு
வாதாட சாட்சி ஏதம்மா ?
ஊர் வழ ஆட்சி செய்யும் மீனாக்ஷி தேவியம்மா
நான் வாழ நீதி கூறம்மா
சோதனையை வேதனையை சேர்த்து விட்டேன் உன்னடியில்
சோகங்களை திரோகங்களை தீர்த்துவிடு என் வழியில்
வாழ்வரசி ஆவதற்கு தாலி தந்த கண்ணியம்மா
வாசல் வந்த பிள்ளை மனம் வாடலமா பொன்னியம்மா
அகிலாண்டேஸ்வரி சபை ஏறம்மா
அவர் மீது வீழ்ந்த பழி தீரம்மா
திருபதூர் கௌமாரி திருவானைக்கா அம்மா
மாங்காட்டு காமாக்ஷி மலையாள பகவதி
தஞ்சாவூர் மாரியே கண்யாகுமரியே
மலையனூர் செண்பகம் மயிலாப்பூர் கற்பகம்
கன்னிகா பரமேஸ்வரி அன்னையே ஜகதம்பா
துளுக்கனதம்மாவே துர்க்கை அம்மாவே
முக்குழி அம்மாவே வழங்கி அம்மாவே
எல்லை அம்மாவே கங்கை அம்மாவே
நாச்சியம்மா தங்க பேச்சியம்மா
அன்னை மூகாம்பிகா எங்கள் யோகம்பிகா
அடி அலமேலம்மா தாயே வரிக்கோலம்மா
துய தஞ்சையம்மா வீர படவேட்டம்மா
வைரவி பைரவி தேனாட்சி திருபட்சி
அம்மாயி ப்ரம்மாயி அழக்கம்மா கனகம்மா
அதி பராசக்தியே ......
ஓரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
கண் திறந்து பாரம்மா , வேறு துணை யாரம்மா ?
ஓயாத சத்தியமும் சாயாத சக்கரமும்
நீதானே பூமி மீதிலே ..
அத்தா நீ கண் திறந்து பத்தாலே வஞ்சனைகள்
வீழாதோ உந்தன் காலிலே ..
பெண்ணினங்கள் வேண்டுவது அன்னை உந்தன் குங்குமமே
குங்குமத்தில் நீ இருந்து காக்கணும் என் மங்கலமே
சத்தியத்தை காக்க உந்தன் சக்கரத்தை சுத்தி விடு
உக்கிரத்தில் நீ எழுந்து உண்மைக்கொரு வெற்றி கொடு
உன் நீதி பூமியில் தவறாகுமா ?
என் வாழ்வில் அது இன்னும் வெகு தூரமா ?
தாயே பெரியம்மா தாலி தரும் அம்மா
தெப்ப குலதம்மா தேரடி பூவம்மா
மங்களம் நீயம்மா மந்தவெளி அம்மா
அர்தனாரியம்மா அன்னை ஜோதியம்மா
வடிவுடையம்மாவே திரிப்புரசுந்தரி
வேற்காடு மாயம்மா கஸ்துரி தாயம்மா
உருமாறி உலகம்மா உருத்ரக்ஷா திலகம்மா
உண்ணாமுலை அம்மா பன்னாரி அம்மாவே
மகேஸ்வரி சர்ப்ப யாகெஸ்வரி
அடி லோகேஸ்வரி நல்ல யோகேஸ்வரி
சக்தி ஜெகதீச்வரி அன்னை பரமேஸ்வரி
எங்கள் புவனேஸ்வரி தாயே ராஜேஸ்வரி
அபிராமி சிவகாமி அருள்மாரி மகாமாயி
மமுண்டி சாமுண்டி பாஞ்சாலி அத்தாயீ
சோலையூர் மகாமாயி ஓம் சக்தி தாயே
Monday, April 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
So happy to read the lyrics of a pleading women addressed to all her favourite Goddesses to save her Husband from an illegal case foisted on him by her husbands enemies.
This song was cited by writer Ja. Deepaa in her serial "Thiraiyellam Sengap poo" In Ananda Vikatan makes a reference to this songs extraordinary appeal among South Indian Tamil women is well brought out by the writer.
Ironically That is the real Agenda of the Lyricist too.
Both have succeeded in reading the mind of illiterate / semi literate tamil women.
Another perspective is that men also understand this psychology & they liberally exploit their women folk.
Super lyrics
நல்ல ஒரு அருமையான பாடல்
Post a Comment