விழிகள் திறந்தால் நீ தானடா
விடியும் வெளிச்சம் நீ தானடா
இதயம் முழுதும் நீ தானடா
இரவின் விரகம் நீதானடா
எனது நதியே நீ தானடா
உனது படகு நான் தானடா
உயிரின் மழையும் நீதானடா
நனைந்து சிலிர்த்தேன் நான் தானடா
உடலின் கதவு நீதானடா
திறந்து நுழைந்து
நீ கொஞ்சம் உள்ளிருந்து என்னில்
வாழ வாடா
வண்டு மலர்ந்திருக்கும் பூக்கள் சிறகடிக்கும் காட்சி ஒன்று நெஞ்சில் தோன்றுதே
தேடி வந்து உனை தீண்டும் பூவிரலை
தாண்டி சென்றுவிட எண்ணாதே
இதழ் இனிக்கும் உடல் மணக்கும்
ஒரு மயக்கம்
மஞ்சள் ஜரிகை வெயில்
மாலை பொழுது இது
உன்னை நினைத்தபடி ஆடும் விழுது இது
முத்தம் கொடுத்த படி பாடும் பறவை இது
சேலை சிறகோடு வானில் விளையாட
அழைக்குதே அழைக்குதே
விழிகள் திறந்தால் நீ தானடா
விடியும் வெளிச்சம் நீ தானடா
இதயம் முழுதும் நீ தானடா
இரவின் விரகம் நீதானடா
உன்னை பார்த்த இடம் உன்னை பார்த்த சுகம்
மேகம் போல என்னை மூடுதே
முன்னும் பின்னும் உந்தன் மின்னல் பின்னி வர
சிந்தும் செல்ல மழை விடாதே
இந்த தவிப்பும் இந்த துடிப்பும் புது தொடக்கம்
கண்ணில் கனவு வந்து இரவை உடைக்கிறது
உன்னை சுமந்த மனம் வெளியில் துடிக்கிறது
உயிரும் உடலும் உந்தன் பெயரை அழைக்கிறது
காற்றில் உன் வாசம் எந்தன் மூச்சோடு
கலக்குதே கலக்குதே
விழிகள் திறந்தால் நீ தானடா
விடியும் வெளிச்சம் நீ தானடா
இதயம் முழுதும் நீ தானடா
இரவின் விரகம் நீதானடா