
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் மூளை வானம் ஜுவாலை மூட்டுதோ
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் மூளை வானம் ஜுவாலை மூட்டுதோ
என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் மூளை வானம் ஜுவாலை மூட்டுதோ
ஒரு மௌனம் பறவும் சிறு காதல் பொழுது
கிளியில் விழையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் இமையும் இசையில் எதுவும் இனிமையடி
வெண் மார்பில் படரும் உன் பார்வை திரவம்
இதயம் புதரில் சிதறி சிதறி வழிவதேன்
ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் அதிர்வது ஏன்
உருகாதே உயிரே விலகாதே மனதே
உன் காதல் வேரை காண வேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்த
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் மூளை வானம் ஜுவாலை மூட்டுதோ
பசை ஊறும் இதழும் பசி ஏறும் விரலும்
விரதம் விடுத்து இரையை விரையும் நேரம் இது
உயிரின் முனையில் மயிரின் இழையும் தூரம் அது
ஒரு வெள்ளை திரையாய் உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக இரவை திருடும் தாரிகையே
விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே
விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீளம் கோரி காதல் காணீர் துடிக்க துடிக்க
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் மூளை வானம் ஜுவாலை மூட்டுதோ
என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்
No comments:
Post a Comment