Monday, January 9, 2012
கிளிக்கூட்டில் பொத்தி வைத்து புலி வளர்த்தேன் இது வரையில்
கனவெல்லாம் பலிக்குதே கண் முன்னே நடக்குதே
வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே
வானவில் நிமிடங்கள் நடக்கிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிக்கிறதே
என்னை விட உயரத்தில் பறந்து சிகரம் தொட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாக பூப்பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கேயென்று என்று தினம்தோறும் நான் எதிர்ப்பார்த்த நாள் இன்று நடக்கின்றதே
கனவெல்லாம் பலிக்குதே கண் முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே கண் முன்னே நடக்குதே
நீ நடந்த காட்சி இன்னும் கண்களிலே
நாளை உன் பேரைச் சொல்லும் பெருமிதம் நெஞ்சினிலே
என் தோளைத் தாண்டி வளர்ந்ததனால் என் தோழன் நீயல்லவா
என் வேள்வியாவும் வென்றதனால் என் பாதி நீயல்லவா
சந்தோஷத் தேரில் தாவியேறி மனமொன்று மிதந்திட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாக பூப்பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கேயென்று என்று தினம்தோறும் நான் எதிர்ப்பார்த்த நாள் இன்று நடக்கின்றதே
கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே
கிளிக்கூட்டில் பொத்தி வைத்து புலி வளர்த்தேன் இது வரையில்
உலகத்தை நீ வென்று விடு உயிரிருக்கும் அது் வரையில்
என்னாளும் காவல் காப்பவன் நான் என் காவல் நீயல்லவா
எப்போதும் உன்னை நினைப்பவன் நான் என் தேடல் நீயல்லவா
என் ஆதி அந்தம் யாவும் இன்று ஆனந்தக் கண்ணீரில்
என் வானத்தில் ஒரு நட்சத்திரம் புதிதாக பூப்பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கேயென்று என்று தினம்தோறும் நான் எதிர்ப்பார்த்த நாள் இன்று நடக்கின்றதே
கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment