தேவ மல்லிகை பூவே பூவே தேனில் ஊறிடும் தீவே
பூவில் ஆடிடும் காற்றே காற்றே சிந்து செந்தமிழ் பாட்டே
நீ காதல் சித்திரமா என் கண்ணில் சொப்பனமா??
இது மோக மந்திரமா??? என்னை ஏய்க்கும் தந்திரமா??
அடி மானே மானே ஆசை தேனே வா என் விழிகளின் வழியே
பூவில் ஆடிடும் காற்றே காற்றே சிந்து செந்தமிழ் பாட்டே
தேவ மல்லிகை பூவே பூவே தேனில் ஊறிடும் தீவே
தென்றல் ஒருபுறம் மின்னல் ஒருபுறம்
பெண்ணில் தெரிகிறதே
திங்கள் ஒருபுறம் வெயில் ஒருபுறம்
கண்ணில் வருகிறதே
அள்ளும் ஒருபுறம் துள்ளும் ஒருபுறம்
இன்பம் வழிகிறதே
அச்சம் ஒருபுறம் வெட்கம் ஒருபுறம்
நெஞ்சில் எழுகிறதே
ஆடைகட்டி.. ஆடவந்த வானவில்லே
ஆசை என்னும் மாலை கட்டி வாடி இங்கே
காதல் என்னும் நாடகத்தின் மேடை இங்கே
காண வந்த இன்பம் என்னும் காட்சி எங்கே
இனி நானும் நீயும் நாளும் கூட
அடி மானே மானே ஆசை தேனே
வா என் விழிகளின் வழியே
பூவில் ஆடிடும் காற்றே காற்றே
சிந்து செந்தமிழ் பாட்டே
தேவ மல்லிகை பூவே பூவே
தேனில் ஊறிடும் தீவே
இது மோக மந்திரமா???
என்னை ஏய்க்கும் தந்திரமா??
நீ காதல் சித்திரமா
என் கண்ணில் சொப்பனமா??
அடி மானின் மானின் ஆசை தேனே வா
என் விழிகளின் வழியே
தேவ மல்லிகை பூவே பூவே
தேனில் ஊறிடும் தீவே
பூவில் ஆடிடும் காற்றே காற்றே
சிந்து செந்தமிழ் பாட்டே
அள்ளிகொடு. கதை சொல்லிகொடு என
அன்னக்கிளி வருமே
அந்திகலையது
சின்தைக்கினியது ஆசைப்படி வருமே
எட்டிபிடி எனை கட்டிபிடி என அஞ்சும் இடை வருமே
எங்கும் பிடி சுகம் பொங்கும் வடியேன கொஞ்சும் கிளி வருமே
காமன் அம்பை கண்ணிரண்டில் பூட்டுகின்றாய்
காதல் என்னும் தீயை நெஞ்சில் மூட்டுகின்றாய்
வாடை தன்னில் நீயும் என்னை வாட்டுகின்றாய்
வாலிபத்தின் ஆசை தன்னை மீட்டுகின்றாய்
என் ராஜா சூடும் ரோஜா பூவே
என் மானின் மானின் ஆசை தேனே
வா என் விழிகளின் வழியே
தேவ மல்லிகை பூவே பூவே
தேனில் ஊறிடும் தீவே
பூவில் ஆடிடும் காற்றே காற்றே
சிந்து செந்தமிழ் பாட்டே
நீ காதல் சித்திரமா
என் கண்ணில் சொப்பனமா??
இது மோக மந்திரமா???
என்னை ஏய்க்கும் தந்திரமா??
அடி மானே மானே ஆசை தேனே
வா என் விழிகளின் வழியே
பூவில் ஆடிடும் காற்றே காற்றே
சிந்து செந்தமிழ் பாட்டே
தேவ மல்லிகை பூவே பூவே
தேனில் ஊறிடும் தீவே
No comments:
Post a Comment