ஓ கிருஷ்ணா
என் ஆசை ராதா
என் ஆசை ராதா என் அன்பு ராதா
என்றென்றும் நீயே என் ஜீவன் தானே
கண்ணன் அழைக்கின்றேனே யமுனை கரைக்கு வா நீ
என் ஆசை கண்ணா என் அன்பு கண்ணா
என்றென்றும் நீயே என் உயிர் கண்ணா
ராதை அழைக்கின்றேனே யமுனை கரைக்கு வா நீ
ஓ ராதா
ஓ கிருஷ்ணா
ஆதவன் நீ என்றால் ஒளிக்கதிர் நான்தானே
ஆதவன் நீ என்றால் ஒளிக்கதிர் நான்தானே
விண்மீன்கள் நீ என்றால் முழு மதி நானே
நம் வாழ்வில் இனிமேல் என்றும் ஆனந்தம் தானே
என் ஆசை கண்ணா என் அன்பு கண்ணா
என்றென்றும் நீயே என் ஜீவன் தானே
ஏழேழு ஜென்மமுமாய் உனக்கென்றும் நான் தானே
ஏழேழு ஜென்மமுமாய் உனக்கென்றும் நான் தானே
என் வாழ்வில் எது வந்தாலும்
எந்தன் துணை நீயே
உன்னை விட்டு நானும் நொடியும் பிரிந்தே வாழ்ந்திட மாட்டேனே
என் ஆசை ராதா என் அன்பு ராதா
என்றென்றும் நீயே என் ஜீவன் தானே
அன்புடன் நாமும் யமுனை கரையில் சந்திப்போமே
No comments:
Post a Comment