மந்திர கண்ணிலே
காதல் மின்னுதே
புன்னகை ஓவியம் நீயே
பின்னலை காட்சிகள்
முன்னே தோன்றுதே
நீர்த்திடா வண்ணங்கள் நீயே
காலை நேர தூறல் பொலிவும் நீயே
சாலை ஓர கள்ள வளைவும் நீயே
உள்ளம் போகும் செல்ல பயணம் நீதானே
தாவுகின்ற புள்ளிமானின் மேலே
பாயுகின்ற வெய்யில் கீற்று போலெ
நெஞ்சின் மீது நெஞ்சின் மீது வந்தாயே
வாலிபம் நனைத்தவன் நீயே
நாழிகள் எல்லாம் நீதானே
கவிதையில் சொன்னால் காதல் புரியுமோ
பொன் நிற மாலை சரியா
மெல்லொலி இரவு சரிதானா
காதலை சொல்லும் காலம் எதுவோ
என் பெயரை மெல்ல மறந்தேன்
உன் பெயரால் என்னை அழைத்தேன்
உன் தோளில் சாயும்போது
என் கனவை உன்னில் வரைந்தேன்
நடைபாதை பூக்களை போல்
பொது வெளியில் ஆசை வளர்த்தேன்
இளமார்பு வழிந்திடாமல்
உன் வாசம் எண்ணில் நிறைத்தேன்
வானம் குளியலறை பூந்திட
மேகம் உன்னை தெளிக்க
வாழ்வே வானவில் ஆகிறதே
தாவுகின்ற புள்ளிமானின் மேலே
பாயுகின்ற வெய்யில் கீற்று போலெ
நெஞ்சின் மீது நெஞ்சின் மீது வந்தாயே
பாதி மனதில் உன்னை பிரியும் வேலை
இதழின் நுனியில் இதயம் துடிக்கும் தொல்லை
வார்த்தை இன்றி மூர்ச்சையாகி போவேனே
வாலிபம் நனைத்தவன் நீயே
நாழிகை எல்லாம் நீதானே
கவிதையில் சொன்னால் காதல் புரியுமோ
சந்திய கரையிலே
காதல் நுரைக்குதே
கண்களில் காண்பது மெய்யா
கொஞ்சும் காட்சியாய்
கடலே சாட்சியாய்
காதலை சொன்னதும் நீயா
வாலிபம் நனைத்தவன் நீயே
நாழிகை எல்லாம் நீதானே
நாடகம் ஆடி தீர்த்தாய் மாயனே
பௌர்ணமி நிலவுகள் வேண்டாம்
ஆயிரம் பிறவிகள் வேண்டாமே
காதலின் முதலாம் ஸ்பரிசம் போதுமே
No comments:
Post a Comment