ஒத்தயடி பாதையில தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன்
சந்தன மாலை அள்ளுது ஆள வாசம் ஏறுது
என் கிளி மேல சங்கிலி போல சேர தோணுது
சக்கர ஆலை சொக்குது ஆள
மாலை மாத்த மாமன் வரட்டுமா
கண்மணியே….
வழியில பூத்த சாமந்தி நீயே
விழியில சேத்த பூங்கொத்து நீயே
அடியே அடியே பூங்கொடியே
கவலை மறக்கும் தாய் மடியே
அழகே அழகே பெண்ணழகே
தரையில் நடக்கும் தேரழகே
நிழலாதான் பின்னால நா ஓடி வந்தேனே
ஒரு வாட்டி என்ன பாரேன் மா
ஒத்தயடி பாதையில தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன்
பல முறை நீயும் பாக்காம போன
இரும்புக்கு மேல துருவென ஆனேன்
உசுரு உனக்கே நேந்து விட்டேன்
இருந்தும் நெருங்க பயந்துக்கிட்டேன்
உயிரே உயிரே என் உயிரே
உலகம் நீதான் வா உயிரே
மனசெல்லாம் கண்ணாடி
ஒடைக்காத பந்தாடி
வதைக்காத கண்ணே கண்மணியே
ஒத்தயடி பாதையில தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுறேன்
நெஞ்சுல வீசும் கண்மணி வாசம்
காட்டுசெண்பகமே
சங்கதி பேசும் கண்களும் கூசும்
காதல் சந்தனமே
பறவை போல பறந்து போக கூட சேர்ந்து நீயும் வருவியா
கண்மணியே… கொஞ்சிடவே…
No comments:
Post a Comment