Friday, February 6, 2009

என் நாயகா என்னைப் பிரிகையில் என் ஞாபகம் தலைக்காட்டுமா உன் ஆண்மையும் தடுமாறுமா பிற பெண்கள் மேல் மனம் போகுமா


ஆரிய உதடுகள் உன்னது திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே
இதில் யார் தோல்வியுறும் போதும்
அது தான் வெற்றி என்றாகும்
இதில் நீ வெற்றி பெற வேண்டும்
மன கிடங்குகள் தீப்பற்றி தித்திக்கணும்

எத்தனை உள்ளது பெண்ணில்
அட எது மிக பிடித்து என்னில்
பகல் பொழுதின் பேரழகா ராத்திரியின் ஓர் அழகா
மின்னல்கள் சடுகுடு ஆடும் கண்ணா கண்ணா
மேலாடை மேகம் மூடும் நெஞ்சா நெஞ்சா

ஒவ்வொரு பாகமும் பிடிக்கும்
உன் உணர்ச்சியின் தீவிரம் பிடிக்கும்
மோகம் வரும் தருணங்களில்
முனகல் இடும் ஒலி பிடிக்கும்
கட்டில் மேல் எல்லாம் கலைந்த பின்னும் பின்னும்
கலையாத கொலுசு ரொம்பப் பிடிக்கும் பிடிக்கும்

என் நாயகா என்னைப் பிரிகையில்
என் ஞாபகம் தலைக்காட்டுமா
உன் ஆண்மையும் தடுமாறுமா
பிற பெண்கள் மேல் மனம் போகுமா

கண்களே நீயாய்ப் போனால்
வேறு பார்வை வருமா


தேவதை புன்னகை செய்தால்
சிறு தேய்பிறை முழு நிலவாகும்
குறை குடமாய் நான் இருந்தேன்
நிறை குடமாய் ஏன் நிறைந்தேன்
ஊனோடு மழையாய் வந்து பொழிந்தாய் பொழிந்தாய்
உயிரெல்லாம் ஓடி ஓடி நிறைந்தாய் நிறைந்தாய்

ஜீவித நதியென விரைந்தாய்
என் ஜீவனின் பள்ளத்தில் நிறைந்தாய்
பிறவியினை தாய் கொடுத்தாள்
பிறந்த பலன் நீ கொடுத்தாய்
ஆணுக்கு முழுமை என்ன பெண்தான் பெண்தான்
பெண்ணுக்கு முழுமை என்ன ஆண்தான் ஆண்தான்
அடி காற்றிலே வான் நிறையுது
நம் காதலில் உயிர் நிறையுது
வளர் ஜோதியே எந்தன் பாதியே
நீ என்ன தான் எதிர்பார்கிறாய்
ஜீவனின் மையம் தேடி கைகள் மீண்டும் தொடுமா

No comments: