
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது
பள்ளி கொள்ள வாடி அழகே
சாமத்தில் தருவேன் வாய்யா
சுல்தானே சுல்தானே சுல்தானே
சுல்தானே ..
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
இந்த இளம் கிளி போல்
சந்தையிலே எனக்கு
இன்றுவரை சிக்கவில்லையே
என் அழகை ருசிக்க என் நெருப்பை அணைக்க
இளைஞனும் கிட்டவில்லையே
டில்லி எல்லாம் தேடி தேடி உனை கண்டேனே
பாலில் விழும் சீனி போல எனை தந்தேனே
ஆடை மூடும் ஜாதி பூவின் அங்கம் பார்த்தேனே
அங்கே சொர்க்கம் இல்லை இல்லை இங்கே பார்த்தேனே
சுல்தானே சுல்தானே சுல்தானே
சுல்தானே ..
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
கொஞ்சி கொஞ்சி எடுத்து
நெஞ்சில் மெல்ல அணைத்து
என் மனதை திருடிக்கொண்டாய்
புத்தகத்தில் இருக்கும் உத்திகளை படித்தா
காதலிக்க பழகி கொண்டாய்
புத்தகத்தில் இல்லா இன்பம் கற்று வைப்போமா
முத்தம் தரா இடத்தை கண்டு முத்தம் வைப்போமா
ஆசை என்னும் அமுத ஊற்றிலே ஆடிப்பார்ப்போமா
ஆணில் பெண்ணை பெண்ணில் ஆணை
தேடி தீர்ப்போமா
சுல்தானே சுல்தானே சுல்தானே
சுல்தானே ..
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
பள்ளி கொள்ள வாடி அழகே
சாமத்தில் தருவேன் வாய்யா
சுல்தானே சுல்தானே சுல்தானே
சுல்தானே ..
No comments:
Post a Comment