Wednesday, March 30, 2016

ஏட்டில் இல்லாதது என் கதை தான் யாரும் சொல்லாதது என் நிலை தான்



வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
ஏட்டில் இல்லாதது என் கதை தான்
யாரும் சொல்லாதது என் நிலை தான்
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே


மான் ஒன்று துள்ளி தான் வாழ்ந்த வீடு
ஆண் சிங்கம் ஒன்று அரசாண்ட காடு
அம்மாடி அது தான் பொல்லாதது
ஆனாலும் மான் மேல் அன்பானது
கல்யாண மாலை தான் மான் போட
சந்தோஷ ஊஞ்சலில் சேர்ந்தாட
பாயும் சிங்கம் கூட
பழைய வாழ்க்கை மாற


வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே


தான் போன போக்கில் போகாது சிங்கம்
மான் போட்ட கோட்டை தாண்டாது என்றும்
பெண் மானின் நெஞ்சம் நம்பாதது
சந்தேகம் இன்று உண்டானது
முள் மீது நான் தூங்கும் கோலம்தான்
முன்னாளில் நான் செய்த பாவம்தான்
மானுக்காக வாடும் மனதும் ஏங்கி பாடும்

வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
ஏட்டில் இல்லாதது என் கதைதான்
யாரும் சொல்லாதது என் நிலைதான்
வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் ம் ம் ம் ம்