Sunday, February 12, 2023

உன்னை எனக்கு ரொம்பப் புடிக்கும் சொல்லுறத கேளு கண்ணு முழிச்சா உன்னை நெனச்சு சுத்துது என் காலு


எளந்தாரி சொல்லு என்ன வேணும்
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்
உனப் பாத்தா மல்லு கட்டத் தோணும்
ஒதுங்காம ஒத்துக் கொள்ளு போதும்
வெரசா தொடவா 
முழுசா கெடவா
நெருங்காம தூர நின்னே நெல்லு குத்தாத

எளந்தாரி சொல்லு என்ன வேணும்
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்
உனப் பாத்தா மல்லு கட்டத் தோணும்
ஒதுங்காம ஒத்துக் கொள்ளு போதும்

உன்னை எனக்கு ரொம்பப் புடிக்கும்
சொல்லுறத கேளு
கண்ணு முழிச்சா உன்னை நெனச்சு
சுத்துது என் காலு


கொத்துக் கறி போல நீயும் ஏன்
என்ன குடை சாய்க்குற
வெக்கயில தூரல் மாதிரி
நீ குறுக பாக்குற
கருவாட்டப் பாத்தா வட்டம் போடும் காக்கா
அது போல நானே ஒண்ணா சேரும் வாழ்க்கை 
மனசால என நீயும் மஞ்சக் குளிக்க வை


இளந்தாரி சொல்லு என்ன வேணும்
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்

நெஞ்ச பொளந்து உள்ள இருக்கும்
உன்னை நித்தம் பாப்பேன்
உச்சந்தலையில் அம்மி அரைக்கும்
முத்தமிட கேப்பேன்
மெத்தையில தூங்கிடாம நீ
வித்தைகள காட்டிடு
கையில் உள்ள ரேகை தேயவே
கட்டிக் கொள்ள பாத்திடு
உனக்காகத் தானே உப்பு புளி காரம்
ஒதுக்காம வாங்கி திங்குது என் தேகம்
தலை வாழை  இலை போட்டு தண்ணி தெளிச்சு வை

இளந்தாரி சொல்லு என்ன வேணும்
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்
வெரசா தொடவா முழுசா கெடவா
நெருங்காம தூர நின்னே நெல்லு குத்தாத

இளந்தாரி ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
தருவேனே.ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

இளந்தாரி