Saturday, March 25, 2023

இதயம் முழுதும் நீ தானடா

 


விழிகள் திறந்தால் நீ தானடா

 விடியும் வெளிச்சம் நீ தானடா

இதயம் முழுதும் நீ தானடா 

இரவின் விரகம் நீதானடா

எனது  நதியே நீ தானடா 

உனது படகு நான் தானடா 

உயிரின் மழையும் நீதானடா 

நனைந்து சிலிர்த்தேன் நான் தானடா  

உடலின் கதவு நீதானடா 

திறந்து நுழைந்து

நீ கொஞ்சம் உள்ளிருந்து என்னில்

வாழ வாடா 


வண்டு மலர்ந்திருக்கும் பூக்கள் சிறகடிக்கும் காட்சி ஒன்று நெஞ்சில் தோன்றுதே 

தேடி வந்து உனை தீண்டும் பூவிரலை 

தாண்டி சென்றுவிட எண்ணாதே 

இதழ் இனிக்கும் உடல் மணக்கும் 

ஒரு மயக்கம் 

மஞ்சள் ஜரிகை வெயில் 

மாலை பொழுது இது 

உன்னை நினைத்தபடி ஆடும் விழுது இது 

முத்தம் கொடுத்த படி பாடும் பறவை இது 

சேலை சிறகோடு வானில் விளையாட 

 அழைக்குதே அழைக்குதே 


விழிகள் திறந்தால் நீ தானடா

 விடியும் வெளிச்சம் நீ தானடா

இதயம் முழுதும் நீ தானடா 

இரவின் விரகம் நீதானடா 



உன்னை பார்த்த இடம் உன்னை பார்த்த சுகம் 

மேகம் போல என்னை மூடுதே  

முன்னும் பின்னும் உந்தன் மின்னல்  பின்னி வர 

சிந்தும் செல்ல மழை விடாதே 

இந்த தவிப்பும் இந்த துடிப்பும் புது தொடக்கம் 

கண்ணில் கனவு வந்து இரவை உடைக்கிறது 

உன்னை சுமந்த மனம் வெளியில் துடிக்கிறது 

உயிரும் உடலும் உந்தன் பெயரை அழைக்கிறது 

காற்றில் உன் வாசம் எந்தன் மூச்சோடு 

கலக்குதே கலக்குதே

விழிகள் திறந்தால் நீ தானடா

விடியும் வெளிச்சம் நீ தானடா

இதயம் முழுதும் நீ தானடா 

இரவின் விரகம் நீதானடா


















Wednesday, March 1, 2023

வெண் நீலக்கண்கள் உள்ளாக நின்று என்னோடு பேசும் உல்லாசம் கண்டு


கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும்போதும் உறங்கும்போதும்
எண்ணம் முழுதும் கண்ணன்தானே
கண்ணா... கண்ணா...


கண்ணன்தானே... கண்ணன்தானே


ராதாவின் ஜாடை ரோஜாவின் வாடை
அன்னத்தின் பேடை நானாடும் மேடை
செந்தூர ரேகை மின்னாமல் மின்னும்
சிங்காரத் தோகை நீ எந்தன் கண்ணு

கண்ணன் மணிவண்ணன் திருவாய்மொழி
உன்னால் மனமெங்கும் யமுனா நதி
கண்ணன் மணிவண்ணன் திருவாய்மொழி
உன்னால் மனமெங்கும் யமுனா நதி
கண்ணா உன்னை மறப்பேனோ
நான் உன்னை மறப்பேனோ


வெண் நீலக்கண்கள் உள்ளாக நின்று
என்னோடு பேசும் உல்லாசம் கண்டு

நாளாக ஆக தாளாது கண்ணா
நீயில்லை என்றால் நானென்ன பெண்ணா

கங்கா நதி ரங்கா வரும் மார்கழி
உன் கை அதில் என் கை அதுதான் வழி
கங்கா நதி ரங்கா வரும் மார்கழி
உன் கை அதில் என் கை அதுதான் வழி

கண்ணே உன்னை மறப்பேனோ..
நான் உன்னை மறப்பேனோ

கண்ணா முகுந்தா முராரே
ஜெய கண்ணா முகுந்தா முராரே
கண்ணா முகுந்தா முராரே
ஜெய கண்ணா முகுந்தா முராரே
கண்ணா முகுந்தா முராரே
ஜெய கண்ணா முகுந்தா முராரே