Wednesday, March 1, 2023

வெண் நீலக்கண்கள் உள்ளாக நின்று என்னோடு பேசும் உல்லாசம் கண்டு


கண்ணனை நினைக்காத நாளில்லையே
காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும்போதும் உறங்கும்போதும்
எண்ணம் முழுதும் கண்ணன்தானே
கண்ணா... கண்ணா...


கண்ணன்தானே... கண்ணன்தானே


ராதாவின் ஜாடை ரோஜாவின் வாடை
அன்னத்தின் பேடை நானாடும் மேடை
செந்தூர ரேகை மின்னாமல் மின்னும்
சிங்காரத் தோகை நீ எந்தன் கண்ணு

கண்ணன் மணிவண்ணன் திருவாய்மொழி
உன்னால் மனமெங்கும் யமுனா நதி
கண்ணன் மணிவண்ணன் திருவாய்மொழி
உன்னால் மனமெங்கும் யமுனா நதி
கண்ணா உன்னை மறப்பேனோ
நான் உன்னை மறப்பேனோ


வெண் நீலக்கண்கள் உள்ளாக நின்று
என்னோடு பேசும் உல்லாசம் கண்டு

நாளாக ஆக தாளாது கண்ணா
நீயில்லை என்றால் நானென்ன பெண்ணா

கங்கா நதி ரங்கா வரும் மார்கழி
உன் கை அதில் என் கை அதுதான் வழி
கங்கா நதி ரங்கா வரும் மார்கழி
உன் கை அதில் என் கை அதுதான் வழி

கண்ணே உன்னை மறப்பேனோ..
நான் உன்னை மறப்பேனோ

கண்ணா முகுந்தா முராரே
ஜெய கண்ணா முகுந்தா முராரே
கண்ணா முகுந்தா முராரே
ஜெய கண்ணா முகுந்தா முராரே
கண்ணா முகுந்தா முராரே
ஜெய கண்ணா முகுந்தா முராரே

No comments: