Wednesday, December 1, 2010

நினைவுகளோடு வாழ்வது எந்தன் காதல் சொல்லுமடி


முழுமதி முழுமதி நிலவை கேளடி
முழுவதும் முழுவதும் உண்மை தானடி
காதலில் கரைந்தவன் என் போல் யாரடியோ ....

எத்தனை எத்தனை காதல் பார்த்தது
எத்தனை எத்தனை கனவை கேட்டது
என் போல் யாருமே இல்லை என்றது இங்கே

நிலவுக்கு நிலவுக்கு நன்றே தெரிந்தது
உயிருக்கு உயிருக்கு இன்றே புரிந்தது
கனவுக்கு கனவுக்கு சிறகுகள் முளைத்தது
நிலவினை உரசிட நினைவுகள் பறக்குது

முழுமதி முழுமதி நிலவை கேளடி
முழுவதும் முழுவதும் உண்மை தானடி
காதலில் கரைந்தவன் என் போல் யாரடியோ ....


காவிய காதல் ஆயிரம் கதைகள் பூமிக்கு சொன்னதடி
நினைவுகளோடு வாழ்வது எந்தன் காதல் சொல்லுமடி
உலகத்தில் சிறந்த இடம் அதை தேடி
உந்தன் இதயம் வந்தேனே வந்தேனே
உன் விரல் கோர்க்கும் நிமிடத்தில்
எந்தன் தனிமைக்கு தனிமை தந்தேனே தந்தேனே

முழுமதி முழுமதி நிலவை கேளடி
முழுவதும் முழுவதும் உண்மை தானடி
காதலில் கரைந்தவன் என் போல் யாரடியோ ....


நதியின் காதலை கரையிடம் வந்து அலைகள் சொன்னதடி
மறுபடி மறுபடி அதனை கரைகள் கேட்குதடி
நதியினில் நீந்தும் நிலவிதை பார்த்து
வெளிச்சத்தை அள்ளி சிந்தாதோ சிந்தாதோ
காலையில் நமது காதலை ஏந்தி
வானத்தை பிரிந்து செல்லாதோ செல்லாதோ

முழுமதி முழுமதி நிலவை கேளடி
முழுவதும் முழுவதும் உண்மை தானடி
காதலில் கரைந்தவன் என் போல் யாரடியோ ....

நிலவுக்கு நிலவுக்கு நன்றே தெரிந்தது
உயிருக்கு உயிருக்கு இன்றே புரிந்தது
கனவுக்கு கனவுக்கு சிறகுகள் முளைத்தது
நிலவினை உரசிட நினைவுகள் பறக்குது

முழுமதி முழுமதி நிலவும் சொன்னது
முழுவதும் முழுவதும் உண்மை தானது
உன் போல் யாரும் இல்லை என்றது

2 comments:

கலையன்பன் said...

அழகான பாடலே!
அதை தெளிவாய் பதிந்துள்ளமைக்கு பாராட்டு!

http://kalaiyanban.blogspot.com/2010/12/azhagaana-thangkachiye.html

இசை காதலி said...

Nandri Kalaiyanban