Thursday, February 17, 2011

ஏனடா பொய்க் கோபம் கொண்டாய் .... காதலில் ஏனோ எனை பழி வாங்கினாய்


துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம்
நீ அருகினில் வந்து நின்றால்
காதலே காதலே சுகம் தானா

மெல்ல மெல்ல திறக்கிற ரோஜா
என் உயிரைக் கொள்ளை கொண்டாள்
வானிலே பறவை ஆனேனே

ஏனடா பொய்க் கோபம் கொண்டாய்
என் மனம் உடைகின்றது ரெண்டாய்
காவிரி ஆறே நீ கரை தாண்டினாய்
காதலில் ஏனோ எனை பழி வாங்கினாய்
ஓ ஹோ..

துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம்
நீ அருகினில் வந்து நின்றால்
காதலே காதலே சுகம் தானா

ஓ ஹோ..
மூக்குத்தியை பார்த்தாலே
மூச்சு பறிப்போகும்
முத்தம் ஒன்று தந்தாலே
எல்லாம் சரி ஆகும்
ஒரு கண்ணில் பார்த்தேனே
கன்னி மனம் தாங்காதே
மேனி தொடும் நொடியெல்லாம்
மின்சாரமாய் தாக்காதே
நீதான் எந்தன் சுவாசம் ஓ..

துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம்
நீ அருகினில் வந்து நின்றால்
காதலே காதலே சுகம் தானா


கோடை வெயில் கூட
மோசமில்லை பெண்ணே
கொஞ்சும் உந்தன் பார்வை
வாட்டியது என்னை
வெட்கப்பட்டு முகமெல்லாம்
வேர்வைத்துளி வழிந்ததோ
பக்கம் வந்து நின்றேனே
உந்தன் கையால் பூச்சூட
காதல் காற்றே வாழ்க

துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம்
நீ அருகினில் வந்து நின்றால்
காதலே காதலே சுகம் தானா

மெல்ல மெல்ல திறக்கிற ரோஜா
என் உயிரைக் கொள்ளை கொண்டாள்
வானிலே பறவை ஆனேனே

ஏனடா பொய்க் கோபம் கொண்டாய்
என் மனம் உடைகின்றது ரெண்டாய்
காவிரி ஆறே நீ கரை தாண்டினாய்
காதலில் ஏனோ எனை பழி வாங்கினாய்
ஓ ஹோ..

துள்ளி துள்ளி குதிக்குது நெஞ்சம்
நீ அருகினில் வந்து நின்றால்
காதலே காதலே சுகம் தானா

No comments: