Sunday, August 31, 2014

கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா , நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே

 

முழுமதி அவளது முகாமாகும்
மல்லிகா அவளது மணமாகும்
மின்னல்கள்  அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது குணமாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான் குட்டி   அவளது நடையாகும்
அவளை ஒரு நாள்  நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்த்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்  
 
ஓஹோ
 
முழுமதி அவளது முகாமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான் குட்டி   அவளது நடையாகும்
 
கால் தடமே பதியாது கடல் தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடி  ஆக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத  மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரண்ம் புரிந்தும்  மௌனத்தில் இருந்தேன்
ஒரு கரையாக அவள் இருக்க மறு கரையாக நான் இருக்க
இடையில் தனிமை தழும்புததே நதியாக
கானல் நீரில்  மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே
  
ஒஹோ
 
முழுமதி அவளது முகாமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான் குட்டி   அவளது நடையாகும்

அமைதியுடன் அவள் வந்தாள் விரல்களை நான் பிடித்துக்கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலை கோத மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும்  இல்லை கசந்தது நிமிடம்
அருகில் இருந்தாள்  ஒரு நிமிடம் தொலைவில்  தெரிந்தாள்  மறு நிமிடம்
கண்களில் மறையும் பொய் மான் போல் ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே  திரை ஒன்று தெரிந்தது எதிரினிலே
முகமூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா

 
ஒஹோ
 
முழுமதி அவளது முகாமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான் குட்டி   அவளது நடையாகும்
 
 
 

No comments: