Monday, February 13, 2017

நீ பிரியா வரம் தந்தால் அதுவே போதும்



நிதா நிதா நிதானமாக யோசித்தாலும்  
 நில்லா நில்லா நில்லாமலோடி யோசித்தாலும்  
 நீதான் மனம் தேடும் அன்பாழன்    
 பூவாய் எனை ஏந்தும் பூபாலன்  
 என் மடியின் மணவாளன்  எனத்தோன்றுதே
 செந்தூரா     
 சேர்ந்தே செல்வோம் செந்தூரா   
 செங்காந்தல் பூ உன் தேரா
 மாறன் அம்பு ஐந்தும் வைத்து  
 ஒன்றாய் காற்றில் எய்தாயா  
 செந்தூரா    
 சேர்ந்தே செல்வோம் செந்தூரா   
 செங்காந்தல் பூ உன் தேரா    
 மாறன் அம்பு ஐந்தும் வைத்து  
 ஒன்றாய் காற்றில் எய்தாயா  


 நடக்கையில் அணைத்தவாறு போகவேண்டும்  
 விரல்களை பிணைத்தவாறு பேசவேண்டும்  
 காலை எழும்போது நீ வேண்டும்  
 தூக்கம் வரும்போது தோள் வேண்டும்  
 நீ பிரியா வரம் தந்தால் அதுவே போதும்
   
செந்தூரா    
 சேர்ந்தே செல்வோம் செந்தூரா   
 செங்காந்தல் பூ உன் தேரா    
 மாறன் அம்பு ஐந்தும் வைத்து  
 ஒன்றாய் காற்றில் எய்தாயா 

 மழையின் இரவில் ஒரு குடையென நடப்போமா  
 மரத்தின் அடியில் மணிகணக்கினில் கதைப்போமா  
 பாடல் கேட்போமா பாடி பார்ப்போமா  
 மூழ்கத்தான் வேண்டாமா…   
 யாரும் காணாத இன்பம் எல்லாமே  
 கையில் வந்தே விழுமா………  
 நீ இன்றி இனி என்னால் இருந்திட முடிந்திடுமா   
   
செந்தூரா    
 சேர்ந்தே செல்வோம் செந்தூரா   
 செங்காந்தல் பூ உன் தேரா    
 மாறன் அம்பு ஐந்தும் வைத்து  
 ஒன்றாய் காற்றில் எய்தாயா 

 அலைந்து நான் கலைத்துப்போகும் போது  
 மெலிந்து நான் இளைத்து போவதாக சொல்லி விட்டு  
 நலபாகம் செய்வாயா  
 பொய்யாய் சில நேரம் நீ  வைவாயா
 நான் தொலைந்தால் உனை சேரும் வழி சொல்வாயா 

செந்தூரா    
 சேர்ந்தே செல்வோம் செந்தூரா   
 செங்காந்தல் பூ உன் தேரா    
 மாறன் அம்பு ஐந்தும் வைத்து  
 ஒன்றாய் காற்றில் எய்தாயா 

எய்தாயா 
கண்கள் சொக்க செய்தாயா
கையில் சாய சொல்வாயா
ஏனோ ஆச்சு வெப்பம் மூச்சு
வெட்கம் போயே போச்சு

No comments: