Saturday, November 16, 2019

அன்று நிழலாடும் விழியோடும் ஆடினானே என்றும் கண்ணில் நின்றாட சொல்லடி






அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி

என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி

வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி

வேலன் இல்லாமல் தோகை ஏதடி


கண்கள் சரவணன் சூடிடும் மாலை கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை

பெண் என பூமியில் பிறந்த பின்னாலே வேலை வணங்காமல் வேறென்ன வேலை

நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே நிழலாடும் விழியோடும் ஆடினானே

அன்று நிழலாடும் விழியோடும் ஆடினானே

என்றும் கண்ணில் நின்றாட சொல்லடி


மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம் மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்

நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ

நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ

காலம் மாறினால் காதலும் மாறுமோ (2)

மாறாது மாறாது இறைவன் ஆணை (2)


இந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி

இன்னும் சேரும் நாள் பார்ப்பதென்னடி

வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி

தோகை இல்லாமல் வேலன் ஏதடி


அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி




என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி

No comments: