Friday, August 7, 2020

நாள்முழுக்க உன்னை கண்கள் தின்ற பின்னும் உந்தன் சொற்கள் பெய்து நான் நனைந்த பின்னும்




போதவில்லையே போதவில்லையேஉன்னைப்போல போதை ஏதும் இல்லையே
போதவில்லையே போதவில்லையே
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே
நாள்முழுக்க உன்னை கண்கள் தின்ற பின்னும்
உந்தன் சொற்கள் பெய்து நான் நனைந்த பின்னும்
இன்னும் இன்னும் பக்கம் வந்தும்
கிட்டத்தட்ட ஒட்டிக்கொண்டும்
மூச்சில் தீயும் பற்றிக் கொண்டும்....ம்ம்
போதவில்லையே போதவில்லையே
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே
போதவில்லையே போதவில்லையே
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே


தேநீரை நாம் உறிஞ்சும் மாலை போதாதே
கை கோர்த்து போக இந்த சாலை போதாதே
என்னென்ன விண்கலம் நான் சொல்லவே
கைபேசி மின்கலம் போதாதடி
உன் அழகை பருக என் கண்கள் போதாதடி
என் நிலையை எழுத வானங்கள் போதாதடி
நேரமுல்லை பின் இழுத்தும்
வாரம் எட்டு நாள் கொடுத்தும்
சுற்றும் பூமியை தடுத்துமே....ஹே...
போதவில்லையே போதவில்லையே
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே




கூழாங்கல் கூவுகின்ற கானம் போதாதே
கூசாமல் கூடுகின்ற நாணம் போதாதே
தொண்ணூறு ஆண்டுகள் நீ கேட்கிறாய்
ஜென்மங்கள் ஆயிரம் போதாதடா
நம் கனவை செதுக்க பேரண்டம் போதாதடா
இவ்வுலகில் இருக்கும் தெய்வங்கள் போதாதடா
குட்டிக்குட்டி கோபம் கொண்டும்
கட்டி முட்டி மோதிக் கொண்டும்
திட்டித்திட்டி தீர்த்த பின்னும்....ம்ம்

போதவில்லையே போதவில்லையே

உன்னைப்போல போதை ஏதும் இல்லையே
சுவாசப் பையில் உந்தன்
வாசம் பூட்டி வைத்தும்
நெஞ்ச ஏட்டில் எங்கும்
உன் பேரை தீட்டி வைத்தும்
பாடல் தீர்ந்து போன பின்னும்
மௌனம் கூட தீர்ந்த பின்னும்
கோடி முத்தம் வைத்த பின்னும்....ம்ம்
போதவில்லையே போதவில்லையே
உன்னைப்போல போதை ஏதும் இல்லையே




No comments: