Sunday, July 11, 2010

யார் என்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல் இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே


தா... ந தோம் தா ந நன
தா... ந தோம் தா ந நன
தா... ந தோம் தா ந நன
தனான தோம் தோம்
தனான தோம் தோம்

பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே
புலரும் காலை பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போகவில்லையே
உனது அருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே
இது எதுவோ .....
இரவும் விடியவில்லையே
அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
பூந்தளிரே

தா... ந தோம் தா ந நன
தா... ந தோம் தா ந நன
தா... ந தோம் தா ந நன
தனான தோம் தோம்
தனான தோம் தோம்


வார்த்தை தேவையில்லை
வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழி பேசுமே
நேற்று தேவை இல்லை
நாளை தேவை இல்லை
இன்று இந்த நொடி போதுமே

வேரின்றி விதை இன்றி
விண் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம்
பூப்பூக்குதே

வாள் இன்றி போர் இன்றி
வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள்
எனை வெல்லுதே

இதயம் முழுதும் இருக்கும்
இந்த தயக்கம் எங்கு கொண்டு நிருத்தும்
இதை அறிய.. எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்
பூந்தளிரே..
தா... ந தோம் தா ந நன
தா... ந தோம் தா ந நன
தா... ந தோம் தா ந நன
தனான தோம் தோம்
தனான தோம் தோம்


ohho where would I be
without this joy inside of me
it makes me want to come alive
it makes me want to fly
into the sky...
ohho where would I be
if I didn't have you next to me
ohho where would I be
ohho where...
ohho where...

எந்த மேகம் இது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈரமழை தூவுதே
என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்ற போதும் இது நீளுதே
யார் என்று அறியாமல் பெயர் கூட தெரியாமல்
இவனோடு ஒரு சொந்தம் உருவானது
யார் என்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே
பறவை மறைந்த பிறகும்
இலை தொடங்கும்
நடனம் முடிவதில்லையே
இது எதுவோ
(பூக்கள்..)
தா... ந தோம் தா ந நன
தா... ந தோம் தா ந நன
தா... ந தோம் தா ந நன
தனான தோம் தோம்
தனான தோம் தோம்

No comments: