Sunday, July 18, 2010

காதல் கண்ணாளன் கண்டாலுமே.. கண்ணின் மை கூட சிவப்பாகுமே..


ஓ நெஞ்சம் நெஞ்சம் துடிக்குதடா..
நினைவு அனலாய் எரிக்குதடா..
பருவம் படுத்துது பசியும் எடுக்குது..
பாவை உயிரை பறிக்குதடா..

நெஞ்சம் நெஞ்சம் துடிக்குதடி..
நினைவு அனலாய் எரிக்குதடி..
பருவம் படுத்துது பசியும் எடுக்குது..
பழகி கலந்தால் புரியுமடி..

ஓ வாளில் முனை என்னை வீழ்த்தாதடி..
கூந்தல் நுனி குத்தி வீழ்ந்தேனடி..
காற்று மழை தாங்கும் உன் பூங்கொடி..
காதல் சிறு முத்தம் தாங்காதடா..
காற்று மழை தாங்கும் உன் பூங்கொடி..
காதல் சிறு முத்தம் தாங்காதடா..
ஓ உன்னை நான் தாங்க என்னை நீ தாங்க
பாரம் தெரியாதடி..
ஓ காதல் கண்ணாளன் கண்டாலுமே..
கண்ணின் மை கூட சிவப்பாகுமே..
தீண்டல் ஓர் இன்பம் சீண்டல் வேர் இன்பம்
தாங்கல் பேரின்பம் நீங்காது வா தங்கமே

ஓ நெஞ்சம் நெஞ்சம் துடிக்குதடா..
நினைவு அனலாய் எரிக்குதடா..
பருவம் படுத்துது பசியும் எடுக்குது..
பழகி கலந்தால் புரியுமடி..

ஆசை என்பது ஆயுள் பசி..
அன்பு கனியாக என்னை புசி..
ஹேய் வாழ்வு கொஞ்சம்தான் வா ஊர்வசி
வேர்வை உனது என்றும் காதல் ருசி..
விழியில் சில காலம் மடியில் பல காலம்
வந்து நீயே வசி..
ஓ மண்ணில் வாசங்கள் உண்டாகவே
வானில் மழை ஏங்கும் என் தங்கமே..
உன்னின் வாசங்கள் என்னில் உண்டாக
ஆணின் வலை வேண்டும்
மஞ்சத்தில் வா சிங்கமே..

நெஞ்சம் நெஞ்சம் துடிக்குதடி..
நினைவு அனலாய் எரிக்குதடி..
பருவம் படுத்துது பசியும் எடுக்குது..
பழகி கலந்தால் புரியுமடி..

No comments: