Monday, March 9, 2015

இரவிலும் பகலிலும் தொடரும் உன் நினைவிலே கரைகிறேன்

 


காதல் கண் கட்டுதே கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே  அருகில் போனால் தென் சொட்டுதே

பறவையாய் திரிந்தவள்  இறகு போல் தரையிலே விழுகிறேன்
இரவிலும் பகலிலும்  தொடரும் உன் நினைவிலே கரைகிறேன்

காற்று நீயாக வீச என் தேகம் கூச  எதை நான் பேச

கலைத்து போனாயே கனவுகள் உரச பறித்து போனாயே இவளது மனச
இருள் போலே இருந்தேனே விளக்காக உணர்ந்தேனே உன்னை நானே


பார்வை கொஞ்சம் பேசுது  பருவம் கொஞ்சம் பேசுது
பதிலாய் எதை பேசிட தெரியாமல் நாள்
கூச்சம் கொஞ்சம் கேக்குது
ஏக்கம் கொஞ்சம் கேக்குது
உயிரோ உனை கேட்டிட தருவேனே நான்
அன்பே அன்பே மழையும்  நீ தானே
கண்ணே கண்ணே வெயிலும் நீ தானே
ஒரு வார்த்தை உன்னை காட்ட
மறு வார்த்தை என்ன மீட்ட
விழுந்தேனே கலைத்து போனேனே பறித்து போனாயே

காதல் கண் கட்டுதே கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே  அருகில் போனால் தென் சொட்டுதே

பறவையாய் திரிந்தவன்  இறகு போல் தரையிலே விழுகிறேன்
இரவிலும் பகலிலும்  தொடரும் உன் நினைவிலே கரைகிறேன்

காற்று நீயாக வீச என் தேகம் கூசஎதை நான் பேச
கலைத்து போனாயே கனவுகள் உரச  பறித்து போனாயே இவளது மனசா
இருள் போலே இருந்தேனே  விளக்காக உணர்ந்தேனே உன்னை நானே
 

No comments: