Monday, March 9, 2015

சீமத்தண்ணி சிரிப்பால் என்னை பத்த வைக்குற கருப்பா





தக்காளிக்கு தாவணிய போட்டுவிட நான் வாரட்டா
 முக்காலிக்கு மூட்டி தேஞ்சா முட்டு தர நான் வரட்டா
 ஆட்டுக்கல்லு இடுப்பால் என்னை அரைக்கிறியே பொறுப்பா
 சீமத்தண்ணி சிரிப்பால் என்னை பத்த வைக்குற கருப்பா
 நெஞ்சுக்குழிக்குள்ள இந்த பயபுள்ள இன்னிக்கு தான் மாட்டிக்கிட்டான்
 பட்டப்பகலுல வெட்டவெளியில வெட்கப்பட வெச்சுப்புட்டான்

 தக்காளிக்கு தாவணிய போட்டுவிட நான் வாரட்டா
 முக்காலிக்கு மூட்டி தேஞ்சா முட்டு தர நான் வரட்டா

 பத்து ஊரு பசிய போக்கும் அழகு அழகு
 ஓ பக்குவமா பாய போட்டு பழகு பழகு
 நீ ஆசை விளையும் நிலமா வெளைஞ்சு நிக்குற வளமா
 நீ காலை சுத்தும் பாம்பா கவுத்துபோட்டு கொத்துறியே வீம்பா
 ஆ தக்காளிக்கு தக்காளிக்கு தக்காளிக்கு ஹே
 தக்காளிக்கு தாவணிய போட்டுவிட நான் வாரட்டா
 முக்காலிக்கு மூட்டி தேஞ்சா முட்டு தர நான் வரட்டா
 ஏ ஆட்டுக்கல்லு இடுப்பால் என்னை அரைக்கிறியே பொறுப்பா
 சீமத்தண்ணி சிரிப்பால் என்னை பத்த வைக்குற கருப்பா
 வெள்ளம் வடியல சொல்ல முடியல தத்தளிச்சு சாகுறேண்டி
 நண்டு வலையில குண்டு போடுற நீ ரெண்டுப்பட்டு வேகுறேண்டா

 மல்லிகைப்பூ வாசம் வீசும் மூச்சு மூச்சு
 பனைவெல்லம் பாலில் கலந்த பேச்சு பேச்சு
 உன் குருவிக்கூடு கொண்ட போடச்சொல்லுதே சண்ட
 உன் மூக்கு செவந்த மொளகா அதரி சிதறி கதற வைக்குதே என்னை

 ஆ தக்காளிக்கு தக்காளிக்கு தக்காளிக்கு ஹே

 தக்காளிக்கு தாவணிய போட்டுவிட நான் வாரட்டா
 முக்காலிக்கு மூட்டி தேஞ்சா முட்டு தர நான் வரட்டா
 ஏ ஆட்டுக்கல்லு இடுப்பால் என்னை அரைக்கிறியே பொறுப்பா
 அட சீமத்தண்ணி சிரிப்பால் என்னை பத்த வைக்குற கருப்பா
 வெள்ளம் வடியல சொல்ல முடியல தத்தளிச்சு சாகுறேண்டி
 நண்டு வலையில குண்டு போடுற நீ ரெண்டுப்பட்டு வேகுறேண்டா

No comments: