Saturday, July 25, 2009

உன்னை எந்தன் பின்னால் என்றும் சுற்ற வைக்கும் வார்த்தை


அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை
அந்த வார்த்தை, சிஷ்யா என்னவென்று சொல்லி தரவா ?

அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை
அந்த வார்த்தை, சிஷ்யா என்னவென்று சொல்லி தரவா ?

அது உன்னை என்னை சுட்ட வார்த்தை
அந்த வார்த்தை, சிஷ்யா என்னவென்று சொல்லி தரவா ?

போட்டு பின்னுதடி என்ன தின்னுதடி
அது என்ன வார்த்தை சொல்லுங்கோ குருவே ?

தினம் நித்திரை கேட்டு
ஓரு முத்தரை இட்டு
அத கத்துக்க வேணும்
ரொம்ப சுலவா !

குரு தக்ஷன என்னான்னு
சொல்லணும் நீங்க

கம்பன் மகனை கொன்ற வார்த்தை
தெய்வீக வார்த்தை
அது பௌர்ணமி நிலவையும்
நெருப்பென காட்டும்
காவிய வார்த்தை

நிலவோடு நெருப்பை வைத்தாய்
அது என்ன சேர்க்கை ?
அதை நீயும் இங்கே சொல்லா விட்டால்
எனக்கேது வாழ்கை ?


நினைத்தாலே நெஞ்சுக்குள்ளே இனிக்கின்ற வார்த்தை
நெடுங்காலம் நோன்பிருந்தால் பலிக்கின்ற வார்த்தை

சொல்லுங்க குருவே
சொல்லுங்க குருவே
சுருண்டு சுனாமியாக நிக்கிறேன்

அட மூன்றெழுத்து கெட்ட வார்த்தை
அந்த வார்த்தை, சிஷ்யா
என்னவென்று சொல்லி தரவா ?

உன் பேரை சொல்லி நூறு தேங்காய்
உடைக்கிறேன் குருவே
சொல்லு அந்த கெட்ட வார்த்தை

தினம் நித்திரை கேட்டு
ஓரு முத்தரை இட்டு
அத கத்துக்க வேணும்
ரொம்ப சுலவா !

தினம் நித்திரை கேட்டு
ஓரு முத்தரை இட்டு
அத கத்துக்க வேணும்
ரொம்ப சுலவா !
குரு தக்ஷன என்னான்னு
சொல்லணும் நீங்க

உன்னை எந்தன் பின்னால் என்றும்
சுற்ற வைக்கும் வார்த்தை
புது கவிஞருக்கெல்லாம் பைத்தியம்
தன்னை முற்றவைக்கும் வார்த்தை
அது என சொக்குபொடி ? மந்திர வார்த்தை
நான் வாழ்வே மாயம் பாடிக்கொண்டு
தாடிவைக்கும் முன்னே
சொல் அந்த வார்த்தை

ஆப்பிள் பழம் ஆரம்பித்த
அதிசய வார்த்தை
ஆதாம் ஏவாள் பேசி கொண்ட
அழகிய வார்த்தை

சொல்லுங்க குருவே
சொல்லுறேன் ஷிஷியா !
அலையாதே அலையாதே !

உன் பேரை சொல்லி நூறு தேங்காய்
உடைக்கிறேன் குருவே
சொல்லு அந்த கெட்ட வார்த்தை

உன் துணிகளை பத்து மாசம்
துவைக்கிறேன் குருவே
சொல்லு அந்த நல்ல வார்த்தை

நான் சொல்லமாட்டேன் !
அத சொல்லமாட்டேன் !
நீ சோப்பு போட்டா போடு ஷிஷியா !
'கா'- வில் ஆரம்பிக்கும்
'ல்'- இல் போயே நிக்கும்
கண்டுபிடி கண்டுபிடி ஷிஷியா !

No comments: