Wednesday, July 29, 2009

கண் விரலால் கண் விரலால் என் உயிரை மீட்டுரியா


காவிரியா காவிரியா மனதுக்குள் பாயுரியா
பூம்புனலாய் புகுந்ததென்னா கண் வழியா ஹோய்
கண் விரலால் கண் விரலால் என் உயிரை மீட்டுரியா
பூ முடிக்கும் மோகத்திலே நீ வாரியா ஹோய்
நானா உன்னை நினைத்தேன்
நெடுநாள் விலகி இருந்தேன்
தடுக்கி உன் மேல் விழுந்தேன் ஹோ
மயிலின் இறகால் மனதை நீவுறியா
நீவுறியா ஹோய்

காவிரியா காவிரியா மனதுக்குள் பாயுரியா
பூம்புனலாய் புகுந்ததென்னா கண் வழியா ஹோய்
கண் விரலால் கண் விரலால் என் உயிரை மீட்டுரியா
பூ முடிக்கும் மோகத்திலே நீ வாரியா ஹோய்
நானா உன்னை நினைத்தேன்
நெடுநாள் விலகி இருந்தேன்
தடுக்கி உன் மேல் விழுந்தேன் ஹோ
மயிலின் இறகால் மனதை நீவுறியா
நீவுறியா ஹோய்

உன் பேரை எந்த நாளிலும்
உள்ளத்தில் எழுதவில்லையே
எனை ஓரு வார்த்தைதான் கேட்காமலே
என் ஜீவன் உன்னை சேர்ந்ததோ
என்னுள்ளே என்ன நேர்ந்ததோ
உதட்டினில் நாள் எல்லாம் உன் பாடலே
காதல் வரும் தேதி கிழமை எதுவென்ன எவர்க்கும்
காலண்டர் காட்டாதே
அதுவாக வேர் விட அன்பே நீ நீர்விட
பூ பூவாய் பூக்கும் வண்ணம்
பேரின்பம் உண்டாச்சோ
பெண் பாவை உனது ஆச்சோ

காவிரியா காவிரியா மனதுக்குள் பாயுரியா
பூம்புனலாய் புகுந்ததென்னா கண் வழியா ஹோய்

வானம் முதல் முறை மழை வார்க்கும் நிலம் என
நெஞ்சில் ஓரு சீதனம் காரணம் நீதான் நண்பனே
யாரும் முதல் முறை விரல் மீட்டும் சுகம் எனும்
நெஞ்சே நீ ஆகணும் காரணம் நீதான் நண்பனே
மங்கை அல்ல மல்லிகை பூவிது
உனை அன்றி வேறு கைகள் தொடலாமா?
மழை கூந்தல் ஏன் வளர்த்தேன் ?
பூ முடிக்க நான் வளர்த்தேன்
மாலை இட்டு பூ முடிக்கும் மண நாள் தான் வருமா ?
மண நாள் தான் வருமா ?

காவிரியா காவிரியா மனதுக்குள் பாயுரியா
பூம்புனலாய் புகுந்ததென்னா கண் வழியா ஹோய்

No comments: