Tuesday, September 15, 2009

சேர்ந்திடும் நினைப்பிலே அமைதிகொள் தோழனே சாய்ந்துகொள் களைப்பிலே தோள்களும் ஏங்குமே



வரும் வழி எங்குமே என் முகம் தோன்றலாம்
இந்த நில சூட்டிலே என் மனம் காணலாம்
நீ வரும் சாலையில் சாரலாய் வீசவா
வாசலை தாண்டியே தோழனே நேரில் வா
உன்னை வரவேற்கவே காற்றில் மரமாகவா
உந்தன் தலை கோதவே பூக்கும் இலையாகவா

என் கண் பேசினால் உன் துயர் தீருமே
உன் முகம் பார்ப்பதால் அது உயிர் வாழுமே
சேர்ந்திடும் நினைப்பிலே அமைதிகொள் தோழனே
சாய்ந்துகொள் களைப்பிலே தோள்களும் ஏங்குமே
நீ வரும் செய்தியை கடல் அலை கூறவே
இந்த நிலை போலவே மனம் கொண்டாடுதே

No comments: