Saturday, May 11, 2013

கொஞ்ச நேரம் கூட ஒத்தாசையா வாழவே இல்ல



ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாருமில்ல
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல
கொஞ்ச நேரம் கூட ஒத்தாசையா வாழவே இல்ல
ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாருமில்ல
ஆனா நீ என்னை மட்டும் தீண்டவே இல்ல
உன்ன உத்து பார்த்த கண்ணுரெண்டும் தூங்கவே இல்ல

காணமே காண வெச்ச கண்ணுக்குள்ள தீய வெச்ச
ஆனா நீ என்னை மட்டும் பார்க்கவே இல்ல
கொஞ்சி நாலு வார்த்த நல்லா பேசி கேட்கவே இல்ல
பேசாம பேச வெச்ச பிரியத்தோட கண்ணடிச்ச
ஆனா நீ என்னை மட்டும் பேசவே இல்ல
மஞ்ச தாலி வாங்க கூட சேரும் ஆசையே இல்ல

கூவாம கூவ வச்ச கொண்டையிலே பூவ வெச்ச
ஆனா நீ என்னை மட்டும் சூடவே இல்ல ? அய்யோ
தொலைஞ்சி போன ஆளை நீயும் தேடவே இல்ல
மூடாம மூடி வெச்ச முந்தானையில் சேதி வெச்ச
ஆனா நீ என்னை மட்டும் மூடவே இல்ல
காதலோடு நானிருக்கேன் மாறவே இல்ல
கள்ளி காதலோடு நானிருக்கேன் மாறவே இல்ல


ஊரான ஊருக்குள்ள உன்னப்போல யாருமில்ல
ஆனா நீ என்ன மட்டும் சேரவே இல்ல


தானாவே உன்னை வந்து சேருவா புள்ள

கொஞ்ச நேரம் கூட ஒத்தாசையா வாழவே இல்ல
ஊரான ஊருக்குள்ள
உன்ன உத்து பார்த்த கண்ணுரெண்டும் தூங்கவே இல்ல


கொஞ்சம் நோகா கண்ணை மூடி தூங்கு மாப்பிள்ளே

No comments: