Monday, May 27, 2013

தனிமைகள் தீர துணையும் வேண்டும் தாங்கும் தோளில் சாய்ந்திட வேண்டும்




கண்டும் காணாமல் விழி காண்பது ஏன்
கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது ஏன்

கண்டும் காணாமல் விழி காண்பது ஏன்
கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது ஏன்
வந்து போவது ஏன் தந்து கேட்பது ஏன்

கண்டும் காணாமல் விழி காண்பது ஏன்
கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது ஏன்

நினைவுகள் போல மறதியும் வேண்டும்
நேற்றும் நீங்க நாளை வேண்டும்

தனிமைகள் தீர துணையும் வேண்டும்
தாங்கும் தோளில் சாய்ந்திட வேண்டும்

அருகிலே வந்த போதிலும் ஏனோ தூரமே
நினைவினிலே தேங்கும் ஞயாபகம்
நீங்குமோ எந்த நாளுமே
சேருவோம் சேருவோம் வாழவே

கண்டும் காணாமல் விழி காண்பது ஏன்
கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது ஏன்

உறவுகள் நீங்கி வாழும் வாழ்வில்
ஏங்கும் நொடிகள் சுமை என தெரியும்

திரைகடல் ஓடி தேடும் தேடல்
தீரும் போது தொலைந்தது தெரியும்

சிறகுகள் வாங்கும் ஆசையில்
வானை நீங்கினோம்
விடைகளை தேடும் அளவில்
கேள்விகள் தேடும் ஆவலில்
கேள்விபோல் நாளும் தேங்கினோம்
மாறுதல் ஆறுதல் ஆகுமே

கண்டும் காணாமல் விழி காண்பது ஏன்
கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது ஏன்
வந்து போவது ஏன் தந்து கேட்பது ஏன்

கண்டும் காணாமல் விழி காண்பது ஏன்
கேட்டும் கேளாமல் செவி சாய்ப்பது ஏன்

No comments: