Thursday, September 27, 2018

மோகத்திலே என்னை மூழ்க வைத்து ஒரு ஓரத்திலே நின்று கள்வனை போல் மாலவா வேலவா மாயவா சண்முகா


மறைந்துருந்து பார்க்கும் மருமம் என்ன
மன்னன் மலை அழகா இந்த சிலை அழகா என்று

நவரசமும்
முகத்தில் நவரசமும்
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்
செக்கச் சிவந்திருக்கும் இதழில் கனி ரசமும் கண்டு

மறைந்துருந்து …

எங்கிருந்தாலும் உன்னை நானறிவேன்
உன்னை என்னையல்லால் வேறு யார் அறிவார்
பாவை என் பதம் காண நாணமா
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா
மாலவா வேலவா மாயவா சண்முகா

மறைந்துருந்து …

நாதத்திலே தலைவன் குரல் கேட்டேன்
அந்த நாணத்திலே என்னை நான் மறந்தேன்
மோகத்திலே என்னை மூழ்க வைத்து
ஒரு ஓரத்திலே நின்று கள்வனை போல்
மாலவா வேலவா மாயவா சண்முகா

மறைந்துருந்து …

மான் ஆட மலர் ஆட மதி ஆட நதி ஆட
மங்கை இவள் நடனம் ஆட
நான் ஆட மண் ஆட கொடி ஆட இடை ஆட
மங்கை இவள் கைகள் ஆட
சுவையோடு நான் ஆட என்னை நாடி இந்த வேளை
விரைவேனில் துணையாட ஓடி வாரவாய்
தூயனே மாலவா மாயனே வேலவா என்னை ஆளும் சண்முகா

No comments: