Sunday, March 17, 2019

கொஞ்சும் காட்சியாய் கடலே சாட்சியாய் காதலை சொன்னதும் நீயா



மந்திர கண்ணிலே
காதல் மின்னுதே
புன்னகை ஓவியம் நீயே


பின்னலை காட்சிகள்
முன்னே தோன்றுதே
நீர்த்திடா வண்ணங்கள் நீயே



காலை நேர தூறல் பொலிவும் நீயே
சாலை ஓர கள்ள வளைவும் நீயே

உள்ளம் போகும் செல்ல பயணம் நீதானே



தாவுகின்ற புள்ளிமானின் மேலே
பாயுகின்ற வெய்யில் கீற்று போலெ


நெஞ்சின் மீது நெஞ்சின் மீது வந்தாயே



வாலிபம் நனைத்தவன் நீயே

நாழிகள் எல்லாம் நீதானே

கவிதையில் சொன்னால் காதல் புரியுமோ




பொன் நிற மாலை சரியா

மெல்லொலி இரவு சரிதானா

காதலை சொல்லும் காலம் எதுவோ



என் பெயரை மெல்ல மறந்தேன்

உன் பெயரால் என்னை அழைத்தேன்

உன் தோளில் சாயும்போது


என் கனவை உன்னில் வரைந்தேன்


நடைபாதை பூக்களை போல்

பொது வெளியில் ஆசை வளர்த்தேன்

இளமார்பு வழிந்திடாமல்

உன் வாசம் எண்ணில் நிறைத்தேன்




வானம் குளியலறை பூந்திட

மேகம் உன்னை தெளிக்க

வாழ்வே வானவில் ஆகிறதே




தாவுகின்ற புள்ளிமானின் மேலே

பாயுகின்ற வெய்யில் கீற்று போலெ

நெஞ்சின் மீது நெஞ்சின் மீது வந்தாயே



பாதி மனதில் உன்னை பிரியும் வேலை

இதழின் நுனியில் இதயம் துடிக்கும் தொல்லை

வார்த்தை இன்றி மூர்ச்சையாகி போவேனே



வாலிபம் நனைத்தவன் நீயே

நாழிகை எல்லாம் நீதானே

கவிதையில் சொன்னால் காதல் புரியுமோ



சந்திய கரையிலே
காதல் நுரைக்குதே

கண்களில் காண்பது மெய்யா

கொஞ்சும் காட்சியாய்

கடலே சாட்சியாய்

காதலை சொன்னதும் நீயா



வாலிபம் நனைத்தவன் நீயே
நாழிகை எல்லாம் நீதானே
நாடகம் ஆடி தீர்த்தாய் மாயனே



பௌர்ணமி நிலவுகள் வேண்டாம்
ஆயிரம் பிறவிகள் வேண்டாமே

காதலின் முதலாம் ஸ்பரிசம் போதுமே

No comments: