Thursday, October 14, 2010

பார்க்காமல் மெல்லப் பார்த்தாலே அதுதானா காதல் கலை


மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான் வாழும் மானிடர் காதல் என்பதா
மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான் வாழும் மானிடர் காதல் என்பதா

இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா
சரசம் பயிலும் விழியில் வருமே
இது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுமே
பார்க்காமல் மெல்லப் பார்த்தாலே அதுதானா காதல் கலை
தோளோடு அள்ளிச் சேர்த்தாலே அதுதானா மோக நிலை
இதுதான் சொர்க்கமா
இது காமதவேனின் யாக சாலையா

மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான் வாழும் மானிடர் காதல் என்பதா

கலையெல்லாம் கற்றுக் கொள்ளும் பருவம் பருவம்
கடல்நீர் அலைபோல் மனமும் அலையும்
கரு நீலக் கண்கள் ரெண்டும் பவளம் பவளம்
எரியும் விரகம் அதிலே தெரியும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம் இதன் எல்லை யாரறிவார்
ஏதேதோ சுகம் போதாதோ அதன் ஏக்கம் யாரறிவார்
முதலாய் முடிவாய் இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்
மழையும் நீயே வெய்யிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான் வாழும் மானிடர் காதல் என்பதா

No comments: