Saturday, October 16, 2010

ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே


ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசை ஊஞ்சலிலாடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
உந்தன் ஞாபகம் பூமழை தூவும்
காற்றிலே சாரல் போலே பாடுவேன்
காதலை வாழ்கவென்று வாழ்த்துவேன்
நீ வரும் பாதையில் பூக்களாய் பூத்திருப்பேன்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசை ஊஞ்சலிலாடும்

மனதில் நின்றே காதலியே
மனைவியாக வரும் போது
சோகம் கூட சுகமாகும்
வாழ்க்கை இன்ப வரமாகும்
உன் வாழ்வில் செல்வங்களெல்லாம்
ஒன்றாக சேர்ந்திடவேண்டும்
பூவே உன் புன்னகை என்றும்
சந்தோஷம் தந்திடவேண்டும்
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால்
வாழ்வே சொர்க்கம் ஆகுமே
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால்
வாழ்வே சொர்க்கம் ஆகுமே

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசை ஊஞ்சலிலாடும்


இன்னும் நூறு ஜென்மங்கள்
சேரவேண்டும் சொந்தங்கள்
காதலோடு வேதங்கள்
ஐந்து என்று சொல்லுங்கள்
தென்பொதிகை சந்தன காற்றும்
உன் வாசல் வந்திட வேண்டும்
ஆகிய கங்கை உந்தன் நெஞ்சோடு
பொங்கிட வேண்டும்
கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்
நிஜமாய் இன்று ஆகுமே
கண்கள் கண்ட கனவுகள் எல்லாம்
நிஜமாய் இன்று ஆகுமே

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசை ஊஞ்சலிலாடும்

No comments: