Saturday, October 16, 2010

கற்பனை கொஞ்சிடும் காலடிச் சத்தங்களே அடடா இந்தக் காவியக் கோவிலைப் பார்த்து எழுதியதோ - தலைவா


பட்டுக் கன்னம் தொட்டுக் கொள்ள ஒட்டிக் கொள்ளும்
ஒட்டிக் கொண்டு கட்டிக் கொள்ள உள்ளம் துள்ளும்
தென்றல் வந்து உன்னைக் கண்டு
மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா
பட்டுக் கன்னம் தொட்டுக் கொள்ள ஒட்டிக் கொள்ளும்
ஒட்டிக் கொண்டு கட்டிக் கொள்ள உள்ளம் துள்ளும்
தென்றல் வந்து உன்னைக் கண்டு
மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா


நீலநதிக்கரை ஒரத்தில் நின்றிருந்தேன் ஒருநாள்
உந்தன் பூவிதழ் ஈரத்தில் என்னை மறந்திருந்தேன்
வானத்து மீன்களை மேகம் மறைத்தது போல்
தினமும் எந்தன் மோகத்தை நாணத்தில்
மூடி மறைந்திருந்தேன் மனதில்
நாணம் யாவும் நூலாடை நானே உந்தன் புது மேலாடை
மங்கை இவள் அங்கங்களில்
உங்கள் கரம் தொடங்கலாம் நாடகமே

பட்டுக் கன்னம் தொட்டுக் கொள்ள ஒட்டிக் கொள்ளும்
ஒட்டிக் கொண்டு கட்டிக் கொள்ள உள்ளம் துள்ளும்
தென்றல் வந்து உன்னைக் கண்டு
மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா


கற்பனை கொஞ்சிடும் காலடிச் சத்தங்களே
அடடா இந்தக் காவியக் கோவிலைப் பார்த்து
எழுதியதோ - தலைவா
புன்னகை சிந்திடும் பூந்தமிழ் ஓவியமே -கிளியே
உந்தன் - பூவுடல் பார்த்த ப பின் சிற்பம் வடித்தனரோ -கிளியே
ஆசைத் தீயை தூண்டாமே போதைப் பூவைத் தினம் தூவாதே
அந்தியிலே வெள்ளி நிலா அள்ளித் தரும் சுகங்களே ஆயிரம்

பட்டுக் கன்னம் தொட்டுக் கொள்ள ஒட்டிக் கொள்ளும்
ஒட்டிக் கொண்டு கட்டிக் கொள்ள உள்ளம் துள்ளும்
தென்றல் வந்து உன்னைக் கண்டு
மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா

பட்டுக் கன்னம் தொட்டுக் கொள்ள ஒட்டிக் கொள்ளும்
ஒட்டிக் கொண்டு கட்டிக் கொள்ள உள்ளம் துள்ளும்
தென்றல் வந்து உன்னைக் கண்டு
மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா

No comments: