Tuesday, October 4, 2011

சொல்லடி சிவ சக்தி - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்


நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
நல்லதோர் வீணை செய்தே
சொல்லடி சிவ சக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
சொல்லடி சிவ சக்தி

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவ சக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
சொல்லடி சிவ சக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்

வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவ சக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திட புரிகுவையோ
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

விசையுறு பந்தினைப் போல் - ஆஆஆஆ
விசையுறு பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டிய படி செல்லும் உடல் கேட்டேன்
நசையறும் மனம் கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர் கேட்டேன்
உயிர் கேட்டேன் உயிர் கேட்டேன்

தசையினைத் தீச்சுடினும் - சிவ
சக்தியைப் பாடும் நல் அகம் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கேதும் தடையுளதோ - இவை
அருள்வதில் உனக்கேதும் தடையுளதோ

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
நல்லதோர் வீணை செய்தே - ஆஆஆஆ

No comments: