Thursday, October 13, 2011

ஒரு நொடிக்குள் நூறு முறை மெத்தை இங்கு துள்ளும்


விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி வளையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

இதழும் இதழும் இழையும் பொழுது
இமையில் நிலவு நுழையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

காதலினால் காதல் தொட்டுவிடு
ஆதலினால் நாணம் விட்டுவிடு

விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி வளையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

முத்தமொன்று தந்தவுடன் மூடிக்கொள்ளும் கண்கள்
மொத்தமாக கூந்தல் அள்ளி மூடிக்கொள்ளும் கைகள்
உடலிறங்கி நீந்தும் என்னை உயிரிழுத்து செல்லும்
ஓய்வு தந்த காரணத்தால் உடைகள் நன்றி சொல்லும்
விரலும்...விரலும் இறுகும்...பொழுது
முதுகின்...சுவரில் வழியும்...விழுது
விரலும்...விரலும் இறுகும்...பொழுது
முதுகின்...சுவரில் வழியும்...விழுது
உறங்கிடாமல்...உறங்கிடாமல் கிறங்கி விடு

இதழும் இதழும் இழையும் பொழுது
இமையில் நிலவு நுழையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

புயல் முடிந்து போன பின்னே கடல் உறங்க செல்லும்...ம்ம்ம்
கண் விழித்த அலை திரும்ப களம் இறங்க சொல்லும்
உயிரணுக்கள் கூடி நின்று ஓசையின்றி கிள்ளும்...ஆஆஆ
ஒரு நொடிக்குள் நூறு முறை மெத்தை இங்கு துள்ளும்
இமையின்...முடியால் உடலை...உழவா
இளமை...வயலில் புயலை...நடவா
இமையின்...முடியால் உடலை...உழவா
இளமை...வயலில் புயலை...நடவா
இசை கெடாமல்...இசை கெடாமல் மூச்சுவிடு

விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி வளையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

இதழும் இதழும் இழையும் பொழுது
இமையில் நிலவு நுழையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

காதலினால் காதல் தொட்டுவிடு
ஆதலினால் நாணம் விட்டுவிடு

No comments: