Monday, June 8, 2009

உன்னோட வாழ்ந்திருந்தா ஊருக்கெல்லாம் ராணி நான் .. என்னோட ஆசை எல்லாம் ஏத்துக்கணும் நீங்க தான் ..உங்கள தான் எண்ணி எண்ணி என் உசுரு வாழும்


உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசுஅதை கேட்டு தான் தவிக்குது
அதில் என்னை வச்சு பாட மாட்டியா
நெஞ்ச தொட்டு ஆளும் ராசையா
மனசு முழுதும் இசை தான் உனக்கு
அதிலே எனகொரு இடம் தான் ஒதுக்கு

உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசுஅதை கேட்டு தான் தவிக்குது

பாட்டாலே புள்ளி வச்சேன்
பார்வையிலே கிள்ளி வச்சே
பூத்திருந்த என்னை சேர்த்த தேவனே
போடாத சங்கதிதான் போட ஓரு மேடை உண்டு
நாலு வச்சு சேர வாங்க ராசனே
என்னோடு கூடு கட்டி நீங்க வந்து வாழனும்
நில்லாம பாட்டு சொல்லி காலம் எல்லாம் வாழனும்
சொக்க தங்கம் உங்களை தான் சொக்கி சொக்கி பார்த்து
தத்தளிச்சேன் நித்தம் நித்தம் நானா பூத்து

உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசுஅதை கேட்டு தான் தவிக்குது
அதில் என்னை வச்சு பாட மாட்டியா
நெஞ்ச தொட்டு ஆளும் ராசையா
மனசு முழுதும் இசை தான் உனக்கு
அதிலே எனகொரு இடம் தான் ஒதுக்கு


நீ பாடும் ராகம் வந்து நிம்மதியே தந்த தையா
நேற்று வரை நெஞ்சில் ஆசை தோணலை
பூவான பாட்டு இந்த பொண்ண தொட்டு போனதையா
போன வழி பார்த்து கண்ணு மூடலை
உன்னோட வாழ்ந்திருந்தா ஊருக்கெல்லாம் ராணி நான் ..
என்னோட ஆசை எல்லாம் ஏத்துக்கணும் நீங்க தான் ..
உங்கள தான் எண்ணி எண்ணி என் உசுரு வாழும்
சொல்லுமையா நல்ல சொல்லு சொன்னா போதும்

உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசுஅதை கேட்டு தான் ரசிக்கிறது
அதில் என்னை வச்சு பாட மாட்டியா
நெஞ்ச தொட்டு ஆளும் ராணியே
மனசு முழுதும் இசை தான் உனக்கு
அதிலே எனகொரு இடம் தான் ஒதுக்கு

No comments: