Sunday, June 7, 2009

உன் திக்கை நோக்கி என் இரு புருவம் நெளியுதே


அலைபாயுதே கண்ணா என் மனம் மிகு அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானமதில்

நிலை பெயராது என் உள்ளம் சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே மிக வினோதமாக முரளீதரா என் மனம்

அலைபாயுதே கண்ணா...

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே - உன்
திக்கை நோக்கி என் இரு புருவம் நெளியுதே
கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே

கதித்த மனத்தில் உருத்தி பதத்தை
எனக்கு கொடுத்து மகிழ்த்தவா
உருக்களித்த மனத்தை அணைத்து
எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்த வா
கரைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையறு கடலென களிக்கவோ
கதறி மனமுருக நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ இது முறையோ இது தருமம் தானோ
குழலூதிடும் பொழுது ஆடிடும்
குழைகளை போலவே மனதில்
வேதனை மிகவுற

அலைபாயுதே கண்ணா என் மனம் மிகு அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானமதில்

நிலை பெயராது என் உள்ளம் சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே மிக வினோதமாக முரளீதரா என் மனம்

அலைபாயுதே கண்ணா...

No comments: