Saturday, June 20, 2009

நீ போட்டது என் கண்ணிலே மந்திரம் நான் பார்த்தது அழகின் ஆலயம்


பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா

பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா
நான் பாடும் ஸ்ரீராகம் எந்நாளுமே நீ அல்லவா
என் கண்ணனே! என் மன்னவா!

தங்க மாங்கனி என் தர்மதேவதை
தங்க மாங்கனி என் தர்மதேவதை
நான் பாடும் ஸ்ரீராகம் எந்நாளுமே நீ அல்லவா
என் பூங்கொடி! விடை சொல்லவா!

பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா


இடை ஒரு கொடி இதழ் ஒரு கனி
இன்பலோகமே உன் கண்கள் தானடி

மலரெனும் முகம் அலைவது சுகம்
ஒன்று போதுமே இனி உங்கள் தேன்மொழி

நான் தேடினேன் பூந்தோட்டமே வந்தது
நான் கேட்டது அருகே நின்றது
இனி நேர் பறக்கட்டும் பறவைகள் இரண்டும்


பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா

புது மழை இது சுவை தரும் மது
வெள்ள பூச்சரம் அது இதழில் வந்தது

இனியது இது கழிந்தது அது
இளமை என்பது உன் உடலில் உள்ளது

நீ போட்டது என் கண்ணிலே மந்திரம்
நான் பார்த்தது அழகின் ஆலயம்
இது தான் உலகத்தை ரசிக்கின்ற பருவம்

தங்க மாங்கனி என் தர்மதேவதை

நவமணி ரதம் நடை பெறும் விதம்
நமது கோவிலில் இனி நல்ல உற்சவம்

கவிதைகள் தரும் கலை உன்தன் வசம்
கங்கை ஆறு போல் இனி பொங்கும் மங்கலம்

ஓர் ஆயிரம் தேன் ஆறுகள் வந்தன
நீராடுவோம் தினமும் நீந்துவோம்
சரி தான் நடக்கட்டும் இளமையின் ரசனை

பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா
தங்க மாங்கனி என் தர்மதேவதை
நான் பாடும் ஸ்ரீராகம்
எந்நாளுமே நீ அல்லவா
என் கண்ணனே! என் மன்னவா

2 comments:

Unknown said...

மிக்க நன்றி...
எனக்கு பிடித்த பாடல் உனக்கும் பிடிக்குமா?
- சண்முகம்

இசை காதலி said...

நன்றி