Wednesday, August 22, 2018

பக்கம் நில்லாமல் பார்த்து செல்லாமல் பித்தம் தெளிவதில்லை






தொட்டால் பூ மலரும்

தொடாமல் நான் மலர்ந்தேன்

சுட்டால் பொன் சிவக்கும்

சுடாமல் கண் சிவந்தேன்




தொட்டால் பூ மலரும்

தொடாமல் நான் மலர்ந்தேன்

சுட்டால் பொன் சிவக்கும்

சுடாமல் கண் சிவந்தன்


கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை

நேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லை

ஹோய் ஆசை விடுவதில்லை




தொட்டால் பூ மலரும்

தொடாமல் நான் மலர்ந்தேன்

சுட்டால் பொன் சிவக்கும்

சுடாமல் கண் சிவந்தேன்


இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்

இளமை முடிவதில்லை ஓ.. இளமை முடிவதில்லை

எடுத்துக்கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும்

பொழுதும் விடிவதில்லை ஓ பொழுதும் விடிவதில்லை




தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்

சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன்

ஆஆஆஆ...




பக்கம் நில்லாமல் பார்த்து செல்லாமல்

பித்தம் தெளிவதில்லை ஹோய் பித்தம் தெளிவதலில்லை

வெட்கமில்லாமல் வழங்கி செல்லாமல்

சொர்க்கம் தெரிவதில்லை ஓ சொர்க்கம் தெரிவதில்லை




தொட்டால் பூ மலரும்

தொடாமல் நான் மலர்ந்தேன்

சுட்டால் பொன் சிவக்கும்

சுடாமல் கண் சிவந்தேன்


பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம்

பாவை முகமல்லாவா ஹோய் பாவை முகமல்லவா

அழகிய தோள்கள் பழகிய நாட்கள்

ஆயிரம் சுகமல்லவா ஹோய் ஆயிரம் சுகமல்லவா




தொட்டால் பூ மலரும்

தொடாமல் நான் மலர்ந்தேன்

சுட்டால் பொன் சிவக்கும்

சுடாமல் கண் சிவந்தேன் ஆஹாஆஹா..

No comments: