Sunday, August 26, 2018

மலையோடு தோள்கள் வாங்கி மதயானை தேகம் வாங்கி பொலிவான தோற்றம் உந்தன் தோற்றமோ






மீனா பொண்ணு மீனா பொண்ணு

மாசியில் போட்டா மாறாப்பொண்ணு




ஐயா கண்ணு ஐயா கண்ணு

குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு




கொய்யா கண்ணு என் கொய்யா கண்ணு

குளிருக்கு அணைக்கணும் ஒண்ணுக்கொண்ணு


ஊரான் பொண்ணு நான் ஊரான் பொண்ணு

மஞ்ச தாலி கொடுத்தா மாமன் பொண்ணு




மீனா பொண்ணு மீனா பொண்ணு

மாசியில் போட்டா மாறாப்பொண்ணு




பெண் : ஐயா கண்ணு ஐயா கண்ணு

குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு




***

செவ்வானம் தொட்டு தொட்டு

செந்தூரம் கொஞ்சம் இட்டு

செவ்வல்லி பூவில் செய்த தேகமோ




மலையோடு தோள்கள் வாங்கி

மதயானை தேகம் வாங்கி

பொலிவான தோற்றம் உந்தன் தோற்றமோ

குற்றால சாரலுக்கும் கொடைகானல் தூரலுக்கும்

இல்லாத சுகம் உந்தன் வார்த்தையோ




நாடோடி மன்னனுக்கும் ராஜராஜ சோழனுக்கும்

உண்டான வீரம் உந்தன் வீரமோ

உன்னை முழுசாக முத்தம் இட வேணும்




உன்னை முழம் போட்டு அள்ளி கொள்ள வேணும்




என் குலை வாழையே இலை போடவா

ஏன் இன்னும் தாமதம்




அடி மீனா பொண்ணு மீனா பொண்ணு

மாசியில் போட்டா மாறாப்பொண்ணு




ஐயா கண்ணு ஐயா கண்ணு

குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு







மாரோடு பள்ளி கொள்ள

தோளோடு பின்னி கொள்ள

கண்ணா என் நெஞ்சு குழி காயுதே

உன்னை வேரோடு அள்ளி கொள்ள

காம்போடு கிள்ளி கொள்ள

கண்ணே என் கையிரண்டும் தாவுதே

உந்தன் பூ மாலை தாங்கி கொள்ள

பொன் தாலி வாங்கி கொள்ள

இப்போது என் கழுத்து ஏங்குதே

உன்னை அங்கங்கே தொட்டு கொள்ள

அச்சாரம் இட்டு கொள்ள

எப்போதும் இந்த உள்ளம் ஏங்குதே




அட மச்சானே இன்னும் என்ன பேச்சு

அடி மாங்கல்யம் செய்ய சொல்லி ஆச்சு




குயில் உன் பேரையும் என் பேரையும்

ஒண்ணாக கூவிச்சு

அடி மீனா பொண்ணு மீனா பொண்ணு

மாசியில் போட்டா மாறாப்பொண்ணு




ஏய்..ஐயா கண்ணு ஐயா கண்ணு

குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு

ஏ..கொய்யா கண்ணு என் கொய்யா கண்ணு

குளிருக்கு அணைக்கணும் ஒண்ணுக்கொண்ணு




ஊரான் பொண்ணு நான் ஊரான் பொண்ணு

மஞ்ச தாலி கொடுத்தா மாமன் பொண்ணு

No comments: