Friday, May 22, 2009

வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே ,கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் கண்களினாலே


உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லிவிடாதே
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லிவிடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா
எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தமல்லவா

வந்து நின்றார் வந்து நின்றார் வாசலின் மேலே
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் கண்களினாலே
பூ முடித்தேன் பூ முடித்தேன் கூந்தலின் மேலே
பொட்டும் வைத்தேன் பொட்டும் வைத்தேன் ஆசையினாலே

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லிவிடாதே


மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன்
அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனம் ஆடுவேன்
கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன்
அந்த காலம் வரும் வந்தவுடன் உனக்கும் கூறுவேன்

உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லிவிடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா
எங்கள் இருவருக்கும் இயற்கை தந்த பந்தமல்லவா

No comments: